Monday 18 January 2016

நீங்கள் மூளையின் வல பக்கமா? இடப் பக்கமா?ஒரு சின்ன டெஸ்ட்!!

உலகிலேயே மிக மிக ஆச்சரியம் – மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண் துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.இந்நிலையில் மூளையை பொறுத்த மட்டில் இடது, வலது என இரு பாதிகளாக உள்ளன. ஒரு நரம்பு குவியல் இரண்டையும் இணைக்கிறது. இந்த இணைப்பு “corpus callosum” எனப்படும். வால்நட் பருப்பு இணைந்துள்ளது போலவே காணப்படும். செரிபெரம் இரு பகுதிகள் என மூளையை கொண்டுள்ளது. இடது பாகம் உடலின் வலது புறத்தையும், வலது பாகம் உடலின் இடது புறத்தையும் கவனித்துக்கொள்கிறது. “corpus callosum” பகுதியை சமமாக வெட்டினால் இரு பாகங்களான மூளைக்கு தொடர்பே இருக்காது.

அதிலும் ஒரு பாகம் செயல் படுவது மற்றொரு பாகத்துக்கு தெரியாது. இரு பகுதிகளும் சமமானதா? ஒரு பாகம் செய்ய முடியாததை மற்றுது செய்யுமா? (அ) செயல்படுத்துவதில் வித்தியாசம் உள்ளதா? 1861ல் இரண்டும் வெவ்வேறானவை எனப்பட்டது. பிரெஞ்சு டாக்டர் ப்ராகா பேச முடியாத நோயாளியை கண்டார். நாம் சொல்வதை புரிந்து கொண்டாலும் அவனால் திரும்ப பேச முடியாது. முக பாவங்களை, கை அசைவு கொண்டு அவனால் அறிவு பூர்வமாக பதிலளிக்க முடியும். ஆனால் பேச முடியாது.

இதற்கிடையில் இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள், அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள்.

சரி இவற்றில் நீங்கள் எந்தவகையைச் சேர்ந்தவர்கள் நீங்கள் எப்பக்க மூளையை பயன்படுத்துகின்றீர்கள் என்பதை கண்டறிய சிறிய பரீட்சை ஒன்றை உருவாக்கியுள்ளனர் ஒரு இணையத்தள வடிவமைப்பாளர்கள். (பரீட்சை ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என்றாலும் எல்லோரும் சட்டென புரிந்து கொள்ள முடியும்)

இந்த பரீட்சையின் முடிவில் உங்களை இயக்குவது வலதா அல்லது இடது மூளையா என்பதை அறியலாம். 30 செக்கனுக்குள் கண்டுபிடிக்கலாம் என்று தான் இந்த இணையத்தளம் சொல்லும். ஆனால் அதற்காக ஆர்வக் கோளாறில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பட்டு பட்டுனு பட்டன்களை தட்டிச் சென்றீர்கள் என்றால் இறுதி முடிவு சில வேளை தவறாக கொடுக்கலாம். எனவே கொஞ்சம் நின்று நிறுத்தி நிதானமாக மனம் என்ன சொல்கிறதோ, மன்னிக்க, மூளை என்ன சொல்கிறதோ அதனபடி பதில் அளியுங்கள். முடிவில் நீங்கள் எந்தப்பக்க மூளையை பயன்படுத்துபவர் என ஆதாரத்தோடு அடித்துச் சொல்கிறது இப்பரீட்சை.

இனி பரிட்சைக்கு க்ளிக் :::http://en.sommer-sommer.com/braintest/

அசைவப்பிரியர்களே...இது உங்களுக்கான டிப்ஸ்!

கொழுப்பு அமிலமான(Fatty Acid) ஒமேகா-3 இயல்பான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது.

ஒமேகா 3 உள்ள உணவுகள்

ஒமேகா 3 உள்ள உணவுகளில் முதன்மையானவவை மீன்கள். அதுவும் சால்மன், துனா, சார்டின், ஹெர்ரிங், நெத்திலி போன்றவற்றில் அதிகம் அளவு ஒமேகா 3 உள்ளது.

இந்த வகை மீன்களை வறுக்காமல் உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாரம் ஒருமுறை இந்த மீன்களை உண்டால் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 44% குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பசலைக்கீரை, சணல் விதை எண்ணெய், கோதுமை போன்றவற்றில் அதிகமாக கிடைக்கும்.

சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கர்ப்பக் காலத்தில் பெண்களிடம் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பட்டியலில் இந்த ஒமேகா 3 க்கும் இடம் உண்டு.
முதலில் இது ஒரு வலி நிவாரணியாகவும் செயல்படும். உடலில் தேவையான அளவு ஒமேகா 3 இருந்தால் உடல் வலிகள் குறையும்.

உடலில் எரிச்சல்,சிவப்பாவது, மிகவும் சென்சிடிவ் ஆவது போன்ற பிரச்சனைகள் இருந்தால் இந்த ஒமேகா 3 குணமாக்கிவிடும்.

நம்புகளை வலிமைப்படுத்துகிறது, கண் மூளை செயல்பாடுகள் மற்றும் பக்கவாதம் வருவதை தடுக்கிறது.
மனச்சோர்வு, இதர மனநோய்களில் சிகிச்சை பயன்படுகிறது.

மூளை செயல்பாடு, நினைவாற்றல், புத்திசாலித்தனம் இவற்றை வளர்க்கும்.

உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும் பணியை செய்கிறது.

வலிப்பு, மாரடைப்பு இந்த இரண்டு நோய்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ள ஒமேகா 3 சாப்பிட வேண்டும்.

மீனுடன் தயிரோ அல்லது கீரை வகைகளோ சேர்க்கக்கூடாது, செரிமானப்பிரச்சனைகள் மட்டுமின்றி தோல் நோய்கள் வரக்காரணமாகின்றன.

ஆளுக்கொரு அவதூறு! சிவகார்த்திகேயனை குளோஸ் பண்ண சதியா?

ஒரேயடியா ‘ஒசரத்துக்கு’ போயிருக்கிறார் சிவகார்த்திகேயன். மெரீனாவில் ஆரம்பித்து பொங்கலுக்கு வந்த ‘ரஜினி முருகன்’ வரைக்கும் அவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட்! ஒருபுறம் இனிப்பு, மறுபுறம் கசப்பு என்பதை போலவே இந்த வெற்றியை டீல் பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள் அவரோடு சேர்ந்து பணியாற்றிய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும். எல்லாரும் சொல்கிற ஒரே குற்றச்சாட்டு, “அவரை வச்சு இனிமே எங்களால் படமே பண்ண முடியாதுங்க. ஏன்னா அவர் கேட்கிற சம்பளம் அப்படி” என்பதுதான்.

கடந்த சில வாரங்களுக்கு முன் ‘தங்கமகன்’ ரிலீஸ் நேரத்தில் பேசிய தனுஷ், “அவரு கேட்கிற சம்பளத்தை கொடுக்கிற அளவுக்கு எங்க கம்பெனி பெரிய கம்பெனி இல்ல” என்றார் சிரித்துக் கொண்டே! கடையாணியை புடுங்கி மருதாணி போட்ட மாதிரிதான் இந்த சிரிப்பும் விமர்சனமும்! இந்த விஷயத்தை அப்படியே பத்திரிகைகளில் ஊதிய நிருபர்கள், அதற்கப்புறம் சிவகார்த்திகேயனை பார்த்த போது, “மீண்டும் தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிப்பீர்களா?” என்று கேட்க, “கண்டிப்பா நடிப்பேன்” என்றார் அவரும்.

இதோ- அடுத்த ராக்கெட்… பற்ற வைத்தவர் பாண்டிராஜ். மெரீனா படத்தை தயாரித்தவர், சிவகார்த்திகேயனை வைத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை இயக்கியவர் என்று பாண்டிராஜுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நடுவே அழுத்தமான பந்த பாசம் உண்டு. இருந்தாலும் இன்று ‘கதக்களி’ படத்தின் வெற்றியை அறிவிக்கிற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் சொன்ன விஷயம், மறுபடியும் சிவாவின் சட்டையில் ஒரு பட்டனை புடுங்கிய கதைதான். உங்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நடுவே ஒப்பந்தம் உண்டு. அதன்படி நீங்கள் இயக்கும் மூன்று படங்களில் அவர் நடிக்க வேண்டும். அந்த இன்னொரு படம் எப்போ? இதுதான் கேள்வி.

“அவரு என்னங்க? சம்பளம்னு பத்து விரலையும் நீட்டி அதுவும் பத்தாம அதுக்கும் மேல காட்றாரு. பார்க்கலாம்” என்றார் பாண்டிராஜ். தனது மார்க்கெட்டும், வியாபாரமும் உயர உயர ஒருவர் அதற்கேற்ப சம்பளம் கேட்பது தவறா? என்பதுதான் பலரது டவுட்!

அதிருக்கட்டும்… நியாயமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கதக்களி, நல்லபடியாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். “குறைந்த செலவு. நிறைந்த லாபம். நானும் ஹேப்பி. விஷாலும் ஹேப்பி” என்றார் பாண்டிராஜ். போகிற போக்கை பார்த்தால், மீண்டும் ஜாயின்ட் போடுவார்கள் போலிருக்கிறது இருவரும்! அதிலேயும் வெளியூர்ல இருந்துதான் வருவாராங்க விஷால்?

பின் குறிப்பு- கதக்களி என்று பெயர் வைக்கப்பட்டதால் இந்த படத்திற்கு வரிவிலக்கு தரப்படவில்லை.

சர்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி?

நீரிழிவு நோயால் நமது கண்பார்வை எந்த அளவுக்கு கடுமை யாகப் பாதிக்கப்படும், இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை குணமாக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீரிழிவு நோய் மிக வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுப் படி உலக மக்கள் தொகையில்
4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நகர்ப்புற நீரிழிவு நோயா ளிகளில் 2 சதவீதம் பேருக்கு விழித்திரை பாதிப்பு இருக்கும்.

சென்னையை பொறுத்தவரையில் 100 நீரிழிவு நோயாளிகளில் 5 பேருக்கு கண்பார்வை குறைபாடு இருக்கிறது. உலகிலேயே அளவுக்கு அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருப்பது இந்தியாவில் தான். இதனால் தான் இந்தியாவை நீரிழிவு நோயாளிகளின் தரைநகரம் என்று வர்ணிக்கிறார்கள். நீரிழிவு நோயை டைப்-1, டைப்-2 என்று 2 வகையான பிரித்துள்ளனர்.

30 வயதுக்குள் நீரிழிவு நோய் வருவதை டைப்-1 என்றும், 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் வருவதை டைப்-2 என்றும் பிரித்துள்ளனர். டைப்-1ன் வகையை சேர்ந்த நோயாளிகளுக்கு 15 ஆண்டுகளாக நீரிழிவு இருந்தால் அவர்களது கண்பார்வை 100 சதவீதம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

டைப்-2 வகையினருக்கு நீரிழிவு நோய் 15 ஆண்டுகள் நீடித்தால் 30 சதவீதம் பேரின் கண்பார்வை கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்தால், இந்நோயாளிகள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதிலும் விழித்திரை நிபுணரிடம் (ரெட்டினா ஸ்பெஷலிஸ்ட்) சென்று `செக்-அப்' செய்வது மிகவும் நல்லது.

பரிசோதனை : எப்.எப்.ஏ. (திதிகி) என்ற கண் பரிசோதனை மூலம் நீரிழிவால் ஏற்படும் ரத்த நாள கோளாறுகளை கண்டறிய முடியும். இப்பரிசோதனைக்கு பிறகு கண்ணுக்குள் இன்ட்ரா விட்ரியாஸ் என்ற ஊசி மருந்தை ஊசி மூலம் செலுத்துவோம்.

கண்ணுக்குள் வி.இ.ஜி.எப். ரசாயனம் உண்டு. இந்த ரசாயனத்துக்கு எதிராக வி.இ.ஜி.எப். மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் ரத்தநாள கோளாறு குணமாகும். இதில் கையின் ரத்தநாளங்களில் மருந்தை செலுத்தி விழித்திரையில் லேசர் செய்ய வேண்டிய இடங்களை கண்டறியலாம். பரிசோதனை மூலம் லேசர் கிரணங்களை உள்ளே செலுத்தி கண்களில் கத்தி வைக்காமல், விழித்திரையின் சிகிச்கை செய்ய முடியும்.

சிகிச்சைகள் :

லேசர் சிகிச்சை: 1. நீரிழிவு நோய் காரணமாக கண்களில் இருந்து நீர் கசிந்தால் லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

2. இன்ட்ரா விட்டிரியஸ் ஊசி.

3. விட்ரக்டமி. டிப்ஸ் நீரிழிவு நோயாளிகள் அனைவரும் கண்விழி பரிசோதனை செய்வது அவசியம். நீரிழிவு நோய் தனக்கு இருப்பது தெரிந்ததும் கண் மருத்துவரை சந்தித்து பரிசோதனை மேற்கொண்டால் கண்பார்வை குறைபாடு ஏற்படுவதை தடுத்து விடலாம். கண் மருத்துவரிடம் தொடக்கத்திலேயே சிகிச்சை செய்யா விட்டால் கண்பார்வை பறிபோவதை தடுப்பது கடினம்

குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத மருந்துகள் எவை தெரியுமா?

குழந்தைகளை நல்ல படியாக பராமரித்து வளர்ப்பது என்பது பெரிய காரியமாகும். அவர்களை நோய் நொடி அண்டாமல் ஆரோக்கியமாக இருக்க, ஒவ்வொரு தாயும் அவர்களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க முற்படுகிறாள். அப்படி இருந்தும் பல காரணங்களால் குழந்தைகளுக்கு கிருமிகளினால் பல நோய்த்தொற்று ஏற்படுகிறது. அதன் விளைவாக காய்ச்சல், சளி, இருமல்
என்று பல அவஸ்தைக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில், அவர்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகளை கொடுக்கின்றோம். குறிப்பாக கை குழந்தைகளுக்கும், தவழும் குழந்தைகளுக்கும் மருந்துகள் கொடுக்கும் முன், கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனையை பெற வேண்டும். ஏனெனில் குழந்தைகளுடைய நோய் தடுப்பாற்றல் சக்தியானது மிகவும் குறைவாக இருப்பதால், குழந்தைகளை கிருமிகள் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளன. அதன் விளைவாக வியாதிகள் வரக்கூடும். இதற்காக மருந்து கொடுக்கும் போது, பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் அத்தகைய மருந்துகள் இயற்கையான அல்லது மூலிகை மருந்தாக இருந்தாலும் கூட கவனம் வேண்டும். பொதுவாக தவழும் குழந்தைக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் பிடித்துக் கொள்ளும். ஆனால் 6 வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் சாப்பிடும் சளி மற்றும் இருமல் மருந்தை கொடுப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏனென்றால், மருந்துகளானது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய அளவு கொடுக்காமல், குழந்தைக்கு மருந்தானது திறம்பட செயல்படவில்லை என்று சிலர் அளவுக்கு மீறி மருந்தைக் கொடுத்துவிடுகின்றனர். ஆகவே இது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது. இப்போது குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கக்கூடாத 8 வகையான மருந்துகளை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, குழந்தைகளுக்கு அவற்றை கொடுப்பதை அறவே தவிர்த்துவிடுங்கள்.

ஆஸ்பிரின் (Aspirin) : மருத்துவர் பரிந்துரைக்காவிட்டால், ஆஸ்பிரின் அல்லது ஆஸ்பிரின் கலந்த மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆஸ்பிரினால், குழந்தைகளின் சிறுநீரகமும், மூளையும் பாதிப்படையும். எனவே மருந்து கடைகளில் வாங்கும் அனைத்து மருந்துகளிலும் ஆஸ்பிரின் இருக்காது என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள். எப்போதும் மருந்து வாங்கும் முன், முதலில் அதன் லேபிளை நன்கு படித்து பின்னரே வாங்க வேண்டும். மேலும் சாலிசிலிக் அல்லது அசிடைல்சாலிசிலிக் அமிலம் என்ற பெயரைக் கண்டால், அதுவும் ஆஸ்பிரினையே குறிக்கும். காய்ச்சல் என்றால், 6 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பாராசெட்டமால் (paracetamol) அல்லது இபுப்ரோஃபெனைக் (ibuprofen) கொடுக்கலாம்.

குழந்தை மருத்துவத்தின் அமெரிக்க அகாடமியில் உறுப்பினர்களாக இருக்கும் குழந்தை மருத்துவர்கள், கண்டிப்பாக குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் மருந்துகளை பரிந்துரைக்கமாட்டார்கள். ஏனெனில் அவை சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதில்லை. சில நேரம் அதிக அளவில் கொடுப்பதால், அது ஆபத்தை கூட விளைவிக்கும். அதிலும் தூக்க கலக்கம், வயிற்று வலி, சொறி, அதிகமான இதயத் துடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் ஒவ்வொரு வருடமும் வீட்டிலேயே சளி மற்றும் இருமல் மருந்து கொடுப்பதால் தான், ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

மருத்துவர்கள் பரிந்துரைக்காவிட்டால் கண்டிப்பாக குழந்தைகளுக்கு குமட்டலை தடுக்கும் மருந்துகளை கொடுக்கக்கூடாது. பொதுவாக குமட்டல் வந்தால், நீண்ட நேரம் இருக்காது. ஆகவே குமட்டல் ஏற்படும் போது, அதனை தடுக்க மருந்துகள் அவசியம் இல்லை. சாதாரணமாக இருந்தாலே, அவை குணமாகிவிடும். அதை விட்டு, மருந்துகளை கொடுத்தால், அது ஆபத்தை விளைவிக்கும். ஒருவேளை குழந்தை வாந்தி எடுத்தால், அவர்களுக்கு தேவையான அளவு நீராகாரம் கொடுத்தால், உடல் வறட்சியைத் தடுக்கலாம். கைமீறிப் போனால், மருத்துவரை அணுகுவது நல்லது.

பெரியவர்கள் சாப்பிடும் மருந்துகளை சிறிதளவு கூட குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ஏனெனில் குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்துகளை விட, கைக்குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்துகள் சற்று அடர்ந்த நிலையில் இருப்பதால், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மற்ற குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை, உங்கள் குழந்தைக்கு கொடுத்தாலும் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் உங்கள் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே கொடுக்க வேண்டும்.

காலாவதியான மருந்துகளை உடனடியாக மருந்து பெட்டியில் இருந்து தூக்கி எறிந்து விட வேண்டும். மேலும் நிறம் மாறிய மருந்துகளையும் குப்பையில் போட வேண்டும். ஏனெனில் காலாவதியான மருந்துகளின் திறன் செயலிழந்திருக்கும். மேலும் அது உயிருக்கே பெரும் ஆபத்தையும் விளைவிக்கும்.

காய்ச்சல் மற்றும் உடம்பு வலியை குறைக்கும் மருந்துகள் பலவற்றிலும் அசிடமினோஃபென் (acetaminophen) கலக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை அதனை பற்றி சரியான அறிவு இல்லையென்றால், உடனே மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

மெல்லும் தன்மையுள்ள மருந்துகள் அல்லது மாத்திரைகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், அது அவர்களுடைய தொண்டை குழியை அடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை குழந்தை திடமான உணவை உண்ண ஆரம்பித்து விட்டால், அவர்களுக்கு மாத்திரைகள் கொடுக்க நினைப்போம். அப்படிப்பட்ட நேரத்தில் மாத்திரைகளை பொடியாக்கி, அவற்றை குழந்தைகளின் உணவில் கலந்து கொடுக்கலாமா என்று மருத்துவரிடம் கேட்டு பின்னரே கொடுக்க வேண்டும்.

கெத்து தமிழ் வார்த்தை இல்லையா? கொதிக்கும் உதயநிதி ஸ்டாலின்.!

மான் கராத்தே புகழ் திருகுமரன் இயக்கத்தில் உதயநிதி நடித்த படம் ‘கெத்து’. இதில் சத்யராஜ், விக்ராந்த், எமி ஜாக்சன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

இப்படத்தின் பெயர் தமிழில் இல்லை என இப்படத்திற்கு வரிச்சலுகை மறுக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்த ஒரு பதிவை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில்… “கெத்து என்றால் தந்திரம் என தமிழ் அகராதியில் இருப்பதாக அச்சிடப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனால், வரிச்சலுகை மறுக்கப்பட்டதை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் வழக்கு தொடுக்கப் போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ‘கெத்து’ திரைப்படம் பற்றி யாரோ ஒருவர் மோசமான படம் என விமர்சனம் செய்திருக்கிறார். இதுகுறித்தும் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

“பணம் பெற்றுக் கொண்டு படத்தை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். அவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை. என் ரசிகர்களுக்காக தான் படம் எடுக்கிறேன். இதுபோல் ஒருமுறை ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் வெளியான நாள் அன்று அந்தப் படத்தைப் பற்றி மோசமாக எழுதியிருந்தார் ஒரு விமர்சகர்.

ஆனால், படம் மாபெரும் வெற்றி என்று அறிவிக்கப்பட்டதும் அவருடைய விமர்சனத்தை நீக்கி விட்டார். அப்படி பணம் பெற்றுக் கொண்டு விமர்சிக்கும் டுபாக்கூர் விமர்சகர்கள் முகத்தில் விடப்படும் குத்துதான் கெத்து படத்தில் பாரில் நடைபெறும் சண்டைக் காட்சியின் முதல் குத்து” என அந்த விமர்சகரை குறிப்பிட்டு கூறியுள்ளார் உதயநிதி.

தற்போது அஹ்மத் இயக்கத்தில், ‘மனிதன்’ என்ற படத்தில் ஹன்சிகாவுடன் நடிக்கவிருக்கிறார் உதயநிதி. 

எஸ்.ஜானகியை கண்ணீர் விட வைத்த இளையராஜா - விசாரனை..?

இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருந்த எஸ்.ஜானகி திடீரென பாட முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். இசைக்குழுவினர் திகைத்துப் போனார்கள்.

இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

காரைக்குடி நாராயணன் கதை வசனம் எழுதிய படங்கள் அப்போது நன்றாக ஓடிக்கொண்டிருந்தன. இதனால் அவரே ஒரு படம் தயாரிக்க முன்வந்தார். படத்துக்கு "அச்சாணி'' என்று பெயர் வைத்தார். படத்துக்கு இசையமைக்க என்னைக் கேட்டுக்கொண்டார்.

கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. பூஜையன்றே பாடல் பதிவு.

பாடல்களை கவிஞர் வாலி எழுதினார். கம்போசிங்கும் நடந்து முடிந்தது. இதில் "மாதா உன் கோவிலில் மணித்தீபம் ஏற்றினேன்'' என்ற பாடல், படத்தின் அச்சாணி போல. ஆனால் பூஜைக்கு முதல் பாடலாக வேறு பாடலை தேர்வு செய்திருந்தேன். பிரசாத் ஸ்டூடியோவில் பூஜை என்று முடிவானது. பூஜை தினத்தில் சவுண்டு என்ஜினீயர் எஸ்.பி.ராமநாதன் ஒரு சிறிய தவறு செய்ய, அது குழப்பமாகி பூஜையன்று எல்லாருக்குமே டென்ஷன்.

எங்களுக்கு கொடுத்த பூஜை தினத்திலேயே உபேந்திரகுமார் என்ற கன்னட இசையமைப்பாளருக்கும் பூஜை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். அதாவது இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில். பூஜைக்காக காலை 7 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோ போனால் அங்கே வேறு ஆர்க்கெஸ்ட்ரா (இசைக்குழு) இருந்தது. "இதென்ன! இவர்கள் எங்கள் ரெக்கார்டிங்கில் வாசிப்பவர்கள் இல்லையே?'' என்று கேட்டால், அப்புறம்தான் உண்மை தெரிந்தது.

எஸ்.பி.ராமநாதன் இரண்டு பூஜைகளுக்கும் ஸ்டூடியோவை கொடுத்து இருப்பது! ஞாபக மறதியாலோ அல்லது காலை 10 மணிக்குள் ஒரு பாடலை யாராவது முடித்து விட்டால், அடுத்த பாடலை மதியம் ஒரு மணிக்குள் எடுத்து விடலாமே என்று அவரே ஒரு தப்புக்கணக்குப் போட்டிருந்தாரோ என்னவோ தெரியவில்லை.

இப்போது யார் ரெக்கார்டிங் வைத்துக் கொள்வது என்று நான் எஸ்.பி.ராமநாதனைக் கேட்க, அவர் சமாளித்துப் பார்த்தார். பதில் சொல்ல முடியவில்லை.

உபேந்திரகுமாரோ எதுபற்றியும் சட்டை செய்யாமல் அவரது பாடலை ரிகர்சல் செய்யத் தொடங்கி விட்டார். இனி இங்கே வேலைக்காகாது என்று தெரிந்து போக, ரெக்கார்டிங் நடத்த ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவை கேட்கச் சொன்னேன். அங்கே நடத்தலாம் என்பது தெரியவந்ததும் ஆர்க்கெஸ்ட்ராவுடன் அங்கே போனேன். அங்கே பூஜையெல்லாம் தொடங்கி முடிந்து, ரெக்கார்டிங் ஆரம்பிக்கும் சமயத்தில் மிஷின் ரிப்பேர் ஆகிவிட்டது.

இதற்குள் நேரம் மதியம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இதே நேரம் பிரசாத் ஸ்டூடியோவில் நடந்த 'ரெக்கார்டிங்' முடிந்து எல்லாரும் போய்விட்டார்கள். அங்கே மாலையில் வேறு ரெக்கார்டிங் இல்லாததால் 2 மணிக்கு மறுபடியுமாக அங்கேயே போனோம். ஆர்க்கெஸ்ட்ரா தயாரானது.

ஜானகி வந்தார். 'மாதா உன் கோவிலில்' பாடலையே எடுத்துவிட, ஒத்திகை பார்த்து 'டேக்' போகலாம் என்று தொடங்கினோம். இரண்டு மூன்று டேக் சரியாக வரவில்லை. நானோ இந்தப்பாடல் முடிந்து இன்னும் ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்ற டென்ஷனில் இருந்தேன்.

இந்தப் பாடலை எடுத்துக் கொண்டிருக்கும்போதே நிறைய சங்கதிகள் கற்பனையில் வர, ஜானகியிடம் அவ்வப்போது சென்று மாற்றிக்கொண்டே இருந்தேன். ஒரு டேக் நன்றாக வந்து கொண்டிருந்தது. அடுத்து மூன்றாவது பின்னணி இசை சேர்ப்பு தொடங்கவேண்டும். ஆனால் யாரும் வாசிக்கவில்லை. காரணம், 'கண்டக்ட்' செய்த கோவர்த்தன் சார் கைகாட்ட மறந்துவிட்டார்.

எனக்கு கோபம். "என்னண்ணே! டேக் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. பேக்ரவுண்டு மியூசிக்கிற்கு ஏன் கை காட்டவில்லை?'' என்று கேட்டேன். அவரோ, "பாட்டில் மெய் மறந்துட்டேன்யா'' என்றார், கூலாக. எனக்கோ, அடடா! இவ்வளவு ஒன்றிய நிலையில் கண்டக்ட் செய்பவரை திட்டிவிட்டோமே என்று வருத்தம் ஆனது.

அடுத்த டேக். மூன்றாவது சரணத்தில் ஜானகி பாடும்போது,

"பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது''

- என்ற வார்த்தைகளை அழகாகப் பாடியவர் அதற்கப்புறம் தொடர்ந்து பாடாமல் விட்டு விட்டார். "ஐயோ நன்றாக இருந்ததே! ஏன் அடுத்த அடியை விட்டு விட்டீர்கள்?'' என்று ஜானகியை கேட்டேன். ஆர்க்கெஸ்ட்ராவிலோ யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

பொதுவாக 'டேக்' கட் ஆனாலே "பேன் போடு'' என்று சத்தம் போடுபவர்கள், சத்தமே இல்லாமல் இருக்கிறார்களே என்று பார்த்தால், கோவர்த்தன் சார் 'வாய்ஸ் ரூமை' கைகாட்டி ஏதோ சொன்னார். என்னவென்று புரியாமல் 'வாய்ஸ் ரூமை' பார்த்தால், கண்ணாடி வழியே ஜானகி கர்ச்சிப்பால் கண்களை துடைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

விஷயம் என்னவென்று பார்த்தால், ஜானகி இப்படிச் சொன்னார்: "டியூனும் வார்த்தையும் கலந்து 'பாவத்தில்' ஏதோ ஒன்றை உணர்த்திவிட, அழுகை வந்துவிட்டது. அழுகையோடு பாடவும் முடியாமல், அழுகையை நிறுத்தவும் முடியாமல் விட்டுவிட்டேன்.'' ஜானகி இப்படிச் சொல்லி முடித்ததும் எல்லாரும் உருகி விட்டார்கள்.

ருத்ரையா இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் 'அவள் அப்படித்தான்.' இதில் என் இசையில் கமல் ஒரு பாட்டு பாடியிருப்பார். கமல் அப்போது மலையாளப்படம் ஒன்றில் நடித்து வந்தார்.

ரெக்கார்டிங்கின்போது ஸ்டூடியோவுக்கு வந்தார். பாடலை பாடிக்காட்டினேன். கேட்டு அவரும் பாடிப்பார்த்தார். நன்றாக வந்தது. அப்படியே பாடவைத்து ரெக்கார்டு செய்து விட்டோம். அது 'பன்னீர் புஷ்பங்களே' என்ற பாடல். அமர் (கங்கை அமரன்) எழுதியது. கோவையில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் பாடலுக்கான மெட்டு உதயமானது.

அந்த விழா மேடையில் பஞ்சு சாரும், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சாரும் மேடையிலேயே வந்து பாடலுக்கான 'சிச்சுவேஷன்' சொல்ல, மேடையிலேயே கம்போஸ் செய்து ஆர்க்கெஸ்ட்ராவோடு பாடியது. அந்தப் பாடலுக்கு வேறு வார்த்தைகளை போட்டு அமர் எழுதியதுதான் 'பன்னீர் புஷ்பங்களே' பாட்டு.

இந்தப் பாடலை கமல் பாடி முடித்து ரொம்ப நாள் கழித்துத்தான் அதில் இருந்த தவறு ஒன்று எனக்குத் தெரிந்தது. கமல் 'பன்னீர் புஷ்பங்களே' என்ற வார்த்தையை 'பன்னீர் புஷ்பங்ஙளே' என்று பாடிவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, "அப்போது மலையாளப் படத்தில் நடித்து வந்ததால் தமிழை மலையாளம் போல பாடிவிட்டேன்'' என்றார்.

ஒருநாள் டைரக்டர் ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்தார். யார் மேல் எங்களுக்கு பிரியம் அதிகமோ, யாரை நாங்கள் ஹீரோவாக நினைத்தோமோ, யாரை 'தென்னாட்டு சாந்தாராம்' என்று மக்கள் அழைத்தார்களோ, அந்த ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு.

ஸ்ரீதர் சார் இயக்கிய 48 படங்களுக்கு மேல் அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கிறார். ஒரு படத்தில் கூட அவர் இசையமைத்த பாடல் சோடை என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட அவரையே விட்டு விட்டு, ஸ்ரீதர் சார் நம்மிடம் வருகிறாரே, இதுதான் சினிமா உலகமா? இவரும் சாதாரண சினிமாக்காரர்தானா? இந்த சினிமா உலகம் நாளைக்கு இதுபோல் தான் நம்மையும் விட்டு விடுமோ என்ற எண்ணமும் ஒரு கணம் மனதில் ஓடியது.

ஸ்ரீதர் தனது படத்துக்கு "இளமை ஊஞ்சலாடுகிறது'' என்று பெயர் வைத்திருந்தார். அப்போது காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரு படத்தின் பின்னணி இசை வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால் கம்போசிங் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரைக்கும், இரவு 10 மணியில் இருந்து விடியும் வரைக்கும் நடந்தது.

"ஒரே நாள் உனை நான்நிலாவில் பார்த்தது''
- என்ற பாடல் படத்தின் "தீம் ஸாங்.''

"நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா?'' என்ற இரண்டு பாடல்களையும் முதலில் பதிவு செய்தோம். மூன்றாவதாக "தண்ணி கருத்திருச்சு'' என்ற கிராமியப்பாடல் வார்த்தையை வைத்து இசையமைத்தேன். தொடக்கம் மட்டும் அதை வைத்துக்கொண்டு மற்ற வரிகளை கவிஞர் வாலி மாற்றிவிட்டார். இந்தப் பாடலை யாரைப் பாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, சட்டென ஜி.கே.வெங்கடேஷ் நினைவுக்கு வந்தார். அவரையே பாட வைக்கலாம் என முடிவு செய்தோம்.

அடுத்த நாள் ஏவி.எம்.மில் ரெக்கார்டிங். ஜி.கே.வி. பாடலை கற்றுக்கொண்டார். டைரக்டர் ஸ்ரீதர், உதவி டைரக்டர்கள் கோபு, வாசு, சந்தானபாரதி என எல்லோரும் இருந்தார்கள். பல ஒத்திகைகள் நடந்தது. பாடுவதற்கு மைக் முன்னால் போனால், ஒரு அடி பாட, அடுத்த அடியின் டியூன் மறந்து போகும். மறுபடி நினைவுபடுத்திப்பாட, இரண்டாவது ரிகர்சலில் வேறு ஒரு இடத்தில் மறந்து போகும்.

இப்படியே பஸ் ஒவ்வொரு அடி நகரும்போதும் பிரேக் போட்டு பிரேக் போட்டு போவது போல ஆயிற்று. அங்கேயே நின்று கொண்டிருந்தது பாட்டு. "சரி டேக்கில் வந்து விடும். டேக்கில் 'ட்ரை' பண்ணலாம்யா'' என்று கோவர்த்தன் சார் சொல்ல, டேக் தொடங்கினோம். அது பல்லவியோடு கட் ஆகிவிட்டது! இப்படியே ஒரு லைன் - பாதி வரி - அடுத்த லைன் - இன்னொரு பாதி வரி என்று 62 டேக்குகளுக்கும் மேலாகிவிட்டது. மணியோ மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. மதியம் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் ரெக்கார்டிங். அவர் வேறு வந்துவிட்டார். வந்தவர் ஜி.கே.வி. பாடுவதைக் கேட்டு, "டேய் வெங்கடேசா! நல்லாப் பாடுடா!'' என்று தான் வந்திருக்கிறதையும் அறிவித்து உற்சாகப்படுத்தவும் செய்தார்.

ஜி.கே.வி. இன்னும் டென்ஷனாகி விட்டார். 'டேக்' தொடக்கத்தில் ஏற்கனவே அவருக்கு டென்ஷன். அப்போது டைரக்டர் ஸ்ரீதர், "இவ்வளவு கஷ்டமாக இருந்தால் இந்தப் பாடல் எதற்கு? வேண்டாம், ராஜா! கேன்சல் செய்து விடுவோம். வேறு டியூன் போட்டுக் கொள்ளலாம்'' என்றார். 

பொங்கலில் வெளியான படங்களில் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் யார் ?

இந்த பொங்கலுக்கு பாலாவின் தாரை தப்பட்டை, விஷாலின் கதகளி, உதயநிதி யின் கெத்து மற்றும் சிவகர்த்திகேயனின் ரஜினிமுருகன் வெளிவந்தது.

இதில் ரஜினிமுருகன் மற்றும் கதகளி நல்ல விமர்சனங்கள் பெற, மற்ற இரண்டு படங்கள் கலவையான விமர்சனங்கள் சந்தித்தன. இப்படங்களின் முதல் நான்கு நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தற்போது வந்துள்ளது.

அதில் வசூலளவில் விஷாலின் கதகளி ரூ. 58 லட்சம் வசூலித்து நான்காம் இடம் பிடிக்க, உதயிநிதியின் கெத்து ரூ. 62 லட்சம் பெற்று மூன்றாம் இடத்திலும், பாலாவின் தாரைதப்பட்டை ரூ. 80 லட்சம் வசூலித்து இரண்டாம் இடத்தையும் , நீண்ட காலமாக வெளிவராமல் இருந்த ரஜினிமுருகன் ரூ. 97 லட்சம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது. அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

‘கெத்து’ – தலைப்பில் மட்டும்!

கதைச் சுருக்கம்

ஒரு பள்ளியில் பி.டி.இ மாஸ்டர் எனப்படும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரியும் சத்யராஜுக்கு மிகவும் ஒழுக்கமான மகன் உதயநிதி ஸ்டாலின். ஒரு முறை அந்த பள்ளிக்கு அருகில் இயங்கும் மதுபானக்கடையால் பள்ளி மாணவிகளுக்கு சில அசௌகரியங்கள் வர, சத்யராஜ் போலீசில் புகார் அளிக்கிறார்.

அந்த புகாரைத் திரும்ப பெறச்சொல்லி மதுபானக்கடை முதலாளிகள் சத்யராஜ் குடும்பத்திற்கு பிரச்சனைகள் கொடுக்க, அவர் மகன் பொங்கி எழுந்து அவர்களை அடித்துத் துவம்சம் செய்கிறார். இன்னும் எத்தனை வருடங்களுக்குதான் இதே கதையைத் திரும்பத் திரும்பப் படமெடுப்பார்களோ என்று நினைத்தபடி அமர்ந்திருக்கும் வேளையில் ஒரு திடீர்த் திருப்பம்.

அந்த வில்லன்களில் ஒருவர் மர்மமான முறையில் இறக்க சத்யராஜ் கைது செய்யப்படுகிறார். அந்த கொலையின் பின்னணி என்ன? நிரபராதியான சத்யராஜை விடுவிக்க மகன் உதயநிதி எடுக்கும் முயற்சிகள் என்னென்ன என்பதுதான் திரைப்படத்தின் மீதிக்கதை.

நடிப்பு

கதாநாயகனான உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக நடிகர் சந்தானத்தின் நகைச்சுவை கூட்டணி உதவி இல்லாமல் களமிறங்கியிருக்கும் திரைப்படம். உதயநிதி நடனத்தில் நன்றாகவே தேர்ந்துள்ளார்.

ஆனால் ஒரு கமர்ஷியல் திரைப்படத்தைத் தனியாளாகத் தூக்கி சுமக்கும் அளவுக்கு அவர் இன்னும் மெருகேறவில்லையோ என்றே தோண்றுகிறது.  பல இடங்களில் முந்தைய படங்களில் பார்த்துச் சலித்த அதே முகபாவனைகள். அவர் நண்பனாக வரும் கர்ணா மட்டும் சில இடங்களில் கவர்கிறார்.

உதயநிதியுடனான காதல் காட்சிகளுக்கு மட்டும் கதாநாயகி எமி ஜாக்சன் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். பிரிட்டிஷ் வம்சாவளியை சேர்ந்த எமி ஜாக்சன் நடிக்கும் சமீப திரைப்படங்களில், கதைக்கு அவர் அப்பா அல்லது அம்மா வெளிநாட்டவர் என்று ஏதாவது சப்பை கட்டு கட்டுவார்கள். இதில் அவரை அக்மார்க் தமிழ்ப் பெண்ணாகவே காட்டியிருப்பது பெரும் நெருடல்.

படத்தின் மிகப்பெரிய பலம் சத்யராஜ் மட்டுமே. தன்னைச் சுற்றி நடக்கும் சிறு தவறுகளை கண்டு அவர் கோபப்படும் பொழுதும், பள்ளிக்கு வந்து மிரட்டும் வில்லன்களிடம் தைரியமாக நின்று பதில் பேசும் காட்சிகளிலும் உயர்ந்த மனிதர் மிளிர்கிறார்.

படத்தின் முக்கிய வில்லனாக வரும் நடிகர் விக்ராந்த் நன்றாகவே உழைத்திருக்கிறார். ஆனால் அவரின் அரைகுறையான பாத்திரப்படைப்பு படத்திற்கு ஏற்ற விறுவிறுப்பை தர மறுக்கிறது. மதுபானக்கடை முதலாளியாக வரும் ‘மைம்’ கோபி நல்ல தேர்வு.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
படத்தின் மிகப்பெரிய பலவீனம் சுவாரசியமில்லாத திரைக்கதை. முழுப்படமும் எண்பது மற்றும் தொண்ணூறுகளில் வந்த பல திரைப்படங்களின் காட்சித் தொகுப்பாகவே தெரிகிறது. ‘மான் கராத்தே’ திரைப்படத்தில் நகைச்சுவையான திரைக்கதை அமைப்பிலும் வசனங்களிலும் நம் கவனத்தை ஈர்த்த திருக்குமரன் இதில் ஏனோ கோட்டை விட்டிருக்கின்றார்.

இயக்குனருக்கு ஒரு தூணாக நின்று படத்திற்கு தோள் கொடுத்திருப்பவர் ஒளிப்பதிவாளர் M.சுகுமார். காட்சிகளின் ஒளியமைப்பும் கோணங்களும் இந்திப் படங்களுக்கு நிகராக இருந்தாலும், பல இடங்களில் ஒளிப்பதிவு எதார்த்தத்தை மீறுகிறதோ என்றே தோன்றுகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் காதுகளுக்கு இனிமையாக இருந்தாலும், புதுமை இல்லை. சுவாரசியம் இல்லாத பல காட்சிகளை அவரின் பின்னணி இசை மூலம் சரிக் கட்ட முயன்றிருக்கிறார்.
மொத்தத்தில் திரைக்கதையில் கூடுதல் கவனமும், காட்சியமைப்பில் கொஞ்சம் புதுமையும் சேர்த்திருந்திருந்தால் தலைப்பில் மட்டும் இருக்கும் ‘கெத்து’ முழுப்படத்திலும் வெளிப்பட்டிருக்கும்.

கெத்து – தலைப்பில் மட்டும்!

பாகுபலிக்கு எந்த விதத்திலும் குறையாத படம்... மலையாள இயக்குநரின் சவால்!

2015ல் பிரமாண்டம் என்ற வார்த்தையின் மறு உருவமாய் மாறிய பெயர் பாகுபலி.  கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் முன்னதாகவே எந்திரன், பாஜிராவ் மஸ்தானி, தூம் 3, தேவ்தாஸ், ஜோதா அக்பர், போன்ற படங்கள் பிரம்மாண்ட லிஸ்டில் உள்ளன. தற்போது இவ்வரிசையில் இணைய உள்ளது மலையாள திரையுலகமும். எதார்த்த சினிமாக்களை மட்டுமே அதிகம் எடுத்து வந்த மலையாள சினிமா உலகம், தற்போது கண்களுக்கு விருந்து படைக்கும் பிரம்மாண்ட பட உருவாக்கத்தை கையில் எடுத்துள்ளனர்.

நடிகர் ப்ருதிவிராஜ் நடிப்பில் ஆர்.எஸ். விமல் இயக்கத்தில் உருவாகிறது "கர்ணன்" மலையாள திரையுலகின் முதல் பிரம்மாண்ட படம். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் துபாயில் வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட்லுக் அனைவரையும் வெகுவாக கவர, பாகுபலிக்கு இணையாக பேசப்பட்டு வருகிறது. மோஷன் போஸ்டரின் பின்னணி இசையும், ப்ருத்வியின் குதிரை காட்சியும் கண்களை ஈர்க்கின்றன.

 மலையாளம் மற்றும் தமிழில் முறையே உருவாகும் இப்படத்திற்கு பாகுபலி புகழ் செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 45 கோடி செலவில் எடுக்கப்படவுள்ள இப்படம் குறித்து இயக்குநர் விமல் கூறுகையில், இப்படம் மகாபாரதத்தில் வரும் கர்ணன் பற்றியக் கதை எனவும், பாகுபலியும், இப்படமும் வேறு வேறு கதாம்சங்களை கொண்டது, இருப்பினும் பாகுபலிக்கு எந்த விதத்திலும் குறைந்ததாக இருக்காது எனவும் இயக்குநர் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.விமல், ப்ருதிவிராஜ் கூட்டணியில் சென்ற வருடம் வெளியான "என்னு நின்டே மொய்தீன்" படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.எனினும் தமிழில் செவாலே சிவாஜி நடிப்பில் ஏற்கனவே ஒரு கர்ணன் படம் மெகா ஹிட் லிஸ்டில் உள்ளது. சமீபத்தில் டிஜிட்டலிலும் வெளியாகி 100 நாட்களைத் தொட்ட தமிழ் கர்ணனின் சாதனைகளை முறியடிக்குமா, முதலில் மக்கள் ஏற்றுகொள்வார்களா? இந்தப் புது கர்ணனை. பார்க்கலாம்! 

சாப்பிடும்போதே தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கைத் தகவல்!

உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும்போ து ஏன் தண்ணீர் குடிக்கக்

கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள் ளது. அதைப்படித்துபார்த்துஇனி மேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள். இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும். வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமான த்திற்கும் உணவை உடைக்கவு ம் இதுபயன்படுகிறது. இதுபோக, உணவோடு சேர்ந்து செரிமானமானதொற்று இயற்றிகளை அழிக்கவும் இ ந்தசாறுகள் உதவுகிறது. ‘செரிமான தீ‘ என அழைக்கப் படும் செரிமான என்சைம்கள், உண்ணும் உணவை அரைக்க உதவும்.

அதனால் இது உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற் கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன்சேர்ந்து நீர்த் து போகும்போது, இது ஒட்டு மொத்த அமைப்பை மந்தமா க்குவதோடு, குடல்சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த செரிமான அமைப்பு ம் தேங்கிபோவதால், உட்கொண் ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, ஊட்டச் சத்தை உறிஞ்ச சிறுகுடலுக்கு உணவு செ ல்லும் செயல்முறை தாமதமாகும்.

எச்சில் அளவை குறைக்கும்

செரிமானத்திற்கு முதல்படியே எச்சில்தான். உணவை உடைப்பதற்கான என்சைம் கள் மட்டுமல்லாமல் செரி மான என்சைம்கள் சுரக்க ஊக்குவிக்கவும் உதவும். உணவருந்தும் போது தண் ணீர் குடித்தால், எச்சில் நீர் த்து போகும். இது வயிற்றுக் கு பலவீனமான சிக்னல்களை அளிப்பதோடு மட்டுமல் லாமல், உடைபடும் உணவை வாயிலேயே நிறுத்தி வி டும். இதனால் செரிமானம் இன்னும் சிரமமாகி விடும்.

அசிடிட்டியை உண்டாக்கு ம்

அசிடிட்டியால் அடிக்கடி ஏற்பட்டு அவதிப்படுகிறீர்க ளா? அப்படியானால் சாப் பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தின்மீது பழி யை போடலாம். தண்ணீர் குடி ப்பதால் உங்கள் செரிமான அமைப்பு நீர்த்து போவதால், தொடர்ச்சியான உடல் சுகவீன த்தை அது ஏற்படுத்தும். சேச்சு ரேட் ஆகும் வரை தண்ணீரை உறிஞ்சுவதை வயிறு நிறுத்தா து. அதன்பிறகு இரைப்பை சா றுகளை தண்ணீர் நீர்க்க செய்யும். இதனால் இயல்பை விட அந்த கலவை அடர்த்தியாகும். இதனால் சுரக்க வேண்டிய செரிமான என்சைம்க ளின் அளவு குறைந்துவிடும். இ தன் மூலம் செரிமானமாகாத உ ணவுகள் உங்கள் அமைப்பில் இறங்கி, அமில எதிர் பாயல் மற் றும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத் தும்.

உணவை நன்கு மென்று விழுங் கவும்

உணவை அப்படியே விழுங்காதீ ர்கள்; நன்றாக மென் று உண்ணுங்கள். உணவை மென் று உட்கொண்டால் அது நமக்கு பல பயன்களை அளி க்கும். மேலும் செரிமான செயல்முறையை வேகமாக் க எச்சிலும் உதவும். இது போக மெ ன்று உட்கொண்ட உணவு உடைபடு வதற்கும் உட்கிரகித்துத் கொள்வத ற்கும் சுலபமாக இருக்கும். இதனால் செரிமான அமைப்பு அதன் பணியை சிறப்பாக செய்யும். இது போக, மெ ன்று உண்ணுவதால் உள்ள மற்றொ ரு பயன் எச்சில் உற்பத்தி அதிகரிக் கும். இதனால் தண்ணீர் குடிக்கும் எண்ணம் ஏற்படாது.

30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடிக்கவும்

உணவருந்துவதற்கு 30 நிமிடத்திற் குமுன்பே தண்ணீர் குடியுங்கள். உ டல் எடையை குறைத்து ஆரோக்கி யமான மெட்டபாலிசத்தை உண்டா க்க வேண்டுமானால், உணவருந் தும்முன், அறை வெப்பநிலையை கொண்ட நீரை ஒருவர் குடிக்க வே ண்டும். இதனால் உணவருந்தும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆவலையும் இது குறைக்குமாம்….!

கதை சொல்லும் ஜெயலலிதாவின் கார்

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னாள் சென்னை வீதிகளில் ஒரேயொரு ஃபோர்ட் கார் மட்டுமே ஓடியது. அந்தக் காருக்கு சொந்தக்காரர் அன்று முன்னணி திரைநட்சத்திரமாக இருந்த இன்றைய முதல்வர் ஜெயலலிதா. அந்தக் கார் அன்றைய ஜெயலலிதாவை - காரின் பாஷையில் பேபி - குறித்து பேசினால் எப்படியிருக்கும்? இப்படியொரு ஐடியா அந்தக் காலத்திலேயே எழுந்து தனி கட்டுரையே எழுதியிருக்கிறார்கள். மினுக்கி எழுதப்பட்ட ஜிகினா கட்டுரைதான் என்றாலும் படிப்பதற்கு தமாஷாகவே இருக்கும். இனி ஓவர் டு ஃபோர்ட் கார்.

முதன் முறையாக சென்னைக்கு வந்தபோது எனக்கு ஒரே பெருமை. நான் சுமந்து செல்ல வேண்டியது ஒரு பிரபல நடிகை. நடிகையின் கார் என்ற முறையில் எவ்வளவு பெரிய விழாக்களிலும் ஆடம்பர விருந்திலும் இந்த ஃபோர்ட் டுகூனு எம்.எஸ்.எம். 9379 க்கு தனி வரவேற்புண்டு. எந்த இடத்திலும் ஒயிலாக ஓசையெழுப்பாமல் நான் போனாலும் எல்லோரும் என்னையே கவனிப்பார்கள். ஆரம்பத்தில் எனக்கு தலைக்கனமாகவே இருந்தது. என் அழகையும் அலங்காரத்தையும் கண்டுதான் அத்தனை பேரும் இப்படி விழுந்தடித்துக் கொண்டு பார்க்கிறார்கள் என்று நினைக்க நினைக்க, எனக்கு தற்பெருமை பெருகியதிலும் வியப்பில்லைதான். போதாததற்கு என் குலத்தைச் சேர்ந்த பல கார்கள் இந்த அகன்ற நகரத்தில் இருந்தாலும் என் குடும்பத்தைச் சேர்ந்த கார் நான் ஒன்றுதான் என்றும் தெரிந்து கொண்டேன். எனக்கு ஒரு டூப் இல்லை. பின்னர்தான் நான் சுமந்து செல்லும் நடிகைக்காகதான் அப்படி ஒரு பரபரப்பு என்பதையும் புரிந்து கொண்டேன்.

என்னால் அவருக்கு பெருமை என்பதைவிட அவரால் எனக்குப் பெருமை என்றுதான் சொல்ல வேண்டும். மாம்பலம் சிவஞானம் தெருவிலிருந்து கிளம்பி, உஸ்மான் ரோடு வழியாக, ஆற்காட் ரோட்டில் ஒரு நாளைக்கு நான்கு முறையாவது நான் செல்லும் போது, ஒவ்வொரு முறையும் அனைவரின் பார்வையும் என் மீது திரும்பும் பெருமையை நீங்கள் எனக்கு தந்தாலும் சாp, நான் சுமக்கும் நடிகைக்குத் தந்தாலும் சாp... எனக்குத் திருப்திதான்.





சென்னைக்கு வந்ததும் அழகு நகரத்தின் அத்தனை மூலை முடுக்குகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் எனக்கு. ஆனால் முடியவில்லை. இருப்பினும் பிரபலமான பல இடங்களை நான் சுற்றிப் பார்த்துவிட்டேன். என் வேகத்திற்கேற்ற அகன்ற சாலைகள், என் ஊரைப்போல் (நான் பிறந்தது அமெரிக்கா தெரியுமில்லே) இங்கு இல்லாதது எனக்கு ஒரு வருத்தம்.

நான் சுமக்கும் பிரபல நடிகை ஜெயலலிதாவை நான் பேபி என்று அழைக்கிறேன். எனக்கு அவர் பேபிதான். குழந்தை மனம் கொண்டவரானதால் மட்டும் அப்படி கூப்பிடவில்லை. ஒரு குழந்தையை தாய் சுமப்பது போல் நான் என் பேபியை சுமக்கிறேன். ஆடாமல் அசையாமல் கண்ணிமைப்போல் காக்கிறேன். அந்தக் கலைச்செல்வியை லட்சக்கணக்கானவர்களின் கனவுக் கன்னிகையை காக்கும் பொறுப்பையல்லவா நீங்கள் எனக்கு தந்திருக்கிறீர்கள். அப்பாடி.. எவ்வளவு பெரிய பொறுப்பு.

என் பேபிக்கு இசையென்றால் உயிர். அதற்காக ரேடியோ ஒன்று என்னிடத்தில் உண்டு. வெயில் காலங்களில் கண்ணாடியைத் திறந்து போட்டுச் செல்ல முடிவதில்லை. தூசி படியும் என்பது மட்டுமல்ல, என் பேபியின் மேக்கப்பும் கலையும். ஆனால் குளிர் காலங்களில் வெதுவெதுப்பாகவும் வெயில் காலங்களில் குளுகுளுப்பாகவும் இருக்க தனித்தனி வசதிகள் செய்து கொண்டிருக்கிறேன். நான் பகல் வேளைகளில் கண்ணை மூடிக் கொண்டேதான் செல்வேன். இரவு தேவைப்படும்போது மட்டும் கண் திறந்து கொள்வேன். என் கண்ணிலிருந்து வரும் ஒளி எவ்வளவு பிரகாசமாக இருக்கும் தெரியுமா?

 பேபியை மந்து கொண்டு நான் முதன்முறையாக மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றேன். காசிதான் என்னை ஓட்டிச் சென்றார். கண்போல் என்னை காத்து வரும் அவர் மீது கோபம் கோபமாக வந்தது. பேபி விமானத்தில் ஏறி ஜப்பான் சென்றுவிட்டார். நான் தனியாக திரும்பி வரும்போது காசிக்கு மட்டும்தான் தெரியும் என் மனக்கஷ்டம். என்னிடம் ஒரு வார்த்தைகூடச் செல்லாமல் பேபி போய்விட்டாரே... இந்தக் காசியாவது ஏன் முன்னாலேயே சொல்லவில்லை? சொல்லியிருந்தால்...?
FILE

அந்த வருத்தத்தில் நான் பேபி போய் திரும்பி வரும்வரை ஷெட்டிலேயே கிடந்தேன். நான் பேபியைத் தவிர யாரையும் சுமக்கத் தயாராக இல்லையே. கொஞ்ச நாளிலேயே என் வருத்தம் குறைந்தது. ஆனால் அந்த விமானத்தின் மீதிருந்த கோபம் மட்டும் தணியவே இல்லை. அதற்கொரு சந்தர்ப்பமும் கிடைத்தது - பழி தீர்த்துக் கொள்ள.

சுமதி என் சுந்தரி படப்பிடிப்பில் கலந்து கொள்ள பேபி தேக்கடிக்குப் போகும் போது என்னையும் அழைத்துச் சென்றார். அதுதான் என் லாங்கஸ்ட் ட்ரிப். இங்கே சென்னையில் ஜனாதிபதியின் பரிசளிப்பு விழா மறுநாள் நடக்க இருந்தது. எனக்கு அந்த விழாவில் அப்படி ஜிம் என்று போய் நிற்க வேண்டுமென்று ஆசை. பேபிக்கும் பரிசு வாங்க துடிப்பு.

மாலையில் அங்கிருந்து கிளம்பி காலையில் சென்னைக்கு வந்துவிட்டேன். ஜனாதிபதி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு இரவு கிளம்பி, தேக்கடிக்கு மறுநாள் காலையில் போய்ச் சேர்ந்தேன். விழாவில் கலந்து கொண்ட திருப்தி மட்டுமல்ல எனக்கு. அந்த விமானத்தின் மீதிருந்த கோபத்தையும் தீர்த்துவிட்ட திருப்தி. மணிக்கு நூறு மைல்களுக்கு மேலேயே போய் பேபியின் சபாஷ் பெற்றதோடு விமானத்தை நம்பியிருந்தால் நான் போய் இதற்குள் வந்திருக்க முடியாது என்ற பாராட்டும் வேறு கிடைத்தது. போதாதா எனக்கு, தலைகால் புரியவில்லை.

பெரிய ஸ்டாரின் கார் ஆயிற்றே நீ... ஒரு படத்திலேயாவது நடிச்சிருக்கியா, அட்லீஸ்ட் இன் ஏ பிளாக் அண்ட் ஒயிட் பிக்சர்? என்று என் பிரண்ட் பிளிமத் எப்போதும் கேட்பான். உங்களுக்குதான் பேபியிடம் ரொம்ப இது இருக்கே... நீங்களாவது எனக்கு சிபாரிசு செய்யக் கூடாதா? ப்ளீஸ்.

1972 ல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையிலிருந்து அன்று வெளிநாட்டு கார்களின் மீதிருந்த பிரேமையையும், ஜெயலலிதா மீதிருந்த ரசிக பற்றையும் புரிந்து கொள்ளலாம். நமது பாலாபிஷேக ரசிகர்களுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாதவர்கள்தான் அப்போதும் இருந்திருக்கிறார்கள் என்ற திருப்தியை இந்த கட்டுரை தருகிறது. 

தாரை தப்பட்டையும் தமிழ் ரசிகனும்! மீண்டும் வாருங்கள். ஆனால் எங்களோடு வாருங்கள்!

சில நடிகர்களின் படங்களுக்காக அவர்களது ரசிகர்கள் காத்துக்கிடப்பது போல சில இயக்குநர்களின் படங்களுக்காகவும் அவர்களின் ரசிகர்கள் காத்துக் கிடப்பதுண்டு. இந்த ரசிக எண்ணிக்கையில் அவ்வப்போது பொது ரசிகர்கள் இணைந்து கொள்வதும் நடக்கும். அப்படிப்பட்ட இயக்குநர்களின் ஒருவராக இருப்பவர் தான் பாலா.

தன் கதாபாத்திரங்களை, தன் கதைக் களங்களை அதுவரை எப்போதும் ரசிகன் பார்த்தறியாத, கேட்டறியாத விசயங்களாக படைப்பதில் பாலா, தன்னை மற்ற இயக்குநர்களிடம் இருந்து வேறுபடுத்திக்கொண்டார். அதனால், பாலாவின் படங்களுக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் தொற்றிக்கொண்டது.

தாரை தப்பட்டையும் இந்த எதிர்பார்ப்பில் இருந்து தப்பவில்லை. அதற்கு பாலாவைத் தாண்டியும் சில காரணங்கள் வந்து சேர்ந்து கொண்டன. குருவின் படத்தின் சிஷ்யன் சசிக்குமார் நடிப்பதில் தொடங்கி, சிறந்த நடனக்கலைஞியான வரலட்சுமி சரத்குமார் கதாநாயகி என்பதாக நீண்டது அது. ஆனாலும் அதையெல்லாம் விட பெரிய காரணங்களாக அமைந்தது, நான் கடவுளுக்குப் பின் இளையராஜாவுடன் மீண்டும் பாலா என்பதும், கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வியலை தாரை தப்பட்டையில் பதிவு செய்யப்போகிறார் என்ற ரசிகர்களின் நம்பிக்கையான யூகங்களும்.

திரைப்படங்களுக்கும் திரைப் படைப்புக்களுக்குமான வேறுபாடு என்பது நிரந்தரமானது. ஒரு திரைப்படைப்பு, திரைப்படமாக, பண்டமாக ஏற்றுக்கொள்ளப்படுதல் என்பது அரிதாகவே நிகழும். ஆனால், அதற்கு நேரெதிராக திரைப்படங்கள், நுகர் பொருளாக, பண்டமாக ஏற்றுக்கொள்ளப்படுதல் மிக இயல்பாக சுலபமாக நிகழும். எனினும், திரைப்படங்கள் எப்போதும் திரைப்படைப்புகளுக்கு சரிநிகராகானவை அல்ல. திரைப்படங்கள் இயக்குநர்களாலும் திரைப்படைப்புகள் படைப்பாளிகளாலும் உருவாக்கப்படுகிறது.

அப்படியே, தாரை தப்பட்டையும் திரைப்படைப்பாக உருவாக்க முயற்சி செய்யப்பட்டு, படைப்பாகவும் இல்லாமல் பண்டமாகவும் இல்லாமல் இடையில் எங்கோ, ஆளில்லாத காட்டில் முழங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு படைப்பாளி எப்போதும் ரசிகனை திருப்திப்படுத்துவது பற்றி யோசிப்பதே இல்லை, அவன் திருப்திப்படுவதிலும் படைப்பை திருப்திப் படுத்துவதிலுமே முனைப்பாக இருக்கிறான்.

நமக்கு பிடித்த்தை உருவாக்க சொல்லியோ, நமக்கு பிடித்த மாதிரியே உருவாக்க சொல்லியோ நாம் படைப்பாளிகளிடம் அடம் பிடிக்க முடியாது. கட்டளையிடவும் முடியாது. அதிலும் இன்றைய தமிழ் சினிமாவில் ரைட்டர்கள் எனப்படுகிற, கதாசிரியர்கள் பஞ்சம் முன்னெப்போதையும் விட மிக அதிகமாக இருக்கிறது. அதையும் தாண்டி இருக்கின்ற சிலருக்கு வாய்ப்புகள் தரவில்லை என்றோ, புதிய கதாசிரியர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றோ எடுத்துக்க்கொள்ளலாம்.

உற்பத்தி செய்பவன் இயக்குநர் என்றால், அவனிடம் கொள்முதல் செய்து விற்பனை செய்பவர் தயாரிப்பாளர். தயாரிப்பாளர், இந்தப் பொருள் சந்தையில் விலை போகும் என்று நம்பியே வாங்குகிறார். கொடுக்கிறார். உற்பத்தி செய்வதும் கொள்முதல் செய்வதும் விற்பதும் அவர்கள் பாடு. அதைப்பற்றி ரசிகன் பெரிதாக யோசித்துக்கொண்டிருக்க முடியாது. சராசரி வணிகத்தின் எந்த இலக்கணங்களும் சினிமாவுக்கு செல்லுபடி ஆகவே ஆகாது, என்பதையே “சூது கவ்வும்”களும், “கும்கி”களும் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”களும், “குசேலர்”களும் “லிங்கா”க்களும் நமக்கு மீண்டும் மீண்டும் சொல்கின்றன.

சரி, தாரை தப்பட்டைக்கு வருவோம்.

பாலாவின் மாயாஜாலங்களும் நகைச்சுவைத் தோரணங்களும் தாரை தப்பட்டையில் இல்லாமல் போனதே,அதன் ஆகப் பெரிய பலவீனம். பிதாமகன் போலவோ, நான் கடவுள் போலவே முன்பாதி நகைச்சுவையால் ரசிகர்களை கட்டிப்போட தாரை தப்பட்டையால் முடியவில்லை. இதில் நகைச்சுவை என்ற பெயரில் பாலா செய்திருப்பதெல்லாம் இரட்டை அர்த்த விசயங்களாகிப் போனதால், அதை நகைச்சுவையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது.

தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் போல மேளமும் நாதஸ்வரமும் கரகாட்டமும் திரையில் தாறுமாறாக எகிறப்போகிறது என்கிற கற்பனைக்குள் தமிழ் ரசிகனை தனக்குத் தெரியாமலே தள்ளி விட்டது தாரை தப்பட்டை.

கூடவே இளையராஜா என்பதும், இளையராஜாவின் 1000வது படம் என்பதும் ரசிகர்களை இன்னும் உசுப்பேத்தி உற்சாக துள்ளாட்டம் போட வைத்த்து. இது தான் கதை என்று நான் எதையும் சொல்லவில்லையே என்று பாலா தப்பித்துக் கொள்ள நினைத்தாலும் ரசிகர்கள் நினைத்தும் எதிர்பார்த்தும் முழுக்க முழுக்க ஒரு பாலா ஸ்டைல் தில்லானா மோகனாம்பாள் அல்லது கரகாட்டக்காரன் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

ஆனால், மேற்குறிப்பிட்ட இரண்டு படங்களின் ஒரு சில துளி ரசனை கூட தாரை தப்பட்டையில் இல்லாமல் போனது மிகப்பெரிய துர் அதிர்ஷ்டமே ரசிகர்கள் எவ்வளவோ புத்திசாலிகள் ஆகிவிட்டார்கள். அதிலும் பாலாவின் திரைக்கதை ஸ்டைல் அவர்களுக்கு அத்துப்படி ஆகிவிட்டது.

பிதாமகன், நான் கடவுள், அவன் இவன்… ஸ்டைல் தான் இந்தப்படமும் என்பதை இடைவேளை வரும்போதே முடிவு செய்து விடுகிறான் ரசிகன். பிதாமகனில் விக்ரம் மகாதேவனைக் கொல்வது போல, நான் கடவுளில் ஆர்யா ராஜேந்திரனைக் கொல்வது போல, அவன் இவனில் விஷால் ஆர்.கே.யைக் கொல்வது போல, தாரை தப்பட்டையில் சசிக்குமார் ஆர்.கே.சுரேஷைக் கொல்லப்போகிறார் என்பதை அவன் முன்பே கண்டுபிடித்து விடுவதால்… எதுவும் புதிது இல்லை என்ற நிலைக்கு அவன் தள்ளப்படுகிறான். அதாவது AS USUAL BALA FILM என்கிற நிலைக்கு.

ஆனால், பாலா தான் சொல்ல நினைத்த விசயத்தை சொல்லிவிட்டு வேறு வேலை பார்க்க போய்விட்டார். கரகாட்டக்கார்ர்களின் வாழ்க்கை இன்றைய நிலையில் அத்தனை சுகமாக இல்லை என்பதை சொல்லி விட்டு, அப்படியே வழக்கம்போல இன்னொரு இருட்டு உலகத்துக்குள் தாவுகிறார். அந்த இருட்டு உலக நிகழ்வுகளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அப்படி நடக்கவில்லை என்றெல்லாம் நம்மால் சத்தியம் செய்ய முடியாது.

ஜி.எம்.குமார் நல்ல நடிகராகவே இருக்கலாம், ஆனால் அவரின் கதாபாத்திரம் மகா குழப்பக் குளறுபடியாக இருக்கிறது. சகலகலா வல்லவராக நாதஸ்வரத்தை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு சங்கீதக் கச்சேரி நிகழ்த்துகிற குடிகார கோமாளிக்கும் தாரை தப்பட்டைக்கும் என்ன சம்பந்தம் என்று ஒண்ணும் புரியவில்லை.

அது போலவே, சசிகுமாரும்… எதனால் அவ்வளவு தாடியோடும் தலைமுடியோடும் திரிகிறார் என்று கடைசி வரை விளங்கவே இல்லை. எம்.ஜி.ஆர், ராமராஜன், சரத்குமார் போட்ட மஞ்சள், சிவப்பு, பச்சை, ரோஸ் சட்டையெல்லாம் நேரில் பார்க்காத எங்க ஊர் சனமெல்லாம், அவங்கவங்க ஊர்த்திருவிழாவுக்கு வருகிற நாதஸ்வர வித்வான்களிடம் பார்த்திருப்பார்கள்.

பளீர் வெள்ளை வேட்டியும் பளபளா சட்டையுமாக கழுத்தில் நீளமான செயின், க்ளீன் ஷேவ், உதடுகளில் வெத்தலைச் சிவப்பு, தேவைப்பட்டால் லிப்ஸ்டிக் என நாங்கள் பார்த்த நாதஸ்வர வித்வான்கள் எல்லாம் வேற வேற மாதிரி. ஆனா, சசிகுமார் இழவு வீட்டுல ஆடுற மாதிரியான ஒரு தோற்றத்திலேயே தான் எப்போதும் இருக்கிறார்.அவரை நாதஸ்வர வித்வானாக ஏற்றுக்கொள்வதெல்லாம் எந்த்த் தலைமுறையாலும் முடியாது பாலாண்ணே.

படத்தின் இரண்டே இரண்டு நல்ல விசயங்கள்… ஒண்ணு வரலட்சுமி. இன்னொண்ணு இளையராசா.

“அக்காங் மாமா, அக்காங் மாமா… ம்க்கும் மாமா… ” என வரலட்சுமி வம்பளக்கும்போதும் “என் மாமனுக்காக அம்மணமாகக் கூட ஆடுவேன்” என காதலும் பாசமும் கலந்து திமிரும் போதும் சசிகுமாருக்கு பதிலாக அந்த இடத்தில் மாமனாக நம்மை உட்கார வைக்க ஆசைப்பப்டுகிறது மனசு. அச்சு அசலாக அட்ரா சக்கையாக, கரக்காட்டக் கட்டழகியாக, வரலட்சுமி… சிரம் தாழ்ந்த வணக்கம் லட்சுமி. அலப்பரையிலும் ஆட்டத்திலும் அதிரடியிலும் வரிந்து கட்டுகிறார் வரலட்சுமி.

ஆனால் அந்த வரலட்சுமிக்கு கூட அதிகம் இடம் தராமல் மோசடி செய்கிறார் பாலா…

படத்தில் கரகாட்டக்கார்ர்களின் ஒரிஜினல் ஆட்டம் மற்றும் ஸ்டெப்ஸ் எல்லாம் எங்காவது தான் தட்டுப்படுகிறது.எல்லா நடன அசைவுகளும் சினிமாத்தனமாக பார்த்துப் பழகியதாகவே இருக்கிறது. நிஜமான கரகாட்டக்கார்ர்களின் ஆட்டத்தை இளையராசா இசையோடு நாள் முழுக்க பார்ப்பதென்றாலும் ரசிகன் சளைக்க மாட்டான். ஆனால், கரகாட்ட உடையில் சினிமா ஆட்டங்கள் சலிப்போ சலிப்பு.

போதாக்குறைக்கு இதில் இளையராசாவையும் இழுத்து விட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார் பாலா. இளையராஜா எழுதி ஷரத் பாடி இருக்கும் “என் உள்ளம் கோவில்… “ பாடல் கேட்ட நிமிடத்தில் இருந்து இதயத்தில் ஒட்டிக்கொண்டு இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், படத்திலும் கதையிலும் அது ஒட்டவே இல்லையே என் ஆச ராசா. அதைப்போல்வே, “பாருருவாய பிறப்பற வேண்டும்” பாடலும்.

“மாங்குயிலே பூங்குயிலே”வையும் எதிர்பார்த்து வாருங்கள் என்பது போல உசுப்பேத்திவிட்டு, அதில் குயிலை அல்ல, காக்காவைக் கூட பார்க்க முடியாத ரசிகன், பாவம் என்ன செய்வான்? மாங்குயிலே பூங்குயிலே போல ஒரு பாடல் கூட வரலட்சுமிக்கு இல்லாமல் போனதில்… பாலா மீது நிறைய கோபமும்…. ராசா மீது நிறைய வருத்தமும் இருக்கவே செய்கிறது.

தமிழர் திருநாளின் மெலிதான துக்கமாக, தாரை தப்பட்டையை நினைத்துக்கொண்டு அடுத்த வேலைக்கு தயாராகிறார்கள்… தீவிர ராசா ரசிகர்களும்… தீவிர பாலா ரசிகர்களும்… வேறென்ன செய்ய?

ரெண்டு ரெண்டே கால் மணி நேரத்திற்குள் படம் முடிந்தே ஆகவேண்டும் என்று எதுவும் இல்லையே அய்யா. 3மணி நேரம் ஓடக்கூடிய “பாகுபலி” எந்த மொழியில ஓடினாலும் எத்தனையாவது தடவை ஓடினாலும் இன்னும் பாக்கிறானே ரசிகன்?

இன்னும் கூடுதலாக அரை மணி நேரத்திற்கு கரகாட்டத்தையும் திருவிழாக்களையும் அங்கே நடக்கிற அழகான கூத்துகளையும் கோமாளித்தனங்களையும் காட்சிப்படுத்தி இருக்கலாமே…? திருவிழாக்கள் இன்னும் கூட இளமையாகவே இருக்கிறது நிறைய ஊர்களில்.

உங்கள் திரைக்கதையின் தேவையும் ஆசையும் திருவிழாக்கள் அல்ல என்பது புரிகிறது… ஆனால் எங்களின் தேவை ரசிகனின் தேவை அதுவாகத்தானே இருக்கிறது.

ஆகவே, எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் வாருங்கள். ஆனால் எங்களோடு வாருங்கள். எங்களுக்காக வாருங்கள். எதையும் எங்களில் ஒருவராக பாருங்கள்.