Thursday 28 January 2016

காலையிலும் இரவிலும் தொலைக்காட்சிகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருக்கலாம் !!

ஒரு படத்தில் வடிவேல் கிட்ட மயில்சாமி சொல்லுவார் இந்த தாயத்தை கட்டிக்கிட்டு நீ இரவு 12 மணிக்கு கூட சுடுகாட்டிற்கு போகலாம் என்று சொல்லுவார் அதற்கு வடிவேலு நாங்க ஏண்டா 12 மணிக்கு சுடுகாட்டிற்கு போறோம் காச தாட போறேன் என்று சொல்லுவார் இது ஒரு நகைசுவையாக இருந்தாலும் நிறைய சிந்திபதற்கு விடையம் இருக்கிறது அதை போல இரவு 12 மணிக்கு மேலதான் இந்த மாதிரியான ராசிக்கல் போன்ற விளபரங்கள் வருகிறது சில முன்னணி தொலைகாட்சிகளில் அதை பற்றிய ஒரு பார்வை.

ராசிக்கல் உடம்பு இளைக்க ஏற்ற, செக்ஸ் பிரச்சனையா இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும் என்று நம்பர் தந்திருக்கும் தெரியாமல் மிஸ்கால் குடுத்துவிட்டால் அடுத்த நிமிடமே நமக்கு அழைப்பு வரும் முதலில் ராசிக்கல் விளம்பரத்தை பார்த்தவுடன் ஏமாந்து வாங்கினால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று 2000 ரூபாய்க்கு வாங்குகிறார்கள் அதன் உண்மையான மதிப்பு 5 ரூபாய் மட்டுமே மந்திர தந்திரங்கள் செய்தது என்று கூறி விற்கப்படுகிறது. உடம்பு இளைக்க ஏற்ற தரப்படும் மருந்து சாதாரண எதிர்ப்பு சக்தி கூட இல்லாத மருந்து.செக்ஸ் பிரச்சனை பலருக்கும் இருக்கிறது 52 வகையான ஆயுர்வேத மூலிகையால் செய்யப்பட்டது இதை நீங்கள் சாப்பிட்டால் அறை மணி நேரத்திற்கும் மேல் உடலுறவு கொள்ளலாம் என்று சொல்லுவார்கள் வாங்கிய பின்பு 5 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத மருந்து என்று அவர்களுக்கு தெரியும் ஆனால் இதன் விலை 4000

இவர்கள் அனைவரும் வடநாட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் சென்னயில் ஏதாவது ஒரு பெரிய வீட்டை வாடகை எடுத்து அரசாங்கத்திற்கு தெரியாமல் நடத்துபவர்கள் ஆனால் நீங்கள் போனில் கேட்டால் டெல்லியில் இருக்கிறோம் உங்கள் முகவரியை அனுப்பினால் உங்கள் வீட்டுக்கே ஒரு வாரத்தில் அனுப்பி வைத்து விடுகிறொம் என்பார்கள் அங்கு வேலை செய்யும் நபர்கள் பெரும்பாலும் உண்மையை சொல்ல மாட்டார்கள் சென்னயில் ஏதோ மூலையில் தான் இருப்பார்கள் ஆனால் டெல்லியில் இருப்பதாக சொல்லுவார்கள் இதில் அனுப்பப்படும் தரமில்லை மாற்றி அனுப்புங்கள் என்று கூறினால் பதிலே இருக்காது.

இதில் ஏமாறுவது அப்பாவி ஏழை மக்கள் தான் அதுவும் அன்றாடங்காய்ச்சிகள் என்பது தான் வேதனையான விஷயம்

சிவகார்த்திகேயனுடன் நடிக்கத் தயார்: திரிஷா பேட்டி

தற்போது வளர்ந்து வரும் நாயகன்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைந்து வருகின்றன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ரஜினி முருகன்’ வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியிருக்கிறார்.

இந்நிலையில், திரிஷா சிவகார்த்திகேயனுடன் நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். திரிஷா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘அரண்மனை 2’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளதை முன்னிட்டு ரசிகர்களுடன் டுவிட்டரில் லைவ்சாட் நடத்தினார்.

அப்போது ரசிகர் ஒருவர், ‘நீங்கள் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதே, எதனால்? என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த திரிஷா, ‘இந்த செய்தியில் உண்மையில்லை. சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற தயார்’ என்று கூறியுள்ளார். இதனை அறிந்த சிவகார்த்திகேயன் திரிஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கோக் – பெப்சி இந்தியாவைச் சூறையாடிய வரலாறு !!!

இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் போப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.

தற்போதைய இந்திய வாழ்க்கையின் ஆழ்மனதில் பதிந்துவிட்ட பெப்சி – கோக்கின் படிமத்திற்கு இணையாக வேறு எதையும் ஒப்பிட இயலாது. கேவலம் இரு குளிர்பான நிறுவனங்களுக்கு அப்படி ஒரு மகிமையா, அது சாத்தியமா என்று நீங்கள் கருதலாம்.

எனில் அவை வெறும் தாகம் தீர்க்கும் குளிர்பானம் மட்டுமல்ல. எதைக் குடிப்பது – உண்பது – உடுத்துவது – பார்ப்பது – படிப்பது – கருதுவது – ரசிப்பது – நேசிப்பது என்ற அமெரிக்க வாழ்க்கை முறையின் – பண்பாட்டின் சின்னம். அத்தகைய அமெரிக்க தாகத்தை, ஏக்கத்தை ஏற்படுத்தி அடிமைப்படுத்துவதே அதன் முதன்மைப் பணி.

கொக்கோ – கோலாவைப் போல அமெரிக்கப் பண்பாட்டினைப் பிரதிநிதித்துவம் செய்யும் பன்னாட்டு நிறுவனம் வேறு எதுவுமில்லை. ஹாலிவுட், வால்ட்-டிஸ்னி, மெக்டோனால்டு, ஃபோர்டு கார், பாப் – ராக்கிசை என பல அமெரிக்க வகை மாதிரிகளில் கோக் மட்டுமே நெடுங்காலமாய் அமெரிக்காவின் தூதுவனாய் உலகெங்கும் செல்வாக்குடன் இடைவிடாமல் சுற்றி வருகிறது. இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் கோக் அதற்கான சாதனையை முதலில் தான் அவதரித்த திருத்தலத்திலேயே செய்து காட்டியிருக்கிறது.

ஓராண்டில் ஒரு அமெரிக்கன் குடிக்கும் குளிர்பான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 700. இப்போது அமெரிக்க மக்கள் தண்ணீர் அருந்துவதில்லை. தாகம் வந்தால் அவர்கள் நினைவுக்கு வருவது பெப்சி – கோக்கின் கோலாக்கள்தான். இப்படி நீர் குடிக்கும் பழக்கத்தை ஒழித்து, அமெரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து விட்ட கோக் வெறும் குளர்பானம் மட்டுமல்ல. பெப்சி – கோக்கில் அப்படி என்னதான் இருக்கிறது? அதைவிட அவற்றை மேற்கத்திய வாழ்வின் அங்கமாக ஒரு போதையாக எப்படி மாற்றினார்கள் என்பதே முக்கியமானது. அதில்தான் இரு சோடாக் கம்பெனிகள் பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் ஒரு உலக சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது

இதற்கு நமது இந்திய எடுத்துக்காட்டையே பார்க்கலாம். 77இல் ஜனதா அரசால் கோக் வெளியேற்றப்பட்ட பிறகு குளிர்பானச் சந்தையில் பார்லே நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. பார்லேயின் தம்ஸ் அப், லிம்கா, கோல்டு ஸ்பாட் போன்ற பானங்கள் அப்போது பிரபலமாக இருந்தன. 90களின் ஆரம்பத்தில் 60 சதவீத சந்தையைக் கைப்பற்றிய பார்வே நிறுவனம் கேம்பா கோலா, த்ரில், டபுள் கோலா போன்ற போட்டி பானங்களை எளிதில் வென்றது. இவை இந்திய அளவில் விற்கப்பட்ட பானங்கள். இது போக மாநில, வட்டார, உள்ளூர் அளவில் ஏராளமான பானங்கள் இருந்தன.

தமிழகத்தில் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் இன்னபிற நிறுவனங்கள் பிரபலமாயிருந்தன. விருதுநகரில் 1916இல் பழனியப்ப நாடாரால் துவங்கப்பட்ட காளிமார்க் 80கள் வரை 30 சதவீத தமிழக சந்தையை வைத்திருந்தது. மேலும் இந்திய அளவில் பழரச பானத்திற்கு கிராக்கி இருந்தது. பார்லேயின் ப்ரூட்டி, பயோமா இன்டஸ்ட்ரியின் ரசனா போன்றவை பழரச சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.

பெப்சி – கோக் வருகைக்குபிறகு இந்நிலைமை அடியோடு மாறியது. 1980களில் இருந்தே பெப்சி நிறுவனம் சில இந்திய தரகு முதலாளிகளின் உதவியுடன் இந்தியாவில் நுழைய முயன்று, இறுதியில் 1990ஆம் ஆண்டு வென்றது. 100 சதவீத பங்குகள் வைத்திருக்கவும், உள்நாட்டு பாட்டில் தொழிற்சாலைகளை வாங்கவும், காய்கனி, டப்பா உணவு ஏற்றுமதி செய்யவும்… என ஏராளமான சலுகைகள் இந்திய அரசால் பெப்சிக்கு வழங்கப்பட்டன. பெப்சியும் வந்த வேகத்தில் 20 சதவீத குளிர்பான சந்தையைக் கைப்பற்றியது.

இங்கிருந்து வெளியேற்றப்பட்ட கோக் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1993ஆம் ஆண்டு மீண்டும் குதித்தது. கோத்ரெஜ், பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் கோக்குடன் கூட்டு சேர்ந்தன. சந்திரசாமியின் அரசியல் பினாமியான சந்திரசேகர் தலைமையிலான மைய அரசு கோக்கிற்கு அனுமதி வழங்கியது. இப்படியாக அமெரிக்காவின் இரண்டு சோடாக் கம்பெனிகள் வறண்டு போன இந்தியாவைக் குளிப்பாட்டி கொள்ளையடிக்கும் வேலையை ஆரம்பித்தன.

அன்றைய இந்தியாவின் குளிர்பான சந்தை 1200 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருந்தது. ஒரு இந்தியன் ஒராண்டுக்கு குடிக்கும் பாட்டில்கள் 3 மட்டுமே தனிநபர் சராசரியாய் இருந்தது. மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதம்தான். இன்றோ வளர்ச்சி விகிதம் 20 சதவீதமாக மாறிவிட்டது. அன்று விற்பனையான குளிர்பான பாட்டில்கள் 276 கோடி, இன்று 350 கோடி பாட்டில்களாக உயர்ந்து விட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் இதை 1200 கோடிப் பாட்டில்களாக உயர்த்தப் போவதாக கோக்கும் – பெப்சியும் மார்தட்டி வருகின்றன.

இன்று குளிர்பானச் சந்தையில் ஏக போகம் வகிக்கும் நிலையை கோக்கும் – பெப்சியும் அடைந்துவிட்டன. புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை நேரடியாகவும், சதி, ஏமாற்று, மிரட்டல், கைப்பற்றுதல், பிரம்மாண்டமான விளம்பர இயக்கம் என மறைமுகமாகவும் பயன்படுத்தி இந்த ஏகபோகம் எட்டப்பட்டது.

கோக் வருகைக்கு முன்பு இங்கே கோலா வகை பானங்களுக்கு வரி அதிகமாகவும், பழரச வகைகளுக்கு குறைவாகவும் இருந்தது. இந்தியாவில் பழவகை விளைச்சல் அதிகம் என்பதால் விவசாயத்துக்கு ஆதரவாக அரசால் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பின்னர் காட் ஒப்பந்தப் படி கோலாவுக்கான வரி குறைக்கப்பட்டது. அதன் பின்பே கோலாக்களின் விற்பனை பழரசத்தை விட உயர்ந்தது. இப்படி அரசால் பெற்ற சலுகைகள் ஏராளம்.

அடுத்து 50% குளிர்பான சந்தையை வைத்திருந்த பார்லே நிறுவனத்தை இந்தியா வந்த ஆறே மாதங்களில் கோக் 123 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் 60 பாட்டில் தொழிலதிபர்களும், 2 இலட்சம் சில்லறை விற்பனையாளர்களும், நாடு தழுவிய வலுவான விற்பனை வலைப்பின்னலும் கோக்கிடம் சரணடைந்தன. தம்ஸ் அப்பும், லிம்காவும், கோக்கின் தயாரிப்பு என விற்கப்பட்டன. பார்லே நிறுவனத்தில் அதிபர் ரமேஷ் சவுகானும், கோக்கின் யானை பலத்துடன் போட்டியிட முடியாது எனத் தெரிந்து கொண்டு தனது நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார்.

மிகப்பெரும் தரகு முதலாளியான பார்லேவுக்கே கதி இதுதான் எனும்போது காளிமார்க் போன்ற சிறுமுதலாளிகள் என்ன செய்வார்கள்? தினத்தந்தியின் உள்ளூர் பதிப்பில் விளம்பரம், காடாத் துணி பேனர் விளம்பரம் என்றிருந்த காளிமார்க், அமெரிக்க சோடாக் கம்பெனிகளின் அதிரடியான வானொளி விளம்பரத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்படியாக கோக் – பெப்சி எனும் அமெரிக்க கழுகுகள் ஆளின்றி நாட்டைக் கவ்வ ஆரம்பித்தன.

இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களும் பிரம்மாண்டமான முதலீடு, மிக விரிவான உற்பத்தி – வலைப் பின்னல், குண்டு வெடிப்பைப் போன்ற விளம்பரங்கள் ஆகிய முப்பெரும் அஸ்திரங்கள் கொண்டு இந்தியாவில் வேரூன்றி விட்டன. இன்று குளிர்பான சந்தையில் 53 சதவீதம் கோக்கிடமும், 40 சதவீதம் பெப்சியிடமும் உள்ளன. சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்.

போகாதீங்க… போகாதீங்க… வெளிநாட்டுக்கு போகாதீங்க!

ஆனந்த விகடனின் வளர்ப்புகள் அவ்வளவாக சோரம் போனதில்லை! அதற்கு சமீபத்தில் வெளிவந்த ‘கத்துக்குட்டி’ படத்தின் இயக்குனர் இரா.சரவணன் ஒரு உதாரணம். அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு அழுத்தமான கருத்துடன் ‘ஆகம்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம். விகடன் பதிப்பகத்தில் ‘ஒரு சிறகு போதும்’ என்ற புத்தகத்தை மாணவர்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும் எழுதியிருக்கும் இவர், நாட்டுக்கு தேவையான ஒரு அழுத்தமான கருத்தை இப்படத்தில் பதிய வைத்திருக்கிறாராம். அப்படின்னா மெசெஜ் சொல்லியே மொன்னை போடுவாரோ? என்கிற அச்சம் இருக்குமல்லவா? அங்குதான் வேறுபடுகிறார் முனைவர்.

வேலை வாய்ப்பு சந்தையில் நடக்கும் பல கோடி மதிப்பிலான உழலை பற்றிய படம் ‘ஆகம்’. சோஷியல் த்ரில்லர் பாணியில் இதை உருவாக்கியிருக்கிறாராம் விஜய் ஆனந்த் ஸ்ரீராம். “நம் நாட்டில் படித்த இளைஞர்கள் பலர் தங்கள் மூளைத் திறனை அயல்நாட்டில் கொண்டுபோய் அடகு வைக்கிறார்கள். அவர்களை ஒரு நிமிஷமாவது இந்த படம் சிந்திக்க வைக்கும். அப்படி வெளிநாட்டுக்கு கிளம்பும் ஒவ்வொருவரும் தங்கள் மூளையை தங்கள் தாய் நாட்டுக்காக அர்ப்பணித்தால், இந்தியா விரைவில் வல்லரசாகும்” என்பதுதான் டைரக்டரின் கருத்து.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? என்ற முழக்கத்தை முன் வைத்திருக்கும் விஜய் ஆனந்த் ஸ்ரீராமின் கருத்துக்களுக்கு உயிர் கொடுத்திருக்கிற நட்சத்திரம், சின்னத்திரை பிரபலம் இர்பான். அவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி தீக்ஷிதா நடித்திருக்கிறார். மற்றும் ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பிரேம், ரவி ராஜா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். RV சரண் ஒளிப்பதிவில், மனோஜ் கியான் படத்தொகுப்பில், ஜிநேஷ் வசனங்கள் எழுத, சதீஸ் குமார் கலையமைப்பில், விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

‘படிச்சவரின் அருமை படிச்சவருக்கே புரியும்’ என்பதைப் போல, இந்த படத்தை ஒரு கல்வி நிறுவன அதிபர்தான் தயாரித்திருக்கிறார். அவர் பெயர் கோடீஸ்வர ராஜா.

“இந்த படத்தை பார்த்துட்டு ஒரே ஒருத்தர் தன் வெளிநாட்டு கனவை விட்டுட்டா போதும். அதுதான் இந்த படத்தின் நிஜ வெற்றி” என்றார் டைரக்டர். எதுக்கும் ஒவ்வொரு பாஸ்போர்ட் ஆபிஸ் முன்னாலேயும் படத்தோட போஸ்டரை ஒட்டிப் பாருங்களேன்…!

கெத்து தமிழ் வார்த்தையா? நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம்!

உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்ஸன் நடிப்பில் திருக்குமரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் கெத்து. இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படாததால், படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் “கெத்து” என்பது தமிழ் வார்த்தை தான் என்றும், சமீபத்தில் வெளியான சில படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கெத்து என்பது தமிழ் வார்த்தை இல்லை என்றுகூறி வரிவிலக்கு தரமறுக்கின்றனர் என்று பட தயாரிப்பு சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

அரசு சார்பில் இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது, அதில், “ கெத்து என்ற தமிழ் வார்த்தைக்கு இணையாக பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கில பெயரில் முதல் எழுத்து ‘கே’ என்பதற்குப் பதிலாக ‘ஜி’ என உள்ளது. இதனால் வரிவிலக்கு அளிக்க முடியாது. மேலும் கெத்து என்ற சொல் தமிழ் வார்த்தை கிடையாது” என்று வாதிட்டார். தமிழ்வளர்ச்சித்துறை மண்டல இயக்குநரும் தனது பதில் மனுவில் கெத்து என்பது தமிழ்வார்த்தை இல்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.

எதிரெதிர் வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

நாசர் மகன் படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா? என்னமா இப்படி பன்றீங்களே ம்மா?

நாசர் மகன் லூபுதின் பாட்ஷா ஒரு புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் பூஜை போடப்பட்டு, தற்போது சிங்கப்பூரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக கமிட்டாக சலோனி லூத்ரா படத்தில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்துவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இயக்குனர் தனபால் பத்மநாபன் போனில் கதை கூறியபோது எனக்கு பிடித்தது. ஆனால் படப்பிடிப்பில் தான் இந்த கேரக்டர் எனக்கு சரியாக வராது என தோன்றியது. இதனால் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன். இருப்பினும் இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட அனைவரின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இது ஒரு நல்ல டீம்' என்று கூறியுள்ளார்.

யானை முட்டையில்தான் ஆம்லெட் போடுவேன் என்று அடம் பிடிக்கும் இயக்குனர்களின் கவனத்துக்கு…

இரண்டேகால் லட்சத்தில் ஒரு நல்ல தரமான குறும்படம் எடுப்பதே சிரமம். ஆனால் ஒரு படமே எடுத்து அதனை வெற்றி படமாக்கியும் காட்டியிருக்கிறார் தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா. 2,11,832 ரூபாய் தான் படத்தின் மொத்த பட்ஜெட்டே… ஆனால் படம் தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகி அள்ளியது ஐந்து கோடிகள். இதனால் தான் ராம்கோபால் வர்மாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். பாலிவுட் ஜாம்பவான் அனுராக் காஷ்யப்பின் குரு,அவ்வப்போது ட்விட்டர் சர்ச்சைகளில் சிக்கினாலும் ராம்கோபால் வர்மாவின் படங்கள் சக்கை போடு போடுபவை. தேசிய விருது உள்பட ராம்கோபால் வர்மாவுக்கு கிடைத்த அங்கீகாரம் ஏராளம்.

தன்னை விமர்சித்த சிலருக்கு சவால் விடும் வகையில் தான் இரண்டேகால் லட்சத்தில் படம் எடுத்தார் ராம்கோபால்வர்மா. நடிகர்கள் நவ்தீப்பும், தேஜஸ்வனியும் அதற்கு சரியான ஒத்துழைப்பு கொடுத்தார்கள். தெலுங்கில் வெளியாகி சில கோடிகளை அள்ள, பாலிவுட்டுக்கும் போய் பல கோடிகளை அள்ளியது இப்படம். இப்படி கோடிகளை அள்ளிய படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ஹிட் அடிக்க இப்போது மூன்றாம் பாகம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். அவரது இந்த முயற்சி தமிழுக்கு வருவது என்பது வணிக நோக்கத்தை தாண்டி இப்படியும் ஒரு படம் எடுத்து தங்கள் திறமையை நிரூபிக்க முடியும் என்று தமிழ் சினிமாவுக்கு வர துடிக்கும் இளைஞர்களுக்கு உணர்த்துவதற்காக தான்.

தமிழில் சாக்கோபார் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் நவ்தீப், தேஜஸ்வனி நடித்திருக்கிறார்கள். ஏடிஎம் புரடக்‌ஷன் சார்பில் T.மதுராஜ் வாங்கி மொழிமாற்றம் செய்திருக்கிறார். படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கி வெளியிடுகிறது ஹாக்ஸ் ஐ ஸ்டுடியோ. சைக்காலஜிகல் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறும் என சினிமா பிரபலங்கள் கணித்திருக்கிறார்கள்.

யானை முட்டையிலதான் ஆம்லெட் போடுவேன் என்று அடம் பிடிக்கும் இயக்குனர்கள், ராம்கோபால் வர்மா குருவி முட்டையில் ஆம்லெட் போட்டு ஊருக்கே பரிமாறிய ரகசியத்தை அறிந்து கொள்ளவாவது முயற்சிப்பார்களா?

முதன்முறையாக இணையும் கமல்-பிரபு-கார்த்திக்

கௌதம் கார்த்திக் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படம் ‘முத்துராமலிங்கம்’. இப்படத்தை ராஜதுரை என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். பஞ்சு அருணாச்சலம் பாடல்களை எழுதியுள்ளார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவும் - பஞ்சு அருணாச்சலமும் இப்படத்தின் மூலம் இணைகிறார்கள். இப்படத்தில் நாயகிகளாக கேத்ரீன் தெரசா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும், கவுதம் கார்த்திக்கின் அப்பா கார்த்திக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுமட்டுமில்லாமல், பிரபு, விவேக் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

தற்போது, இப்படத்தில் கமல் ஒரு பாடலை பாடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் கமலுடன் இணைந்து கார்த்திக் நடித்திருந்தார். அதேபோல், பிரபு ‘வெற்றி விழா’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்திருந்தார்.

ஆனால், கமல்-பிரபு-கார்த்திக் மூவரும் இணைந்து எந்த படத்திலும் இணைந்ததில்லை. தற்போது முதன்முறையாக இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். 

சிம்பு வயசுதான் இவருக்கும்… ஆனால் இவர் எப்படி பாருங்க!

நம்ம ஊரு இளைஞர்கள் பீப் ஸாங் இசைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே வயதுதான்… அம்மாவை போற்றி ஒரு பாடலை உருவாக்கி அதை காணொளி வடிவத்திலும் வெளியிட்டிருக்கிறார் ஒரு நடிகர். நான் தமிழன்டா… என்று மூச்சுக்கு முன்னூறு தடவை மாரில் அடித்துக் கொள்கிற நபர்கள், ஒரு கேரள வாலிபரின் இந்த முயற்சிக்கு தலை தாழ்ந்து வணக்கம் சொல்லியே ஆக வேண்டும்.

விக்ரமன் இயக்கத்தில் ‘நினைத்தது யாரோ’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ரஞ்சித்மேனன். இவரது இயக்கத்தில்தான் நாம் மேலே குறிப்பிட்ட ‘அன்பென்றாலே அம்மா’ என்ற இசை வீடியோ ஆல்பம் உருவாகி உள்ளது. இந்த வீடியோ ஆல்பத்தில் பழம்பெரும் இந்தி நடிகை ஜரீனா வஹாப் அம்மாவாக நடித்திருக்கிறார். ஜரீனா வஹாப் எம்.ஜி.ஆருடன் நவரத்தினம் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர். கமலுடன் விஸ்வரூபம், சூர்யாவுடன் ரத்த சரித்திரம் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இப்படியொரு ஆல்பம் பண்ணணும்னு முடிவெடுத்ததும் நான் போய் பார்த்தது ஜரீனாம்மாவைதான். அவங்களுக்கு இந்த பாடலை போட்டுக் காட்டினோம். உடனே சரின்னு சொல்லிட்டாங்க. மூணு நாள்ல எடுக்கப்பட்ட பாடல் இது. முதலில் அன்னையர் தினத்தில் வெளியிடலாம்னு நினைச்சோம். ஆனால் என்னோட அம்மாவின் பிறந்த ஜனவரி 26. குடியரசு தினம் வேற. அதே நாளில் வெளியிடலாம்னு முடிவு பண்ணி யூ ட்யூப்ல வெளியிட்டுட்டோம் என்றார் ரஞ்சித்மேனன்.

ஜிகினா என்ற படத்தின் ஹீரோ ஆன்சன், மாடல் அழகி ஸ்ருதி ஆகியோரும் இதில் நடித்திருக்கிறார்கள். கார், பணம், பங்களா இதெல்லாம் முக்கியமில்லை. ஒரு மகன் தாய்க்காக செலவிடும் நிமிஷங்கள்தான் உயர்ந்தது என்கிற கருத்தைதான் இந்த ஏழு நிமிட இசை ஆல்பம் வெளிப்படுத்தியிருக்கிறது.

ஸ்வேதா மோகன் பாட, ரஞ்சித் உன்னி இசை அமைக்க, சாரதி பாடலை எழுதி உள்ளார். இந்த நல்ல முயற்சிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பல்ஸ் பார்க்கிறாரா ரஜினி? உற்றுப் பார்க்குது உளவுத்துறை!

டிவியை திறந்தால், ‘அதிமுக, திமுக வுக்கு மாற்று தேடுகிறார்களா மக்கள்?’ என்கிற விவாதம்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. பால் வடியும் முகத்தோடு யாரை பார்த்தாலும், “அண்ணே… சி.எம் சீட்டுல நீங்க வந்து உட்கார்ந்துட்டா தேவலாம்” என்று கெஞ்ச ஆரம்பித்துவிடுகிறார்கள் இளைஞர்கள். “சகாயம் ஐஏஎஸ் மட்டும் நாளைக்கு ம்… னு ஒரு வார்த்தை சொல்லட்டும்… நாளைன்னைக்கு அவரு பின்னால தமிழ்நாடே நிக்கும்” என்று இமேஜ் கிளப்புது இன்னொரு கூட்டம். பேஸ்புக், ட்விட்டர், மற்றும் இணையதளங்கள் இந்த தேர்தலில் ஆற்றப் போகும் பங்கு, சத்தியமாக பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகளுக்கு பீதியை கிளப்புவது மட்டும் நிச்சயம். இந்த திடீர் இமேஜ்களையெல்லாம் ஒரு அறிக்கையோ, அல்லது ஒரு இலவசமோ சரி செய்துவிடும் என்ற நம்பிக்கை ஆளுங்கட்சிக்கும், அதற்கு சமமான எதிர்க்கட்சிகளுக்கும் இருந்தாலும் கூட, மக்களின் புதிய தேடல் என்கிற விருப்பம் அவ்வளவு லேசில் மறையப் போவது இல்லை.

இந்த நேரத்தில்தான் மக்களிடம் ‘பல்ஸ்’ பார்க்க விரும்பினாராம் ரஜினி. சில தினங்களுக்கு முன் வேலூரில் நடந்த ரஜினி ரசிகர்களின் ‘மலரட்டும் மனித நேயம்’ கூட்டம், ரஜினியின் பரிபூரண ஆசிர்வாதத்தோடு மட்டுமல்ல, அவரே விரும்பி செய்த விஷயம் என்கிறார்கள் சில திரையுலக பிரமுகர்கள். அதற்கேற்றார் போல, பெரிய விளம்பரங்கள் இல்லாமலும், பெரிய மெனக்கெடல்கள் இல்லாமலும் இருந்த நிலையில் கூட சுமார் ஒன்றரை லட்சம் பேர் திரண்டு வந்தது பல அரசியல் கட்சிகளை திகைக்க வைத்திருக்கிறது. அது வெறும் கூட்டமல்ல, மாநாடு என்கிற அளவுக்கு திரும்புகிற இடத்திலெல்லாம் ரசிகர்கள் கூட்டம்.

இந்த கூட்டத்தில் யார் யார் என்னென்ன பேசினார்கள் என்பதையெல்லாம் உளவுத்துறை நோட் போட்டு மேலிடத்திற்கு அனுப்பியிருக்கிறதாம். அதுமட்டுமல்ல, அந்த கூட்டத்தின் இஞ்ச் பை இஞ்ச் தகவல்கள் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே ரஜினி காதுக்கு போனதாகவும் கூறுகிறார்கள்.

எல்லாவற்றையும் விட பெரிய மேட்டர் என்ன தெரியுமா? கூட்டம் நடைபெறவிருக்கும் நாள் வரைக்கும் முறையான போலீஸ் பர்மிஷன் வரவில்லையாம். மேலிடம் வரைக்கும் பேசிய அதிகாரிகள் கடைசி நேரத்தில்தான் அந்த அனுமதியை வழங்கியிருக்கிறார்கள். தேர்தல் நேரம் அல்லவா? நிழலாக இருந்தாலும், ஸ்கேனர் வைத்து ஆராய்கிற கட்டத்தில்தான் இருக்கிறது ஒவ்வொரு கட்சியும்.

ரஜினி ரசிகர்களால் நடத்தப்பட்ட இந்த கூட்டம் இனிவரும் காலங்களில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ? காத்திருப்போம்…

பில்கேட்ஸ் பணக்காரர் ஆவதற்கு காரணம் யார்? கசிந்த தகவல்

மைக்ரோசொப்ட் அதிபரும், உலகின் பெரும் பணக்காரருமான பில்கேட்ஸ் பணக்காரர் ஆவதற்கு யார் காரணம் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.பில்கேட்ஸ் 20 வருடங்களுக்கு முன்னர் மைக்கேல் லார்சன் (Michel Larson) என்பவரை பணியில் அமர்த்தியுள்ளார். அப்போது, பில்கேட்ஸின் சொத்து மதிப்பு வெறும் 5 பில்லியன் அமெரிக்க டொலர்தான்.

ஆனால், சுறுசுறுப்பும், கணிப்பு திறனும் இயற்கையாகவே கொண்ட லார்சன், பில்கேட்ஸின் சொந்த முதலீட்டு நிறுவனமான கேஸ்கேட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தை உச்சிக்கு கொண்டு சென்றார்.

ஒருநேரத்தில், பில்கேட்ஸின் சொத்து மைக்ரோசொப்டை மட்டுமே நம்பியிருந்தது.‘

ஆனால், லார்சனின் திறமையால் முதலீட்டு நிறுவனத்தில் வருமானம் கணிசமாக அதிகரித்தது. அதில் வந்த வருமானத்தை லார்சன் புத்திசாலித்தனமாக டெக்னாலஜியில் மட்டுமே முதலீடு செய்து வந்த முறையை மாற்றி ரியல் எஸ்டேட், கனடியன் ரெயில்வே கம்பெனி, ஆட்டோ நேஷன், ரிபப்ளிக் சர்வீஸஸ் போன்றவற்றில் முதலீடு செய்து பணத்தை பெருக்கினார்.

அந்த பணமே இன்று பில்கேட்ஸின் அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது.

இன்று பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

நெருப்பு நெருங்காத மரம் - ஒரு அதிசய செய்தி..!

காட்டுத் தீ பரவும் போது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக்கும் எதனையும் விட்டு-வைப்பதில்லை என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், நெருப்பினைத் தன்னருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை அமையப்பெற்ற மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன.
ரொடோடென்ரன் (Rhododendran) என்ற-ழைக்கப்படும் இந்த மரத்தின் அருகில் நெருப்பு சென்றால், பல அடுக்குகளாக அமைந்துள்ள இதன் பட்டைகளிலிருந்து நீர் வடியத் தொடங்கி-விடும். இதனால் இம்மரத்திற்கு நெருப்பினால் அழிவு ஏற்படாது.

பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இம்மரங்கள் பறவைகளைக் கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் வாசஸ்தலமாக விளக்குகின்றன. பலத்த காற்றி-னையும் தாங்கக் கூடிய உறுதி படைத்தனவாகவும் திகழ்கின்றன. இம்மரத்தில் காணப்படும் செந்நிற மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் சாறு மருத்துவத் தன்மை கொண்டது.
தமிழில் காட்டுப் பூவரசு எனவும் நீலகிரியில் படுகர் மொழியில் பில்லி எனவும் அழைக்கப்-படுகிறது.

இம் மலர்கள் போரஸ் என்று பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தவரால் அழைக்கப்-படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி-களில் (நீலகிரி, ஆனைமலை, பழனி, மேகமலை) கடல் மட்டத்திற்கு மேலே 1500 மீட்டர் உயரத்-திற்கும் அதிகமான பகுதிகளில் இம்மரங்கள் வளர்ந்-துள்ளன. நீலகிரியின் பூர்வீக மரங்கள் என்றும் இதனை அழைக்கலாம்.

இந்தியாவைத் தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் ரொடோடென்ரன் மரங்கள் காணப்படுகின்றன.

பொடுகு பிரச்சனையை தீர்த்திடும் சிறந்த வழிமுறைகள்

 அளவுக்கு அதிகமாக இறந்த செல்கள் இருப்பதால் பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பொடுகு  இருந்தால் முடி கொட்டுதல், முகப்பரு, நரைமுடி, தோல் பிரச்சனை போன்றவை ஏற்படும்.

1. வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அரைத்து தயிருடன் கலந்து ஸ்கல்ப்பில் படும்படி தேய்த்து , மைல்டு ஷாம்பு
போட்டு அலச வேண்டும்.

2. 1 கப் தயிருடன் 2 டீஸ்பூன் வால் மிளகுத்தூளை சேர்த்து நன்கு கலந்து, தலையி தடவி ஊற வைத்து முடியை அலச வேண்டும். இவ்வாறு
தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு படிபடியாக நீங்கிவிடும்.

3. ஆலிவ் ஆயிலை லேசாக சூடேற்றி, இரவில் தேய்த்து விட்டு காலையில் எழுந்து ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும்.
4. ஷாப்பு பயன்படுத்துவதற்கு பதில் தொடர்ந்து சீயக்காய் பயன்படுத்துவதால் கூட பொடுகு குறையும்.  சீயக்காய் தலையை வறண்டு போகாமல் பாது காக்கும்.

5. ஸ்கல்ப்பில் உள்ள தோல் செதில் செதிலாக வருவதை தடுக்கும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் பூண்டின் பற்களை அரைத்து கலந்து, ஸ்க்ல்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு சேர்த்து குளிக்க வேண்டும்.

6. சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் ஊற வைத்து, 30 நிமிடம் கழித்து குளித்தால் தலையில் உள்ள பொடுகு முற்ரீலும் போய்விடும்.

 7. வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை லேசாக சூடேற்றி, தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தீரும்.

ஒருவர் பயன்படுத்திய சீப்பை மற்றொருவர் பயன்படுத்தும்போதும் பொடுகு வர வாய்ப்புகள் அதிகம்.

உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள்!

உடல் பருமன் உடைய அனைவருக்குமே உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாகத்தான் இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க என்ன வழி என்று யாரையாவது கேட்டால் உடனே உடற் பயிற்சி செய்யத்தான் சொல்வார்கள். உடற்பயிற்சி என்ற வார்த்தையைக் கேட்டதுமே கொஞ்சம் ஷாக் ஆகிவிடும் உடல் பருமன் உடையவர்கள் அந்த திட்டத்தை அப்படியே கைவிட்டுவிடுகிறார்கள். அதற்கு மாற்றாக உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள் இருந்தால் எப்படி இருக்கும். சித்த மருத்துவம் சொல்கிறது உடல் எடையை இப்படியும் குறைக்கலாம் என்று.
body-weight-loss
முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் தினமும் காலை மாலை சாப்பிட்டு வர உடல் எடை குறைந்து போகும்.

துளசி இலை சாறை சூடாக்கி சிறிது தேன் கலந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.

சாப்பாட்டில் அடிக்கடி புடலங்காயை சேர்த்துக் கொண்டால் தேவையில்லாத உடல் எடை மெல்ல காணாமல் போகும்.

இலந்தைமர இலையை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடிக்க உடல் எடை அப்படியே மெல்ல மெல்ல குறையும்.

சிறிதளவு கொள்ளை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து அதை ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு(கல் உப்பு) கலந்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் உடல் மெலிவதுடன் உடல் பலமும் அதிகமாகும் கிடைக்கும்.

அமுக்கிராவேர், பெருஞ்சீரகம் இவைகளை பாலுடன் காய்ச்சி குடித்துவர உடல் எடை குறைவதை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள்.

ஓமத்தை கறுக வறுத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் சாப்பிட எளிதில் உடல் எடை குறையும்.

அவரை இலையை உலர்த்தி இடித்துத் தூளாக்கி தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

செம்பருத்தி பொடியை தேன் கலந்து தினமும் காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட கொழுப்பு குறையும். அப்படின்னா உடல் எடையும் காணாமல் போயிடும்தானே!

கல்யாண முருங்கை பொடியை தினமும் காலையில் உணவுக்குப் பின் சாப்பிட உடல் எடை குறையும்.

உடல் எடை குறைய கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிடலாம். இதை இரவு வேளைகளில் சாப்பிடக் கூடாது.

ஆவாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

சிறிதளவு மோர் மற்றும் காரட் இவற்றை நன்றாக சேர்த்து அரைத்து தினமும் குடித்து வந்தால் உடல் இளைக்கும்.

சிறிதளவு சோம்பு, கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் சுத்தமான சிறிதளவு தேன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் உடல் எடை குறைந்து விடும்.

வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது ஏன் ?

 மனிதனினுக்கு மிக முக்கியான தூக்கத்தில் நாம் எப்படி தூங்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் அறிவியல் ரீதியாக அன்றே வகுத்துள்ளனர்.
 
இந்த உலகில் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி, அல்லது சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் தேவை முறையான ஒய்வும் நல்ல தூக்கமும் தேவை. எனவே தான் பலரும் ஓய்வுக்காக கோடை வாசஸ்தலத்திற்கும், குளுகுளு இடங்களை தேடிச் செல்கின்றனர். அங்கு நல்ல ஓய்வு எடுத்து மீண்டும் உற்சாகமாக திரும்புகின்றனர்.

நாம் நன்கு துங்கி எழும் போழுது, நாம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். அப்போது தான், அன்றைய பணி மிகவும் உற்சாகமாக இருக்கும். எனவே, நாம் தலை வைத்து படுக்கும் திசை மிகவும் முக்கியமானது ஆகும்.

நாம், வடக்கு திசையில் தலை வைத்து படுத்தால், பூமியின் காந்த கல ஓட்ட திசையில் நம் உடல் இருப்பதால் நம்முடைய உயிர்ச் சக்தியை அது கனிசமாக இழுத்துக் கொள்ளும். இதனால், நாம் வடக்கு திசையில் தலைவைத்து படுத்தால் நம் உயிர்ச் சக்தி தேவையின்றி விரையம் ஆகும். காலையில் உற்சாகமாக எழுந்திருக்க முடியாது. அவ்வாறு எழுந்தாலும், அன்றைய பொழுது புத்துணர்ச்சியாக இருக்காது.

அதே போல, நம் மேற்கு திசையில் தலைவைத்து படுத்தால் காலையில் நாம் எழுந்து கண்விழிக்கும் போது, சூரியனின் ஒளிகதிர்கள் நமது கண்களில் பட்டு கூசும். எனவே, மேற்கு திசையில் தலை வைத்து படுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும், நாம் கிழக்கு திசை பக்கம் தலை வைத்து படுத்தால்,நாம் பூமியின் காந்த ஓட்டத்தின் குறுக்காக இருப்பதால் நமது உடல் ஒரு டைனமோ போல் திகழ்ந்து உயிர்ச் சக்தியாக்கம் பெறும். இதனால், உற்சாகம் கிடைக்கும். எனவே, கீழக்கு திசையில் தலை வைத்து படுப்பதுவே மிகவும் சிறந்தது ஆகும். 

மிஷ்கினுடன் கைகோர்க்கும் ‘தாரை தப்பட்டை’ வில்லன்..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ஒளிப்பதிவாளர் செழியன். ஷங்கர் தயாரித்த ‘கல்லூரி’ மற்றும் ‘ரெட்டைச்சுழி’ படங்களில் பணியாற்றினார்.

அதன்பின்னர் பாலா இயக்கி கடைசியாக வெளியான பரதேசி மற்றும் தாரை தப்பட்டை ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தார். தற்போது இயக்குனராக அவதாரமெடுக்கிறாராம் செழியன்.

இதில் மிஷ்கின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தாரை தப்பட்டை படத்தில் மிரட்டிய வில்லன் ஆர். கே. சுரேஷும் நடிக்கிறார். இவர்கள் இருவரும் போலீஸ் கேரக்டரில் நடிக்கின்றனர்.

வருகிற மார்ச் மாதத்தில் இதன் படப்பிடிப்பை துவங்கவிருக்கின்றனர். இப்படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக ஆர். கே. சுரேஷ் அவர்களே தயாரிக்கக்கூடும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டயபடிஸ் வரக் காரணம் என்ன? ஒரு முழுமையான அலசலும் தீர்வும்..!

டயபடிஸில் முக்கியமான மூன்றுவகைகள் உண்டு. டைப் 1, டைப் 2 மற்றும் ப்ரி டயபடிஸ் என மூன்று முக்கியவகை டயபடிஸ் உண்டு. இதில் டைப் 1 டயபடிஸ் என்பது நம் உடலில் உள்ள பேன்க்ரியாஸ் எனும் உள்ளுறுப்பு கிருமிகளால் பாதிக்கப்படுவதால் அல்லது வேறு நோய்களால் பாதிக்கப்படுவதால் வருவது. பேன்க்ரியாஸ் தான் இன்சுலினை சுரக்கும் உறுப்பு என்பதால் இன்சுலின் சுரப்பது பாதிக்கப்படுகையில் நமக்கு டைப் 1 டயபடிஸ் வருகிறது.

டைப் 2 டயபடிஸ் தான் பெரும்பாலானோருக்கு வருவது. இது நம் உணவு பழக்கங்களாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும் வருவது. நம் ரத்த அளவில் உள்ள சர்க்கரை 125 மிகி/ டிஎல் எனும் அளவைத் தாண்டுகையில் நாம் சர்க்கரை நோயாளி என அறியப்படுகிறோம். 100 மிகி/டிஎல் முதல் 125 மிகி/டிஎல் அளவில் சர்க்கரை இருந்தால் நாம் ப்ரிடயபடிக் என அழைக்கபடுகிறோம். 100 மிகி/டிஎல் அளவுக்கு கீழ் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என பொருள்.

டயபடிஸ் வரக் காரணம் என்ன?

நம் உணவில் உள்ள சர்க்கரை (கார்போஹைட்ரேட்) தான் சர்க்கரை நோய்க்கு காரணம். சர்க்கரை அரிசி, கோதுமை, பழங்கள், காய்கள் முதலிய பலவற்றிலும் ஏராளமாக இருக்கிறது. சர்க்கரையில் மூன்றூவகை உண்டு

க்ளுகோஸ்

லாக்டோஸ் – பாலில் இருக்கும் சர்க்கரை

ப்ருக்டோஸ் – பழத்தில் இருக்கும் சர்க்கரை

நாம் உண்ணும் அரிசி, கோதுமை முதலிய உணவுகளில் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரை உண்டு. இது நேரடியாக குளுகோஸ் ஆக மாறுகிறது. அந்த குளுகோஸ் உடலில் இறங்கியவுடன் அதை ஜீரணம் செய்ய நம் பேன்க்ரியாஸ் இன்சுலினை உற்பத்தி செய்யவேண்டி உள்ளது. இன்சுலின் உற்பத்தி ஆனதும் பல தீய விளைவுகள் உடலில் நிகழ்கின்றன.

ஆதி மனிதன் தினமும் மூன்று வேளை உண்ணும் வழக்கம் உடையவன் அல்ல. ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பதே சிரமம் எனும் நிலையில் இருந்தவன். அதனால் தேவைக்கு அதிகமாக உண்டால் அந்த அதிகபட்ச உணவை சேமித்து பஞ்சகாலத்தில் பயன்படுத்தும் அவசியம் அவனுக்கு இருந்தது. அதற்கு இன்சுலின் பேரளவில் பயன்பட்டது. ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக குளுகோஸ் கலந்தால் இன்சுலின் உற்பத்தி ஆகிறது. இன்சுலினின் உற்பத்தி நம் உடலில் உள்ள செல்களுக்கு அந்த கூடுதல் சர்க்கரையை சேமிக்கும் சிக்னல். கூடுதல் சர்க்கரையை எப்படி சேமிக்க முடியும்? இரு வழிகளில். ஒன்று கிளைகோஜென். கிளைகோஜென் நம் உடலின் ஆற்றல் தேவைகளுக்கு பயன்படும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் உடலுக்கு இரு நாள் அளவுக்கு மேல் தேவையான ஆற்றலை கிளைகோஜென்னாக சேமிக்கும் சக்தி இல்லை. ஆனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஏராளமாக கொழுப்பைச் சேர்க்கும் ஆற்றல் உள்ளது. அதனால் நம் உணவில் உள்ள சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு தொப்பையில் சேர்க்கபடுகிறது. நாமும் குண்டோதரர் ஆகிறோம்.

சர்க்கரை வியாதி இதில் எப்படி வருகிறது?

இன்சுலின் என்பது ஃபயர் எஞ்சின் மாதிரி. கூடுதல் சர்க்கரை உடலில் சேர்ந்தால் ஒரு எமெர்ஜென்சி எனும் அளவில் இன்சுலின் சுரந்து அதை கட்டுக்குள் வைக்கும். ஆனால் தினம் மூன்று வேளையும் நெருப்பு பிடித்து அலாரம் அடித்துக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்? இதுவே தொடர்ந்து நாற்பது வருடம் நீடித்தால் என்ன ஆகும்?

ஓடிக்கொன்டிருக்கும் ஃபயர் எஞ்சின் களைத்துப் போய் நின்றுவிடும். அதாவது பேன்க்ரியாஸ் தன் இன்சுலின் சுரக்கும் திறனை இழந்துவிடும் அல்லது குறைத்துக் கொள்ளும். இன்சுலின் சுரப்பது குறைந்தால் உடலில் சர்க்கரை அளவு அதிகம் ஆகி நமக்கு சர்க்கரை வியாதி வரும். அதன்பின் செயற்கையாக ஊசிமூலம் இன்சுலினை ஏற்றும் நிலைக்குச் செல்வோம்.

துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டு உணவுவகைகள் பலவும் ஏராளமான சர்க்கரை சத்து கொன்டவையாகவே உள்ளன. நம் காலை உணவான இட்லியை எடுத்துக்கொள்வோம். ஒரு இட்லியில் சுமார் 15 கிராம் சர்க்கரை உள்ளது. ஒரே ஒரு இட்லி சாப்பிடுவது சுமார் நான்கு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதற்கு சமம். காலையில் ஐந்து இட்லியும், சாம்பாரும் சாப்பிட்டால் நீங்கள் காலையில் மட்டும் 20 ஸ்பூன் சர்க்கரை (75 கிராம் சர்க்கரை)உண்கிறீர்கள் என பொருள்.

“இட்லி சாப்பிடுவதும் சர்க்கரை சாப்பிடுவதும் ஒன்றா? இட்லி ஆரோக்கிய உணவு அல்லவா?” எனக் கேட்டு நீங்கள் என் மேல் கோபப்படலாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

ஐந்து இட்டிலி சாப்பிடுவது நேரடியாக 75 கிராம் வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதை விட மோசமானது.

சில உணவுகள் நம் உடலில் நுழைந்தவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இதில் உச்சக்கட்டமாக, உடனடியாக எரிந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு க்ளுகோஸ். க்ளுகோஸ் சாப்பிட்டவுடன் உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு நமக்கு இருக்கும். அதற்கு காரணம் இதுதான். ரத்தத்தில் சர்க்கரை ஏறியவுடன் உடல் சுறுசுறுப்பு அடையும். உடல் உடனே அதை ஜீரணிக்க இன்சுலினை அனுப்பும். இன்சுலின் சுரந்தவுடன் பசி எடுக்கும். மேலும் எதையாவது உண்ணவேண்டும் போல் தோன்றும்.

ஆக க்ளுகோஸ் ரத்தத்தில் கரையும் விகிதம் 100 என்பதை மையமாக வைத்து க்ளைசெமிக் இண்டெக்ஸ் எனும் இண்டெக்ஸ் உருவாக்கப்பட்டது. 72 தாண்டி இதில் இருக்கும் உணவுகள் ஆபத்தானவை. 72க்கு எத்தனை கீழே எண்ணிக்கை இருக்கிறதோ அத்தனைக்கத்தனை அந்த உணவு நல்லது. காரணம் அது மெதுவாக எரிந்து உடலுக்குத் தேவையான எனெர்ஜியை அளிக்கும். இன்சுலின் சுரப்பின் தேவையை குறைக்கும். இது உடலுக்கு மிகவும் நன்மையளிக்கும் சமாச்சாரம். உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

சில உணவுகளில் க்ளைசெமிக் இண்டெக்சை பார்க்கலாம்

நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் கொடுக்கும் லிக்விட் க்ளுகோஸ் 100

உருளைகிழங்கு 80 முதல் 98 (வகையை பொறுத்து)

வெள்ளை சர்க்கரை 64

முழு கோதுமை ரொட்டி 64 முதல் 87 வரை

வெள்ளை அரிசி 64 முதல் 87 வரை (வகையை பொறுத்தது)

வெள்ளை ரொட்டி 87

ஆக சர்க்கரை, க்ளுகோஸ் ஆகியவற்றை உண்ணுவது நம் ரத்தத்தில் க்ளுகோஸ் சுரப்பை அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் க்ளுகோஸ் லெவெல்கள் உடலை வெலவெலத்துப் போகச் செய்யும். அதைக் குறைக்க உடனடியாக இன்சுலினை சுரக்கவேன்டியது கட்டாயம். ஒரு நாளுக்கு நாலைந்து தடவை இப்படி இன்சுலினை சுரந்தால் உடல் ஒரு கட்டத்தில் இன்சுலினை சுரக்கும் சக்தியை இழந்துவிடும். நாம் டைப் 2 டயபடிஸில் வீழ்வோம். அதன்பின் செயற்கையாக இன்சுலினை ஊசி மூலம் ஏற்றவேன்டியதுதான்.

ஆக நம்மில் பெரும்பாலானோர் உண்ணும் அரிசி, கோதுமை (முழு கோதுமையாக இருப்பினும்) ஆகியவை சர்க்கரையை விட அதிக வேகத்தில் நம் ரத்தத்தில் கரைந்து க்ளுகோஸ் லெவெலை ஏற்றும். சர்க்கரை வியாதியை அதிகரிக்க/வரவழைக்க வேன்டுமனால் அதற்கு குறுக்கு வழி சர்க்கரை தின்பது கூட அல்ல. அரிசியையும், ப்ரெட்டையும் உண்பதே.

ஆக “நான் குறைவாக தான் சாப்பிடுகிறேன். உடல் இளைக்கவில்லை” என சொல்லுகையில் அதற்கான காரணம் இதுதான்.

காலை ஐந்து இட்டிலி

மதியம் சாதம், சாம்பார், ரசம்,

மாலை வடை, டீ காப்பி

இரவு சப்பாத்தி, உருளைகிழங்கு குருமா

இப்படி சராசரியான தமிழ்நாட்டு உணவை உண்பது தினம் சுமார் அரை கிலோ முதல் முக்கால் கிலோ வெள்ளை சர்க்கரையை நேரடியாக உண்பதற்கு சமம்.

தினம் அரை கிலோ வெள்ளை சர்க்கரையை 40, 50 வருடங்களாக தொடர்ந்து உண்டுவந்தால் டயபடிஸ் வருவதிலும், உடல் எடை கூடுவதிலும், கொலஸ்டிரால் வருவதிலும் வியப்பு என்ன?

இது எல்லாம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

காட்டுமிராண்டி உணவில் இருக்கும் சர்க்கரையின் அளவு என்ன?

கிட்டத்தட்ட பூஜ்ஜியத்துக்கு சமம்.

காரணம் ஆதிமனிதன் உண்டது பெருமளவில் மாமிசம், சில வேர்கள், காய்கள். கோடையில் மட்டும் சில பழங்களை உண்டான். அதிலும் வேட்டை கிடைக்காத நாட்களில் முழு பட்டினி. தவிரவும் சர்க்கரை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற விவசாயகாலகட்ட பழங்கள் அவன் காலத்தில் இல்லை. ஆக ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 30 கிராம் அளவு சர்க்கரை அவன் உடலில் சேர்ந்திருந்தாலே பெரிய விஷயம். மேலும் 10,000 ஆன்டுகளுக்கு முன்புவரை உலகின் பெரும்பகுதி பனியால் சூழப்பட்டு இருந்தது. அதனால் மாமிசம் தான் அவன் முதன்மை உணவாக இருந்தது. இன்றும் பனிபடர்ந்த பகுதிகளில் வாழும் எஸ்கிமோ உணவில் 97% மாமிசம். மாமிசத்தில் துளி சர்க்கரை இல்லை. அதனால் ஆதிமனிதன் நாம் உண்பதைப் போன்ற பெரும் அளவுகளில் சர்க்கரையை உண்ணவில்லை. அதனால் அவனுக்கு சர்க்கரை வியாதியும் வரவில்லை.

ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு நம் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு என்ன?

இட்டிலி மற்றும் சப்பாத்தி.

சப்பாத்தியின் கிளைசெமிக் எண் வெள்ளை சர்க்கரையின் கிளைசெமிக் இண்டெக்சை விட அதிகம்.

சர்க்கரை நோயாளிகள் நாலு சப்பாத்தியை சாப்பிட்டு அதில் உள்ள சர்க்கரையை கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வது என்பது அரை கிலோ சர்க்கரையை சாப்பிட்டுவிட்டு அதைக் கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வதற்கு சமம்!!!

இப்படி இட்டிலி, சப்பாத்தி போன்ற “ஆரோக்கிய உணவுகளை” தொடர்ந்து உண்டுவந்தால் அப்புறம் எப்படி சர்க்கரை வியாதி குணம் ஆகும்?

எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் அன்புமணியின் பங்கு என்ன?

"மாற்றம் முன்னேற்றம் அன்புமணி" என்று சொல்லும் அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணிதான் மூன்று மாணவிகளின் உயிரை காவு வாங்கிய எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்தாரா அல்லது இணை அமைச்சர் பனபகாலட்சுமி அனுமதி கொடுத்தாரா என்ற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், பங்காரம் என்ற இடத்தில் இயங்கி வருகிறது எஸ்.வி.எஸ். ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி. இக்கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா, சென்னை எர்ணாவூரை சேர்ந்த மோனிஷா, திருவாரூரைச் சேர்ந்த பிரியங்கா ஆகியோர் கடந்த 23ம் தேதி கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

"அரசு அங்கீகாரம் இல்லாத இந்த கல்லூரி,  பொய் பிரசாரம் செய்து, மாணவ-மாணவிகளை சேர்த்து, அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்துள்ளது. உள்கட்டமைப்பு வசதியில்லாத இந்த கல்லூரியில் பயின்ற மாணவ-மாணவிகளை கொத்தடிமைகளாக நடத்தி வந்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். இதனை கண்டித்து பல முறை மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் செய்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷம் குடித்து, தீக்குளித்து இரண்டுமுறை தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்கள். அப்போதே மாவட்ட நிர்வாகமும், அரசும், இந்த கல்லூரி நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுதான் இவர்களின் தற்கொலைக்கு காரணமாகியுள்ளது.

மூன்று மாணவிகளின் உயிர்களை காவு வாங்கிய இந்த கல்லூரிக்கு, அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணியும்,  இணை அமைச்சராக இருந்தஆந்திராவை சேர்ந்த பனபகாலட்சுமியும், மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் முறையாக ஆய்வு செய்யாமல் அனுமதி கொடுத்திருக்கிறார்கள் என்ற புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

இதனை மறுத்துள்ள அன்புமணி, "மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் இருந்த போது, இணை அமைச்சராக ஆந்திராவை சேர்ந்த பனபகாலட்சுமி இருந்தார். அவருக்கு கீழ்தான், ஆயூஸ் எனப்படும் ஹோமியோபதி மருத்துவமனைக்கான அனுமதி வழங்கும் பிரிவு இருந்தது" என தெரிவித்துள்ளார்.

சித்த மருத்துவ மாணவிகள் தற்கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த 24ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கை:

"விழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்திலுள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த 3 மாணவிகள் நேற்று மாலை அருகிலுள்ள கிணற்றில் ஒன்றாக குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இது பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அளிக்கிறது. அந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேநேரத்தில் மூன்று மாணவிகள் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டதன் பின்னணி என்ன? என்பதை ஆராய வேண்டும். எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் நடக்கும் கட்டணக் கொள்ளை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதியின்மையை எதிர்த்து அங்கு பயிலும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சில மாணவர்கள் தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் சித்த மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த அறிக்கையை மேல்நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கும், எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகத்திற்கும் மாவட்ட நிர்வாகம் அனுப்பிவைத்தது. ஆனால், அதன்மீது இன்று வரை எந்த நடவடிக்கையையும் தமிழக சுகாதாரத்துறை எடுக்கவில்லை.

அதுமட்டுமின்றி, சித்த மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாகி வாசுகியும், அவரது மகன் சுதாகரும் அடிமைகளைப் போல நடத்தியுள்ளனர். கல்லூரி வளாகத்திலுள்ள முள் மரங்களை வெட்டுவது, கழிப்பறைகளை சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். எதிர்த்து கேள்விக் கேட்பவர்கள் கல்லூரி நிர்வாகியின் சமுதாயத்தைச் சேர்ந்த அடியாட்களால் மிரட்டப்பட்டிருக்கின்றனர். பாலியல் சீண்டல்களும் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத மாணவிகள்,‘‘கட்டிய பணம் கூட தேவையில்லை... சான்றிதழ்களை கொடுங்கள். நாங்கள் வேறு கல்லூரியில் சேர்ந்து கொள்கிறோம்’’ என்று கெஞ்சிய போதும் அதை கல்லூரி நிர்வாகம் பொருட்படுத்தாததால் மாணவிகள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்புகார்கள் எதையும் புறக்கணிக்க முடியாது.

எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரி மீதான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசும் மருத்துவப்பல்கலைக்கழகமும் உரிய காலத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால், கல்லூரி நிர்வாகியின் சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் அரசியல் கட்சி பிரமுகர் மூலம் அதே சமுதாயத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பெண் உயரதிகாரிக்கு பெரும் தொகை தரப்பட்டு சித்த மருத்துவக் கல்லூரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

சித்த மருத்துவக் கல்லூரி மீது ஏராளமான புகார்கள் எழுந்த நிலையில், அதன்மீதும், அதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அனுப்பிய விசாரணை அறிக்கை மீதும் நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசு தான் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய 3 மாணவிகளின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்.
மாணவிகளின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி அதற்கு காரணமான அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சித்த மருத்துவக் கல்லூரியை மூடி முத்திரையிட்டு அதில் படித்து வரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் இடம் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அதிமுகவில் இருந்து பழ.கருப்பையா எம்எல்ஏ நீக்கம்!

அதிமுக எம்எல்ஏ பழ. கருப்பையாதான் இப்படியெல்லாம் பேசியிருக்காரு.... இன்னமும் கட்சியிலும் நீடிக்கிறாரு 

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில், அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பழ.கருப்பையா கட்சியின் கொள்கை-குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் பழ.கருப்பையா செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில், ஆளும் அ.தி.மு.க. அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதால் பழ.கருப்பையா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடசி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

லிங்குசாமி கமல் படம்! ஒரு இஞ்ச் கூட நகரலே?

முட்டு சந்துல வச்சு கெட்டி உருண்டையை ஊட்டுன மாதிரி ஆகிடுச்சு உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமியின் நிலைமை. எந்தப்பக்கமும் ஓடவும் முடியாமல், பல்லுல வச்சு கடிக்கவும் முடியாமல் அவர் பட்ட அவஸ்தை அவருக்கே வெளிச்சம்! இந்த சினிமாவுல மட்டும்தான் இப்படியொரு அவலம்? யாரால் பாதிக்கப்பட்டீர்களோ, அவரையே மீண்டும் கோர்த்துவிட்டு விடுவார்கள். எடுத்த படம் ஓடலேன்னுதானய்யா இம்புட்டு அவஸ்தை? இதுல அவர் மறுபடியும் கால்ஷீட் தருவார். இன்னொரு படம் எடுத்துக்கோ என்றால்?

அப்படிதான் பஞ்சாயத்தை முடித்தார்கள். மீண்டும் கமல் நடிக்க, லிங்குசாமி தயாரிக்க என்று வந்தது தீர்ப்பு. ஆனால் அங்கும் ஒரு அக்கு! லிங்குசாமி முப்பது கோடி ரூபாயை கமலிடம் கொடுத்துவிட வேண்டுமாம். அவர் அந்த படத்தை எடுத்து லிங்குசாமியிடம் கொடுத்துவிடுவாராம். விற்று கல்லா கட்டிக் கொள்வது லிங்குவின் பொறுப்பு. இந்த நிலையில்தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாக இணையத்தை கலக்குகிறது அந்த செய்தி. அந்த கமல் லிங்குசாமி படம் ஆரம்ப நிலைக்கு வந்திருப்பதாக செய்திகள்.

விசாரித்தால், ம்ஹுக்கும்… அது வேறயா என்று காண்டாகிறது லிங்குசாமி ஏரியா. இப்பதான் ரஜினி முருகன் வந்து லேசா மூச்சு விட வச்சுருக்கான். அதுக்குள்ளே முப்பது கோடிய புரட்டி கமல் கையில் கொடுத்துட்டு, பழத்தை புட்டால் சாறு வருமா? சக்கை வருமா? என்று காத்திருக்க இதுவா நேரம்? அதனால் பேச்சு மூச்சில்லாமல் வேறு சிந்தனையில் இருக்கிறாராம் லிங்குசாமி.

அப்ப கமல் புராஜக்ட்? எப்ப முப்பது கோடி சுளையா கைக்கு வருதோ, அப்படி வந்தாலும்… மன மகிழ்வோடு கமல் கையில் கொடுக்கிற அளவுக்கு மணி ப்ளோ இருக்கோ? அப்பதானாம்! ஜெய் ஜக்கம்மா… சீக்கிரம் வழி காட்டம்மா!

வயிற்றை சுத்தமாக்கும் உணவுகள்..! அவசியம் உண்ண வேண்டியது...!

அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும்.

எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.

அதேபோல கேரட், வெங் காயம், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது.

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள், கோதுமை ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும்.

தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல, தினசரி உண்ணும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலம் செரிமான மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். தொப்பை ஏற்படாது. வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது!