Sunday 24 January 2016

சூர்யாவின் “24” – அட்டகாசமான புதிய தோற்றம்!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளிவரப் போகும் “24” என்ற புதுமையான பெயர் கொண்ட படம் தமிழக சினிமா வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று வெளியிடப்பட்ட சூர்யாவின் அட்டகாசமான வித்தியாசத் தோற்றங்களைத் தாங்கிய படங்கள் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளன.

இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் விக்ரம் குமாரின் இயக்கம் – ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு – என கவரும் மற்ற அம்சங்களும் இருப்பதால்தான் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது என்கின்றன சினிமா வட்டாரங்கள்.

அஞ்சான், மாஸ் என வரிசையாக தனது கடந்த இரண்டு படங்களும் சரியாக வசூல் ரீதியாக வெற்றியடையாத காரணத்தால், அடுத்த படமான 24 படத்தை சூர்யா மிகவும் கவனமுடன் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதாலும், படம் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும் மலேசியாவில் இதே பெயரில் இந்தப் படம் வெளியிடப்பட மலேசிய தணிக்கை வாரியம் அனுமதிக்குமா என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது. 24 என்பது மலேசியாவில் குண்டர் கும்பலுடன் தொடர்புப் படுத்தப்படும் ஓர் எண் என்பதால், அந்த எண்ணில் பகிரங்கமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு பொதுவாக மலேசியக் காவல் துறை அனுமதிப்பதில்லை.

இந்நிலையில், மலேசியத் தணிக்கை வாரியம் “24” என்ற பெயரோடு படத்தை வெளியிட அனுமதிக்குமா – அல்லது காவல் துறையும் இதற்கு அனுமதி தருமா – இல்லாவிட்டால், தமிழ்ப் படம்தானே என்ற காரணத்தால் அதே பெயரோடு படத்தை வெளியிட மலேசிய அதிகாரிகள் முடிவு செய்வார்களா – என்பது போகப் போகத்தான் தெரியும்.

 

0 comments:

Post a Comment