Monday 22 February 2016

ஒரு இசைக்கலைஞனின் தலைமுடி விலை ரூ. 24 லட்சம்!

'தங்களது இசையால் உலகத்தையே கட்டிப் போட்டவர்கள்' என்ற வார்த்தை இன்று பழங்கதையாகி இருக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகள் முதல் முதலாக பீட்டில்ஸ் இசைக் குழுவுக்காக எழுதப்பட்டதாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு ரசிகர்களை அவர்களுடைய காலத்திலும் சரி, இன்றும் சரி,  ஆச்சர்யமடைய வைப்பவர்கள். இந்தக் குழுவினர் பயன்படுத்திய கிட்டார், ட்ரம்ஸ் என்று பல பொருட்களை இன்றும் பல கோடிகளில் ஏலம் எடுப்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி சமீபத்தில் பீட்டில்ஸ் குழுவோடு சம்பந்தப்பட்ட ஒரு பொருள் பெரும் தொகைக்கு ஏலத்துக்குப் போய் இருக்கிறது.

பீட்டில்ஸ் இசைக்குழு,  இசையில் மட்டுமல்லாமல் எல்லாவிதமான கேளிக்கை ஆட்டங்களிலும் செமை ரகளை புரிந்தவர்கள். இன்று 'யோ யோ பாய்ஸ்' ஆட்காட்டி விரலையும் சுண்டு விரலையும் நீட்டிக்கொண்டு, மற்ற விரல்களை மடித்துக்கொண்டு போஸ் கொடுப்பார்களே... அதையும் முதலில் செய்தவர்கள் இவர்கள்தான். இன்றைய ராக் ஸ்டார் வரை எல்லோரும் முடியை நீட்டாக வளர்த்து நம்ம டிஆரைப் போல தலையை சிலுப்பிக் கொண்டு இருக்கிறார்களே... அதேப்போல அந்தக் காலத்தில் முடிவளர்த்து ஆட்டம் போட்டவர்கள் பீட்டில்ஸ் குழுவினர்.

'சண்டை எல்லாம் வேணாம் வாங்க காதல் பண்ணுவோம்'னு ரகளை செய்த பீட்டில்ஸ் குழுவை ஆரம்பித்தவர்களுள் ஒருவரான ஜான் லென்னானும்,  அது போல நீண்ட முடியும் தாடியுமாகத் திரிந்தவர்தான்.

“எல்லாம் சரி. ஆனா, இவங்க தலைமுடியை வெட்ட மறந்துட்டாங்களோ?” என்று ஒரு முறை அப்போதைய அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன், இங்கிலாந்து பிரதமர் சர் அலெக் டக்ளஸை (Sir Alec Douglas) பார்த்து கேட்டார்.

அவர் அப்படி சொன்னதற்காக இல்லாமல், 1966-ம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக அவரது முடியில் பத்து சென்டி மீட்டரை வெட்டி இருக்கிறார் ஜெர்மன் முடி திருத்துபவர் க்ளாஸ் ப்ராக். வெட்டிய பிறகு அந்த முடியை அவர் பத்திரப்படுத்தி இருக்கிறார். அப்போது வெட்டப்பட்ட அந்த முடியை இப்போது ஏலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். பத்து சென்டிமீட்டர் நீளமுடைய இந்த முடிகளை நம்மூர் மதிப்பில் 24 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார், பீட்டில்ஸ் பயன்படுத்தியப் பொருட்களைச் சேகரிக்கும் பால் ஃப்ரேஸர் என்பவர்.

எதிர்பார்த்த தொகையை விட மூன்று மடங்குத் தொகைக்கு ஏலம் போயிருக்கிறது. இவ்வளவு தொகைக்கு முடி ஏலம் போவது பெரிய சாதனைதான். "இந்த அளவு தொகைக்கு அந்த முடி ஏலம் போனதற்கான காரணம், அது ஜான் லென்னானுடைய வாழ்க்கையின் முக்கிய காலக்கட்டத்தோடு தொடர்புடையது” என்பதால்தான் என்று ஹெரிட்டேஜ் ஆக்சன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கேரி ஷ்ரம் தெரிவித்திருக்கிறார்.

நம்ம ஏ.ஆர். ரஹ்மான் கூந்தலை வெட்டினப்போ யாரும் எடுத்து வச்சிருக்கீங்களா மக்களே...?!

ஆசைப்பட்டார் அஜீத்! தவற விட்டார் தனுஷ்?

யாருடனும் ஒட்டுவதில்லை, எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை என்றெல்லாம் அஜீத் பற்றி விமர்சனங்கள் வந்தாலும், இன்டஸ்ட்ரியின் இண்டு இடுக்குகளை கூட அறிந்து வைத்திருக்கிறார் அவர். நாள்தோறும் நடக்கும் தகவல்கள் அவரது காதுகளுக்கு செல்லாமல் இருப்பதில்லை. தனுஷின் கிராப் என்ன, சிம்புவின் பிளாப் என்ன, ஆர்யாவின் உயரம் என்ன, விஷாலின் வேகம் என்ன என்று எல்லாவற்றையும் அவதானித்து வரும் அவர், தனது மனைவியின் தங்கை ஷர்மிலி வந்து, “தனுஷுடன் நடிக்க ஒரு ஆஃபர் வந்திருக்கு. செய்யலாமா?” என்று கேட்டால், “போகாதே…” என்றா சொல்லுவார்?

பரிபூரணமாக ஆசிர்வதித்தாராம். அதுவும் தனுஷின் சமீபகால வெற்றிகள், அவரது வேகம், முன்னேற்றம் எல்லாவற்றையும் பற்றி ஷர்மிலிக்கு எடுத்துச் சொல்லி, “இது நல்ல ஆஃபர். தாராளமா நடி” என்று அனுப்பி வைத்ததுடன், ரஜினியின் மேக்கப் மேனையும் தன் இன்புளுயன்சில் வரவழைத்து ஷர்மிலிக்கு துணையாக அனுப்பி வைத்தார். ‘கொடி’ படத்தின் டைரக்டர் துரை.செந்தில்குமாரும் ஷர்மிலிக்கு முழுக்கதையையும் சொன்னாராம். அதற்கப்புறம் சில வாரங்களில் நடந்ததுதான் பொல்லாத திருப்பம். தனுஷின் ஆலோசனைப்படி கதையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்தார்கள்.

அதுவரைக்கும் படத்தில் ஒரு ஹீரோயின்தான் என்ற நிலைமை, சட்டென மாறி இரண்டு ஹீரோயின் என்றாகிவிட்டதாம். இந்த விஷயம் முறையாக ஷர்மிலிக்கும் தெரிவிக்கப்பட்டதாம். ஷர்மிலியின் அப்பா பாபு ஒரு காலத்தில் தன் இரு மகள்களுக்கும் அற்புதமாக கால்ஷீட் பார்த்து அருமையாக படப்பிடிப்புக்கு அனுப்பி வந்தவர். மகள்களுக்கு எவ்வித குறையும் நேராமல் கவனமாக பார்த்த வந்தவரல்லவா? ஷர்மிலியின் ரீ என்ட்ரி இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக வந்துவிடக் கூடாது என்று நினைத்தாராம். இந்த படத்திலிருந்து என் மகள் விலகிக் கொள்கிறார் என்று அவரே கூறிவிட, அதற்கப்புறம் வந்தவர்தான் கீர்த்தி சுரேஷ்.

கிடைக்கிற பஸ்ல எல்லாம் ஏறுனா போக வேண்டிய ஊர் வந்து சேராது என்பதை சற்று பலமாகவே தெரிந்து வைத்திருக்கிற பேமிலி. ஏமாத்த முடியுமா?

மருந்து வாங்கும் போது... எச்சரிக்கை! கவனம் தேவை...!



மருந்து வாங்கும் போது... கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.

1. மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்!

தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன... கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல் நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!

இப்போது பெரும்பாலான மருத்துவர் கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித் தருகின்றனர். சிலர் கம்ப் யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள்.

கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக் கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப் பாருங்கள்!

2. செல்போனில் மருந்துச் சீட்டு நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு போன்றவற்றை Cell Phone™ மெஸேஜ் ஆக எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த   Message  வீட்டில் உள்ள அனைத்து செல்ஃபோனி லும் இருக்கட்டும். அவசரத்தில் சிகிச்சை யளிக்க மருத்துவர் கேட்கும்போது இது உயிர் காக்க உதவும்.

3. பில் இல்லா மருந்து மருந்தல்ல எங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும் எவ்வளவு அவசர மானாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள். பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும். மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், பில்லை வைத்து கவனமாக சரிபார்த்து, வாங்குங்கள். சந்தேகம் இருக்கும் பட்சம் மருத்துவரிடமோ அவரது உதவியாளரிடமோ Cross Check செய்து கொள்ளுங்கள்.

4. உதிரிகள் வேண்டவே வேண்டாம் மருந்தின் பெயர், மருந்துப் பொருட்களின் பெயர், தயாரித்த கம்பெனியின்  பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழு அட்டையாக மாத்திரை வாங்கும் போதுதான் கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங் கள். உதிரி மாத்திரைகள், காலாவதி, போலி, சாம்பிள் மாத்திரைகளாகக் கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் தேவை.

5. வீரியமில்லாமல் காரியமில்லை மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 2 மிலி, 5 மிலி, 10 மிலி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம்.

6. காலாவதி மாத்திரை காலனிடம் சேர்க்கும் எந்த மருந்தையும் நீங்களாகப் பார்த்து, காலாவதி தேதி சரிபாருங்கள். சில மாத் திரைகளில், 18 மாதங்கள், 24 மாதங்கள். தயாரித்த தேதியிலிருந்து என போட்டிருப் பார்கள். அதையும் சரிபாருங்கள்.

ஒரே வகையான மருந்து 6 மாதம் ஒரு கம்பெனியும் மற்றொரு கம்பெனி 3 வருடம் கழித்தும் காலாவதி தேதியை குறிப்பிட்டிருக்கும். அது மருந்து தயாரிக் கும் முறை, மருந்தின் உட்பொருட்கள் பொறுத்து மாறக்கூடும். நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.

சில மருந்துகள் 1 நாள் தாண்டினால் கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணம் டெட்ராசைக்ளின் வகை மருந்துகள். சில மருந்துகளில் காலாவதி தேதி நீண்ட நாட்கள் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு பவுடர் வடிவில் கொடுக்கப்படும் ‘ஆன்டி பயாடிக்Õ வகை மருந்துகள், காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 5 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என சிறிய எழுத்தில் எழுதியிருப்பார்கள். அதுபோன்ற மருந்து களை 5 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.

7. நீண்ட நாட்களுக்கு...

 நீண்ட நாட்களுக்கு சாப்பிட வேண்டிய, தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறைந்தது 1 வாரத்துக்கான அளவாவது வீட்டில் இருக்கட்டும். இரவு ஒரே மாத்திரை இருந்து அதுவும் கீழே தவறி விழுந்துவிட்டால், தேவையில்லாத, பயம், பதட்டம், கவலை, அலைச்சல் டென்ஷன் இதை தவிர்க்க கைவசம் சற்று மாத்திரைகள், பர்ஸ், அல்லது ஹேண்ட் பேகில் இருக்கட்டும்.

8. குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிளோ, 10 முதல் 20% வரை எம்.ஆர்.பி. விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவை யான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.

9. அதே மருந்து... வேறு கம்பெனி சில மருந்து கம்பெனியின் தயாரிப் புகள் இல்லாதபோது நீங்களாகவே வேறு கம்பெனி மருந்துகளை மருத்துவரின் அனுமதியில்லாமல் வாங்காதீர்கள். போலி கம்பெனியா, தடைசெய்யப்பட்ட மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை உங்கள் மருத்துவர் அறிவார். குறிப்பாக வலிப்பு/ சர்க்கரை வியாதி/ ரத்தக் கொதிப்பு மாத்திரை வாங்கும்போது, வீரியம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ, தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

அதுபோலவே மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை நீங்களாகவே குறைத்துக் கொள்ளவோ அதிகரித்துக் கொள்ளவோ வேண்டாம்.

என் நண்பர் ஒருவர் ‘விருந்துக்குப் போய்விட்டு வந்தால் சர்க்கரை மாத்திரை இரண்டாகப் போட்டுக் கொள்வேன்’ என்பார். தலைக்கு மேல் கத்தி தொங்கு வது போன்றது இது. எப்போதும் ஆபத்து நேரலாம்.

10. மருந்துகள் பாதுகாக்க குழந்தைகள் கைக்கு எட்டாமல் வைக்கவும். பல மாத்திரைகள் கலர் கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல இருப்பதால் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளும் ஆபத்து அதிகம்.

சில மருந்து மாத்திரைகள் குறிப்பாக நெஞ்சுவலி மாத்திரைகள் போன்றவை கைக்கு எட்டும் வகையிலும், தேவைப்பட்டால் ஒவ்வொரு அறையிலும் இருப்பது நலம்.

சில மருந்துகளை குளிர் சாதனப் பெட்டியில் தான் (இன்சுலின் போன்றவை) வைக்க வேண்டும். ஆனால் ஓபஸ் பெட்டியில் (ப்ரீஜரில்) வைக்கக் கூடாது.

பொதுவாக எல்லா மருந்துகளையும் வெயில், சூடுபடாத, ஈரம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம். அடுப்பு அருகே, ப்ரிட்ஜின் மேல், சூடான பாத்திரம், ஹீட்டர் அருகே அல்லது வெயில்படும் இடங்களில் மருந்துகளை வைத்தால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. சிலவகை தடுப்பு மருந்துகளில், மருந்தின் வீரியம் கெட்டுப் போனதை அந்த லேபிள் கலர் மாறு வதைப் பொறுத்து கண்டுபிடிக்க இயலும்.

புத்தகம் வாசிப்பது பற்றி புகழ் பெற்ற மேதைகள் சொன்ன சில சுவாரசியமான தகவல்கள் !!!


► ''என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று'' என்றார் பெட்ரண்ட் ரஸல்.


► மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.


► 'வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றாராம் நெல்சன் மண்டேலா.


► பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.


► ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.


► 'ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்த பாகுபலி டீம்- வலுவானது கூட்டணி

கடந்த வருடம் வெளிவந்த பாகுபலி படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் தற்போது ரெடியாகி வருகின்றது.

இப்படத்தில் மிகவும் பேசப்படும் ஒரு விஷயம் VFX பணிகள், பாகுபலி-2விற்காக 2.0 படத்தை கூட VFX கலைஞர் கமல கண்ணன் மறுத்தார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ரெமோ படத்திற்கு VFX அமைக்க இவர் சம்மதித்துள்ளாராம். இதன் மூலம் இந்த படம் மேலும் ஒரு படி எதிர்ப்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது என்றால் மிகையல்ல.

சேதுபதி விமர்சனம் - ரவுடியா வந்தாலும் ரசிக்கிறாய்ங்க, போலீசா வந்தாலும் புடிக்குதுங்குறாய்ங்க

மிச்சமிருக்கிறது அது ஒண்ணுதான்… அதையும் ஏன் பாக்கி வைப்பானேன்? என்று காக்கி பக்கம் கவனம் வைக்கிற ஹீரோக்கள் பலர் அப்படியே வானில் பறந்து, புல்லட்டை நெஞ்சில் வாங்கி அதையே திருப்பி வில்லன் நெற்றிக்கு திருப்பியடித்து துவம்சம் பண்ணியிருக்கிறார்கள். “ஸ்… மிடியல” ஆக்குகிற இந்த மாதிரியான போலீஸ் கதைகளின் ‘பாலீஷ்’ வெளுத்து அநேக வருஷமாச்சு. ஆனால், அதே உடுப்பு, அதே மிடுக்குடன் யதார்த்தத்தை அணிந்து கொண்ட போலீஸ் ஹீரோக்களை மட்டும் ‘பொளந்து கட்டுய்யா என் ராசா’ என்று கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். அப்படியொரு போலீஸ் கதைக்குள் நம்ம விஜய் சேதுபதி. (ரவுடியா வந்தாலும் ரசிக்கிறாய்ங்க, போலீசா வந்தாலும் புடிக்குதுங்குறாய்ங்க, என்னவோ மேஜிக் இருக்குதய்யா உங்ககிட்ட!)

ஏ.சி.பிரமோஷனுக்காக காத்திருக்கிற ஒரு இன்ஸ்பெக்டருக்கு, பக்கத்து போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் போலீஸ் அதிகாரியின் கொலை வழக்கை விசாரிக்கும் கடமை வந்து சேர்கிறது. ‘என் லிமிட் தாண்டி ஏன்யா வேலை பார்க்குறே…’ என்று கழுத்தறுக்கிற சக போலீசின் சூழ்ச்சியை தாண்டி இவர் குற்றவாளியை கண்டு பிடிக்க, அந்த குற்றவாளியினால் அதே இன்ஸ் அடுத்தடுத்து சந்திக்கும் சங்கடங்கள்தான் படம். பொழுதெல்லாம் போலீஸ் ஸ்டேஷனிலேயே விழுந்து கிடந்திருந்தால்தான் இப்படியொரு ஸ்கிரிப்ட்டை உருவாக்கியிருக்க முடியும்! இப்படத்தின் இயக்குனர் எஸ்.யு.அருண்குமாருக்கு என்னென்ன அனுபவமோ? பட் கதை தந்த ஸ்டேஷனுக்கு ‘கை நிறைய’ கொடுங்க சார்…

சேதுபதியின் அறிமுகமே செம…! குளோஸ் அப்பில் வலி காட்டும் அந்த முகத்தை லாங் ஷாட்டில் பார்த்தால், தனது மகனுடன் அவர் போடும் செல்ல சண்டையாம் அது. போலீஸ்காரனுக்கும் குடும்பம் இருக்கு என்பதை அவ்வளவு லைவ்வாக, சுவாரஸ்யமாக, காதல் வழிய வழிய காட்டியிருக்கிறார் டைரக்டர். இந்த குடும்ப பகுதியை விட விஜய் சேதுபதியின் ஆக்ஷன் காட்சிக்கு அப்படியே அள்ளுகிறது தியேட்டர்! அதிலும் ஊர் பெரிய மனுஷன் வேல ராமமூர்த்தியை ஓங்கி ஒரு அறை கொடுத்து அப்படியே ஜீப்பில் ஏற்றி வரும் கம்பீரம்… அதுதான் இந்த படத்தின் ஸ்பெஷல் கிளாப்ஸ் ஏரியா. அதற்கப்புறம் ஹீரோவை ஒழிக்க கொல்லை பக்கமாக முயலும் வேலராமமூர்த்தியும் அவருக்கு கிடைக்கும் மொக்கை முடிவுகளும் அவ்வளவு சுவாரஸ்யம்!

ஸ்கூல் பசங்களை விசாரணைக்கு கொண்டு வந்து கடைசியில் அதில் ஒருவனால் வேலை போகிற அளவுக்கு சிக்கலுக்குள்ளாகும் விஜய் சேதுபதியும், அவரது அசால்ட்டான அப்ரோச்சும் இன்னும் இன்னும் அழகு. விசாரணை ‘கமிஷன்கள்’ எப்படி நடக்கிறது என்பதெல்லாம் மக்களுக்கு தெரிந்த சமாச்சாரங்கள்தான். ஆனாலும் இந்த படத்தில் அதன் போக்கை தெரிந்தே ரசிக்க முடிகிறது. குள்ளமாக வரும் அந்த விசாரணை அதிகாரியின் கோபத்துக்கு கரகோஷம் போடுறார்கள் ரசிகர்கள்.

“எல்லாம் நம்ம பயலுவதான். கண்ண காட்னா செஞ்சுப்புடுவானுங்க. என்ன நான் சொல்றது?” என்று அசால்ட்டாக மிரட்டுகிற எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி, இஸ்திரி போட்டு மடிச்சு வச்ச சட்டை மாதிரி அப்படியே கலையாத கம்பீரத்துடன் இருக்கிறார். அவரது கடைசி முடிவை இன்னும் கொஞ்சம் நீட்டித்திருக்கலாம்.

ரம்யா நம்பீசனுக்கு அதிகம் வேலையில்லை. ஆனால் கண்ணால் பேசி, புருவத்தால் கேள்வி கேட்டு, புருஷனை காலில் விழ வைத்து… அதகளம் பண்ணுகிறார். அவர் வெயிட் போட்டிருக்கிறார் என்று விமர்சித்துவிடக் கூடாது என்பதற்காகவே, வார்த்தைக்கு வார்த்தை ‘குண்டாத்தி’ என்று விஜய் சேதுபதியை விட்டு செல்லம் கொஞ்ச வைக்கிறார்கள். என்ன ஒரு தந்திரம்! விஜய்சேதுபதி ஸ்டேஷனில் வேலை பார்க்கும் அந்த துறுதுறு இன்ஸ்பெக்டர் பிரம்மாதம்.

நிவாஸ் பிரசன்னா இசையில், ‘நான் யாரு? ங்கொய்யால…’ என்றொரு பாடல். ட்யூன் ரசனைதான். அதற்காக இப்படியெல்லாம் வார்த்தைகளை போடணுமா? எழுதின புண்ணியவானை முச்சந்தியில் வச்சு வசை பாட வேண்டியதுதான். ஆனால் இருவேறு சூழ்நிலைகளில் வரும் அந்த ஒரு பாடல் ஓ.கே. தினேஷ் ஒளிப்பதிவும், அவரது லைட்டிங்குகளும் தனி அழகு!

‘நான் போலீஸ் இல்ல, பொறுக்கி’ என்ற படமும் வந்திருக்கிறது. ‘நான் பொறுக்கி இல்ல போலீஸ்’ என்ற படமும் வந்திருக்கிறது. ‘நான் போலீஸ், அதுவும் பொறுப்பான போலீஸ்’ என்று சொல்ல வந்திருக்கிற படம் இது.

வேற வழியேயில்ல, மெடலை குத்திட வேண்டியதுதான்!