Tuesday 26 January 2016

சொந்தப் படம் எடுக்கும் ஹீரோக்களின் கணக்கு

நம்பிக்கைக்குரிய நண்பர்கள் அல்லது மானேஜர்கள் பெயரில் ஹீரோக்களே படம் தயாரிப்பது புதிதல்ல. கடந்த காலங்களில் பல ஹீரோக்கள் இப்படி வேறு ஒருவர் பெயரில் படங்களைத் தயாரித்திருக்கிறார்கள். இப்ராகிம் ராவுத்தர் பெயரில் விஜயகாந்தும், ராமனாதன் பெயரில் சத்யராஜும், சுந்தேரசன் பெயரில் சரத்குமாரும், கபார் பெயரில் கார்த்திக்கும், நிக் அர்ட்ஸ் சக்கரவர்த்தி பெயரில் அஜித்தும் படங்களை தயாரித்துள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது விஜய்சேதுபதியும், சிவகார்த்திகேயனும் சேர்ந்துள்ளனர். விஜய்சேதுபதி புரடக்ஷன்ஸ் என்ற பெயரிலேயே ஒரு படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார் விஜய்சேதுபதி. அந்தப்படம் டேக்ஆப் ஆகவில்லை. எனவே தன்னுடைய நண்பர் கணேஷ் என்பவரை தயாரிப்பாளராக்கி ஆரஞ்சுமிட்டாய் என்ற படத்தைத் தயாரித்தார்.

ஆரஞ்சு மிட்டாய் படம் படு தோல்வியடைந்தது. தற்போது கணேஷ் பெயரிலேயே றெக்க என்ற படத்தைத் தயாரிக்கிறார் விஜய்சேதுபதி. அவரது போட்டியாளரான சிவகார்த்திகேயன், தன்னுடைய நண்பரும் மானேஜருமான ஆர்.டி.ராஜா என்பவரை தயாரிப்பாளராக்கி தற்போது நர்ஸ் அக்கா படத்தை தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தை மட்டுமல்ல அடுத்து நடிக்க உள்ள மோகன்ராஜா இயக்கும் படம், சிறுத்தை சிவா இயக்கும் படம் என அனைத்து படங்களையும் தன்னுடைய தயாரிப்பிலேயே எடுக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். தன்னுடைய படத்துக்கு பல கோடிக்கு பிசினஸ் இருப்பதாக நினைக்கும் ஹீரோக்கள் அந்த லாபம் மொத்தத்தையும் தானே அறுவடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனாலேயே சொந்தப்படம் எடுக்கிறார்கள். இவர்களின் கணக்கு எத்தனை காலத்துக்கு வொர்க்அவுட்டாகும்?

மாணவிகள் தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகம் மட்டும் காரணமல்ல... இவர்களும்தான்!

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் தற்கொலை விவகாரத்தில் அந்த மாணவிகள் 15 அமைப்புகளிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையிலேயே அந்த மாணவிகள் தற்கொலை முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2008ம் ஆண்டே எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கும் நிலையில், அந்த கல்லூரி அங்கீகாரம் பெற்ற பட்டியலில் இடம் பெற்றிருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன்  எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில், பி.என்.ஒய்.எஸ் பட்டப்படிப்பிற்கான அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியலில் எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி இடம்பெற்றுள்ளது. இது போன்ற பல குழப்பமானத் தகவல் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.  அங்கீகாரம் ரத்து செய்யப்பபட்ட நிலையிலும் 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கல்லூரி இயங்கி வந்திருக்கிறது.

தற்கொலைக்கு முன், தங்கள் பிரச்னைகள் குறித்து அந்த மாணவிகள் 15 அமைப்புகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்களது புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்தே அந்த மாணவிகள் தற்கொலை முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

* தமிழக ரகசிய புலனாய்வு துறை- பதில் ஏதும் வரவில்லை.
* முதலமைச்சரின் தனி பிரிவு- இது வரை பதில் ஏதும் இல்லை.
* சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர்- பதில் ஏதும் வரவில்லை.
* விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்- சிசி/13/15407
* தமிழக மனித உரிமை ஆணையம்  வழக்கு எண்- 8805/2013
* தேசிய ஆதிதிராவிட ஆணையம்  சென்னை  எண் – 4/32/2013
* இந்திய மருத்துவம் - ஹோமியோபதி துறை – 12666/2/2013
* மக்கள் சுகாதார துறை  க.எண் . 40884/1-2/2013-1
* தமிழக ஆதிதிராவிட நல இயக்குனரகம்  4/34339/2013
* தமிழக சட்டப்பணிகள் துறை  3003//2014
* விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்- சிசி/13/15407
* இந்திய மருத்துவம் - ஹோமியோபதி துறை – 12666/2/2013
* சுங்க வரி துறை  சி.எண்.11/39/123/2013
* தமிழக ஆளுநர்  அலுவலகம் எண்.4910/2/2013
* தமிழ்நாடு டாக்டர் மருத்துவ பல்கலைக்கழகம் பல புகார் மனுக்கள்
* தமிழக ஊழல் தடுப்பு பிரிவு  எண்.1341/2014/
* விழுப்புரம் ஆதிதிராவிடர் அலுவலகம்  4/2281/2014 - பதில் ஏதும் இல்லை.

இப்போது மாணவிகள் தற்கொலைக்கு அந்த கல்லூரியின் நிர்வாகிகளை மட்டும் குறை கூறி என்ன பயன்? இத்தனை அமைப்புகளுக்கு ஆதாரங்களுடன் மாணவிகள் புகார் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?

இதற்கெல்லாம் யார் பதில் அளிக்கப் போகிறார்கள்?

நாப்கின் – தயாரிப்பில் புரட்சி ஏற்படுத்திய முருகானந்தத்திற்கு பத் மஸ்ரீ அவார்ட் !

இன்றளவும் பெண்களே வெளியே சொல்ல கூச்சப்படும் விஷயமான மாதவிடாய் -க்கு ‘சானிடரி நாப்கினை’அதுவும் மிக மலிந்த விலையில் தயாரித்து, அடிமட்ட ஏழை பெண்களுக்கும் போய்ச் சேரும் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார், கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர். நாப்கினை எளிய முறையில் தயாரிக்க உதவும் இவரின் கண்டுப்பிடிப்பான எந்திரம் தற்போது இந்தியா உள்பட 17 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. பருத்தியில் இருந்து இயற்கை முறையில் விலை குறைவாக நாப்கின் தயாரிக்க வடிவமைத்த இந்த எந்திரத்தால் இவ, உலகின் செல்வாக்குமிக்க 100௦ நபர்களில் ஒருவராக அமெரிக்காவின் ‘டைம்ஸ்’ பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்க அதிபர் ஒபாமா விடம் விருது பெ றுள்ளார் இந்நிலையில் நம் இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுக்கு முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது,‘ஏற்கனவே எனக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது. இருந்தாலும் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.நான் வடிவமைத்த எந்திரம் மூலம் நாப்கின்களை விலை குறைவாக தயாரித்து வழங்க முடிகிறது. ஆரம்பத்தில் எனக்கு இதில் பல்வேறு சங்கடங்கள் இருந்தாலும், இறுதியில் இந்த எந்திரத்தை கண்டுபிடித்ததன் மூலம் வெற்றி கிடைத்துள் ளது. பத்மஸ்ரீ விருது கிடைத்ததன் மூலம் நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறைந்து விட்டன” என்றார்.

55 வயதான அருணாசலம் முருகானந்தம், தனது சாதனை குறித்து, “எனது சொந்த ஊர் கோவை, பாப்பநாயக்கன்புதூர்.அப்பா நெசவுத் தொழிலாளி.அம்மா விவசாயக்கூலி. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. திடீர்னு ஒருநாள் அப்பா இறந்துவிட்டார். வீட்டின் வறுமையை போக்க’கிரில்’ பட்டறைக்கு வேலைக்குப் போனேன். ஒருநாள் என் மனைவி எதையோ மறைச்சி எடுத்துட்டுப் போனாங்க.என்னனு கேட்டப்ப ‘இது, பொம்பளைங்க சமாச்சாரம்’னு சொன்னா. விடாப்பிடியா விசாரிச்சப்ப அது அழுக்குத் துணின்னு தெரிஞ்சது. நாப்கின் பயன்படுத்தலாமே என்றேன். ‘விலை அதிகம்’ என்றாள். அப்போது தான் புரிந்தது, கிராமப் பெண்கள், ஏழை பெண்கள் வசதி இல்லாம பழைய துணிகளை பயன்படுத்து றாங்கன்னு.

உடனே மலிவு விலையில் நாப்கின் தயாரிக்க தயாரானேன். கடையில ஒரு நாப்கினை வாங்கி பிரிச்சுப் பார்த்து, அதே மாதிரி ஒரு நாப்கின் தயாரிச்சேன். என் மனைவிகிட்ட கொடுத்து சோதனை செய்தேன்; ‘சரியில்லை’ன்னு சொன்னாள்; முதல் அடியே தோல்வியில் முடிந்தது.அடுத்ததா மனைவி மட்டு மல்லாம, அம்மா, தங்கச்சி, மருத்துவக் கல்லுாரி மாணவிகள்னு எனது சோதனையை தொடர்ந் தேன். ஒரு கட்டத்தில் சோதனைக்காக, நான் தயாரித்த நாப்கினை பயன்படுத்த பலரும் மறுத்தாங்க. என் முயற்சியை பார்த்து எனக்கு ஏதோ பால்வினை நோய் இருக்குனு சிலர் ஊர்ல தகவல் பரப்பி விட்டாங்க. அதைக் கேட்டு என் மனைவியும், அம்மாவும் பிரிஞ்சு போயிட்டாங்க.

என்னோட விடா முயற்சியில வெளிநாட்டு கம்பெனிகள் பயன்படுத்துவது, ‘பைன்’ மரத்திலிருந்து வரும் ஒரு வகை பஞ்சுனு தெரிஞ்சுது. உடனே ‘பைன்’ மரப்பஞ்சை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தேன். பத்து வருட போராட்டத்துக்குப் பின், மலிவு விலை நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கினேன்.அதில் தயாரித்த முதல் நாப்கினை கல்லூரி மாணவி ஒருவர் பயன்படுத்திட்டு மிகவும் நல்லா இருக்குன்னு சொன்னார். ரொம்ப வசதியா இருக்குனு சொன்னப்போ, எனக்கு அப்படியொரு சந்தோஷம். பல வருடக்கனவு நிறைவேறியது.நான் தயாரிச்ச இயந்திரத்தை பெண்களே சுலபமா இயக்கி நாப்கினைத் தயாரிக்கலாம். ஒரு நாப்கின் விலை ஒரு ரூபாய்தான். இந்த தகவல் பரவி நிறைய பேர் இந்த இயந்திரத்தை தயாரிக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க.

கடந்த 2005ல் ஐ.ஐ.டி., ‘சமூக மாற்றத்துக்கான சிறந்த கண்டுபிடிப்பு’ என்று என் கண்டுபிடிப்பை தேர்வு செய்தது. என் கனவே இந்தியாவுல இருக்கிற அத்தனை ஏழைப் பெண்களுக்கும் என் கண்டுபிடிப்பு போய் சேரணும்ங்கறதுதான். இனி எந்த சகோதரியும் மாதவிடாய் காலங்கள்ல அழுக்குத் துணியைப் பயன்படுத்தக் கூடாது.”இவ்வாறு தெரிவித்தார்.

முருகானந்தத்தை பாராட்டி ஊக்குவிக்க, 944 22 24069 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி: ரஜினி, கமலுக்கு அழைப்பு

நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள சங்கத்துக்கு சொந்தமான சுமார் 19 கிரவுண்ட் காலி நிலத்தில் புதிய கட்டிடம் கட்டும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். சினிமா தியேட்டர், கலையரங்கம், டப்பிங், எடிட்டிங் அறைகள், ரிக்கார்டிங் ஸ்டுடியோ, நிர்வாகிகளுக்கான அலுவலகங்கள் போன்றவை அங்கு அமைய உள்ளன.

இந்த கட்டிடம் கட்டுவதற்கு பலகோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக புதிய படம் ஒன்றில் விஷால், கார்த்தி, ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா உள்ளிட்ட நடிகர்கள் சம்பளம் வாங்காமல் நடிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான கதை மற்றும் டைரக்டர் தேர்வு நடக்கிறது. இந்த படம் மூலம் வசூலாகும் தொகை முழுவதும் கட்டிட நிதியில் சேர்க்கப்படுகிறது.

அத்துடன் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டவும் ஏற்பாடுகள் நடக்கிறது. அனைத்து முன்னணி நடிகர்களையும் இரண்டு அணிகளாக உருவாக்கி இந்த போட்டியை நடத்த உள்ளனர். கிரிக்கெட் விளையாடும் நடிகர்கள் பட்டியல் தற்போது தயாராகி வருகிறது. சென்னையில் இந்த நட்சத்திர கிரிக்கெட் நடைபெறும் என்று தெரிகிறது.

முன்னணி கதாநாயகிகள் நட்சத்திர கிரிக்கெட்டில் பார்வையாளர்களாக கலந்துகொள்கிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரையும் இந்த நட்சத்திர கிரிக்கெட்டில் கலந்து கொள்ள அழைக்கப்பட உள்ளதாக நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கிரிக்கெட் விளையாடுவார்களா? அல்லது பார்வையாளர்களாக கலந்து கொள்வார்களா? என்பது பின்னர் அறிவிக்கப்படும். தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்னால் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்துவதா? அல்லது தேர்தல் முடிந்த பின் நடத்துவதா? என்று நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களை ஒருங்கிணைத்து நாடகம் நடத்தியும் நிதி திரட்டுகிறார்கள். நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற மார்ச் முதல் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் புதிய கட்டிடம் பற்றி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

ரஜினியிடம் அதை கேட்க கூட தைரியம் இல்லை – அக்ஷய் குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பத்ம விபூஷன் கிடைக்க இருப்பதாக அண்மையில் செய்திகள் வந்தன.

ரஜினியை வாழ்த்தினீர்களா என்று அக்ஷய் குமாரிடம் கேட்டதற்கு, ரஜினி அவர்கள் பத்ம விபூஷன் விருதிற்கு தேர்வாகி இருப்பது எனக்கு சந்தோஷம்.

நான் அவரை பாராட்டவில்லை, ஏனென்றால் அவரின் போன் நம்பரை கேட்கும் அளவிற்கு கூட எனக்கு தைரியம் இல்லை என்றார்.அக்ஷய் குமார் தற்போது 2.O படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்றிய யூனுசுக்கு அண்ணா பதக்கம்!

சென்னை வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்த யூனுசுக்கு தமிழக அரசு, அண்ணா பதக்கம் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பெய்த மழை சென்னையை புரட்டிப்போட்டதோடு, பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். வெள்ளத்தில் சிக்கிய தவித்த பலரை இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீட்டனர்.


1.12.2015 அன்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் சித்ராவை மீட்டு பெருங்களத்தூர் மருத்துவமனையில் யூனுஸ் என்பவர் சேர்த்தார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் சித்ரா–கணவர் மோகன் ஆகியோர் அந்த குழந்தைக்கு யூனுஸ் என்று பெயரிட்டனர்.

முகமது யூனுசின் தன்னலமற்ற தீர செயல்களை பாராட்டி அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது. குடியரசு தின விழாவில் யூனுசுக்கு பதக்கம் மற்றும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் சான்றிதழ்கள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

அதிரவைக்கும் ரியல் எஸ்டேட் மோசடிகள்!

என்னதான் தீர்வு?

 இன்றைய தேதியில் வொயிட் காலர் குற்றங்களில் முதலிடத்தில் இருப்பது ரியல் எஸ்டேட் மோசடிதான். பிக்பாக்கெட் அடித்தால் சில நூறு ரூபாய்கள் கிடைக்கும். செயினைப் பறித்தால் சில ஆயிரம் ரூபாய் கிடைக்கும். வீடு புகுந்து கொள்ளையடித்தால் சில லட்ச ரூபாய் கிடைக்கக்கூடும். ஆனால், ஒரே ஒரு நில மோசடி செய்தால் கோடிக் கணக்கான ரூபாயைச் சுருட்டிவிட முடியும் என்பதுதான் ரியல் எஸ்டேட் மோசடிகள் அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணம்.
இந்த ரியல் எஸ்டேட் மோசடி களுக்கு முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்யவேண்டும் என்கிற கேள்வியை தமிழ்நாடு பதிவுத்துறை முன்னாள் கூடுதல் தலைவர் ஆ.ஆறுமுக நயினாரிடம் கேட்டோம். இதற்கு அவர் சொன்ன விளக்கங்களைப் பார்ப்பதற்குமுன் அவரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்…

வில்லங்கச் சான்றிதழில் பவர் கொடுக்கப்பட்ட விவரம் இடம்பெறுவது, பவர் பத்திரத்தைப் பதிவு செய்வது கட்டாயம் என்பது உள்ளிட்ட ரியல் எஸ்டேட் மோசடி களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தமிழக அரசின் நடவடிக்கை, நடைமுறைக்கு வந்ததில் இவருக்கு ஒரு  முக்கிய பங்குண்டு. தமிழகத்துக்கு என்று தனியே தமிழ்நாடு முத்திரைச் சட்டம் என்ற சட்ட வரைவு தயாரித்து அரசுக்கு சமர்ப்பித்ததிலும் இவர் முக்கியப் பங்காற்றியவர். இனி ஓவர் டு ஆறுமுக நயினார்.

நேரில் தீவிர விசாரணை..!
”பல லட்சங்கள், கோடிகளைக் கொடுத்து சொத்து வாங்கும்போது, முதலில் சொத்து இருக்கும் இடத்துக்கு நேரடியாகச் சென்று தீவிர விசாரணை செய்தும், சொத்து விற்பவரின் நாணயத்தைப் பற்றி அக்கம்பக்கத்தில் தீவிரமாக விசாரித்தும் வாங்கினால் அதுவே மோசடிகளைத் தடுக்கும் முதல்வழியாக இருக்கும்.

போலி ஆவணங்கள் உஷார்!
சமீபத்தில் ‘நிமிர்ந்து நில்’ திரைப்படத்தில் காட்டியதுபோல, ஒரிஜினல் ஆவணம் போலவே அச்சு அசலாகத் தயாரித்து மோசடி செய்வதற்கு என முக்கிய நகரங்களில் பல குழுக்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், ஏதாவது சொத்து வாங்குவது என்றால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் ஆவணம் பெற்று அதனுடன் உங்கள் வசம் கொடுக்கப்பட்டிருக்கும் ஆவணத்துடன் ஒப்பிட்டுப்பார்த்து, அதன்பிறகு சொத்தை வாங்குவது நல்லது.
இந்த போலிகள் என்பது சொத்து பத்திரத்துடன் முடிந்துவிடுவதில்லை. பட்டா, சிட்டா எனத் தொடர்கிறது. அந்தவகையில் இந்த ஆவணங்களையும், தொடர்புடைய அரசுத் துறைகளில் அவற்றின் ஆவணப் பதிவில் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த ஆவண மோசடிகளைத் தவிர்க்க பட்டா, வாரிசுச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, குடும்ப அட்டை போன்ற ஒவ்வொரு ஆவணத்துக்கும் தனித்தனி ‘செக்யூரிட்டி கோடு’ முறை கொண்டு வருவது அவசியம்.

பவர் பத்திரத்தைப் படியுங்கள்..!
சொத்துப் பிரச்னைகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது, பவர் ஆஃப் அட்டர்னிதான்.
சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வரமுடியாத நிலைமை, அதிக வயது, வேலைப்பளு காரணமாகப் பலரும் பவர் தந்துவிடுகிறார்கள். உங்களுக்கு மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே பவர் தரவேண்டும். இந்த பவர் பத்திரத்தை முழுமையாகப் படித்துப் பார்த்தபின் கையெழுத்து போடுவது நல்லது. இல்லையெனில், பவர் வாங்குபவர் தன் இஷ்டத்துக்கு ஏதாவது எழுதிக்கொண்டு உங்களை மாட்டிவிடக்கூடும்.

நீதிமன்ற ஆணைகள் பதிவு அவசியம்!
சொத்து குறித்த நீதிமன்ற ஆணைகளைப் பதிவுசெய்ய வேண்டும் என்பது தெரியாமல் பலர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் போராடி ஜெயித்த சொத்தை இழக்கும் சூழ்நிலை இருக்கிறது.

உதாரணத்துக்கு, ஒரு சொத்தில் பங்காளிகளுக்கு உரிமை இருக்கிறது என்று கூறப்படும் நிலையில், மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்று ஒருவர் வழக்குத் தொடர்ந்து வெற்றிப் பெற்றிருக்கும்போது, அந்தத் தீர்ப்பை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை எனில், பழைய ஆவணப்படி அந்தச் சொத்தில் பங்காளிகள் அனைவருக்கும் உரிமை இருப்பதாக அர்த்தம். இந்த நிலையில், இவரை ஓரங்கட்டிவிட்டு அல்லது இவரை மறைத்துவிட்டு மற்றப் பங்காளிகள் சொத்தை விற்க வழி இருக்கிறது. எனவே, நீதிமன்ற ஆணைகளை அவசியம் உடனுக்குடன் பதிவு செய்யுங்கள்.

விலை மலிவா..? உஷாராகுங்கள்!
சிலர் அவசரத் தேவைக்கு, சந்தை விலையைவிட மிகக் குறைத்து சொத்தை விற்பதாகச் சொல்வார்கள். இங்கேதான் வாங்குபவர் உஷாராக இருக்க வேண்டும். நல்ல நிலையில் இருக்கும் ஒருவர் அசையா சொத்தை உடனடியாக அவசரப்பட்டு மிகக் குறைந்த விலைக்கு விற்க முன்வரமாட்டார். கூடியவரையில் அதன் பத்திரத்தை அடமானம் வைத்துப் பணம் திரட்டவே முயற்சி செய்வார். இந்த நிலையில் சொத்தை விற்க முன்வருபவருக்கு அதில் முழு உரிமை இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இதுபோன்றவர்களிடம் ரொக்கப் பணம் கொடுக்கக் கூடாது. காசோலை அல்லது டிடி மூலம் பணம் கொடுக்க வேண்டும்.

டூப்ளிகேட் ஆவணம்..!
சிலர் ஒரிஜினல் ஆவணம் இல்லாமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பெற்ற நகல் ஆவணம் மூலம் சொத்தை விற்க முன்வருவார்கள். ஒரிஜினல் ஆவணம் தொலைந்துவிட்டது என்று காரணம் சொல்வார்கள். ஒரிஜினல் ஆவணம் தொலைந்துபோனது குறித்து போலீசில் புகார், பத்திரிகை விளம்பரம் எல்லாம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது கட்டாயம். அண்மையில்தான் ஒரிஜினல் பத்திரம் தொலைந்துபோனதாகச் சொன்னால் கூடுதல் உஷார் தேவை.

பத்திரத்தை அடமானம்வைத்து பெரும்தொகையைக் கடனாக வாங்கிவிட்டு, உங்களிடமும் அந்த சொத்தை விற்றுவிட வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் ஒரிஜினல் பத்திரம் இல்லையெனில்,  மிகவும் உஷாராக இருப்பது அவசியம்” என்று சொல்லிக்கொண்டேபோன ஆறுமுக நயினார்,  தமிழ்நாட்டில் நடக்கும் ரியல் எஸ்டேட் மோசடிகளைத் தடுக்க அரசு எந்தமாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் விளக்கிச் சொன்னார்.

போலிகளைத் தடுக்கும் டிஜிட்டல்!
”ரியல் எஸ்டேட் மோசடிக்கு பெரும்பாலும் பழைய ஆவணங்களே பயன்படுத்தப்படுகின்றன. ஒருவர் கடந்த 1920-ம் ஆண்டுப் பத்திரம் என்று பழைய பத்திரம் ஒன்றை கொண்டு வருகிறார். அது உண்மைதானா என்பதைப் பார்ப்பதில் சிக்கல். காரணம், தமிழகப் பத்திரப்பதிவு அலுவலகங்களில் உள்ள ஏராளமான பழைய ஆவணங்கள் பொடிப்பொடியாக உதிர்ந்து கிடக்கின்றன. இதைத் தவிர்க்க நல்ல நிலையில் அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்ற வேண்டும். இது ஒன்றும் செய்ய முடியாத செயலல்ல. தமிழ்நாட்டில் 1984-ம் ஆண்டு வரைக்கும் வில்லங்கச் சான்றிதழ்கள், 2000-ம் ஆண்டு முதல் ஆவணங்கள் எல்லாம் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டி ருக்கின்றன. அதேபோல், பழைய ஆவணங்களையும் டிஜிட்டல் வடிவில் மாற்ற முடியும். இதனால் போலி ஆவணங்களை அடையாளம் கண்டு தடுக்க முடியும்.

வில்லங்கச் சான்றிதழில் உயில் விவரம்!
இப்போது உயில் பதிவு செய்த விவரத்தை வில்லங்கச் சான்றிதழில் சேர்க்க சட்டம் இல்லாமல் இருக்கிறது. இதனால் உரிமை உள்ள அனைவரின் சம்மதம் இல்லாமல் சொத்தை விற்கும் நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, சொத்தை வாங்கியவருக்குப் பின்னால் சிக்கல் வருகிறது. அந்த வகையில் உயில் பதிவு செய்யப்பட்டு, அதனை வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிடுவது மோசடியைத் தவிர்க்க உதவும்.

நில மோசடி சிறப்பு நீதிமன்றம்!
நில மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்புத் தீர்ப்பாயங்கள் அல்லது நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். அதில் அனுபவம் மிக்கப் பதிவுத்துறை அதிகாரிகளும் இடம்பெற வேண்டும். அப்போதுதான் பிரச்னைகள் புரிந்துகொள்ளப்பட்டு விரைவாகவும், நியாயமாகவும் தீர்ப்பு கிடைக்கும். நில மோசடியில் தெரியாமல் மாட்டிக்கொண்டவர்களின் பத்திரங்களை ரத்து செய்யும்போது, பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தைத் திரும்ப அளிக்கவும்; தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்திரத்தை ரத்து செய்யும்போது மோசடி செய்தவரும் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தும் நிலையை மாற்ற வேண்டும்.

பதிவு குறிப்பேடு!
வில்லங்கச் சான்றிதழ், பத்திர நகல் எனப் பல்வேறு விஷயங்களுக்கு அடிக்கடி பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வரவேண்டி இருக்கிறது. இதனால் நேர விரயம், பொருட்செலவு, வீண் அலைச்சல் ஏற்படுகிறது. மேலும், பதிவு அலுவலகப் பணியாளர்களுக்கு பணிச் சுமையும் கூடுகிறது. இவற்றைத் தவிர்க்க, சொத்துப் பதிவு குறிப்பேடு Registration Pass Book) கொண்டுவருவது அவசியம். இதனை 13 ஆண்டுகளுக்கு முற்பட்ட பதிவுக் குறிப்புகளுடன் வழங்க வேண்டும். மேலும், இதில் பதிவேடு முதலில் தாக்கல் செய்யப்படும் அன்று சொத்தின் கடைசி உரிமையாளர்,  வாங்கியவர்  பற்றிய விவரம் போன்றவற்றைப் பதிய வேண்டும். சொத்து வேறு ஒருவருக்கு விற்கப்பட்டால், அதன் விவரத்தை இந்தப் புத்தகத்தில் தொடர்ச்சியாகக் குறிப்பிட வேண்டும்.

இப்படியே சொத்து சம்பந்தமான பவர், உயில், விற்பனை, அடமானம், தானம் போன்ற அனைத்து பதிவுகளையும் இதில் மேற்கொண்டு வரவேண்டும். அந்தவகையில் இந்தப் பதிவு குறிப்பேட்டை நிரந்தர வில்லங்கச் சான்று பதிவேடு என்று குறிப்பிடலாம். இதனால் போலி வில்லங்கச் சான்றிதழ், ஆவணத் தயாரிப்புகள் தயாரிப்பது தடுக்கப்படும்.

காவல் துறையின் பொறுப்பு…
நில மோசடிகளைத் தடுப்பதில் பதிவுத்
துறை, வருவாய்த் துறை போல காவல்துறையின் பங்கும்  முக்கிய மானது. பொதுவாக, நில மோசடி புகார் கொடுத்தால் அதைக் காவல் நிலையத்தில் சிவில் தாவாவாக எடுத்துக்கொண்டு பொதுமக்கள் சேவைப் பதிவு ரசீது (சிஎஸ்ஆர்) தருகிறார்கள். இது நில மோசடி செய்தவர்களை ஊக்குவிப்பதுபோல் உள்ளது. மாறாக புகார் வந்தவுடன், அதில் நில மோசடிக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாகத் தெரியவந்தால் உடனே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து மோசடிக்காரர்களைக் கைது செய்யவேண்டும்.

அப்போதுதான் கிரிமினல்கள் இடையே ஒரு தார்மீக அச்சம் ஏற்படும். அது மட்டுமல்ல, ஒரு சொத்து மீது போலி ஆவணம் பதிவு செய்யப்பட்டு காவல் துறையில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் வழக்கு விவரம் பற்றி வில்லங்கச் சான்றில் குறிப்பு சேர்க்கவேண்டும். அதன் தொடர் விற்பனை தடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்தச் சொத்து மீண்டும் கைமாறாமல் இருக்கும்” என்று முடித்தார் ஆறுமுக நயினார்.
விற்பவரைவிட வாங்குபவர் உஷாராக இருந்தால்தான், மோசடி களிலிருந்து தப்பிக்க முடியும் என்பதே இன்றைய நிலை. ஜாக்கிரதை!

தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!! எச்சரிக்கை...?

தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!!



நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .Aquafina,Kinley,Bislery மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .


அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.

கீழ் கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .


இந்த வேதிபொருட்கள் அனைத்துமே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது .இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் வீட்டிலுள்ள நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .

அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .

குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் .இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .

மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .

இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .


ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள் .

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய் என்று தெரிந்துகொள்ளலாம்!

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..

கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?
கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?
சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?
நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?
தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?
கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

வெளுத்த நகங்கள் என்ன வியாதி?
இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி?
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

சிறுமிகளும், பிராய்லர் கோழிகளும் - ஒரு அதிர்ச்சி தகவல்..!

நெருங்கிய தோழியின் மகள் பூப்பெய்திய விழாவுக்குச் சென்றிருந்தேன். தோழியின் தூரத்து உறவினர் பெண்ணான ஒரு ஆசிரியையும் வந்திருந்தார். சடங்கு,சம்பிராதய நிகழ்வுகள் முடிந்ததும் அந்த ஆசிரியை பூப்பெய்திய பெண்ணின் வயதைக் கேட்டார். “9″ வயது என்றார்கள்.

இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொன்னார். இன்றைய பல குடும்பங்களில் வாரம் ஒரு முறை தவறாமல் பிராய்லர் சிக்கன் கோழிகளை வாங்கி சமைக்கின்றனர். ஆண்களுக்கு இது எப்படியோ, ஆனால் பெண்களுக்கு இது ஒரு விதத்தில் ஆபத்து என்றார்.

பண்ணைகளில் வளர்க்கப்படும் ப்ராய்லர் கோழிகள் நாற்பதே நாளில் பருத்து வளர ஹார்மோன் ஊசி போடுவது உண்டாம். இந்தக் கோழிகளை சமைத்துச் சாப்பிடும் நமக்கும் ஹார்மோன்கள் வேலை செய்கிறதாம். குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வரும் முன்னரே பருவம் எய்தும் வேலையை இது செய்கிறது.இது பிஞ்சிலே பழுக்கும் அபாயம் ஆகும்.

தோழியை விசாரித்த போது பூப்பெய்திய அவள் மகள் விரும்பி சாப்பிடும் உணவு பட்டியலில் பிராய்லர் சிக்கனுக்குத்தான் முதலிடம் என்றாள்.

பெண்களைப் பெற்றவர்களே! இந்த மாதிரி வயதில் உங்கள் பெண் குழந்தைகளுக்கு எந்தெந்த உணவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதை டாக்டரிடம் கேட்டுப் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும், இளமைப் பொலிவுடன் வாழ உதவும் கறிவேப்பிலை...

கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும். இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது. தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கும்.

மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது. கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும். பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

கறிவேப்பிலைச் சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது. கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

தமிழக வரலாற்றியலை பிரித்து மேய்ந்த ஜப்பானியர்: நொபுரு கராசிமா

யார் இந்த நொபுரு கராசிமா?

ஜப்பான் நாட்டில் பிறந்த இவர்,டோக்கியோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்து, தென் ஆசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய வரலாற்று ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1985ல் இந்தியாவின் கல்வெட்டு சமூகத்தின் தலைவராக இருந்தார். இந்தியா-ஜப்பான் கலாச்சார உறவுகள் மேம்பாட்டிற்காக 2013 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் "பத்ம ஸ்ரீ" விருது பெற்றார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் இயற்கை எய்திய இவருடைய நினைவாக ஒருகருத்தரங்கமும், படத்  திறப்பு விழாவும் நிரல் பதிப்பகத்தின் சார்பில் 23 ஜனவரி அன்று நடந்தது.

முதலாவதாகப் பேசிய முனைவர்.சோ.சாந்தலிங்கம் (செயலாளர், பண்டைய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்),

" தமிழக வரலாற்றின் 8-18 நூற்றாண்டு வரையிலான ஆய்வுகள் நொபுரு கராசிமா நடத்தியதே. ஆங்கிலேயர்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி, தொல்லியல் சான்றுகளை வைத்து தம் ஆய்வுகளை அணுகினார். 23 வயதிலேயே சோழ வரலாற்று ஆய்வில் ஈடு பட்டு, அதனை 4 கட்டங்களாக பிரித்து ஆராய்ந்தார். தொல்லியல் துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குடுபங்களில் அவ்வளவு மரியாதை இருக்காது, என்றவுடன் அரங்கமே சிரித்தது. கிடைக்கும் பணத்தை புத்தகங்களிலேயே முதலீடு செய்து விடுவார்கள்.


நமக்கு வரலாற்று உணர்வு குறைவு என்ற பேச்சு பொதுவாகவே உள்ளது. புகழ் பூத்த வரலாறுகள் மற்றுமே பேசாமல், குக்கிராமங்களின் வரலாற்றையும் கண்டறிந்தார்.


11 ஆம் நூற்றாண்டின் வேளாண் புரட்சி பற்றி அவர் தான் கூறியுள்ளார்.வளமான நிலங்களை இழந்த வேளாண் தான் புரட்சிக்கு வழிவகுத்து சித்திரமேனி பெரியநாடு தோன்றியது என்கிறார்.

அரசு அதிகாரிகளின் கொடுமைகளையும், பிரம்மதேயத்தையும் ஒடுக்கத்தான், சித்திரமேனி பெரிய நாடு வந்தது. அதில் 23 ஊர்கள் இருந்தன. மெய்க்கீர்த்தியை வைத்துக் கொண்டு கோவில்களைக் கைப் பற்றினர். கோவில்களில் எங்கள் தெய்வங்களுக்கும் இடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து, 12 ஆம் நூற்றாண்டில் அம்மன்களுக்கும் இடம் வழங்கப் பட்டது. சித்திரமேனியில் வலங்கை இடங்கை சாதிகள் இருந்தும் அவர்கள் மோதிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் இரு பக்கமும் உழைக்கும் வர்க்கம் இருந்தது." என்று அவர் முடித்தவுடன், அவருடைய படம் திறந்து வைக்கப் பட்டது.

அவரைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர்.வீ.செல்வகுமார் (கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, தஞ்சாவூர்),

 "தமிழக வரலாற்றினை புரிந்து கொள்ள, மற்ற மாநிலங்கள் பற்றியும், தென்கிழக்கு ஆசியா பற்றியும் நாம் அறிய வேண்டும். திருக்குறள், தொல்-காப்பியம் போன்றவை சமூகத்தை அறைந்து தான் எழுதப்பட்டவை. கராசிமா தமிழக வரலாற்றில் மார்க்ஸிய கருத்துக்களின் தாக்கம் ஏற்படச் செய்தவர்.வட்டார ஆய்வுகளில் வெளிநாட்டினர் நிறைய பேர் தமிழகத்தை ஆய்வு செய்தனர். சமூகச் சிக்கலில் சிக்காமல் இருப்பதால் அவர்களுக்கு அது சுலபம். பிரம்மதேயங்களை விட, வேளாண் வகை ஊர்களே அதிகம். எனவே அவை கட்டாயம் ஆராயப் பட வேண்டும் என்று கூறினார்.

இன்று நாம் ராஜராஜ சோழன் என்ன சாதி என உரிமை கொண்டாடுகிறோம். சார்பு இல்லாத ஆய்வுகள் மேற்கொள்ளப் பட வேண்டும். வரலாற்று ஆய்வுகள் என்பது வளர்ந்த நாடுகளுக்கான அடையாளம்.
பல அறிஞர்களை அழைத்து பல தரவுகளை நேரடியாக ஆய்வு செய்தார் கராசிமா. நாம் பல ஆய்வுகளை ஆங்கிலத்தில் தான் தருகிறோமே தவிர, தாய் மொழியில் தருவதில்லை. கோட்பாடு முறையிலும், புள்ளியல் முறையிலும் ஆய்வு செய்ய மாணவர்கள் ஈர்க்கப்பட வேண்டும். வரலாறு,சமூகவியல் படிப்பது பிரயோசனம் இல்லை என்கிறார்கள். அதைக் கற்று, அதில் செய்யும் ஆய்வுகள் தான் வளர்சிக்கு வித்திடும்"
என்று கூறி முடித்தார்.

அந்த ஜப்பானியருக்கு  வணக்கம். 

மீண்டும் சகலகலா வல்லவனாக கமல்!

உத்தமவில்லன் படம் எதிர்பாராத தோல்வியை கொடுத்திருந்த நேரத்திலேயே லிங்குசாமியின் திருப்பதி பிலிம்ஸ்க்கு கமல் மீண்டும் ஒரு படம் பண்ணிக்கொடுக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. பின்னர் அந்த படம் தோல்வியடைந்தால் அவர்கள் இணையவில்லை என்றும் செய்திகள் வெளியானது. ஆனால், அந்த தோல்வியை ஈடுகட்டும் வகையில் லிங்குசாமிக்கு ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த கமல், சமீபத்தில் அவரிடம் அதுபற்றி கூறியதை அடுத்து கடந்த சில மாதங்களாக கதை விவாதம் நடந்து கொண்டிருந்தது.

அந்த வகையில், தற்போது லிங்குசாமி இயக்கத்தில், கமல் நடிக்கும் படத்தின் கதை விவாதம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. அதோடு, இந்த படத்தில் கமலை இதுவரை நடிக்காத வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் வைக்கும் முயற்சி நடக்கிறது. அதோடு கதையும் ஆக்சன் பாணியில் இல்லாமல் முற்றிலும் ஜனரஞ்சகமாக உருவாக்கப்பட்டிருக்கிறாம். அந்த வகையில், 1982ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் நடித்த சகலகலா வல்லவன், 1992ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கமல் நடித்த சிங்காரவேலன் ஆகிய இரண்டு படங்களின் பாணியில் இந்த படத்தின் கதை தயார் செய்யப்பட்டுள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, கமல் அப்படத்தில் நடிக்கத் தொடங்கி விடுவார் என்கிறர்கள்.

அம்மாவின் அழுகை தான் இத்தனைக்கும் காரணம்- சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சிவகார்த்திகேயன் இன்று விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு வந்து விட்டார். இவரின் வளர்ச்சி குறித்து நாங்கள் கூற தேவையில்லை, தமிழ் மக்கள் அனைவருக்கும் அறிவார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த இவரின் ரஜினிமுருகன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, தற்போது தமிழகத்தில் முன்னணி வார இதழ் ஒன்றில் சிவகார்த்திகேயன் மனம் திறந்துள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ‘ஒவ்வொரு முறையும் சினிமாவிற்கு வருவதற்கு முன் அம்மா, போன் செய்து எந்த ஒரு போட்டியாக இருந்தாலும், தோற்றுவிடாதே என்று அழுகையுடன் கூறுவார், இந்த வார்த்தைகள் தான் என்னை இந்த இடத்திற்கு வர வைத்தது’ என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

“ரொம்ப பெருமையா இருக்கு!” – பத்ம விபூஷன் ரஜினி

நம் நாட்டின் குடியரசு தினத்தையொட்டி முன்பாக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம் ..இங்குள்ள அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், விளையாட்டு, நீதி, பொது சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோர் பத்ம விருது களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதன் படி இன்று விருது பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கபட்டு உள்ளது. நடிகர் ரஜினிகாந்த், வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஊடக அதிபர் ராமோஜிராவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன், திருபாய் அம்பானி ஆகி யோருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் அனுபம் கெர், உதித் நாராயணன், சாய்னா நேவால், சானியா மிர்சா, முன்னாள் சிஏஜி வினோத் ராய், நடிகர் அஜய்தேவ் கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது.

இப்போதைய தமிழ் நடிகர்களில் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதைப் பெறப்போகிறார்.திரையுலகில் ஏராளமான விருதுகளை பெற்றுள்ள ரஜினிகாந்த் கடந்த 2000–ம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார். அடுத்த 5 ஆண்டுகளில் அவருக்கு பத்ம விபூஷண் விருது தேடி வந்திருப்பது தனி சிறப்பாக கருதப்படுகிறது.இந்த விருது பெறுவது குறித்து ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பத்ம விபூஷண் விருது பெறுவதற்காக மிகுந்த பெருமிதமாக உணர்கிறேன்.என் நேசத்துக்குரிய ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர் கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் என் மனபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இம்முறை 10 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 83 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 19 பேர் பெண்கள்; 10 பேர் வெளி நாட்டுப் பிரிவில் இடம்பெறுபவர் கள். 4 பேருக்கு இறப்புக்குப் பிந்தைய கவுரமாக வழங்கப்படுகிறது.விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை, ஆன்மிக பிரபலம் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், விளையாட்டு வீராங்கனைகள் சானியா மிர்சா, சாய்னா நேவால் மற்றும் தீபிகா குமாரி, நடிகர்கள் அனுபம் கேர், அஜய் தேவ்கன், பிரியாங்கா சோப்ரா உட்பட மொத்தம் 112 பேர் 2016-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளைப் பெறுகின்றனர்.

சுகப்பிரசவமாகணுமா? அப்ப கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலே பெஸ்ட்! – மத்திய அரசு சர்வே ரிசல்ட்

என் ஒய்ப்புக்குச் சுகப்பிரசவம் என்று யாராவது சொன்னாலே , அது அதிசயம் என்றாகி விட்டது. அனேகமாக இறுதிக்கட்ட நெருக்கடியில் மட்டுமே ‘சிசேரியன்’ என்ற காலம் மாறிப் போய், இன்றைய பெரும்பாலா னோருக்குப் பிரசவமே சிசேரியன் மூலமாகத்தான் நிகழ்கிறது. அதிலும் நான்கில் ஒருவ ருக்கு சிசேரியன் என்றாகிவிட்டது. சுகப்பிரசவம் குறைந்ததற்கு வாழ்வியல் பழக்கங்கள் ஒரு காரண மாகச் சொல்லப்பட்டாலும், சில பிரசவங்களில் சிசேரியனைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோணும். இந்நிலையில் தேசிய குடும்ப நல சுகாதார அமைப்பு 2015–16–ம் ஆண்டுக்கான சுகாதார சர்வே முடிவு களை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங் களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், அரசு மருத்துவமனைகளை விட தனியார் ஆஸ்பத்திரி களில் சிசேரியன் (ஆபரேஷன் மூலம் பிரசவம்) பிரசவம் 2 மடங்கு அதிகம் நடப்பது தெரியவந்துள்ளது.

அது சரி..ஏன் அதிகரித்துள்ளது இந்த சிசேரியன்?

“தாமதமான திருமணம், நான்கு ஆண்டுகளுக்கு மேல் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுதல், 30 வயதுக்கு மேல் கருவுறுதல், முதல் குழந்தை சிசேரியனால் பிறந்திருந்தால், இரண்டாவது குழந்தை யும் சிசேரியன் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்தல், இறுதிக்கட்ட நெருக்கடியில் மருத்துவமனைக்கு வருதல், உடலுழைப்பு இல்லாத வாழ்வியல் முறை, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை நோய் போன்றவை சிசேரியனுக்கான காரணங்கள்.”

அப்படின்னா எப்போது சிசேரியன் அவசியம்?

“பிரசவத்தின்போது சிரமங்கள் ஏற்படுத்தும் வகையில், வலுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்ய வேண்டும். பிரசவம் மிக மெதுவாகவும் சிக்கலாகவும் இருந்தால், குழந்தைக்கு இதயத் துடிப்பு குறைந்திருந்தால், தொப்புள்கொடியால் குழந்தைக்கு ஆபத்து நேர்ந்திருந்தால், குழந்தை பெரியதாக இருந்தால், பிரசவ நேரத்தில் சரியான நிலையில் குழந்தை (Position) இல்லாதிருந்தால், கர்ப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், தாய்க்குப் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட் டிருந்தால், கர்ப்பப்பையில் வெடிப்பு அல்லது பிளவு (Uterine rupture) ஏற்பட்டிருந்தால், சிசேரியன் செய்யப்படும்.”

இதனிடையே தான் தேசிய குடும்ப நல சுகாதார அமைப்பின் சர்வே தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவர பட்டியலில், திரிபுராவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் 87.1 சதவீதமும், அரசு மருத்துவமனைகளில் 36.4. சதவீதமும் சிசேரியன் பிரசவம் நடப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல், பீகார் அரசு மருத்துவமனைகளில் 5 சதவீதமும், தனியாரில் 37.1 சதவீதமும், மேற்குவங்காளத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் 74.7 சதவீதமும், அரசு மருத்துவமனைகளில் 37.1 சதவீதமும் சிசேரியன் நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தமிழகத்தில் 36.1 சதவீதமும், தெலுங்கானாவில் 63.2 சதவீதமும் சிசேரியன் மூலம் பிரசவம் நடக்கிறது.

இந்தியாவில் 10 முதல் 15 சதவீத பிரசவங்கள் மட்டுமே சிசேரியன் முறையில் மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. பிரசவத்தின்போது சிலருக்கு பிரச்சினை ஏற்படுவதாலேயே இயற்கை பிரசவத்தை தவிர்த்து சிசேரியன் பிரசவம் செய்யப்படுவதாக மகப்பேறு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

டைரக்டர் நடிகை லவ்? குறுக்கே கட்டைய போடும் விஷால்!

“யாரு வேணும்னாலும் யாரை வேணும்னாலும் காதலிச்சுட்டு போகட்டும், அல்லது கவனிச்சுட்டு போகட்டும்… அடியேனுக்கென்ன?’’ என்று போவது நட்புக்கு அழகா? நல்ல நட்புக்கு அது அழகில்லை அல்லவா? அதற்காகதான் குறுக்கே விழுந்து கட்டையை போட்டிருப்பார் போலும் என்று விஷால் பற்றி குஷாலாகிறது கோடம்பாக்கம். ஆனால், “ஹீரோ இப்படி பிடிவாதம் பிடிச்சா, நாங்கள்லாம் எப்போ நல்ல மாதிரி சிரிக்கறது?” என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம் குட்டிப்புலி முத்தையா. இவரது முதல் படத்தில் லட்சுமிமேனன்தான் ஹீரோயின்.

அதற்கப்புறம் இவர் இயக்கிய ‘கொம்பன்’ படத்திலும் லட்சுமிமேனனையே நடிக்க வைத்தார் முத்தையா. ஒரு குயர் நோட்டுக்கு இப்படி ரெண்டு குயர் சைசுக்கு அட்டை போட்ட பின்பும் அடங்கவில்லை அவரது ஆசை. தொடர்ந்து மூன்றாவது படத்திலும் லட்சுமிமேனனை ஹீரோயினாக்கிவிட வேண்டும் என்று துடியாய் துடித்தாராம். ஆனால் அந்த மூன்றாவது படமான ‘மருது’ படத்தின் ஹீரோ விஷாலாச்சே? லட்சுமிமேனன் வேண்டாம் என்று அவர் பிடிவாதம் பிடிக்க, “எனக்காக ப்ளீஸ்…” என்று முத்தையா கெஞ்ச, சூழ்நிலை சூடாகவே இருந்தது பல நாட்களுக்கு. கடைசியில் விஷாலுக்குதான் வெற்றி. லட்சுமிமேனன் இருக்க வேண்டிய இடத்தில் ஸ்ரீதிவ்யா நடித்துக் கொண்டிருக்கிறார் இப்போது.

படப்பிடிப்பில் சகஜமாக இருந்தாலும், லட்சுமிமேனன் இல்லாத ஷுட்டிங் ஸ்பாட், முத்தையாவை என்னவோ பண்ணியிருக்க வேண்டும். நடுவில் விக்ரம் பிரபுவுக்கு கதை சொல்லி ஓ.கே பண்ணியவர், “இந்த படத்தில் உங்களுக்கு ஜோடியா லட்சுமிமேனன்தான் நடிப்பார். நீங்க முடியாதுன்னு சொல்லவே கூடாது” என்று கூறிவிட்டாராம் கட் அண்டு ரைட்டாக. ஆக நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி. முத்தையாவின் நான்காவது படத்துக்கும் கதாநாயகி லட்சுமிமேனனேதான்!

இப்ப என்னா பண்ணுவீங்க? விஷால்… இப்ப என்னா பண்ணுவீங்க?

மன்னிப்பு கேட்ட மாகாபா ஆனந்த் ?

லேடி ஆண்டாள் பள்ளியில் உயரம் குறைந்த பெண்களுக்கான ஃபேஷன் ஷோ நடந்தது. பெடைட் பிரின்ஸஸ் என்னும் இந்த நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில்,எவ்வித முன்னறிவிப்புமின்றி தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டதாம்.

அதனால் பலரும் எழுந்து நிற்கவில்லையாம். இதனால், அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மாகாபா ஆனந்த் மற்றும் உடனிருந்த தொகுப்பாளினியும் சர்ச்சைக்கு ஆளானார்கள்.

மாகாபா ஆனந்திடம் இதுகுறித்து பேசுகையில், தவறுதான் மன்னிக்கணும், ஆனாலும் ஒரு விஷயம் நான் சொல்லணும், அந்த நிகழ்ச்சிக்கு வந்த விஜே பொண்ணு ஆந்திராப் பொண்ணு. இது நம்ம தமிழ்த் தாய் வாழ்த்துன்னு அந்தப் பொண்ணுக்கு தெரியவே தெரியாது.

எந்த அறிவிப்பும் இல்லாம திடீர்னு ப்ளே பண்ணிட்டாங்க. இன்னொனு அந்தப் பொண்ணு முதல் தடவையா மேடை ஏறியிருக்காங்க.

பயம், நடுங்குறாங்க வேற. அதனாலயே அவங்க எழுந்து நிக்கல, நான் எழுந்து நிக்கிறேனா இல்லியானு யாருக்குமே தெரியாதே.   நான் மேடைக்கு அந்தப் பக்கம் இருந்தேன். என்ன எப்படி, யார் பாக்க முடியும். அப்படியே பார்த்தாலும் புரமோ ப்ளே ஆகும், அது முடிஞ்சோன உங்க எண்ட்ரினு சொல்லிட்டாங்க அதுக்கு ரெடியாவே நான் ஸ்டேண்டிங்ல தான நிக்கறேன்.

அப்பறம் எப்படி நான் மதிக்கலன்னு சொல்ல முடியும். அந்தப் பொண்ணுக்கு ஏன் மன்னிப்பு கேக்கணும்னு கூட  தெரியல, அதான் அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்டேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த நான் எப்படிங்க தமிழ்த் தாய் வாழ்த்த மதிக்காம இருப்பேன் எனக் கேட்டார்.

மேலும் நம்மூர்ல மலையாளம், தெலுங்கு, வடநாட்டுக்காரங்க எல்லாரும் இருக்காங்க. அவங்களுக்கு தமிழ்த் தாய்வாழ்த்து தெரியுமா?ன்னு  யோசிக்கணும், இல்ல எதுவுமே சொல்லாம எல்லாரும் எழுந்து நில்லுங்கன்னு அறிவிப்புக் குடுத்தாலே பிரச்னை இல்லை என தனது கருத்தையும் பதிவு செய்தார் மாகாபா ஆனந்த்.

தற்கொலைக்கு தூண்டியது எது? - 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்!

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ்.யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள், கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மாணவிகளின் மரணம். மூன்று மாணவிகளும் தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதம் தற்போது சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், காலேஜில நாங்க படிச்சத விட வேலை பார்த்ததுதான் அதிகம் என்றும் தங்கள் மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் இதோ...

'3 மாணவிகளை பலிவாங்கிய எஸ்.வி.எஸ். கல்லூரி அனுமதியின்றியே இயங்கியது': எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி

3 மாணவிகள் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி,  அரசு அனுமதியின்றியே இயங்கி வந்ததாக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளார்.

எஸ்.வி.எஸ். கல்லூரியின் மோசமான நடவடிக்கையால் மனம் உடைந்த நிலையில், மாணவிகள்  பிரியங்கா, மோனிஷா, சரண்யா ஆகிய 3 பேரும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர். இதனையடுத்து அக்கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டு அக்கல்லூரியின் முதல்வர் கலாநிதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் இன்று (திங்கள்) செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி, "விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அந்தக் கல்லூரி இயங்கியுள்ளது.

இது குறித்து விசாரணைக் குழு அமைத்து தகுந்த விசாரணை மேற்கொள்ளப்படும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலேயே சேர்க்க வேண்டும்"  என்று கூறினார்.

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.


வெள்ளைப் பூண்டு:


பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள்.


இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.


வெங்காயம்:


வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.


காரட்:


நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.


ஆரஞ்சு :


வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.


பருப்பு வகைகள் :


பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்தஅணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.


கோதுமை ரொட்டி :


நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


இறால், மீன் மற்றும் நண்டு :


அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.


தேநீர் :


தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.


பாலாடைக்கட்டி :


சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.


முட்டைக்கோஸ் :

குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி  அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.

நடிகர்ளின் வெற்றிக்கு வழி வகுத்தவர் இளையராஜா : கமல்ஹாசன் புகழாரம்

 பல இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் வெற்றிக்கு வழிவகுத்தவர் இளையராஜா என்று, ஓய் இசை வெளியீட்டில் உலகநாயகன் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடட் தயாரிப்பில் ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில், கீதன் பிரிட்டோ, ஈஷா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் "ஓய்"

இப்படத்தின் இசை வெளியீடு இன்று மிகவும் எளிமையாக நடைப்பெற்றது. இப்படத்தின் இசையை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட இசைஞானி இளையராஜா பெற்றுக்கொண்டார்.

தன் வசிகர இசையால் பல இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் கனவு படங்களுக்கு வெற்றியை அடித்தளமாக அமைத்தவர் இளையராஜா. 16 வயதினிலே உள்ளிட்ட பல படங்கள் அதற்கு சான்று. இன்று ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கும் ஓய் படத்திற்க்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படமும் வெற்றி பெற்று சாதனை படைக்க எனது வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் கூறினார்.