விஜய் ஆண்டனி தயாரித்து நடித்து இசையமைத்துள்ள படம் ‘பிச்சைக்காரன்’.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில்… “கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்… தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான் ‘’ என்ற பாடல் வரிகளுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது…
“பிச்சைக்காரன் படத்தில் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வியை பயின்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த டாக்டர்களை இழிவு படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன.
டாக்டர்கள் தப்பு தப்பா ஊசிப்போட்டு நோயாளிகளை கொல்லுகிறார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல விஷமத்தனமானது.
உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக சென்னைக்கு படை எடுக்கின்றனர்.
தமிழகத்தில் தலைசிறந்து விளங்கும் மருத்துவர்கள் பலரும் இட ஒதுக்கீட்டின் மூலம் பயின்றவர்கள்தான்.
உண்மை இவ்வாறு இருக்க, நோயாளிகள் இறப்பதாகக் கூறுவது மேலாதிக்க உணர்வை பிரதிபலிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
எனவே, இப்பாடலுக்கு தடை விதிப்பதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில்… “கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்… தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான் ‘’ என்ற பாடல் வரிகளுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது…
“பிச்சைக்காரன் படத்தில் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வியை பயின்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த டாக்டர்களை இழிவு படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன.
டாக்டர்கள் தப்பு தப்பா ஊசிப்போட்டு நோயாளிகளை கொல்லுகிறார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல விஷமத்தனமானது.
உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக சென்னைக்கு படை எடுக்கின்றனர்.
தமிழகத்தில் தலைசிறந்து விளங்கும் மருத்துவர்கள் பலரும் இட ஒதுக்கீட்டின் மூலம் பயின்றவர்கள்தான்.
உண்மை இவ்வாறு இருக்க, நோயாளிகள் இறப்பதாகக் கூறுவது மேலாதிக்க உணர்வை பிரதிபலிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
எனவே, இப்பாடலுக்கு தடை விதிப்பதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment