Thursday 18 February 2016

சூப்பர் ஸ்டார் பதில் சொல்ல முடியாத கேள்விகள் எவை..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘கபாலி’ படத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார். எனவே, ஷங்கரின் இயக்கத்தில் 2.ஓ படத்தில் நடிக்க தயாராகி விட்டார்.

அவர் சென்னை திரும்பியதும், ‘கபாலி’ படம் குறித்தும், பத்மவிபூஷண் விருது குறித்தும், ஷங்கர் இயக்கி வரும் ‘2.ஓ’ படம் குறித்தும் கேட்ட பல கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

ஆனால் விரைவில் நடைபெறவிருக்கிற தேர்தல் குறித்து கேள்விகளை கேட்டால் தன் புன்னகையே பதிலாக தந்தார்.

அப்படி என்ன என்ன கேள்விகளுக்கு அவர் புன்னகையை பதிலாக கொடுத்தார் என்பதை இங்கே தொகுத்துள்ளோம்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு?
 
 அ.தி.மு.க அரசின் 5 ஆண்டு செயல்பாடுகள் எப்படி இருந்தது?

    எந்த அணிக்காவது வாய்ஸ் கொடுப்பீர்களா?

    பத்மவிபூஷன் விருது பெற்றதற்கு ஜெயலலிதா வாழ்த்து சொல்லவில்லையே ஏன்?

    விருது பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி தெரிவிப்பீர்களா?

   இந்த தேர்தல் சமயத்திலாவது நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?

    உங்கள் ரசிகர்கள் நீங்கள் அரசியலுக்கு வருவதை விரும்புகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

    அரசியல் குறித்த கேள்விகளுக்கு தொடர்ந்து மவுனம் சாதிப்பது ஏன்?

கமல்ஹாசன் 17, ரஜினி 24 வருட சாதனை

சில வித்தியாசமான சோதனை முயற்சிகளை பல வருடங்களுக்கு முன்பே செய்திருந்தவர் கமல்ஹாசன். அந்த சோதனை முயற்சிகளில் ஒன்று இவரின் ஹே ராம் படம்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் நடந்த கதையாக வெளிவந்த இந்தப்படம் வெளிவந்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகிறது. 17வது அண்டில் காலடியடுத்து வைக்கும் ஹே ராம் படத்தை நினைவு கூறும் வகையில் கமல்ஹாசன் ரசிகர்கள் #16YearsOfHeyRam என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

அதேபோல் ரஜினியின் நடிப்பில் வெளியான எஜமான் படம் வெளியாகி இன்றுடன் 23ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனால் தலைவர் ரசிகர்கள் #23YearsofYejaman என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர். 

ரூ. 251 ஸ்மார்ட் போன்: ரிங்கிங் பெல் 'ரிங் 'அடிக்காதது ஏன்?

கடந்த ஐந்து  மாதத்திற்கு முன் தொடங்கப்பட்ட ரிங்கிங்பெல்ஸ் நிறுவனம்தான் தற்போது 'ப்ரீடம் 251' ரூபாய்க்கு ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.

ரிங்கிங்பெல்ஸ் என்ற நிறுவனம் நொய்டாவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்தான் ஆரம்பிக்கப்பட்டது. அமிதி பல்கலையில் படித்த மோகித் குமார் கோயல் என்பவரால்தான் இந்த நிறுவனம் தொடங்கபபட்டுள்ளது. அவரது மனைவி தார்ணாதான் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி.

பிரதமர் நரேந்திர மோடியின் 'மேக் இன் இந்தியா' தொழில் ஊக்கத் திட்டத்தின் கீழ்  இந்த ஸ்மார்ட் போன் தயாரிக்கபபட்டுள்ளது. நேற்று இந்த போன் சந்தையில் வெளியிடப்பட்டது.  ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற விழாவில் ஏராளமான பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் இந்த ஸ்மார்ட் போன் வெளியிடப்பட்டது.

முன்னதாக நேற்று காலை அத்தனை பத்திரிகையிலும் ‘இந்தியாவின் மிக மலிவு விலை ஸ்மார்ட் போன்‘ இன்று வெளியீடு என விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த ஃபரீடம் 251 போன் அறிமுகப்படுத்தப்பட்டதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இந்த விழாவில் முதலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்து கொள்வதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் கடைசி நேரத்தில் அவர் நிகழ்சியில் பங்கேற்காமல் ஜகா வாங்கி விட்டார்.

முன்னதாக இந்திய மொபைல் நிறுவனங்களின் சங்கம், விலை கண்டிப்பாக 3,500க்கு குறைய கூடாது என்று வலியுறுத்தியிருந்தது. அல்லது மானிய விலையில் கொடுக்கலாம் என்று மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு பரிந்துரைத்திருந்தது. ஆனால் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஸ்மார்ட் போன் அறிமுக நிகழ்ச்சியின் போது, மோகித் குமார் பல கேள்விகளுக்கு மனைவியிடம் கேட்டே பதில் அளித்துள்ளார். அதனால் அவர்தான் இந்த 251 ரூபாய் ஸ்மார்ட் போன் ஐடியாவுக்கு பின்புலத்தில் இருக்க வேண்டுமென்று கூறப்படுகிறது.

5 மாதங்களுக்கு முன்பு வரை மோகித் குமார்  கோயல், உத்தரபிரதேசத்தில் ஷாமிலி மாவட்டத்தில் மளிகை கடை வைத்துள்ள தனது தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார்.

இந்த போனின் அடக்க விலை 2, 500 ரூபாய் ஆகும். ஆனால் தனிப்பட்ட மார்க்கெட்டிங் உக்திகள், வரிகள் குறைப்பு, செலவு குறைப்பு இந்த போனுக்கென்றே சந்தையில் இ- காமர்ஸ் வழியாக தனியாக மார்க்கெட் ஏற்படுத்துதல் போன்ற புதுமையான திட்டங்களால் 251 ரூபாய்க்கு வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த போனை தயாரிக்க நொய்டாவில் இரண்டு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக 251 கோடி ரூபாய் கடன் மற்றும் பங்கு வெளியீட்டு முலமாக திரட்டியுள்ளனர். கோயல் குடும்பத்தினர் இந்த தொழிற்சாலைகளில் எந்த முதலீடும் செய்யவில்லை.

மோகித் குமார் கோயலுக்கு  ஐ.ஐ.டியில் படித்த அசோக் சட்டா என்பவர் இந்த நிறுவனத்தை தொடங்க உதவியாக இருந்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி. ஓம்பிரகாஷ் சக்லேச்சா என்வரை சந்தித்து, ஆதரவு கோரியுள்ளனர். அவர் செய்த உதவியினாலேயே  நாட்டிலேயே முதன் முறையாக மலிவு விலை  ஸ்மார்ட் போன் நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்த ஸமார்ட் போனைத் தயாரிக்க சீன நாட்டில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலும் உபயோகப்படுத்தக் கூடாத அதாவது expire ஆன பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.

இதற்கு முன் இதே நிறுவனம் வெளியிட்ட ஹெட் செட்டை ஆன்லைனில் புக் செய்த பல வாடிக்கையாளர்களுக்கு பொருள் போய் சேரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த போன் அறிமுகப்படுத்துவதற்கு சற்று நாட்கள் முன்னதாகவே ரிங்கிங்பெல் நிறுவனம் இதற்கான இணையதளத்தை ஆரம்பித்துள்ளது. இந்த இணையத்தளத்தின் நம்பகத்தன்மை குறித்து தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமாக டிராய்க்கும் மத்திய தொலை தொடர்பு அமைச்சகத்துக்கும் புகார்கள் குவிந்து வருகின்றன.

விசாரணை! ரஜினி கமல் பாராட்டியது சரியா?

“விசாரணை நல்ல படம்தான். இல்லேன்னு சொல்லல. இதுக்கு முன்னாடி தமிழ்சினிமாவுல இதே மாதிரி ட்ரென்ட் செட்டிங் படங்கள் வரும்போது இந்த ரஜினியும் கமலும் எங்க போனாங்க? இப்ப வெற்றிமாறனும் தனுஷும் சம்பந்தப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சதும், ஓடிவந்து பாராட்டுறாங்களே… இது நியாயமா?” இதுதான் கோடம்பாக்கம் எங்கும் பேச்சாக இருக்கிறது. சினிமாவில் நிகழும் அன்றாட அடிதடிகளை அசை போடும் உதவி இயக்குனர்களின் இந்த கேள்வி காற்று வாக்கில் போய் சேருமா? சேர்ந்தாலும் பதில் வருமா? இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். ரஜினி கமல் இருவருக்கும் விசாரணை படத்தின் எந்த வெர்ஷன் போட்டுக் காட்டப்பட்டது தெரியுமா?

உலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதற்கென்றே ஒரு வெர்ஷன் வைத்திருக்கிறார்கள் அல்லவா? அதைதான் காண்பித்தார்களாம். அதில் ரீரெக்கார்ட்டிங் இருக்காது. பாடல் இருக்காது. காட்சிகள் சென்சார் செய்யப்பட்டிருக்காது. அதை பார்த்துவிட்டு புளகாங்கிதப்படும் இவர்கள், பொதுமக்களை பார்க்க தூண்டுகிறார்கள். அதில் அவர்கள் பார்த்தது இல்லாவிட்டால், அப்படி சொல்வதே தவறுதானே?

இப்படியெல்லாம் கேள்விகளை வளைத்து வளைத்து சொருகுவதால், கோடம்பாக்கத்தின் டீக்கடை பார்லர்களில் இன்னும் இன்னும் ரத்தக்கொதிப்பு?