Sunday 24 January 2016

மரபணுத் தொழில்நுட்பமும் தாரை தப்பட்டையும்!

பெரிய தொழிலதிபர் – பூடகமாக செட்டியார்! அவருக்கு வாரிசு கிடையாது. காலம் போன காலத்தில் தன் மரபணுக்களைத்தாங்கிய குழந்தை வேண்டுமென்று ரகசியம் காக்க எண்ணி வில்லனை நாடுகிறார். அவர் தன்னிடம் இருக்கும், பாலியல் தொழிலாளர்களை காண்பிக்கிறார். வில்லனின் மனைவியும், கதைநாகியுமான சூறாவளியையும் சோகமே உருவாய் முன்னிறுத்தப்படுகிறார். உடனே அந்தப்பணக்காரர், சூறாவளியை தேர்வு செய்கிறார். மிகவும் அபத்தமான அறிவியலுக்குப்புறம்பான காட்சியமைப்பு. பாலா நல்ல இயக்குனராயிருக்கலாம். அவர் அறிவியல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்ன?

இப்போதைய தொழில்நுட்பத்தில் இதெல்லாம் ஒரு மேட்டரேயில்லை! ஆச்சிக்கு முட்டை உற்பத்தி இருக்காது. சரி! ஒரு பெண் தன் வாழ்நாளில் 450 சினை முட்டைகளை உருவாக்க முடியுமென்றாலும், எந்த முட்டை விந்துடன் இணைகிறதோ அது மட்டுமே குழந்தையாக உருவாக இயலும். பெண்களுக்கு இரண்டு அண்டகங்கள் உண்டு. ஒரு மாதம் ஒரு முட்டை உருவாகிறதென்றால் மறு அண்டகத்திலிருந்து அடுத்த முட்டை உற்பத்தியாகி வரும். அப்படி உருவாகும் முட்டை ஒரு 15 நாட்கள் விந்திற்காக காத்திருக்கும். விந்துடன் இணையாத பட்சத்தில் முட்டை லூட்டினைசிங் ஹார்மோன்களின் உதவியுடன் சிதைக்கப்பட்டு மாதவிடாயாக வெளியேற்றப்படும்.

ஆண்களால் தன் வாழ்நாள் முழுவதிலும் விந்தணுக்களை உற்பத்தி செய்ய இயலும். ஆகையால் அந்தப்பெரியவரிடம் இருந்து விந்துக்களைப்பெறுவது சாத்தியமே. இன்று அனைத்து நாடுகளிலும் மனித விந்துகளுக்கென்றும், முட்டைகளுக்கென்றும் ஏராளமாய் வங்கிகள் உண்டு. காதும் காதும் வைத்தாற்போல அதற்கென உள்ள மருத்துவ விற்பன்னர்களை எளிதாகவும் அணுகவும் முடியும். கருமுட்டையை அதற்கென உள்ள வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் முடியும். IVF அதாவது In-vitro fertilization தொழில்நுட்பத்தின் மூலம் கண்ணாடித்தட்டில் கருவூட்டல் சாத்தியமே!

இயல்பாக கருவுறுதல் பெலோப்பியன் குழாயில் நடைபெறும். சினையூட்டப்பெற்ற கருமுட்டை சில நாட்களில் நகர்ந்து கருப்பையில் நிலைபெறும். இது இளம் வயதில் அந்த ஹார்மோன்களின் துணையோடு இயல்பாக நடக்கும். பத்து மாதங்களில் குழந்தையைப்பெற்றெடுப்பர். ஒரு வேளை கருப்பை கருவைச்சுமக்கும் தகுதியில்லையெனில் வாடகைத்தாய் மூலம் குழந்தையைப்பெற்றுக்கொள்வர். இதெல்லாம் சிவகுமார் காலத்துத்தொழில்நுட்பம் (அவன்,அவள்,அது! படம் பார்த்திருப்பீர்கள் தானே?)

சில வருடங்களுக்கு முன்னர் தன் மகளுக்காக மருமகனின் விந்தினாலும் மகளின் கருமுட்டையாலாம் கருவூட்டப்பட்ட கருவை தன் கருப்பையில் சுமந்து பெற்றெடுத்த பெண்மணியைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். Post menopausal baby தொழில்நுட்பம் மூலம் சாத்தியமே! இயற்கையாக மாதவிடாய் முற்றுப்பெற்ற பெண்களுக்கு செயற்கையாக இந்த ஹார்மோன்களை செலுத்தி அவர்களையும் குழந்தை பெறச்செய்துவிடமுடியும். ஆண் குழந்தையும் PCR தொழில்நுட்பம் கொண்டு சாத்தியமே! இவ்வளவு தொழில்நுட்பம் இருந்தும் ஒரு ரௌடியை நாடுவானேன்?

அது தான் கோடி கொட்டிக்கொடுக்கவும் அவர் தயார் தானே? இது சில லட்சங்களில் சாத்தியமான ஒன்று. வழக்கம் போல அறிவியல் இன்னும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது! என்ன செய்ய?

விஷாலை நல்லபடியாக புகழ்ந்து பேசும் ராதாரவி - காரணம் இதுதான்..?

 முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் 'மருது' படத்தில் விஷாலை புகழ்ந்து பேசுவது போல காட்சியில் நடிக்கவிருக்கிறார் ராதாரவி.

முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மருது'. இமான் இசையமைத்து வரும் இப்படத்தை அன்புசெழியன் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் கதைக்களம் ராஜபாளையம் என்பதால், அங்கே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து ராதாரவியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவிக்கு போட்டியாக செயலாளர் பதவியில் நின்று ஜெயித்தவர் விஷால். தேர்தலுக்கு முன்பு விஷாலை பயங்கரமாக திட்டியவர் ராதாரவி. 'மருது' படத்தில் ராதாரவி நடித்து வந்தாலும், இதுவரை விஷாலுடன் இணைந்து அவர் நடிக்கவிருக்கும் காட்சிகள் படமாக்கப்படவில்லை.

இப்படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் அல்லாமல் விஷாலை நல்லபடியாக புகழ்ந்து பேசும் வேடத்தில் நடித்திருக்கிறார் ராதாரவி. மேலும், விஷால் மற்றும் ராதாரவி இருவரும் வரும் ஒரு முக்கியமான காட்சி படத்தில் இருக்கிறதாம். அக்காட்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்கிறது படக்குழு.

விஷாலிடம் ராதாரவி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பது குறித்து இயக்குநர் கேட்ட போது, "ஏன் தயங்குகிறீர்கள் தாராளமாக பண்ணிக் கொள்ளுங்கள். நடிகர் சங்கம் வேறு, நடிப்பு வேறு என்பதில் தெளிவாக இருக்கிறேன். என்னை எப்படி நாயகனாக நீங்கள் தேர்வு செய்தீர்களோ, அதே போல் தான் மற்ற கதாபாத்திரத்தையும் தேர்வு செய்ய உங்களுக்கு உரிமை இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார். 

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்!

இன்று தொடங்கும் நாள் சிறந்ததாக இருக்க வேண்டு மெனில், அதற்கு காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் காலையில் நல்ல ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகம் நிறைந்த உண வுகளை சாப்பிட்டால், உடலின் சக்தி சீராக இருந்து, உடல் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.

அதிலும் காலையில் உண்ணும் உணவுகளில் கலோரி குறைவாகவும், எனர்ஜி அதிகமாகவும் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் இதனால், உணவுகள் சீக்கிரம் செரிமானமடையாமல், பொறுமையாகவும் ஆரோக்கியத்தை தரும் வகையிலும் செரிமானமாகும்.

குறிப்பாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

முக்கியமாக காலையில் எழுந்ததும் உடலானது ஊட்டச்சத்துக்களை நாடும் ஆகவே புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் சிறந்ததாக இருக்கும் ஏனெனில் இத்தகைய உணவுகளை காலையில் சாப்பிட்டால், நாள் முழுவதும் சக்தியானது நிறைந்திருப்பதோடு, உடல் சோர்வடையாமலும் இருக்கும்.

மேலும் இத்தகைய உணவுகளை காலையில் செய்வது சாப்பிடுவது மிகவும் எளிது. இப்போது நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், சோர்வில்லாமலும் செயல்பட எந்த உணவுகளை காலையில் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.

உடல் ஆரோக்கியத்திற்கு காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

காலையில் எழுந்ததும் தேன்- வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், குடலியக்கம் சீராக இயங்குவதோடு, உடலும் ஒல்லியாகும் செரில் காலையில் சாப்பிட செரில் ஒரு சிறந்த உணவுப் பொருள் இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து, வயிற்றை நிறைப்பதோடு அத்துடன் சேர்த்து சாப்பிடும் பொருட்களில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து மற்றும் கால்சியம், நாள் முழுவதும் உடலில் ஊட்டச்சத்துக்களை நிறைத்திருக்கும்.

மூலிகை டீ- டீயில் காபியை விட, குறைவான அளவில் காப்ஃபைன் இருப்பதோடு, அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது எனவே இது உடலை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

முட்டை- தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் ஒமேகா ஃபேட்டி ஆசிட், நாள் முழுவதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளும்.

பால்- பாலில் நிறைய புரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால், காலையில் ஒரு டம்ளர் பால் அல்லது செரிலுடன் பால் சேர்த்து சாப்பிடுவது நல்லது

தர்பூசணி- காலையில் எழுந்ததும் தாகமாக இருக்கும் எனவே அப்போது நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணியை ஜுஸ் போட்டு சாப்பிட்டல், உடல் வறட்சி நீங்கி புத்துணர்வுடன் இருப்பதோடு, கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

ஓட்ஸ்- தினமும் காலை உணவாக ஓட்ஸை சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்து, இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

காபி- காப்ஃபைன் அதிகம் நிறைந்துள்ள காபி ஆரோக்கியமானது என்று சொல்ல முடியாது ஆனால், அதனைக் குடித்தால் ஒற்றைத் தலைவலியானது குணமாகும் மேலும் காபியின் மணமானது மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும்.

சிட்ரஸ் பழங்கள்- சிட்ரஸ் பழங்களை காலை உணவாக சாப்பிட்டால், அது எண்ணிலடங்கா ஆற்றலை உடலுக்கு கொடுக்கும் மேலும் இந்த பழங்கள் செரிமானத்திற்கு சிறந்ததோடு மட்டுமின்றி, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

கோதுமை பிரட் நவதானியங்களால் ஆன பிரட்டை காலை உணவாக சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் குறைவான கலோரி உள்ள கார்போஹைட்ரேட், சிறந்த காலை உணவாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்துடன் வயிறும் நிறையும்.

வாழைப்பழம்- காலை எழும் போது உடல் ஆற்றலின்றி சோர்ந்து இருக்கும் அப்போது உடலுக்கு சிறந்த ஆற்றலை வாழைப்பழங்கள் கொடுக்கும்.

ஆளி விதை- பொதுவாக காலை உணவில் ஆளி விதை சாப்பிடுவதை நினைக்கமாட்டோம் ஆனால் காலையில் ஒரு கையளவு ஆளி விதையை ஃபுரூட் சாலட் உடன் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய ஒமேகா ஃபேட்டி ஆசிட்டானது கிடைத்து, உடலானது நாள் முழுவதும் ஆரோக்கியமாக செயல்படும்.

தயிர்- நிறைய மக்கள் காலையில் எழுந்ததும் பால் குடிக்கமாட்டார்கள் அத்தகையவர்களுக்காகத் தான் தயிர் உள்ளது எனவே பாலுக்கு பதிலாக தயிரை சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் கால்சியம் கிடைப்பதோடு, உடலுக்கு வேண்டிய நல்ல பாக்டீரியாக்களும் கிடைக்கும்.

கோதுமை முளை- முளைக்கட்டிய கோதுமையில் வைட்டமின் ஈ மற்றும் ஃபோலேட் அதிக அளவில் நிறைந்துள்ளது எனவே இதனை சாப்பிட்டால், ஆரோக்கியமான முறையில் வயிறு நிறையும் பப்பாளி பப்பாளி ஒரு சிறந்த காலை உணவாகும் அதிலும் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது ஏனெனில் இதில் உள்ள லைகோபைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட், கொழுப்புக்களை கரைத்து விடும் ஆனால் இந்த பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.

பாதாம் டயட் மேற்கொள்வோர், காலையில் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், அதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட், உடலுக்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கும் மேலும் இதில் விட்டமின் ஈ நிறைந்துள்ளதால், முடியும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பெர்ரிப் பழங்கள்- பெர்ரி சூப்பர் உணவுகளில் ஒன்றாகும் மேலும் இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயை தடுப்பதோடு, உடல் முழுவதற்கும் ஆரோக்கியத்தை தருகிறது எனவே காலை உணவாக பெர்ரிப்பழங்களைக் கொண்டு மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம்.

வேர்க்கடலை வெண்ணெய்- வேர்க்கடலை வெண்ணெயானது மெதுவாக கார்போஹைட்ரேட்டை வெளிவிடுவதால், அது நீண்ட நேரம் பசிக்காமல் பார்த்துக் கொள்ளுவது மட்டுமின்றி, இது உடல் எடை குறையவும் உதவிபுரியும் எனவே வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

தண்ணீர்- காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் முக்கியமானது ஏனெனில் அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும் என்பதாலேயே ஆகும் அதிலும் வெதுவெதுப்பான நீரை காலையில் பருகினால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் எளிதில் கரையும் எனவே இவறில் ஒன்றை சாப்பிட்டால், மிகவும் நல்லது.

வங்கம் தந்த சிங்கம் சுபாஷ் சந்திர போஸ் பற்றிய 10 சுவாரஸ்யமான விஷயங்கள்

இந்திய வரலாற்றின் ஒப்பற்ற நாயகன். வரலாற்றை அலைக்கழிக்கும் ஓர் அழியா சரித்திரம் ‘நேதாஜி’ சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினம் இன்று. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரிய தலைவலியாய் விளங்கிய, இந்திய இளைஞர்களின் கனவாய் வாழ்ந்தஇந்த சிங்கம் வங்கத்தில் உதித்த தினம் இன்று. இவரது மரணம் வேண்டுமானால் சர்ச்சைக்குள்ளானதாக இருக்கலாம், ஆனால் இந்திய சுதந்திரத்திற்கான இவரது முழக்கங்களும் போராட்டங்களும் அழியாப்புகழ் பெற்றவை. நேதாஜி என்ற ஒற்றைச் சொல்லை சொன்னால் ஒவ்வொருவரின் ரத்த நானங்களும் துடிப்பது எதனால், ஆங்கிலேயர்கள் இந்த ஒற்றை மனிதனைப் பார்த்து அரண்டது எதனால்? ஏன் இவருக்கு மட்டும் அப்படியொரு தனித்துவம்?இதோ…

ஐ.சி.எஸ் பதவியை உதரினார்:

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான ஐ.சி.எஸ் தேர்வில், இந்திய அளவிலேயே நான்காம் இடம்பெற்று தேர்ச்சியடைந்தார் சுபாஷ். மிகப்பெரிய பதவி.. சர்க்கார் உத்தியோகம்… ஆனால் அவையெல்லாம் ஆங்கிலேயர் முன் அவரை மண்டியிடச் செய்யவில்லை. தேர்ச்சி பெற்ற உடனேயே தனது ராஜினாமா கடிதத்தை மான்டேகு பிரபுவிடம் அளித்தார் சுபாஷ். மதிப்புமிக்க பதவியை உதரித்தள்ளிய அவரைப் பார்த்து, “உன் பெற்றோர் வருத்தப்படமாட்டார்களா” என்று அவர் கேட்டதற்கு, “என் தாய் தந்தையருக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் என் தாய்நாட்டின் வருத்தம் அதை விடப் பெரியது” என்று சொல்லி அவருக்கே அதிர்ச்சயளித்தார்.


சிறையிலிருந்தே சீறினார்:

1924ம் ஆண்டு பர்மாவின் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நேதாஜி. அந்த மோசமான சிறையிலேயே அவரை முடக்க நிணைத்தது ஆங்கில அரசு. ஆனால் அப்போது நடந்த வங்க சட்டமன்றத் தேர்தலில் சிறையிலிருந்தவாரே வெற்றி வாகை சூடினார் போஸ். அதுதான் வங்க மக்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை. இந்த வெற்றி தான் ஆங்கில அரசின் கூரிய பார்வையை போஸின் பக்கம் திருப்பியது. தங்களது தடங்கல்கள் அத்தனையையும் மீறி ஒருவரால் சிறையிலிருந்து வெல்ல முடிகிறது என்றால், இவர் நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று பிரிட்டிஷ் அரசை உணர வைத்தது அந்த வெற்றி.

விடுதலையை நிராகரித்தார்:    

மாண்டலே சிறையில்,போஸ் அவர்கள் காச நோயால் அவதிப்பட, அனைவரும் அவரை விடுவிக்கச் சொல்லி போராட்டம் செய்தனர். அவரது உயிர் ஆபத்தான நிலையை எட்டியதால் இரண்டு நிபந்தனைகளோடு அவரை விடுதலை செய்ய நினைத்தது பிரிட்டிஷ் அரசு. ஒன்று, சுபாஷ் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 3 ஆண்டுகள் இந்தியாவில் நுழையாது இருத்தல் வேண்டும் என்பது. சுபாஷின் தாய், சகோதரர் உட்பட அனைவரும், அவர் விடுதலை ஆனால் போதும் என்று நினைத்திருக்க, “நான் ஒன்றும் கோழையல்ல மன்னிப்புக் கேட்க. என்னை என் நாட்டுக்கள் வரக்கூடாதென்று சொல்ல இவர்கள் யார்? இந்த நிபந்தனைகளை என்னால் ஏற்க முடியாது” என்று சொல்லி விடுதலையாக மறுத்துவிட்டார் சுபாஷ். மரணத்தின் பிடியிலும் மங்காமல் ஒலித்த அந்த சிங்கத்தின் கர்ஜனைக்கு அரசாங்கம் அரண்டுதான் போனது.

தி கிரேட் எஸ்கேப்:

இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இவரது பெயர் ஒலிக்கக் ஒரு நிகழ்வு தான் காரனம். வீட்டுச் சிறையில் பயங்கர கண்கானிப்பில் இருந்த நேதாஜி, ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவி தரை வழியாகவே பயனம் செய்து ஆப்கனையும், பின்னர் அங்கிருந்து பெருமுயற்சி எடுத்து ஜெர்மனியையும் அடைந்தார். சுபாஷைக் காணவில்லை என நாடே அல்லோலப்பட, ஜெர்மனியிலிருந்து சுபாஷ் அவர்கள் முழங்க, மொத்த உலகமும் இந்தப் போராளியைப் பார்த்து வியந்தது. தன் நாட்டின் சுதந்திரத்திற்காக, தனி ஒரு மனிதனால் இவ்வளவு தூரம் செல்ல முடியுமா என்று ஜப்பான்,இத்தாலி போன்ற நாடுகளே இவரை வியந்து போற்றின. உலகின் தலைசிறந்த எஸ்கேப்களில் சுபாஷின் பெயருக்கு ஸ்பெஷல் இடம் உண்டு.

ஹிட்லரிடம் முறைப்பு:

ஜெர்மனியில் ஹிட்லரை சுபாஷ் அவர்கள் சந்தித்து, இந்திய சுதந்திரத்திற்கு உதவி கேட்டார். என்னதான் உதவி கேட்கச் சென்றிருந்தாலும், சுபாஷின் தேசப்பற்று அவரை கோபமடையச் செய்தது. இந்தியர்களை காட்டுமிராண்டிகள் என்று ஹிட்லர் தனது புத்தகத்தில் குறிப்பிட, அதை எதிர்த்துப் பேசிய போஸ், அவ்வாக்கியத்தை திரும்பப் பெறச்சொன்னார். “இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம்” என்று ஹிட்லர் கூற, “எனக்கு எவனும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை என்று உங்கள் அதிபருக்குக் கூறுங்கள்” என்று மொழிப்பெயர்ப்பாளரிடம் சொல்லிவிட்டு கோபமாக வெளியேறினார் சுபாஷ். உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரி ஹிட்லர் முன் முதல்முறையாக அப்படி ஒருவர் பேச, சுபாஷின் திராணியை நினைத்து வியந்தனர் ஹிட்லரின் உதவியாளர்கள்.


தீர்க்கதரிசி:

1938 குஜராத் காகிரஸ் மாநாட்டில், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தனது முதல் உரையை வாசித்தார் சுபாஷ். “ஆங்கிலேய அரசு பிரித்தாலும் சூட்சியை இங்கு அமுல்படுத்தும். நம் தேசத்தை சுக்குநூறாக உடைக்கும். நாம் ஒற்றுமையோடு அதை எதிர்த்து வெல்ல வேண்டும்” என்று கூறினார். எது நடக்கக்கூடாது என்று அவர் நினைத்தாரோ, அதுவே ரத்தமும் சதையும் சிதற இந்நாட்டில் அரங்கேறியது. ஆங்கில அரசின் ஒவ்வொரு அசைவும் எப்படி இருக்கும் என்று நன்கு அறிந்தவர் போஸ் அவர்கள்.

ஜெய் ஹிந்த்:

இன்று பள்ளிகள் முதல் போர் முனைகள் வரை ஒவ்வொருவரும் சொல்லிவரும் ‘ஜெய் ஹிந்த்’ சுலோகத்தை முதல் முதல் பயன்படுத்தியவர் நேதாஜி தான். இந்த வார்த்தையைச் சொல்லும்போதெல்லாம் நமக்குள் எழும் அந்த தேசப்பற்று தான் அம்மாபெரும் மனிதனுக்கு நம் காணிக்கை.


ரத்தம் தா..சுதந்திரம் தருகிறேன்..

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து இந்திய சுதந்திரப் போருக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் சுபாஷ் சந்திர போஸ். ஒவ்வொரு இளைஞனையும் தனது சீறிய பேச்சால் சுதந்திரப் போரில் பங்குபெறச் செய்தார். “ரத்தம் கொடுங்கள். நான் சுதந்திரம் தருகிறேன்” என்ற சுபாஷின் பேச்சு ஒவ்வொரு இளைஞனையும் தட்டி எழுப்பியது. இந்திய தேசிய ராணுவத்தில் சுபாஷின் ரத்தம் பாய்ச்சப்பட, அது ஆங்கிலேயரின் இந்தியப் படையிலும் பாய்ந்தது. இனி இந்திய ராணுவத்தை நம்ப முடியாது என்பதால் தான், பிரிட்டிஷ் அரசு இந்தியாவை விட்டு வெளியேறியது என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 கடலுக்கு அடியிலும் சீற்றம்:

சுபாஷின் சீற்றம் தரையில் மட்டும் வெளிப்படவில்லை. அது கடல்,கரை,காற்று,மலை அனைத்தையும் கடந்து நின்றது. ஜப்பான் சென்று இந்திய சுதந்திரப் போருக்கு ஆயத்தமாக விரும்பிய சுபாஷ், ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல் வழியாக சுமார் மூன்று மாதம் பயணம் செய்து டோக்கியோவை அடைந்தார். எங்கும் விமானங்கள் குண்டுகள் வீசி வந்த இரண்டாம் உலகப் போர் சமயம் இப்படி மூன்று மாத காலம், உயிரைத் துட்சமாய் மதித்து அவர் செய்த இப்பயணம் உலக வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றது.


தமிழகத்துடனான தொடர்பு:

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில், லட்சுமி அம்மையார் படைத்தளபதியாக இருந்தது நாம் அறிந்ததே. அதுமட்டுமல்லாது, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவிடமும் நல்ல உறவைக் கொண்டிருந்தார் நேதாஜி. 1949ல் கமுக்கத்தில் நடந்த ஒரு மாநாட்டில், “நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் சரியான தருனத்தில் வருவார். என்னோடு நேரடியான தொடர்பில் இருக்கிறார்” என்று கூறீயிருந்தார் பசும்பொன் ஐயா. இவரே பார்வேர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.


வேண்டாம் பாரத ரத்னா:

1992ம் ஆண்டு இறந்தவர்களுக்குத் தரப்படும் ‘போஸ்துமஸ்’ முறையில் நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. “எங்கள் தலைவர் எப்போது இறந்தார்?அவர் மரணம் உண்மையில்லை” என்று கூறி பலரும் அவ்விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போஸின் குடும்பமும் அவ்விருதை ஏற்க மறுத்தது. தங்கள் தலைவனின் மரணத்தை பல ஆண்டுகள் ஆனபின்னும் கூட சிலர் ஏற்க மறுத்தனர். இதுதான் சுபாஷுக்கான மரியாதையை.

வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இந்திய சுதந்திரத்தையே நினைத்துக்கொண்டிருந்த ஒரு மாமனிதனை நாம் ஒரு நொடியும் மறக்கக் கூடாது. அதுவே அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை. அதற்கு முன்னாம் இந்த பாரத ரத்னாவெல்லாம் தூசிற்குச் சமம். அவரது சாம்பல் தைவானின் வானத்திலோ, ஜப்பானின் கோவிலிலோ இல்லை இமையமலையின் பனிகளிடையோ…எங்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அவர் பேசிச் சென்ற சொல் ஒவ்வொன்றும் சுவாசிக்கும் ஒவ்வொரு இந்தியனின் நாசியிலும் கலந்திருக்கிறது. அதை நாம் பரசாற்ற உரக்கச் சொல்வோம் ‘ஜெய் ஹிந்த்!’

சூர்யாவின் “24” – அட்டகாசமான புதிய தோற்றம்!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளிவரப் போகும் “24” என்ற புதுமையான பெயர் கொண்ட படம் தமிழக சினிமா வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று வெளியிடப்பட்ட சூர்யாவின் அட்டகாசமான வித்தியாசத் தோற்றங்களைத் தாங்கிய படங்கள் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளன.

இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் விக்ரம் குமாரின் இயக்கம் – ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு – என கவரும் மற்ற அம்சங்களும் இருப்பதால்தான் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது என்கின்றன சினிமா வட்டாரங்கள்.

அஞ்சான், மாஸ் என வரிசையாக தனது கடந்த இரண்டு படங்களும் சரியாக வசூல் ரீதியாக வெற்றியடையாத காரணத்தால், அடுத்த படமான 24 படத்தை சூர்யா மிகவும் கவனமுடன் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதாலும், படம் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும் மலேசியாவில் இதே பெயரில் இந்தப் படம் வெளியிடப்பட மலேசிய தணிக்கை வாரியம் அனுமதிக்குமா என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது. 24 என்பது மலேசியாவில் குண்டர் கும்பலுடன் தொடர்புப் படுத்தப்படும் ஓர் எண் என்பதால், அந்த எண்ணில் பகிரங்கமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு பொதுவாக மலேசியக் காவல் துறை அனுமதிப்பதில்லை.

இந்நிலையில், மலேசியத் தணிக்கை வாரியம் “24” என்ற பெயரோடு படத்தை வெளியிட அனுமதிக்குமா – அல்லது காவல் துறையும் இதற்கு அனுமதி தருமா – இல்லாவிட்டால், தமிழ்ப் படம்தானே என்ற காரணத்தால் அதே பெயரோடு படத்தை வெளியிட மலேசிய அதிகாரிகள் முடிவு செய்வார்களா – என்பது போகப் போகத்தான் தெரியும்.

 

''அம்மா உத்தரவால் மழை '' : ஆர்.டி.ஐ கேள்விக்கு பதில் அனுப்பும் அலுவலர்கள்!

இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. அப்போது ரமணனுக்கு அடுத்து நெட்டிசன்களால் டிரெண்டிங்கில் இடம் பிடித்தவர் சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத்.

மழை  சம்பந்தமாக பத்தரிக்கையாளர்களை சந்தித்து சம்பத் போட்டாறே ஒரு போடு. " மாண்புமிகு அம்மா அவர்களின் உத்தரவுப்படி சேலம் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது." என்று கூற.'தாய் பாசத்தில் தங்களையே மிஞ்சிவிட்டாரே' என்று அமைச்சர்கள் தவித்து போனார்கள். ' வாய் தவறி வந்துவிட்டது.' என்று கலெக்டர் கெஞ்சினாலும் அவரை விடுவதாய் இல்லை.

" அம்மா உத்தரவிட்டு நல்ல மழை பெய்தது" என்று கூறியிருந்தீர்கள் அந்த உத்தரவு நகலை அனுப்பவும் என்று சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆர்டிஐ விண்ணப்பங்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.தற்போது அதற்கெல்லாம் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு சீரியஸாக பதில் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

வேலூரை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் குணசேகரன் இதே போல் ஒரு விண்ணப்பத்தை போட.."இந்த கேள்விக்கு இவ் அலுவலகத்தில் ஆவணங்கள் ஏதும் இல்லை" என்று பதிலனுப்பி இருக்கிறார்கள். குணசேகரனிடம் இதுகுறித்து கேட்டோம் "நான் இதுவரை தகவல் அறியும் சட்டம் மூலம் பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளேன். ஆட்சியர் சம்பத் பேசியது குறித்து தகவல் கேட்டிருந்தேன் பதிலனுப்பியிருக்கிறார்கள்.

அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பதவிக்காக அம்மா புகழ் பாடுவதே சகித்துக்கொள்ள முடியவில்லை. அதன் உச்சகட்டமாக அடுத்தவர் கொண்டு வந்த நிவாரண பொருட்களில் அம்மா ஸ்டிக்கர் ஓட்டி அழிச்சாட்டியம் பண்ணினார்கள். இப்படி இருக்க ஒரு அரசு அதிகாரியான ஆட்சியரே 'மாண்புமிகு அம்மா அவர்கள் உத்தரவுப்படி நல்ல மழை பெய்தது' என்று கூறியிருக்கிறார். தெரியாமல் வாய் தவறி வந்துவிட்டது என்று வேறு கூறியிருக்கிறார். வாய் திறந்தாலே ஆட்டோமேடிக்காக மாண்புமிகு அம்மா என்று வருகிறது என்றால் என்ன சொல்வது இதை." என கூறினார்.

அடுத்ததாக அம்மா கால் சென்டரான 1100வை அழைத்து புகார் அளிக்க முடியவில்லை. நம்பர் பிசி, நாட் ரீச்சபள் என்றே வருகிறது. அம்மா கால் சென்டர் பற்றியே புகார் அளிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு ஏதும் தனி நம்பர் இருக்கிறதா என்று கேட்க இருக்கிறேன்."என்கிறார்.

பின்றீங்க மக்களே!

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடும் பழங்கள்

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 45 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது என்றும்,

தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும் என்றும், அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது நம் முன்னோர்கள் சொல்வது போல், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்.

எனவே நீரிழிவு நோயாளிகள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.

கிவி கிவி பழம் :
நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
செர்ரி :
செர்ரி பழங்களில் கிளை சீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
கொய்யா :
கொய்யாப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் `ஏ’ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.
நாவல் பழம் :
கிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த பழம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.
பீச் :
மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
பெர்ரிப் பழங்கள் :
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
ஆப்பிள் :
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அன்னாசி :
அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டிவைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.
பேரிக்காய் :
சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
பப்பாளி :
பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
அத்திப்பழம் :
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
ஆரஞ்சு :
சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் `சி’ இருப்பதால், இந்த பழத்தை தினந்தோறும் அளவாக சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தர்பூசணி :
தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.
கிரேப் ஃபுரூட் :
ஆரஞ்சுப் பழத்தைப் போன்றே காணப்படும் இந்த பழம் தான் கிரேப் ஃபுரூட். இது நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளும்.
மாதுளை :
அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக் கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
பலாப்பழம் :
பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தொடக்கூடாது என்று நினைக் கக்கூடாது. ஏனென்றால், இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் பழங்களுள் ஒன்றாகும்.
நெல்லிக்காய் :
கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் `சி’ மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.
முலாம்பழம் :
முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.
நட்சத்திரப் பழம் :
இந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.
வெள்ளை கொய்யா :
நாவல் பழத்தைப் போல் இது மிகவும் பிரபலமாக இல்லாவிட்டாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு பழம். இதனை நீரிழிவு நோயாளிகள், தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோய் என்பது பரம்பரை வியாதியா அல்லது பருவத்தில் வரும் வியாதியா என்ற பட்டிமன்றம் நடத்தாமல் வந்த பின்னர் என்னசெய்யவேண்டும் என்று யோசியுங்கள்.
உணவு கட்டுப்பாட்டை சரியாக கடைபிடித்து வந்தால் எல்லா நோயுமே நம்மை விட்டு அகன்றுவிடும். அதிலும் குறிப்பாக மேற்கண்ட பழ வகைகளை மட்டும் உண்டு வாழ்வை மட்டும் இனிப்பாக்குவோம்.

“நான்தான் டாப்பு ! மத்ததெல்லாம் டூப்பு!” – சட்டசபையில் ஜெயலலிதா

தமிழக சட்டசபையின், இந்த ஆண்டுக் கான முதல் கூட்டத் தொடர் கடந்த புதன்கிழமை தொடங் கியது.அன்று சபையில் கவர்னர் கே.ரோசய்யா உரை நிகழ்த்தினார்.அதன்பிறகு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது அவ்வப்போது அமைச்சர்கள் பதில் அளித்து பேசினார்கள். இறுதியாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று பதில் அளித்து பேசினார். அப்போது அ.தி.மு.க. அரசின் சாதனைகளை அவர் பட்டியலிட்டார்.

அவர் பேசுகையில்,”கடந்த 2011-ம் ஆண்டு தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என உறுதியுடன் இருந்தார்கள். சட்டம்-ஒழுங்கு சீர் செய்யப்பட வேண்டும்; இல்லாதோரின் நிலை உயர வேண்டும்; இருண்ட தமிழகம் ஒளி பெறவேண்டும்; விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், ஏழை, எளியோர் ஆகிய அனைவர் வாழ்விலும் வசந்தம் வீசிட வேண்டும் என்று, இந்த மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.அவ்வாறு மாற்றம் ஏற்படுத்திய மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். தமிழக மக்களின் வாழ்வை ஏற்றம் பெறச் செய்துள்ளோம். இதைத்தான் எனது பதிலுரையில் நான் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளேன். எனவே தான் ‘தொடரட்டும் இந்த அரசு’ என்று மக்கள் தற்போது நினைக்கிறார்கள்.

ஒவ்வொரு துறையை எடுத்துக்கொண்டாலும் 36 துறைகள் இருக்கின்றன. அரசாங்கத்தில் ஒவ்வொரு துறையை எடுத்துக்கொண்டாலும் நாங்கள் செய்திருக்கின்ற சாதனைகளைச் சொல்லவேண்டுமானால் ஒரு துறைக்கு ஒரு நாள் தேவை. ஒரு நாள் முழுவதும் தேவை. அப்படியானால், இந்த 5 ஆண்டு காலத்தில் நாங்கள் செய்துள்ள சாதனைகள் முழுவதையும் சொல்லி முடிக்கவேண்டுமென்றால் 36 நாட்கள் நான் பதிலுரை இங்கே வழங்கவேண்டும். 36 நாட்கள் இந்த அவை கூடவேண்டும். 36 நாட்களும் சொல்லக்கூடிய அளவுக்கு அத்தனை சாதனைகளைப் புரிந்துள்ளோம்.

நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், எங்களுடைய செயல்பாடு, எங்களுடைய திட்டங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான். எங்களைப் பொறுத்தவரை எந்தச் சுயநலமும் இல்லை. பொதுநலம் தான், மக்கள் நலம்தான். அ.தி.மு.க. தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட ஒரு இயக்கம்.இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் மென்மேலும், மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்”இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

''ஏர்லிப்ட்-ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ''திரைவிமர்சனம்

குவைத் மீது ஈராக் நடத்திய தாக்குதலின் போது ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு அற்புதமான படத்தை கொடுத்து இருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன். அதற்கு அக்ஷ்ய் குமாரின் நடிப்பு பெரிய பலமாக அமைந்துள்ளது. இப்படம் ரசிகர்களை எப்படி கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்.

கதைப்படி, ரஞ்சித் கத்யால் எனும் அக்ஷ்ய் குமார், குவைத்தில் வாழும் இந்திய தொழிலதிபர். இவரது மனைவி அம்ரிதா எனும் நிர்மத் கவுர். அன்பான மனைவி, அழகான குழந்தை, நல்ல முறையில் தொழில் என சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது அக்ஷ்ய் குமாரின் வாழ்க்கை. இப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் ஈராக் அரசு, குவைத் மீது திடீரென போர் தொடுக்கிறது. இதில் அந்நாட்டு மக்களுடன் லட்சக்கணக்கான இந்தியர்களும் பாதிக்கப்படுகின்றனர். பெரிய தொழிலதிபர்களாக இருந்தவர்கள் கூட ஏழ்மையான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உண்ண உணவு கூட இன்றி கஷ்டப்படும் இந்தியர்களை, அக்ஷ்ய்குமார் போராடி காப்பாற்ற களம் இறங்குகிறார். இதற்காக அவர் படும் துயரங்கள் தான் 'ஏர்லிப்ட்' படத்தின் பரபரப்பான மீதி திரைக்கதை.

ஹீரோ அக்ஷ்ய் குமார் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவருடைய சினிமா கேரியரில் சிறந்த படமாக இந்த ஏர்லிப்ட் படம் இருக்கும், அந்தளவுக்கு அவரது நடிப்பு அட்டகாசம்.

ஹீரோயின் நிர்மத் கவுருக்கு நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் கணவருடன் அவர்படும் துயரங்களில் கலக்கியிருக்கிறார். அக்ஷ்ய், நிர்மத் போன்றே பிரகாஷின் நடிப்பும் பிரமாதம்.

'ஏர்லிப்ட்' படத்தை அறிமுக இயக்குநர் ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கியுள்ளார். அறிமுகம் இயக்குநர் என்று யாரும் சொல்ல முடியாது. அந்தளவுக்கு படத்தை அற்புதமாக இயக்கியுள்ளார். படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான். ஒரு சீன் கூட போர் அடிக்காமல் பரபரப்பாக கொண்டு போய் உள்ளார் இயக்குநர். மேலும் படத்திற்கு பக்கபலமாக அனல் தெறிக்கும் வசனங்கள், ஒளிப்பதிவு, இசை எல்லாமும் சிறப்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இந்த ''ஏர்லிப்ட்''.

மொத்தத்தில், ''ஏர்லிப்ட் - ஏறுமுகம்... வசூலும் ஏறும்...!''

தென்னிந்திய திரைவிழாவில் விருதுகளை குவிக்கப்போகும் தனி ஒருவன்

இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகாடமி இந்த ஆண்டு தென்னிந்திய திரைப்பட விழாவை பிரமாண்டமாக நடத்துகிறது. நாளை ஐதராபாத்தில் தொடங்கும் இந்த விழா இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். நான்கு மொழிகளில் இருந்தும் சிறந்த படங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

இந்த விழாவின் நடுவர்கள் விருதுக்கு வந்துள்ள படங்களை பார்த்து தேர்வு செய்துள்ளனர். திரைப்படவிழா வட்டார தகவல்களின்படி ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் அதிக விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் பாகுபலி படம் அதிக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விழாவில் பிரபுதேவா, தேவிஸ்ரீ பிரசாத், பரத், சிவராஜ்குமார், ராம்சரண் தேஜா, ஜீவா, அகில் அக்னினேனி, தமன்னா, ஸ்ரேயா, டாப்ஸி, பிரியாமணி, ஆகியோர் நடனமாடுகிறார்கள். சாதனை கலைஞர்கள் கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், வாசுதேவன் நாயர், சித்தலிங்கையா கவுரவிக்கப்படுகிறார்கள்.

மருத்துவரிடம் செல்லும் பெண்களே! சாக்கிரதை!!

மருத்துவரிடம் செல்லும் பெண்களே சற்று கவனத்துடனும், விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது., குறிப்பா ஆண் துணை இல்லாமல் செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது.

மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.(உடன் துணை இருக்க வேண்டும்).

தனியார் மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான், இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது., குறிப்பா ஆண் துணை இல்லாமல் செல்லாதீர்கள்.

ரஜினிகாந்திற்கு பத்ம விபூஷண் விருது ?

தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவும், இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான ஸ்டாராகவும் விளங்கி வருபவர் ரஜினிகாந்த். மக்கள் நடிகராகவே இருந்து வரும் ரஜினிகாந்த் இதுவரை மிகப் பெரிய விருதுகள் எதையும் வாங்கியதில்லை. அதிகமான திரைப்பட விருதுகளையும் அவர் வாங்கியதில்லை. பெரும்பாலும் தான் நடிக்கும் படங்களை வாங்குபவர்களும், அதை ரசிப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கமர்ஷியலான படங்களில் மட்டுமே நடித்து வருபவர். எந்த விதமான விபரீத, பரீட்சார்த்த முயற்சிகளை தன் படங்களில் அவர் அதிகம் எடுத்ததில்லை.

இந்திய அரசாங்கத்தின் பத்ம பூஷண் விருது அவருக்கு 2000ம் ஆண்டு வழங்கப்பட்டது. அது தவிர சில தனியார் விருதுகளையும், சில குறிப்பிட்ட திரைப்பட விருதுகளையும் மட்டுமே அவர் வாங்கியிருக்கிறார். இந்த வருடம் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன. அப்போது ரஜினிகாந்திற்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த் தற்போது 'கபாலி, 2.0' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

சிவகார்த்திகேயன் குடும்பத்தில் இருந்துவரும் புதிய நடிகர்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் இளம் சூறாவளி. நடிப்பிலும், வெற்றி படங்களிலும் அசத்தி வருகிறார். தற்போது இவரது குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர் வர இருக்கிறார்.

இவருடைய அப்பாவின் அண்ணன் பாபு, அருவி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தற்போது அப்படம் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இருக்கிறது.

அதோடு விக்ரம் பிரபு நடித்துவரும் சிவாஜி படத்தில் இவர் சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார். விரைவில் அவர் சிவகார்த்திகேயன் படத்திலும் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘மூன்றாம் உலகப் போர்’ வெறும் கற்பனைதான் -திரைவிமர்சனம்

இந்திய ராணுவத்தில் மேஜர் பொறுப்பில் இருக்கும் சுனில்குமார், விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருக்கும்போது, அவரது பெற்றோர்கள் நாயகி அகிலா கிஷோரை அவருக்கு திருமணம் செய்துவைக்கின்றனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மனைவியை விட்டு பிரிந்து ராணுவத்துக்கு சென்றுவிடுகிறார் சுனில்குமார்.

அந்த நேரத்தில் சீன ராணுவத் தளபதியான வில்சன், இந்தியாவில் நாசவேலைகளை ஏற்படுத்தி அமைதியை குலைப்பதற்காக தனது மகனுடன் 100 வீரர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறார். அவர்கள் ஒவ்வொருவரையும் கண்காணிப்பதற்காக ஒவ்வொருவர் உடம்பிலும் கம்யூட்டர் சிப் வைத்து அனுப்புகின்றனர்.

ஆனால், இந்தியாவுக்குள் நுழைந்த 100 வீரர்களும் திடீரென தொடர்புகொள்ள முடியாமல் காணாமல் போகிறார்கள். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது சீனா தளபதிகளுக்கு மர்மமாகவே இருக்கிறது.

இந்நிலையில், இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பில் இருக்கும் மேஜர் சுனில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு இதுபற்றி தெரிந்திருக்கக்கூடம் என்று நினைத்து அவர்களை சீன ராணுவத்தினர் கடத்தி கொண்டுபோய் சிறை வைக்கின்றனர்.

அப்போது சுனில்குமாரை மட்டும் தங்களது கஸ்டடியில் வைத்துக்கொண்டு, மற்றவர்களை கொன்றுவிடுகிறார்கள். சுனில்குமாரிடம் 100 வீரர்கள் பற்றிய விவரங்களை கேட்டு அவரை பலவிதமாக டார்ச்சர் செய்து விசாரிக்கிறார்கள்.

இறுதியில், அந்த 100 வீரர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் சுனில் குமாருக்கு தெரிந்ததா? அந்த 100 வீரர்கள் என்ன ஆனார்கள்? சீன ராணுவத்தினரிடம் இருந்து சுனில்குமார் எப்படி தப்பித்தார்? என்பதே மீதிக்கதை.

நாயகன் சுனில்குமார் இந்திய ராணுவ மேஜருக்குண்டான மிடுக்குடனும், தைரியத்துடனும் அழகாக நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கு ஜோடி இருந்தாலும், அவருடனான காதல் காட்சிகள் மிகவும் குறைவு. போர் சம்பந்தப்பட்ட படம் என்பதால், பெரும்பாலும் துப்பாக்கி கையுமாகவே அலைந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் ரொம்பவும் தெளிவு இல்லாமலே நடித்திருக்கிறார்.

அகிலா கிஷோர் சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். சீனா தளபதியாக வரும் வில்சன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். படத்தில் இவர் பேசும் வசனங்கள் இந்தியனாக நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கிறது. இவருக்கும் ஹீரோவுக்கும் உண்டான காட்சிகளே படத்தில் பிரதானமாக இருப்பதால் மற்ற கதாபாத்திரங்கள் யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

2025-ல் இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையே உலகப்போர் நடப்பதாக இயக்குனர் சுகன் கார்த்தி இப்படத்தை படமாக்கியிருக்கிறார். ஆனால், 2025-ம் ஆண்டின் வளர்ந்த தொழில்நுட்பம் எதுவும் நம் கண்ணுக்கு தெரியவில்லை. மேலும், கிராபிக்ஸில் வரும் போர் காட்சிகள் எல்லாம் வீடியோ கேமை பார்ப்பதுபோன்ற உணர்வை கொடுத்திருக்கிறது.

படத்திற்கு பெரிய பலம் வசனங்கள்தான். நாயகனாகட்டும், வில்லனாகட்டும் இருவரும் பேசும் வசனங்கள் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது. வேத் சங்கரின் இசை காதுகளுக்கு இரைச்சலாக விழுந்திருக்கிறது. பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். தேவாவின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.

மொத்தத்தில் ‘மூன்றாம் உலகப் போர்’ வெறும் கற்பனைதான்.

எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்; ஆண்களின் மச்ச பலன்கள்

இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும் மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஜோதிடத்தில் மச்சத்தை வைத்தும் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியும் கூறுவார்கள்.

ஆண்களும் மச்சங்களும்:

வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்கள்.
வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள் இருக்கும்.
நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
வலது கண்ணுக்குள், வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர், ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.

இரு கண்களில், ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள்பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும். இருப்பினும், அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும், ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.

இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும், அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.

மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.
நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோக முள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.

மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.
மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். கல்வியறிவும் குறைவாக இருக்கும்.

மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.
இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.

தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.
கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.
கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.
இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.

மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.
வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.
வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.
தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.
வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.
இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்

முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.
முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்

எத்தனை பேர் கிண்டல் செய்தாலும் மீண்டும் நடத்திக்காட்டுவேன்- லட்சுமி ராமகிருஷ்ணன்

யுத்தம் செய், நான் மகான் அல்ல, கதகளி ஆகிய படங்களில் நடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் சின்னத்திரையில் நடத்திய ஷோ ஒன்றை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியை மற்றொரு தொலைக்காட்சி கிண்டல் செய்தது, அதை சிவகார்த்திகேயன் தன் பாடலில் பயன்படுத்தியது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் இந்த பாடல் குறித்து வெளியிட்ட கருத்து அவரை மிகவும் கோபப்படுத்தியது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல், தற்போது மீண்டும் அதே ஷோவை நடத்திக்காட்டுவேன் என அதிரடியாக கூறியுள்ளார்.

ஆஸ்கரை வெல்லுமா இந்த அமேசான் காட்டின் கதை?!‘Embrace of the Serpent’

ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டி சூடுபிடிக்க துவங்கிவிட்டது. வழக்கம்போல, உலகின் பல பகுதிகளில் இருந்து, பல கலைப்படைப்புகள் ஆஸ்கரை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் முதன்முறையாக கொலம்பிய சினிமா ஒன்று ஆஸ்கர் இறுதிப்பட்டியலுக்கு தேர்வாகியிருக்கிறது. கொலம்பிய நாட்டில் இருந்து முதல்முறையாக ஒரு இயக்குநர்,  சினிமா ஆர்வலர்களால் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறார் ஒரே படைப்பில் அத்தனை பேரையும் கவனிக்க வைத்த அந்த இயக்குனர் சிரோ கியூரா.

அமேசான் காடுகள் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது என்னவாக இருக்கும் ? சிலருக்கு அரியவகை மூலிகைகள் கிடைக்குமிடம் என தோணலாம். சிலருக்கு ‘உலகின் நுரையீரல்’ என அழைக்கப்படும் அதன் பெருமைகள் நினைவுக்கு வரலாம். இயற்கை ஆர்வலர்களுக்கு, அழிந்து வரும் இயற்கையின் பொக்கிஷம் என்ற கோபம் கூட இருக்கலாம். இதெல்லாம் தற்போது நாம் வாழும் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட ஞாபகங்கள். மொத்த உலகத்திற்கும், அமேசான் என்றால், அதன் பொதுப்புத்தியில் இருக்கின்ற விஷயங்கள் இவ்வளவுதான்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அமேசான் வனங்களுக்கு பின்பு இருக்கும் இனப்படுகொலைகள், தொழில்புரட்சி என்ற பெயரில்  நடந்த மனித உரிமை மீறல்கள், அமேசான் மண்ணின் மைந்தர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் யாவும் உலகம் அறியாதது. இந்த  வரலாற்றையும், அமேசான் பகுதியின் நூறாண்டுக்கு முந்தைய அழகையும் ஒருசேர, ‘Embrace of the Serpent’ என்ற படத்தின் மூலம் திரைக்கு கடத்தியிருக்கிறார் சிரோ கியூரா. திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும், பாராட்டுகளும், விருதுகளும் குவிய,  தற்போது ஆஸ்கருக்கு அருகில் நிற்கிறது இந்த படம். கேன்ஸ் திரைப்பட விழாவில், ‘டைரக்டர்ஸ் போர்ட்நைட்’ பிரிவில், 2015 க்கான சிறந்த படமாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

என்ன கதைக்களம்?

  “கடந்த நூற்றாண்டில் இருந்த அமேசானின் அழகில், பாதிகூட இப்போது இருக்கும் அமேசான் காட்டிற்கு இல்லை” என்கிறார் சிரோ. அதனை அப்படியே பதிவு செய்ய விரும்பிய சிரோ, நிஜத்திற்கு மிக நெருக்கமாக இருப்பதற்காக கடந்த நூற்றாண்டில் அமேசான் காட்டை ஆராய்ச்சி செய்து, குறிப்புகள் எழுதிய இரண்டு விஞ்ஞானிகளின் டைரிக்குறிப்பையே கதைக்கான ஆதாரமாக கொண்டு, கதையை வடிவமைத்திருக்கிறார்.

அமேசான் காட்டின் பூர்வகுடி பழங்குடி இனத்தில்,  கடைசி மனிதனாக வாழ்ந்து வருகிறார் கரமகட்டே. தான்தான் தனது இனத்தின் கடைசி மனிதன் என்ற கவலையில் இருக்கும் கரமகட்டேவை,  1909 ம் ஆண்டில், சந்திக்கிறார் பண்பாட்டியல் ஆய்வாளரான, தியோடர் கோச் க்ரன்பெர்க். தனது நோயை தீர்க்கவும், வாழ்நாளை நீட்டிக்கவும் உதவும் யாக்ருனா என்னும் ஒரு அதிசய செடியைத்தேடி வந்த தியோடர், கரமகட்டேவின் உதவியை நாடுகிறார். அந்த மந்திரச்செடியை கண்டுபிடிக்க உதவினால் , மற்ற பகுதிகளில் இன்னும் வாழும் கரமகட்டேவின் இனத்தினரை காட்டுவதாக உறுதியளிக்கிறார்.

அதனை ஏற்றுக்கொண்டு கரமகட்டேவும் செடியை கண்டுபிடிக்க உதவிசெய்கிறார். இதற்காக படகில் இருவரும் ஒன்றாக இணைந்து பயணம் செய்கின்றனர். இந்த பயணம் கரமகட்டேவின் இளமைக்காலத்தில் நடக்கிறது. திரைப்படத்தின் மற்றொரு இணை கதையாக, கரமகட்டேவின் இன்னொரு பயணமும் வருகிறது. 1940 ல் தியோடரைப்போலவே தாவரவியல் விஞ்ஞானி  ரிச்சர்ட் இவான் ஷல்ட்டஸ்,  அமேசான் காட்டிற்கு வருகிறார். அவரும் அதே போன்றதொரு  தாவரத்தை தேட கரமகட்டேவை சந்திக்கிறார்.

முதிய வயதில் இந்த பயணத்தை தொடங்குகிறார் கரமகட்டே. இந்த பயணங்களின் இடையே, அமேசான் காட்டின் அழகை விவரித்துக்கொண்டே செல்லும் கேமரா, பின்பு அமேசான் காடுகளை மொத்தமாக அழித்துவிட்டு, அங்கு ரப்பர் தோட்டங்களை நிறுவ ஆசைப்பட்ட ஐரோப்பியர்களால் எப்படி அமேசான் சிதைந்தது என்பதையும் காட்டுகிறது. ரப்பர் தோட்டங்களை நிறுவி, காடுகளை அழித்ததோடு, அந்த மண்ணின் மக்களையும் அங்கிருந்து விரட்டி, கொத்துக்கொத்தாக மக்களை கொன்று தீர்த்தது, அமேசானின் பிள்ளைகளாக வாழ்ந்து வந்த, அந்த இனமக்களை அதே காட்டில் கொத்தடிமையாக்கியது என இதுவரை பேசப்படாத வரலாறையும், அறியப்படாத அமேசானின் முகத்தையும் ஒருசேர காட்டுகிறது படம்.

அந்த விஞ்ஞானிகளின் பயணம் என்ன ஆனது? அந்த கடைசி மனிதன் கரமகட்டே என்ன ஆனார்? போன்ற முதல்பாதி கேள்விகளை, வரலாறோடு சேர்த்து, இரண்டாம் பாதியாக்கி இருக்கிறார் சிரோ கியூரா. அமேசான் காடு, பழங்குடியின மக்களின் வாழ்க்கை, வரலாற்றுக்கதை என ஒளிப்பதிவில் வர்ணஜாலம் நிகழ்த்த வாய்ப்புகள் இருந்தும், படம் முழுவதையும் கருப்பு-வெள்ளையிலேயே படமாக்கியிருக்கிறார்கள்.

சவால்கள் நிறைந்த இந்த படத்தினை பற்றி பகிர்ந்து கொள்கிறார் சிரோ.

“ அமேசான் காட்டைப்பற்றிதான் படம் எடுக்கப்போகிறோம் என்பதை முதலில் முடிவு செய்துவிட்டேன். எனவே அவற்றை பற்றி நிறைய விஷயங்களை தேட முடிவு செய்தேன். உலகில் எல்லாருக்குமே அமேசான் காடுகள் என்றால், ஓரளவுக்குத்தான் தெரியும். பிரேசில் நாட்டு மக்களுக்கு கூட, அதைப்பற்றி  அவ்வளவு தெரியாது. எனவே அமேசான் பற்றி வரலாறுகளில் தேடினேன். அப்போதுதான் அமேசான் காட்டிற்கு சென்று, அங்கேயே ஆராய்ச்சி மேற்கொண்டு, வாழ்ந்த அந்த இரண்டு விஞ்ஞானிகள் பற்றி தெரிந்தது. அவர்களின் டைரிக்குறிப்புகளையே அமேசானின் முந்தைய நூற்றாண்டு பதிவாக எடுத்துக்கொண்டேன். அதே சமயம் யாருமறியாத, ஒரு கதையை சொல்லப்போகிறோம் என்ற போது, அதில் பிழைகள் வந்துவிடாது இருக்க நிறைய ஆராய்ச்சிகளும் செய்து, வரலாற்றை உறுதிப்படுத்தி கொண்டேன். அந்த வரலாற்றை தப்பாமல் எடுத்துக்கொண்டு, கதைக்கு தேவையான கற்பனை அம்சங்களையும் சேர்த்து, கதையின் கதாபாத்திரங்களை உருவாக்கினேன்.  இப்படித்தான் கதை தயார் ஆனது.

இதில் நடிக்க வைக்க, அமேசான் பகுதியில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடியின மக்களையே பயன்படுத்தலாம் என நினைத்து, காடுகளுக்குள் பயணம் செய்தேன். சில மக்களை சந்திக்க முடிந்தது. அவர்களிடம் படம் பற்றி எடுத்து சொன்னவுடன் எந்த தயக்கமும் இன்றி, அவர்கள் நடிக்க முன்வந்தனர். அவர்களின் ஒரே கோரிக்கையாக இருந்தது, அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான். அந்த மக்களுக்கு நடிப்பு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக மூன்றுமாதங்கள்  பயிற்சி அளித்தோம்.

 அவர்கள் இயற்கையாகவே சிறந்த புத்திசாலிகள். ஒரு விஷயத்தை கேட்டவுடன் புரிந்து கொண்டனர். இன்றும் கூட, இயற்கையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர். மரங்கள் , விலங்குகள் எல்லாம் சக்தி கொண்டவை என நம்புகின்றனர். அவைதான் பூமியை இன்னும் காப்பாற்றுகின்றன, சக்தியளிக்கின்றன என்பவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். நானும் அவர்கள் நம்பிக்கையை மதிக்கிறேன். காற்றை நம்மால் காண முடியாது. மனித சிந்தனைகளை கண்ணால் காண முடியாது. ஆனால் இரண்டுமே இருக்கிறதுதானே? அது போல, அவர்கள் நம்பிக்கையும் உண்மையாக இருக்கலாம். படப்பிடிப்பு நடந்த எல்லா நாட்களும் நாங்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தோம். அவர்கள் எங்களுக்கு இயற்கையை கற்றுத்தந்துவிட்டனர். அமேசான் பகுதிகளில் வாழும், மொத்தம் 60 பழங்குடியின மக்களை படத்தில் நடிக்க வைத்தோம்.

அதே போல, அமேசான் பழங்குடியின மக்களின் அழிவுக்கு காரணமாக அமைந்தது ரப்பர் தொழிற்சாலைகள். ஐரோப்பியர்கள் இதற்காக ஏராளாமான காட்டை அழித்தும், மக்களை கொன்றும், ஒரு லட்சத்திற்கும் மேலான மக்களை அடிமையாக்கியும் வைத்திருந்தனர். வரலாற்றில் நடந்த பெரும் துயரங்கள் இவை. இன்றைக்கு துபாய் எந்தளவு, செல்வ செழிப்பான நகரமாக இருக்கிறதோ, அப்படி இருந்தது அன்றைய பிரேசிலின் மனாஸ் நகரம். தற்போதைய பெட்ரோலை போல விலைமதிப்பானதாக அப்போது இருந்தது ரப்பர். அதனை இந்த படத்தில் பதிவு செய்யும் வகையில், எனது கதையை அமைத்தேன். இந்த கதையை பார்த்து அதற்கான வண்ணங்களை ரசிகர்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் படம் முழுக்க, கருப்பு-வெள்ளையில் பதிவு செய்தோம்.

வண்ணப்புகைப்படங்களை விட, கருப்பு- வெள்ளை புகைப்படங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி, கதாபாத்திரங்களின் நிறத்தையும், ரசிகர்களின் கற்பனைக்கே விட்டிருக்கிறேன். பல சமயங்களில் படத்தின் காட்சியை விட, அதோடு ஒன்றிப்போகும் பார்வையாளர்களின் கற்பனைகளே மனதிற்கு நெருக்கமாக இருக்கும்” என்கிறார் சிரோ.

இப்படி உலகின் பேசப்படாத வரலாற்றின் பக்கங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன..!

1 லட்ச ரூபாய்க்கு 'வாட்டர் ப்ரூஃப்' புடவை! - முதல் கஸ்டமர் ஆன மாநில முதல்வர்!

அரசியல், எலெக்சன், கட்சி - இதையெல்லாம் தாண்டி ‘பரபர’ மூடிலும் பளபளவென்று ஜாலியாக இருப்பவர் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா.

கட்சிப் பொதுக் குழுக்களில் கலந்து கொள்வதைவிட கடைத் திறப்பு போன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் சித்தராமைய்யாவுக்கு. அண்மையில் ஒரு புடவைக் கடைத் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றவர், அந்தப் புடவைக் கடைக்கு முதல் கஸ்டமரும் ஆகியிருப்பதுதான் இப்போது கர்நாடக ஸ்பெஷல்.

கர்நாடக மாநிலம் தவாங்கீர் என்னும் இடத்தில், ‘கர்நாடகா சில்க் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன்’ எனும் புடவைக் கடையைத் திறந்து வைக்க சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் சித்தராமைய்யா.

ஷோரூமைத் திறந்துவைத்துவிட்டு, ‘கடையில் என்னப்பா ஸ்பெஷல்?’ என்று வழக்கம்போல் ஜாலி மூடில் விசாரித்திருக்கிறார்.

அப்போது ‘வாட்டர் ப்ரூஃப்’ என்னும் புடவை பற்றித் தகவலறிந்தவர், ‘‘உண்மையிலேயே இது நனையாதுல்ல?’’ என்றபடி, ஒரு லிட்டர் குடிநீரை புடவையில் ஊற்றினாராம். என்ன ஆச்சர்யம்!

பந்துபோல, புடவையில் தண்ணீர் உருண்டு விளையாடியது. ஒரு சொட்டு நீர்கூட புடவையில் இறங்காததைக் கண்டு வியந்தவர், ‘‘மழையில தைரியமா இதைப் போட்டுக்கிட்டுப் போகலாம். என் மனைவிக்கு இது ஒண்ணு பேக் பண்ணிடுங்க!’’ என்று, வரியோடு 1,09,385 ரூபாய் பில் செட்டில் செய்துவிட்டு, பார்சலோடு கிளம்பி விட்டார்.

முதல்வரின் இந்த பர்ச்சேஸுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அந்த ‘வாட்டர் ப்ரூஃப்’ புடவைக்கு, இப்போது கர்நாடகாவில் செம டிமாண்டாம்!