Tuesday 23 February 2016

தலைவலி அடிக்கடி வருதா? இதுதான் காரணம்..!

 அனைவரும் இன்றைய நாள் நன்றாக இருக்க வேண்டும், எந்த ஒரு டென்சனும் வந்துவிடக் கூடாது என்று அன்றைய தினத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால் அதை தலைவலி வந்து கெடுத்துவிடும். இந்த தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்திரைகளும் உடலும் பெரும் கெடுதலைத் தான் ஏற்படுத்தும். ஆகவே அத்தகைய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரிசெய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகின்றதென்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.

இப்போது எந்த செயல்கள் நமக்கு தலைவலியை உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி;


ஈரமான கூந்தல்


காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்கும். ஆகவே எப்போதும் தலையை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம். அதற்காக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை கூந்தல் உதிர்தலை உண்டாக்கும்.

அளவுக்கு அதிகமான வெப்பம்

வேலையாக வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும். மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண்டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது.

வாசனை திரவியங்கள்

உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த செண்ட் வாசனை, அதிக தலைவலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல், மிதமாக உபயோகிப்பது நல்லது.

கம்ப்யூட்டர் திரை

கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

தொலைக்காட்சி திரை

கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

படுக்கையில் படித்தல்


படுக்கும் போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால், கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை பார்க்கும். ஆகவே எப்போது படிக்கும் போதும், உட்கார்ந்து படிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிக குளிர்ச்சி

அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல்லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பது போல் இருக்கும். ஏனெனில் அவை மூளையை உறைய வைத்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொருளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பிட்டால் நல்லது.

ஆல்கஹால்


ஆல்கஹால் பருகுவதால் கூட தலை வலி உண்டாகும். ஏனெனில் சிலர் ஆல்கஹாலை குளிர்ச்சியாக சாப்பிடுவர். சாதாரணமாக ஆல்கல் சாப்பிட்டாலே, மூளை மிகவும் தளர்ந்து இருக்கும். அதில் குளிர்ச்சியுடன் சாப்பிட்டால், தலை வலி தான் அதிகமாகும். அதிலும் அந்த வலி பருகிய மறுநாள் தான் உண்டாகும். ஆகவே குளிர்ச்சியாக சாப்பிடுவதோடு, அதிகமாக பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.

சரியான தூக்கம்
தூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றியமையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

நீண்ட தூர பயணம்
பைக்கில் மிகுந்த வேகத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அதையே குளிர் காலத்தில் செய்தால், களி, ஜலதோஷம், போன்றவை ஏற்படும். அதிலும் காலை மற்றும் இரவு நேரங்களில் செல்வது தான் பெரும் பிரச்சனையை உண்டாக்கும். அவ்வாறு பிரச்சனைகள் வரும் போது, நிச்சயம் வராத வலிகள் அனைத்தும் வந்துவிடும். ஆகவே பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அல்லது ஏதேனும் துணியைக் கொண்டு, வாய் மற்றும் மூக்கை மறைத்துக் கொண்டு ஓட்ட வேண்டும்.

தமிழ் சினிமாவில் களம் இறங்கும் எம்.ஜி.ஆரின் பேரன்

தமிழ் சினிமாவில் எத்தனை நடிகர்கள் வந்து சென்றாலும் எம்.ஜி.ஆர் எப்போதும் யாராலும் மறக்கமுடியாதவர். ஒரு நடிகர் என்பதை தாண்டி தமிழகத்தில் ஒரு நல்லாட்சியை நடத்தியவர்.

இவரின் வளர்ப்பு மகளான சுதாவின் மகன் ராமச்சந்திரன். இவர் அடுத்து டி.ஆர்.பாஸ்கர் என்பவரின் இயக்கத்தில் கபாலி தோட்டம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இவருக்கு இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜ், சமுத்திரகனி, பேரரசு ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

நாங்களும் பிழைக்கணும்… வழி விடுங்க! நடிகர் சங்கத்தின் நியாயமான கோரிக்கை

தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் தலைமையில் செயற்குழு உறுபினர் A.L.உதயா ,நியமன செயற்குழு உறுபினர்கள் லலிதா குமாரி , மனோபாலா ,அஜய் ரத்தினம் ஆகியோர் இன்று தலைமை தேர்தல் ஆணையர் திரு.ராஜேஷ் லங்கோனி அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது !!

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களில் 1000 க்கும் மேற்பட்டோர் தமிழகமெங்கும் உள்ளனர். அவர்கள் நாடக துறையை சார்ந்தவர்கள். நாடகம் என்பது திருவிழா காலங்களில் மட்டுமே நடத்தப்படும். அதற்கான சூழல் வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கும். அக்காலகட்டத்தில் கிடைக்கும் வருமானத்தில் தான் வருடம் முழுவதும் குடும்பம் நடத்த வேண்டும். நவீன பொழுதுபோக்கு சாதனங்களால் நாடகம் துறை அழிந்து வருகின்ற இந்த காலகட்டத்தில் அதையே நம்பி வாழும் நாடக கலைஞர்கள் மிகுந்த கஷ்டத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

ஆனால் கடந்த பொது தேர்தலில் இருந்து தேர்தல் காலங்களில் நாடகம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதால் இக்கால கட்டமான மூன்று மாதங்களும் எங்கள் நாடக கலைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடுகிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி தொகை கட்ட கூட முடியாமல் போகிறது. எனவே இதை தாங்கள் பரிசீலீத்து இந்த காலகட்டத்தில் நாடகம் நடத்துவதற்கு சிறப்ப அனுமதி வழங்கி உதவிடவேண்டும் என்றும் , தற்காக தேர்தல் ஆணையம் விதிக்கும் விதிகளுக்கு கட்டுப்பட்டு அவர்கள் நடப்பார்கள்”. என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது .

தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் துணை தலைவர் .பொன்வண்ணன் கூறியதாவது..

புதிய அணி பொறுப்பேற்றயுடன் , ஏற்கனவே நாடக நடிகர்கள் வைத்த கோரிக்கையை மிக முக்கியமான பிரச்சனையாக எடுத்துக்கொண்டு , கடந்தமுறை தமிழக முதல்வர் அம்மா அவர்களை சந்தித்தபோது இதை அவர்களிடம் ஒரு கோரிக்கையாகவே முன் வைத்தோம் .அப்போது நாடக நடிகர்களுக்கு எங்கள் அரசாங்கம் எப்போதும் முழு ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறது.தேர்தல் காலகட்டத்தில் நாடக நடிகர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை உள்ளதென்றால் அதை கோரிக்கையாக தேர்தல் அதிகாரியை சந்தித்து விண்ணப்பம் கொடுங்கள் என்று அம்மா அவர்கள் ஒரு வழிகாட்டுதலை சொன்னார்கள் .

அதன் அடிப்படையில் இன்று தேர்தல் அதிகாரி திரு.ராஜேஷ் லங்கோனி.IAS அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து மனுவை கொடுத்தோம் , அதற்க்கு தேர்தல் அதிகாரி அவர்கள் ,தேர்தல் காலங்களில் சுதந்திரமாக மக்கள் செயல்படுவதற்க்கு சட்டப்படி எந்த தடையுமில்லை. நான் இது பற்றி விசாரித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிப்பதாக உறுதி அளித்துள்ளார் . மேலும் முறைப்படி அவர்கள் முழு சுதந்திரமாக நாடகம் நடத்த வழிமுறை செய்கிறேன் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளார்.

எங்களுக்கு அது மிக சந்தோசமாக உள்ளது .அந்த காலக்கட்டத்தில் எங்களது நாடக நடிகர்கள் கட்சி ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ நாடகங்கள் போடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது எங்கள் கடமை . அதற்க்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைக்க நாடக கலைஞர்களிடம் அறிவுறுத்துவோம். அத்தோடு தேர்தல் அதிகாரி எங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேர்தலில் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து அனைவரும் வாக்களிப்பதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்ப்படுத்தும் வகையில் நடிகர்களின் வீடியோ பதிவை செய்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் . இது போன்ற பொது மக்களினுடைய பணியில் எங்களுடைய உழைப்பும் பங்களிப்பும் இருப்பதை நாங்கள் பெருமையாக நினைக்கிறோம். இந்த விழிப்புணர்ச்சியை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளோம். என்று கூறினார்..

வானத்தைபோல விஜயகாந்த் ஆனார் சிம்பு? ஆஹா இதுவல்லவோ நட்பு!

‘தலைக்கு மேல போயாச்சு. இதில் சாண் என்ன முழம் என்ன?’ என்ற சிந்தனை வந்தாலொழிய இப்படியொரு காரியத்தை செய்திருக்க முடியாது. நேற்று கோவை காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான சிம்பு, அங்கு நடத்திய போலீஸ் விசாரணையை தைரியமாக எதிர் கொண்டார். அப்போது கேட்கப்பட்ட முப்பத்தைந்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொன்னாராம் அவர். அங்குதான் அனிருத் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதிருக்கட்டும்…

அதென்ன வானத்தை போல விஜயகாந்த்? சிம்புவுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?

அந்த படத்தில் தம்பிகளை ஒண்டியாளாக நின்று வளர்ப்பார் அண்ணன் விஜயகாந்த். அப்போது மழை வந்து வீடு ஓழுகும். தம்பிகள் உறங்க வேண்டுமே என்று ஒரு பெரிய குடையை அவர்களின் தலைக்கு நேராக பிடித்துக் கொண்டு விடிய விடிய உறங்காமல் நின்று கொண்டிருப்பார் கேப்டன். ஜனங்களை தாரை தாரையாக அழ வைத்த பாசக்கார காட்சி அது.

கிட்டதட்ட அப்படியொரு காட்சியை நினைத்துப்பாருங்கள். குடையை பிடித்துக் கொண்டிருப்பவர் சிம்பு. குடைக்கு கீழே நிம்மதியாக உறங்குபவர்தான் அனிருத். இப்படியொரு சென்ட்டிமென்ட் பேக்கேஜில் அனிருத்தை காப்பாற்றியிருக்கிறார் சிம்பு. “இந்த பீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் சம்பந்தம் இல்லை. இந்த பாடலை பாடியது நான்தான். என்னுடன் அப்போது இருந்தவர்கள் இன்னார்தான் ” என்று சிலரது பெயரையும் அதிகாரிகளிடம் குறிப்பிட்டு விட்டு வந்திருக்கிறார். என்ன காரணத்திற்காகவோ அவர் அனிருத்தை காப்பாற்றியிருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். இக்கட்டான நேரத்தில் நண்பனையும் போட்டுக் கொடுக்காத அவரது நல்ல புத்திக்காக ஒரு வெல்கம்!

முன்னேயே சொல்லியிருக்க வேண்டிய முன் குறிப்பு, ஆனால் பின் குறிப்பாக- முதலில் இந்த பாடலுக்கு இசையமைத்தவர் அனிருத் என்று சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் கூறியிருந்ததை இங்கே கருத்தில் கொள்ளவும்!

கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை….!! அவசியம் படிக்க வேண்டும்!!

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..
கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப
 திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு…

என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய
 வந்து பார்த்தா அந்த நாய் வாயில
 ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு…

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த
 சீட்டை எடுத்து அதில் உள்ள
 சாமான்களை போட்டு, மீதி பணத்தையும்
 அதே பையில் நாய் கழுத்தில்
 மாட்டிவிட்டார். ..

நாய் திரும்பி நடக்க
 ஆரம்பிச்சுது..

. கடைக்காரர் சுவாரசியமாகி நாய்
 பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின்
 ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்..

அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது…

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது…

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை…

அது பின்னாலே அதன் வீடு செல்ல
 முடிவெடுத்தார். ..
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில்
 நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய்
 பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த
 பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட்
 கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய்
 பேருந்தில் இருந்து இறங்கியது…

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்…

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன்
 நின்று கதவை தட்டியது…

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்…

நாயின் கழுத்தில் உள்ள
 பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்….
கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன்
 அடிக்கறீங்க??

அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு,
சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட்
 எடுத்துகிட்டு வருது அதை போய்
 அடிக்கறீங்களே …???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய
 எடுத்துட்டு போகாம வந்து கதவ
 தட்டுது பாருங்க..

நாய்க்கு கொஞ்சம் கூட
 பொறுப்பே இல்லன்னு….

# # # #
நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான்
 பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல
 பெயரே கிடைக்காது.

ரஜினி, மோகன்லாலுக்காக வெளிநாட்டு டூப் நடிகர்கள் வருகை

ஆக்‌ஷன் ஹீரோக்கள் ஸ்டன்ட் காட்சியில் நடிக்கும்போது பெரும்பாலும் தாங்களே அக்காட்சியில் நடிக்க எண்ணுகிறார்கள். ரிஸ்க் நிறைந்த காட்சிகளில் ஹீரோக்களுக்கு பதில் டூப் நடிகர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அந்த காலம் முதல் இன்றுவரை இந்த பாணி தொடர்கிறது. மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் புதுபடம் ‘புலி முருகன்’. இவரது படப்பிடிப்பில் 2 வெள்ளைக்கார நடிகர்கள் சுற்றி வருகின்றனர். இருவரும் மோகன்லாலின் ரசிகர்கள் அவரை காண வந்திருப்பதாக யூனிட்டில் உள்ளவர்கள் சொல்கின்றனர்.

வெளிநாட்டு ரசிகர்களின் புகைப்படத்தை பார்த்த சில நெட்டீஸன்கள் விவாதத்தை தொடங்கி விட்டனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த யன்னிக் பென், டிஜிபிரில் நிவிக் என்ற இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள்தான் இருவரும். ‘ரேஸ் 2’ உள்ளிட்ட பல இந்தி படங்களில் ஹீரோக்களுக்கு ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போட்டு நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தமிழிலும் ‘மாற்றான்’, ‘புலி’ படங்களில் டூப் போட்டு நடித்துள்ளனர். மோகன்லால் நடிக்கும் படத்தில் அவருக்கு டூப் போடுவதற்காகவே இந்த இருவரும் வந்திருக்கின்றனர் என இணைய தளத்தில் விவாதித்து வருகின்றனர். மோகன்லால் அணிந்திருக்கும் அதே காஸ்டியூம் டூப் நடிகர்களில் ஒருவருக்கு தரப்பட்டிருக்கிறதாம். ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்துக்கும் ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்க டூப் நடிகர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்களாம். 

கத்தி கதை உண்மையானது- இளைய தளபதி ஸ்டைலில் கலக்கிய கிராம மக்கள்

இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றிபடங்களில் ஒன்று கத்தி. இப்படம் வசூல் மட்டுமின்றி விமர்சனங்கள் வாயிலாகவும் பெரிய வரவேற்பு பெற்றது.

இப்படத்தில் கிராம மக்களின் வலியை நகர மக்கள் அறிய வேண்டும் என, விஜய் குடிநீர் செல்லும் குழாயில் உட்கார்ந்து போராட்டம் செய்வார்.

இந்த காட்சியை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது, தற்போது இதே ஸ்டைலில் ஹரியாவனவில் உள்ள ஓர் இனத்தை சார்ந்த மக்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு நீண்ட நாட்களாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

யாரும் கண்டுக்கொள்ளாததால், ஹரியானாவிலிருந்து டெல்லி செல்லும் குடிநீர் குழாயை அடைத்தனர். இதனால், டெல்லியில் சில குடுநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது உடனே அரசாங்கம் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாம். எது எப்படியோ முருகதாஸ் படத்தில் சொன்னது நிஜத்தில் நடந்த விட்டது.

விஜயகாந்த் மாநாடு... ராமராஜன் கண்டுபிடித்த ரகசியம்!

மக்களுடன் கூட்டணி, தெய்வத்துடன் கூட்டணி எனக்கூறிய விஜயகாந்த், தற்போது மாநாடு நடத்துவது கூட்டம் காட்டி பேரம் பேசுவதற்காக மட்டுமே என்று நடிகரும், அதிமுக தலைமைக்கழக பேச்சாளருமான ராமராஜன் பகீர் குற்றம்சாட்டியுள்ளார்.


திண்டுக்கல் அருகே கன்னிவாடியில் நடைபெற்ற அதிமுக  கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராமராஜன், " அதிமுக அரசு மட்டுமே எந்த நேரத்திலும் மக்களை சந்திக்கக் கூடியது. பிற கட்சியினர், தேர்தல் நேரத்தில் சினிமா காமெடி போல, நாங்களும் அரசியல் கட்சிகள்தான் என பறைசாற்றிக் கொள்கின்றனர்.

மக்களுடன் கூட்டணி, தெய்வத்துடன் கூட்டணி எனக்கூறிய விஜயகாந்த் தற்போது மாநாடு நடத்துவது கூட்டம் காட்டி பேரம் பேசுவதற்காக மட்டுமே. சினிமாவில் இதுவரை மூன்றரை லட்சம் பேரை சுட்டுக்கொன்று, இளைய சமுதாயத்திடம் தீவிரவாத கலாசாரத்தை ஏற்படுத்தியவர் அவர். இந்தி பேசும் வடமாநிலத்தவரின் தமிழைக் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் விஜயகாந்தின் பேச்சில் தெளிவு இருக்காது.

மக்களிடம் கட்சியை ஞாபகப் படுத்துவற்காகவே, ஸ்டாலின் நமக்கு நாமே 'டூர்' சென்றார். சொந்த சகோதரரை அனுசரிக்க முடியாத ஸ்டாலின், எப்படி நாட்டு மக்களையும், கட்சி தொண்டர்களையும் அனுசரித்து செல்ல முடியும்? அழகிரி கூறியதைப்போன்று, அவர் ‘காமெடி பீஸ்'தான். கருணாநிதியைப் போன்று பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி போன்றவற்றில், ஜெயலலிதா நேரத்தை வீணடிப்பவர் அல்ல" என்று காரசாரமாக பொளந்து கட்டினார்.

ஹோட்டல்ல சாப்பிடுற பழக்கமா ? முதல்ல இதைப் படிங்க ....

 நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்..

.
இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!


சோறு: தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது!


புரோட்டா: பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!


சால்னா : சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. 'ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி!


ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க... தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்.


எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.



சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக்கணும்.