Tuesday 19 January 2016

விஷாலுக்காக கதகளி வீணாக்கப்பட்ட நட்சத்திரப் பட்டாளம் ..பார்க்கலாமா?

கடலூரின் மீனவ சங்கத்தலைவரும், கட்டப் பஞ்சாயத்துக்காரருமான தம்பாவுடனான (மதுசூதன் ராவ்) ஒரு சம்பவத்திற்குப் அமைதியாக வேலைக்கு வெளிநாடு சென்று திரும்புகிறார் விஷால். நான்கு நாளில், கேத்தரின் தெரசாவுடன் தனக்கு நடக்க இருக்கும் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுத்து விட்டு, சென்னைக்கு காதலியுடன் ஜவுளி எடுக்க வந்தவருக்கு, தம்பா கொலை செய்யப்பட்டு விட்டதாக அதிர்ச்சித் தகவல் வருகிறது.

தம்பாவின் மச்சான்கள், போலீஸ் இன்ஸ்பெக்டரும் என பலரும் இதை விஷால்தான் செய்திருக்கக் கூடும் என சந்தேகிக்க அவர் திட்டவட்டமாக மறுக்கிறார். தம்பாவின் மனைவி, கொலையாளியை கைது செய்யும் வரை பிணத்தை வாங்கமாட்டேன் என தர்ணா இருக்க, விஷாலை கைது செய்யும் நோக்கில் சென்னையில் இருந்து கடலூருக்கு அழைக்கிறார் இன்ஸ்பெக்டர்.

இதற்கிடையில், தம்பாவின் ஆட்களால் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று விஷாலின் குடும்பம் வீட்டை விட்டு வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஊரே கொந்தளிப்பில் இருக்க, கடலூர் வந்து இன்ஸ்பெக்டரை சந்திக்கிற விஷால், சரண்டர் ஆனாரா என்பதையும் கொலையாளி யார் என்பதை நம் பொறுமையை சோதித்து விளக்கி முடிக்கிறார்கள்.

வழக்கம் போல் இல்லாமல் அமைதியான அறிமுகத்துடன் தோன்றுகிறார் விஷால். ஆரம்ப காட்சிகள் ஆர்ப்பாட்டமில்லாமல் இருப்பினும், விஷாலின் பலமே ஆக்‌ஷன் என்று டிரெண்ட் ஆனபின்பும் அவர் கெஞ்சிக் கொண்டே இருப்பது ரசிகனின் பொறுமையை சோதிக்கிறது. கதாநாயகியாக கேத்தரின் தெரசா. மெட்ராஸை விட இதில் பப்ளியாக, இன்னும் அழகாக.

ஒளிப்பதிவாளர் எம்.பாலசுப்ரமணியெம்முக்கு நன்றி. கருணாஸ், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஜெய்பரகாஷ் என்று நட்சத்திரப்பட்டாளம் இருந்தும் ஒருவருக்கும் அழுத்தமான பாத்திரப்படைப்பு ஏதுமில்லை. வலுவற்ற திரைக்கதை. இடைவேளைக்கு முன்பே வில்லன் கொலை நடந்துவிடுகிறது. தவிரவும் ‘அவன் சாக வேண்டியவந்தான். அவனை எவன் கொன்னா என்ன?’ என்ற மனநிலையில் இருக்கும் பார்வையாளனுக்கு ‘யார் கொன்னிருப்பா?’ என்ற சஸ்பென்ஸில் மனம் லயிக்கவில்லை.

ஹீரோ – ஹீரோயின் காதல் காட்சிகளிலும் அவ்வளவு ரொமாண்டிக் இல்லை. விஷால் ஆக்‌ஷனில் இறங்காமல் கெஞ்சிக் கொண்டிருக்கும்போதெல்லாம், 'இப்போ அடிதடியை ஆரம்பிக்கிறியா... இல்ல தூங்கட்டுமா?’ என மிரட்டல் விடுக்கிறது தியேட்டர் ஜனம். இன்று நேற்று நாளை, ஆம்பள, தனி ஒருவன் வரிசையில் படத்தின் தலைப்பை தீம் மியூசிக்காக போடுவதில் ஸ்கோர் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.

படத்தின் ஆரம்ப காட்சிகளில், விஷால் சானிடைசர் வைத்துக் கொண்டு கையை சுத்தம் செய்து கொண்டே இருப்பார். இரண்டு மூன்று முறை அதைக் காட்டி, ஏதோ சொல்ல வருகிறார்கள் போல என்று நினைத்தால்.. ஒன்றுமே இருக்காது. இதைப் போலவே படத்தில் பல ஏமாற்றங்கள்.

வலுவிழந்த திரைக்கதை, வீணாக்கப்பட்ட நட்சத்திரப் பட்டாளம், நீளமான சஸ்பென்ஸ் என்று இருந்தாலும், இரண்டு மணி நேரம் மட்டுமே படம் என்பதாலும், விஷாலின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸுக்காகவும் ஒரு சான்ஸ் எடுக்கலாம்தான். விஷாலுக்காக மட்டும் கதகளி பார்க்கலாம்!

அதிமுக எம்எல்ஏ பழ. கருப்பையாதான் இப்படியெல்லாம் பேசியிருக்காரு.... இன்னமும் கட்சியிலும் நீடிக்கிறாரு

கட்சி பொதுக்குழுக்களில் ஏகமனதாகவே தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்; மந்திரிகள் கொள்ளையடிக்கிறார்கள்; கீப் வீட்டுக்கு போவதுகூட பொதுப்பணி என்பதாகிவிடுகிறது என சரவெடியாக தாக்கிப் பேசியிருக்கிறார் அதிமுக எம்எல்ஏ பழ. கருப்பையா. ஆனாலும் அவர் இன்னமும் அதிமுகவில் தொடர்ந்து நீடிக்கிறார் என்பதுதான் அதிசயமாகவும் பார்க்கப்படுகிறது.

சென்னையில் துக்ளக் ஆண்டுவிழாவில் பழ. கருப்பையா பேசியதாவது:

இந்த நாட்டில் பெரிய கேடு வந்ததற்குக் காரணம் அரசியல்வாதியும், அதிகாரவர்க்கமும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்ததன் விளைவுதான்.

அரசியல்வாதிகள் இன்று ஊழல் செய்யக் காரணம், அவர்களை அதிகாரிகள் வளைத்துப்போட்டு ருசி காண்பித்துவிட்டார்கள். இன்று மந்திரியும், தலைமைச்செயலாளரும் கூட்டுச் சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலை வந்துவிட்டது

சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் அவர்கள் எவ்வளவு பேச உரிமை உள்ளவரோ, அவ்வளவு உரிமையோடு பேசுவதற்கு உரிமை உடையவர் சரத்குமார்.

இப்போது, அமைச்சர்கள் என்றால் அடாவடித்தனம் வந்துவிடுகிறது. ஐந்தாறு பி.ஏ-க்கள் வைத்துக்கொள்கிறார்கள். சால்வை எடுக்கக்கூட ஒரு பி.ஏ இருக்கிறார். இன்றைக்கு, பதவிகளில் இருப்பவர்கள், தங்களுடைய கீப் வீடுகளுக்குப் போகும்போதுகூட பாதுகாப்பு வண்டிகளோடு செல்கிறார்கள். காரணம், அதுவும் பொதுப்பணிதான் என்கிறார்கள்.

எஸ்கார்ட் வண்டியையும், சர்க்யூட் ஹவுஸையும் எடுத்துவிட்டால் ஒருவரும் அமைச்சராக இருக்க விரும்பமாட்டார்கள். ஒரு கூட்டம் கூட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். இப்போது, யாருக்கும் கூட்டம் வருவது இல்லை. கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். மாவட்டம், வட்டம் எல்லாம் எதற்கு இருக்கிறார்கள்? வாகனங்களில் கூட்டத்தை அழைத்து வரத்தானே?

எந்தப் பொதுக்குழுவில் எந்தத் தீர்மானம் விவாதிக்கப்படுகிறது? எல்லாம் ஏக மனதாகத்தானே நிறைவேற்றம் நடக்கிறது. புருசன் பொண்டாட்டியே ஒத்துப்போகாத காலத்தில், இத்தனை பேர் எப்படி ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்? அதனால்தான், நாட்டில் வளர்ச்சி இல்லை. எந்தக் கருத்தும் எதிர் கருத்தால்தான் வளர்ச்சி பெறும். முதல் கருத்தும், எதிர் கருத்தும் மோதும்போது புதிய கருத்து பிறக்கும். அந்தப் புதிய கருத்துக்கும் எதிர் கருத்து உருவாகி, மீண்டும் புதிய கருத்து உருவாகும். இதுதான் வளர்ச்சி. ஆனால், இங்கு எதிர் கருத்து என்பதே கிடையாது. இங்கு எந்த அரசியல் கட்சியின் பொதுக்குழுவிலும் தீர்மானத்தை விவாதிப்பது இல்லை. தீர்மானத்தைப் படிக்கிறார்கள். பிறகு எதற்கு ஜனநாயகம்? ஒரு குடைக்குள் ஆளும் மன்னர்களாகத்தான் எல்லாக் கட்சித் தலைவர்களும் இருக்கிறார்கள்.

சமுதாயம் சந்தைப்பொருளாகி, கடவுளையும் சந்தைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். கடவுள் நம்பிக்கை கெட்டுப் போய்விட்டது. மதங்கள் நிறுவனங்களாகிவிட்டன. உண்டியல் பணமே மந்திரிகளுக்குப் போகிறது.

அதிகார வர்க்கம் ஒத்துழைக்காமல் இவர்கள் ஓர் அணாகூட கொள்ளையடிக்க முடியாது. சுடுகாட்டில் படுத்து உறங்கும் நல்ல அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நாடு கெஜ்ரிவாலைத் தேடி அலைகிறது என்றால், நாடு எந்த நிலையில் உள்ளது என்று பாருங்கள்.

நல்லவன் என்று யாரைக் கண்டாலும் நாட்டை ஆளக் கூப்பிடுகிறார்கள். சங்ககாலத்தில் பா வீடு என்று உள்ளது. அதாவது, ஒரு நாட்டு மன்னன் பக்கத்து நாடு படையெடுத்து அங்கிருக்கும் ஆநிறை உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்து, அதை தனது படை வீரர்கள் முதல் ஜோதிடர் வரை பிரித்துக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. அந்த நிலை இந்த நாட்டில் மீண்டும் திரும்பியுள்ளது.

மந்திரி கொள்ளையடித்து தொண்டர்கள் முதல் மாவட்டம், வட்டம் என அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

இவ்வாறு பழ. கருப்பையா பேசினார்.

இவ்வளவு விமர்சித்த பின்னரும் பழ. கருப்பையா, அதிமுகவில்தான் நீடிக்கிறார். துக்ளக் ஆண்டுவிழா விழா என்பதால் அதன் ஆசிரியர் 'சோ' சங்கடப்படுவாரோ என நினைத்து பழ. கருப்பையா மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

குழந்தைகளுக்கு விக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும்

விக்கலால் அவதிப்படும் குழந்தையை ரிலாக்ஸ் ஆக தட்டிக்கொடுக்கலாம். பசியினால் சில குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கலாம். திடீர் விக்கல்களை நிறுத்த சிறிதளவு தண்ணீர் கொடுக்கலாம். இது விக்கலை நிறுத்த உதவும். பால் புகட்டும் போது விக்கல் எடுத்தால் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை நிறுத்தி விடவும்.

இல்லை எனில் அது மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடும். சின்னக்குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கும் போது விக்கல் எடுக்கும் அப்போது தேனை நாக்கில் தடவி வைக்கலாம். அரோமா தெரபியின் மூலம் விக்கலை நிறுத்தலாம். சிறிதளவு எண்ணெயை எடுத்து டிஸ்யூ காகித்த்தில் தடவி அதனை குழந்தைகளின் நெஞ்சில் வைக்கலாம்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தையாக இருந்தால் ஒரு காகிதப்பையை எடுத்துக்கொண்டு, மூக்கு, வாய் இரண்டும் உள்ளே இருக்குமாறு இறுக்கிப் பிடித்துக்கொள்ளச் சொல்லுங்கள். இப்போது மூச்சை உள் இழுத்து, அந்தக் காகிதப்பைக்குள் மூச்சை விடச் சொல்லுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசிக்கச் சொல்லுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால் படிப்படியாக ரத்தத்தில் கரிய மில வாயுவின் அளவு அதிகரித்து, பிராணவாயுவின் அளவு குறையும். அப்போது விக்கல் நின்று விடும்.

சிலருக்குத் தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால் விக்கல் நிற்கும். குழந்தைகளுக்குக் ‘கிரைப் வாட்டர்’ கொடுத்தால் விக்கல் நிற்கும். விக்கல் எடுப்பது இயல்பானது, சாதாரணமானதுதான். அதை நினைத்து அச்சம் கொள்ளவேண்டாம். ஒருவருக்கு இரண்டு மூன்று நாள்களுக்கு மேல் அதாவது 48 மணிநேரத்திற்கு மேல் விக்கல் தொடருமானால், அது ஆபத்தான அறிகுறி என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். இதுபோல் உதரவிதானத்தில் நோய்த்தொற்று, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய், கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடலடைப்பு, மூளைக்காய்ச்சல், பெரினிக் நரம்புவாதம், சர்க்கரை நோய் முற்றிய நிலை, மாரடைப்பு போன்ற காரணங்களாலும் விக்கல் வரும். எனவே அதிக விக்கலை நிறுத்த மருத்துவரை அணுகவேண்டும்.

ரஜினிகாந்த்? அமீர், சேரனுக்கு சீமான் சாட்டை!

வழவழா கொழகொழா பதில்களை ஒருபோதும் விரும்புவதில்லை சீமான்! இந்த வார குமுதத்தில் சீமான் பொங்கியிருப்பது பற்றி அமீரும் சேரனும் என்ன பேசினார்களோ? ஆனால் ஒருகாலத்தில் சீமானுடன் சிறை சென்றவர் அமீர். அவர்களை சிறையில் சென்று சந்தித்துவிட்டு வந்தவர் சேரன். ஒரு ரஜினி விஷயத்தில் மூவருமே மூன்று திசைகளில் இருக்கிறார்கள். சரி… சீமானின் பதிலை படிப்போம்.

கேள்வி இதுதான். வேற்றுமொழி நடிகர்கள் வெள்ள நிவாரணத்திற்கு அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள். தமிழ் நடிகர்கள் கிள்ளிக் கூட கொடுக்கவில்லையே?

அல்லு அரவிந்த் 25 லட்சம் கொடுக்கிறார். இங்க இருக்கும் ரஜினிகாந்த் பத்து லட்சம் கொடுக்கிறார். அவரைதான் உங்களை விட்டா எங்களுக்கு நாதியில்லேன்னு அமீரும் சேரனும் தலைமை தாங்க கூப்பிடுகிறார்கள். உலகமே மனித நேயம்தான் பேசியது. தமிழன்தான் உயிர் நேயம் பேசினான்.

இவ்வாறு பதிலளித்திருக்கிறார் சீமான்.

அரண்மனைக் கிளி பாடல்... எழுதியவர் இளையராஜாவா, பொன்னடியானா? புது சர்ச்சை!

மாரிமுத்துவை நினைவிருக்கிறதா? கண்ணுக்குக் கண்ணாக படத்தை இயக்கியவர். பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் அவர் நடித்து வெளியான படம் உப்புக் கருவாடு. எம்எஸ் பாஸ்கரின் தம்பியாக வருவார்.

அவர் சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு தகவல், சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

முதலில் அவரது பதிவைப் பாருங்கள்:

முகநூல் நட்புகளுடன் ஒரு இனிமையான பகிர்வு... 'அரண்மனை கிளி' - நான் உதவி இயக்குநராய் (clap asst) வேலை பார்த்த முதல் படம்...(வருடம் 1992)... அந்தப் படத்தின் பாடல்கள் நீங்கள் அறிந்ததே... அதில் அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி சார் எழுத... ஒரே ஒரு பாடல் மட்டும் வேறொரு கவிஞருக்குக் கொடுக்கப்பட்டது...(பெயர் வேண்டாம்)... அந்தப் பாடல் 'என் தாயெனும் கோயிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே...' அந்தக் கவிஞர் எவ்வளவோ எழுதியும் யாரும் திருப்தி அடையவில்லை...

சற்று கோபமடைந்த இசைஞானி விறுவிறுவென்று தன் Composing roomக்குப் போய் அரை மணி நேரத்தில் பாடலை எழுதிக்கொண்டு வந்து... அடுத்த அரை மணி நேரத்தில் பாடிவிட்டுப் போய் விட்டார்... இதைப் பக்கத்தில் இருந்து பார்த்து பிரமித்து விட்டேன்... அவர் பாடி முடித்துப் போன பின் நான் மெதுவாக Voice roomக்குள் போனேன்... ஆஹா... அங்கே அந்தப் பொக்கிஷத்தைப் பார்த்தேன்... இசைஞானி தன் letter padல் தன் கையெழுத்தில் தானே எழுதிய பாடல் தாள் (lyric sheet) மைக் முன்னால் போர்டியம் standல் இருந்தது... நான் நைஸாக அதைத் திருடிக்கொண்டு வந்து விட்டேன்... இன்று வரை அதைப் பாதுகாத்து வருகிறேன்...அதைத்தான் போட்டோ எடுத்து இணைத்துள்ளேன்...

என் school...college mark sheet போல் இதையும் பத்திரமாக வைத்துள்ளேன்... தன் இசைப் பயணத்தில் 1000 படங்களைக் கடந்திருக்கும் இசை அதிசயமே... இவ்வளவு காலத்துக்குப் பிறகு என் மீது திருட்டு வழக்குத் தொடர மாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலும்... என்னை ஆள் வைத்துத் தேட மாட்டீர்கள் என்ற தைரியத்திலும்... இதை இங்கே பகிர்ந்திருக்கிறேன்,' என்று எழுதியுள்ளார்.

ஆனால், அரண்மனை கிளி படத்தின் எல்பி ரெக்கார்ட் மற்றும் கேசட் உறையில், என் தாயெனும் கோயிலை பாடலை எழுதியவர் பொன்னடியான் என்று எழுதப்பட்டுள்ளதால், இந்தப் பாடலை எழுதியவர் யார் என்கிற விவாதம் கிளம்பியுள்ளது.

உண்மையில் மாரிமுத்து எழுதியிருப்பது போல, அரண்மனைக் கிளியின் அனைத்துப் பாடல்களையும் வாலி மட்டுமே எழுதவில்லை. அவர் நான்கு பாடல்களை எழுதியிருந்தார். கவிஞர் முத்துலிங்கம் ஒரு பாடலையும், பிறைசூடன் ஒரு பாடலையும், பொன்னடியான் இரு பாடல்களையும் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னொன்று, தான் எழுதிய பாடலை பிற கவிஞர்களின் பெயரிலேயே வெளியிட்டு, அந்த கவிஞருக்கு சம்பளமும் தரச் செய்வது இளையராஜாவின் வழக்கம். சமீபத்தில்தான் இதுகுறித்து ஒரு கட்டுரையை  வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

1993-ல் வெளியான அரண்மனைக் கிளி படத்துக்காக இளையராஜா தன் கைப்பட எழுதிய பாடல் வரிகள் இடம்பெற்ற தாள்:

கபாலி, 2.0 படத்துக்காக அசராமல் உழைக்கும் ரஜினி - புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரே நேரத்தில் கபாலி படப்பிடிப்பிலும், 2.0 படப்பிடிப்பிலும் மாறி மாறி நடித்து வருகிறார். தற்போது '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. 'கபாலி' படத்தின் சென்னை காட்சிகளை படமாக்கிவிட்டு, ரஜினி அல்லாத காட்சிகளை மலேசியாவில் படமாக்கி வருகிறார்கள்.

'2.0' படத்தின் சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு, அமெரிக்கா செல்லவிருக்கிறார் ரஜினி. அங்கிருந்து பிப்ரவரி 1ம் தேதி மலேசியா திரும்பும் ரஜினி, 'கபாலி' இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். தற்போது ரஜினியின் தாடி இல்லாத கெட்டப்பை வைத்து படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க 2.0 படக்குழு பொலிவியாவில் '2.0' முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்த அனுமதி கோரியிருக்கிறது. அனுமதி கிடைத்தவுடன் அதற்கு தகுந்தாற் போல் படப்பிடிப்பு காட்சிகளை மாற்றியமைக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். எப்படியும் இந்த வருடம் கபாலியும், 2.0 படத்தை அடுத்த வருடத்திலும் வெளியிடும் யோசனையில் உள்ளதால் அசராமல் மாறி மாறி உழைத்து வருகிறாராம் ரஜினி.

மீண்டும் லைக்கா தன்னை லைக் பண்ணுகிறது-விஜய்? லைக்கா திட்டம்!

ராஜபக்சேவின் ரைட் ஹேண்டு, சிறீசேனாவின் ஸ்பெஷல் புல்லட் என்றெல்லாம் லைக்கா அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவை ஆங்காங்கே கிள்ளி வைத்த சமூக காவலர்கள் அத்தனை பேரும் போட்ட வெத்தலை சிவக்கலையே ராசான்னு மேலும் கொஞ்சம் சுண்ணாம்பு தேடப் போயிருப்பார்கள் போலிருக்கிறது. சமீபத்தில் எந்திரன்2 படத்திற்கு நாங்கதான்யா மொதலாளி என்று அமர்க்களமாக அறிவித்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்க போய்விட்டார் அல்லிராஜா. நடுவில் இதே நிறுவனம் சில படங்களை வெளியிட்டு கல்லா கட்டியது தனி.

கத்தி படத்தை தயாரித்து அதை வெளிக் கொண்டு வருவதற்குள், பட்ட பாட்டை உலகம் மறப்பதற்குள், அடுத்ததாகவும் விஜய்யுடன் இணைய திட்டமிட்டிருக்கிறதாம் லைக்கா. எவ்வளவோ சோதனைகள் ரிலீஸ் நேரத்தில் வந்தாலும், விஜய்யை பொறுத்தவரை அவரது சினிமா கேரியரில் கத்தி மிக முக்கியமான படம்தான் சந்தேகமில்லை. இந்த நிலையில் மீண்டும் லைக்கா தன்னை லைக் பண்ணுகிறது என்று தெரிந்தால், வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்?

மனப்பூர்வமாக சரி என்று கூறியிருக்கிறாராம்

மனோபாலாவுக்கு ஜெயலலிதா போட்ட உத்தரவு!

தன்னை திட்டியவர்களையும், அதிமுகவை விமர்சிப்பவர்களை மட்டுமே கட்சிக்கூட்டங்களில் விமர்சித்து பேச சொல்லி, ஜெயலலிதா தனக்கு உத்தரவு போட்டிருப்பதாக அதிமுக பேச்சாளரும் இயக்குநருமான மனோபாலா தெரிவித்துள்ளார். அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 99-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம், தஞ்சாவூரில் நடந்தது. அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிறப்பு பேச்சாளராக இயக்குநரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் அதிமுக மற்றும் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசினார். அவரைத்தொடர்ந்து மனோபாலா பேசும்போது, “எம்ஜிஆர் முதல்வராக இருக்கும்போது தான் வாழ்ந்த கும்பகோணத்துக்கு வந்தார். அங்கு ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்க வேண்டும் என்றார். அவருடன் வந்த உதவியாளர், 'நமக்கு எவ்வளவோ இடம் இருக்கும் போது நீங்க ஏன் அந்த வீட்டில் தங்குறீங்க?' என கேட்டார். 'நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது இந்த வீட்டினர்தான் உதவினாங்க. அதனால்தான்' என்றாராம்” என்று சொல்லிக் கொண்டே போக, அப்போது தொண்டர் ஒருவர் அவர் காதில், 'கருணாநியையும், ஸ்டாலினையும் திட்டி பேசுங்க' என்றார்.

“ஏம்பா, இது புரட்சி தலைவரோட பிறந்தநாள் கூட்டம். அவரை பற்றிப்பேசறேன். இப்பதான அமைச்சர் அவங்களை திட்டிட்டு கிளம்பினார். தன்னை திட்டுபவர்களையும், அதிமுகவை விமர்சிப்பவர்களையும் நீங்க விமர்சித்து பேச வேண்டும் என்றுதான் அம்மா எனக்கு உத்தரவு போட்டிருக்கிறார். திட்டங்கள், சாதனைகள் பத்தி பேச அமைச்சர்கள் இருக்காங்க” எனக் கூறி விட்டு, சம்பிரதாயமாக விஜயகாந்தையும், திமுகவையும் விமர்சித்துவிட்டு கிளம்பியுள்ளார்.

ஏழு பேருக்காக ஒட்டுமொத்தமாக கூடிய தமிழ்சினிமா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ் சினிமா முன்வந்துள்ளது. இதற்கான நடிகர் சங்கம் குழு, இயக்குனர்கள் சங்கம், பெப்சி போன்ற குழுவினர் கூட்டாக நேற்று கூடி பேட்டி அளித்தனர்.

அதில், இவ்வளவு காலம் அந்த 7 பேரும் சிறையில் தங்கள் வாழ்க்கையை கழிப்பது கொடுமையானது. சுப்ரீம் கோர்ட்டு இந்த 7 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டிருந்தது. அப்போது, அரசு விரும்பினால் 435-வது பிரிவின் கீழ் இவர்களை விடுதலை செய்யலாம் என்று அறிவித்தது. ஆனால் மத்திய அரசு அதற்கு உடன்படவில்லை. தற்போது எம்.ஜி.ஆர்.

நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிற இந்த நல்ல நேரத்தில் அந்த 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், திரைப்பட தொழிலாளர்கள் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து சங்கத்தினரும் இணைந்து சென்னையில் ஊர்வலம் நடத்தி முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டு உள்ளோம் என்று கூறினர்.

இனி டாக்டராச்சு, ஆக்ட்ராச்சு!பிச்சைக்காரன் பாட்டு! ‘நீக்குற ஐடியாவே இல்ல ’ -பாடலாசிரியர் தில்!

கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்… தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்! இப்படியொரு பாடல் விஜய் ஆன்ட்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம் பெற்றிருக்கிறது. “பீர்ல கைய வை. மோர்ல கைய வை. எங்க உசுருல வச்சே…? ஒழிச்சே புடுவேன் ஒழிச்சு!” என்று ஒவ்வொரு விஷயத்திற்கும் சினிமாக்காரர்களை சுற்றி சுற்றி அடிக்கும் உலகத்தில் இப்படியொரு பிரச்சனை வந்தால் சும்மாவா இருக்கும் உலகம்? சமூக ஆர்வலர்களும், கோட்டாவில் சீட் வாங்கி படிப்பை முடித்தவர்களும் இந்த வரிகளுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

பேஸ்புக் ட்விட்டர் வலை தளங்களில் விஜய் ஆன்ட்டனிக்கு எதிராகவும், பிச்சைக்காரன் படத்திற்கு எதிராகவும் பெரும் எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் அந்த பாடலை எழுதிய லோகன் என்ற பாடலாசிரியரை தொடர்பு கொண்டது.

“முதல்ல ஒரு விஷயத்தை இங்கே பதிவு பண்ணிடுறேன் சார். நானும் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவன்தான். நாட்ல நடக்காதது எதையும் நான் எழுதல. உயிர் காக்கும் கடவுள்களான டாக்டர்கள் எல்லாரையும் நான் குறை சொல்லல. சில இடங்களில் மக்களிடம் இருந்து பணம் பிடுங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்படுற டாக்டர்களைதான் நான் குறிப்பிடுறேன். ஒண்ணுமேயில்லாத விஷயத்துக்கெல்லாம் அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட்டுன்னு பணத்தை பிடுங்கி பரிதவிக்க விட்ட அனுபவம் எனக்கே இருக்கு. அதனால்தான் அப்படி எழுதினேன். எந்த எதிர்ப்பு வந்தாலும், அந்த வரிகளை நீக்கறதா இல்ல” என்றார் ஆக்ரோஷமாக.

இனி டாக்டராச்சு, ஆக்ட்ராச்சு!

தாரை தப்பட்டை கிழிந்தாலும், கெத்து காட்டினாலும், கதகளி ஆடினாலும் பட்டைய கிளப்பும் ரஜினிமுருகன்..!

இந்த புத்தாண்டின் முதல் நாளிலே தமிழ் சினிமா களை கட்டியது. அதுபோல் பொங்கல் திருநாள் அன்றும் நான்கு படங்கள் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.

பொன்ராம் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன், பாலா இயக்கி சசிகுமார் நடித்த தாரை தப்பட்டை, பாண்டிராஜ் இயக்கி விஷால் நடித்த கதகளி மற்றும் திருக்குமரன் இயக்கி உதயநிதி நடித்த கெத்து ஆகிய நான்கு படங்களும் ரசிகர்களின் ஆதரவை பெற்றாலும் எந்த படம் வசூல் ரீதியாக முன்னிலை வகிக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?

தாரை தப்பட்டை படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தாலும் வன்முறை காட்சிகளால் பெண்களின் ஆதரவை இழந்துள்ளது. கதகளி படத்தில் நிறைய ட்விஸ்ட் காட்சிகள் இருந்தும் க்ளைமாக்ஸ் திருப்தியை தரவில்லை என தெரிய வந்துள்ளது.

கெத்து படம் உதயநிதியின் மாறுபட்ட பரிமாணத்தை தொட்டு இருக்கிறது என்றே கூறலாம். இதில் ஒட்டுமொத்த ஆடியன்ஸை ரஜினிமுருகன் கவர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறான் என்றே பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் சொல்கின்றன.

திரை இசையில் திருப்பம் உண்டாக்கிய இளையராஜா: கிராமிய இசைக்கு புத்துயிர் அளித்தார்

தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.

"அன்னக்கிளி'' படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப் பார்த்தீங்களா'' எனத் தொடங்கிய இந்த இசையருவி, நதியாக ஓடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.

இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் கிராமம். 1943-ம் ஆண்டு பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அடுத்து ஆறாவதாக பிறந்தவர் அமர்சிங் என்ற கங்கை அமரன்.

தனது குடும்பம் பற்றி இளையராஜா கூறுகிறார்:

"நான் பிறந்தது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைபுரம் என்னும் கிராமத்தில். இப்போது அது தேனி மாவட்டத்தில் உள்ளது.

அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். ஊரில் அப்பாவை `கங்காணி' ராமசாமி என்றால்தான் தெரியும். அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளில் நான் ஐந்தாவது. ஆறாவது என் தம்பி அமரன் (கங்கை அமரன்).

எங்களுக்கு மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன். அடுத்து அக்காள் கமலம். அடுத்து பத்மாவதி. அடுத்தவர் அண்ணன் பாஸ்கர்.

1943-ம் ஆண்டு நான் பிறந்தேன். தமிழில் வைகாசி மாதம் 20-ந்தேதி. (3-6-1943)

அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிறந்த நேரத்தை கணித்த அப்பா, அம்மாவிடம் "இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகுதான் நீ போவாய்'' என்று கூறியிருக்கிறார்.

அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்' அம்மாவை பாதிக்கச் செய்துவிட்டது. "நீங்க என்ன சொல்றீங்க?'' என்று பதட்டத்துடன் கேட்டிருக்கிறார்.

பதிலுக்கு அப்பா, "எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய்விடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

அப்பா அவர் சொன்னதுபோலவே என் 9-வது வயதில் (1952-ம் வருஷம் ஏப்ரல் 10-ந்தேதி) காலமாகிவிட்டார். அப்பா இறக்கும்போது நான் நாலாவது படித்துக் கொண்டிருந்தேன். உயிர் பிரியும் நேரத்தில் என் கையையும் அண்ணன் பாஸ்கரின் கையையும் பாவலர் அண்ணன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, அண்ணன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அத்தோடு உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.

எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது ராஜையா என்று மாற்றி விட்டார். ஆனால் `ராசையா' என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டேன். பட்டிக்காடு அல்லவா! `ராஜையா'வுக்கு பதில் ராசையாதான் அவர்களுக்கு சுலபம்.

நான் படிப்பிலும் பெரிய விசேஷம் கிடையாது. பண்ணைபுரத்தில் பெருமாள் வாத்தியார் என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். அதில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.

பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் சினிமா பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஊரில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதில் நானும் பாஸ்கர் அண்ணனும் அடிக்கடி சினிமா பார்க்கச் செல்வது வழக்கமாகி விட்டது.

இப்படி பார்த்த ஒரு படம் பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த "லைலா மஜ்னு.'' இந்தப் படத்தை பாடல்களுக்காக மூன்று நான்கு முறை பார்த்தோம். பாடல்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடமாகி விட்டது. அண்ணன் பாவலர் எப்போதுமே அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்.

அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி எனக்குள் ஆழமாக பதிந்து விட்டது. ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, கயஸ் மட்டும் `லைலா லைலா' என்று தன்னுடைய சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பான். இதைப் பார்த்த ஆசிரியர் கயஸின் கையில் பிரம்பால் விளாசி விடுவார். கை புண்ணாகி விடும். எங்கள் வகுப்பிலும் ஆசிரியர் ஏதோ எழுதச் சொல்லியிருந்தார். முந்தின நாள் இரவு ஆட்டம் பார்த்த ஞாபகத்தில் சிலேட்டில் `லைலா லைலா' என்று எழுதியிருந்தேன்.

என்ன நடந்தது தெரியுமா? படத்தில் கயஸுக்கு விழுந்த அடியை விட எனக்கு பலமாக அடி விழுந்தது. கயஸுக்கு வருத்தப்பட என் மாதிரி ரசிகர்கள் இருந்தார்கள். எனக்காக வருத்தப்படத்தான் யாருமில்லை.

இந்தப் படத்தின் பாடல்களால் - நான் வளர வளர, கயஸை விடவும் லைலா மீது எனக்கு காதல் அதிகமாகி விட்டது. அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்திருந்தார். பின்னாளில் இவரே என் மானசீக குரு ஆனார்.

அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) பாட்டு, நாடகம், கச்சேரி என்பதில் ஆர்வம் அதிகம். திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய வித்வானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் கொஞ்சம் சங்கீதம் கற்றிருந்தார். இசை எனக்கு அறிமுகமானதும், ஆர்வமானதும் அண்ணனால்தான். நான் ஓரளவுக்கு ராகங்கள் பற்றி தெரிந்து கொண்டதற்குக் காரணமும் அவர்தான். இப்படித்தான் எனக்கு ராகங்கள் கல்யாணியும், சங்கராபரணமும், கரகரப்பிரியாவும், தோடியும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அளவுக்கு தெரியவந்தது.

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!

கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம்.


1=ஆயில் புல்லிங்
~~~~~~~~~~~~~~~~~
ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்,

2=கிராம்பு
~~~~~~~~~~~~~
2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்,

3=உப்பு தண்ணீர்
~~~~~~~~~~~~~~~~~~~
அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்,

4=பூண்டு
~~~~~~~~~~~
3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்,

5=மஞ்சள்
~~~~~~~~~~~~~
மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்,

6=வேப்பிலை
~~~~~~~~~~~~~~
வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் ,

7=உணவுமுறைகளில் மாற்றம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.

8=சர்க்கரையைத் தவிர்க்கவும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுத்திரிக்கரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொண்டால், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதனால் பற்களில் சொத்தையும் அதிகரிக்கும். உணவுகளில் இனிப்பு வேண்டுமானால், தேனைக் கலந்து கொள்ளலாம்.

“கருணாநிதி..கருணாநிதி.. .கருணாநிதி!” – கோர்ட்டில் ஆஜரானார் தி மு க தலைவர்!

முதல் – அமைச்சர் ஜெயலலிதா 4 ஆண்டுகளில் சாதித்தது என்ன என்கிற தலைப்பில் வாரப்பத்திரிகை ஒன்றில் கடந்த நவம்பர் மாதம் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.இதனை முரசொலி நாளிதழில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கட்டுரையாக எழுதி இருந்தார்.இதையடுத்து கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது முதல் – அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை நீதிபதி ஆதிநாதன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இதையடுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் ஜனவரி 18–ந்தேதி இருவரும் கோர்ட்டில் ஆஜராகி வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இதற்கு முன்பு கருணாநிதி மீது பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட போதெல்லாம் வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா தொடர்ந்த இந்த அவதூறு வழக்கில் தடை உத்தரவு எதுவும் பெறப்போவதில்லை என்றும், விசாரணைக்காக நானே கோர்ட்டில் நேரில் ஆஜராவேன் என்றும் கருணாநிதி அறிவித்தார்.

அதன்படி கருணாநிதி இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை ஹைகோர்ட் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கை மார்ச் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.

பின்னர் மீடியாக்களைச் சந்தித்த கருணாநிதி, “தமிழர்கள் அனைவரும் கட்சிச் சார்பில்லாமல், ஒன்று பட்டு தமிழ்நாட்டு நன்மைக்காகப் பாடுபட வேண்டும் என்பதே எனது விருப்பம்.அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகியிருப்பதன் மூலம் நீதி என்றைக்கும் வெல்லும். அந்த நீதியைப் பின்பற்றி நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.அவதூறு வழக்கு களை தொடர்ந்து தொடுப்பது சரியானதல்ல என சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்துள்ளது.இத்தகைய சூழலில் அவதூறு வழக்குகளை எல்லா கட்சிகள் மீதும் தொடுத்துக் கொண்டு வரும் அ.தி.மு.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்று கூட வேண்டுமென்று நான் வற்புறுத்த விரும்பவில்லை. இது அவர்களாகப் பார்த்து எடுக்க வேண்டிய முடிவு. அந்த முடிவுக்கு நானும் கட்டுப்படுவேன். பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை இந்த அரசு திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கை என் உள்ளத்திலே இருக்கிறது என்பதை நாடு நன்றாக அறியும்.”என்று தெரிவித்தார்

“நானும் கட்சி அரம்பிச்சிட்டேனே!” கூடங்குளம் உதயகுமார் அறிவிப்பு

“போராடும் மக்களுக்கிருக்கும் ஒரே வழி அரசியல் அதிகாரத்தை ஏற்றெடுப்பதுதான். வெறுமனே முழக் கம் எழுப்பிக் கொண்டும், விண்ணப்பம் கொடுத்துக் கொண்டும் இராமல், மக்களை அரசியல் படுத்துவ தும், முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும்தான் ஒரே வழியாக இருக்கிறது” என்று கூறி யிருந்த கூடங்குளம் அணு உலை எதிர்பாளர் குழு தலைவர் சுப ..உதயகுமாரன், அதன்படி இன்று புதியக் கட்சியை தொடங்கி வைத்து பேசும் போது “படித்தவர்களுக்கு வேலையில்லை.வேலையில் லாததால் வருமானமில்லை. இளைஞர்கள் எல்லாம் விரக்தியான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். வருங்காலமும் இருண்டு கிடக்கிறது.இதை அப்படியே விட்டு விடக்கூடாது. அடுத்தத் தலை முறையை நாம் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பச்சைத் தமிழகம் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிக்கிறோம்.“வளம், வாழ்க்கை, வருங்காலம்”, என்ற அடிப்படையில் அரசியலை முன்னெடுக்க லாம் என நினைக்கிறோம்.’பச்சைத் தமிழகம்’ பெயர் குறிப்பிடுவது போல பசுமை அரசியலை நாங் கள் முன்னெடுக்கிறோம். இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. வாழ்வாதாரங்கள் சிதைக்கப் படுகின்றன. நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் செத்து மிதப்பதை பார்க்கிறோம்.நீர் ஆதாரங்கள் அழிக் கப்பட்டிருக்கின்றன. நம்மிடம் உள்ள நீர் ஆதாரங்களை பாதுகாக்கத் தவறி அண்டை மாநிலங் களிடம் தண்ணீர் கேட்கிறோம். லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுகின்றன. வருங்காலத்தினரிடையே புதிய நம்பிக்கையை, ரத்தத்தை பாய்ச்சுவதுதான் ‘பச்சைத் தமிழகம்’”என்றார்

மேலும் ’பச்சைத் தமிழகம்’ கட்சியின் தனித்துவம் என்ன? எதற்காக இந்த அரசியல் கட்சி?தமிழகத் தில், மக்களுக்கு பாதிப்பில்லாத வளர்ச்சி, இயற்கைக்கு கேடு விளைவிக்காத திட்டங்கள், அணு சக்தி இல்லாத தமிழகத்தை முன்னெடுக்க 18-ஆம் தேதி கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளியும் சமூக போராளியுமான சுப.உதயகுமார் தலைமையில் ’பச்சைத் தமிழகம்’ என்னும் அரசியல் கட்சி சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் தொடங்கப்பட்டது.இந்த கட்சியில் உள்ளவர்களுக்கு 10 கட்டளைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

1. கட்சிக்கு நிதி திரட்டும் போது பன்னாட்டு நிறுவன முதலாளிகளிடம் நிதி கேட்க கூடாது. திரட்டப்படும் நிதிக்கு உரிய முறையில் கணக்கை காட்ட வேண்டும்.

2. இயக்கத்தில் யாருடைய பெயருடனும் எந்த விதமான பட்டங்களையும் சேர்த்து அழைக்கக் கூடாது. திரு, தோழர், அண்ணன், அக்கா, தம்பி, தங்கை ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

3.பொன்னாடைகள், ஆளுயர மலர் மாலைகள், மலர்கிரீடம், செங்கோல், பணமாலைகள் யாரும் அணிவிக்கக் கூடாது. புத்தகங்கள், கைத்தறித் துண்டுகள் வழங்கலாம்.

4. தனிப்பட்ட தலைவர்களுக்கு பிரம்மாண்ட ‘கட்-அவுட்’ வைக்கக் கூடாது. சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த சிறிய பதாகைகளை வைக்கலாம்.

5. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொடிக்கம்பங்கள் வைக்கக் கூடாது. தனிப்பட்ட தலைவருக்கு சிலைகள் வைக்கக் கூடாது.

6. பொதுச்சுவர்களிலோ, அரசு கட்டடங்களிலோ சுவர் விளம்பரங்கள் வைக்கக் கூடாது. சமூக வலைத்தளங்கள், நேரடியாக மக்களை சந்தித்து கருத்துக்களை பரப்ப வேண்டும்.

7. பணம், பிரியாணி, மது ஆகியவற்றை கொடுத்து, மக்களை ஏமாற்றி அரசியல் செய்யக் கூடாது.

8. பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை சமமாக பார்க்க வேண்டும். சாதி, மத வேற்றுமை பார்க்கக் கூடாது.

9. போதைப் பொருட்கள், கட்டப்பஞ்சாயத்து, சூதாட்டம், வன்முறை, கட்டாய நிதி வசூல் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது.

10. பதவி, புகழ், பணம் ஆகியவற்றுக்காக அல்லாமல் மக்கள் சேவை செய்ய வேண்டும்” என கூறினார்.

“இந்தியாவின் சாணக்யதனத்தால் இந்தியாவிடம் மண்டியிட்ட நேபால்………”

உலகத்திலே ஐரோப்பாவை அடுத்து இந்திய நேபாள் நாட்டினர் மட்டுமே இரண்டு நாட்டுக்கும் பாஸ்போர்ட் கூட இல்லாமல் போய் வர வேலை செய்ய குடியமர முடியும். அப்படி ஒரு அன்னோன்ய நாடாக இருந்த இந்திய நேபாள் ரிலேஷன் 2001 மன்னராட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து நேபாளுக்கு கெட்ட நேரம் ஆரம்பதித்தது. அதற்க்கு பிறகு 2006 ஆம் ஆன்டு வரை உள் நாட்டு போர் 2006 ஆம் ஆண்டு ஒரு வகையில் முடிவுக்கு வந்தாலும் பிரச்சினை நேபாளுக்கு தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருந்தது.

சமீப கால அதாவது 2015 ஆம் ஆண்டு நேபாளுக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஏற்கனவே நில நடுக்கம் காத்மன்டு மற்றும் பல நேபாள் முக்கிய நகரங்களுக்கு வந்து அனேக மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் சென்றது குறிப்படதக்கது. அதன் பிறகு 20 செப்டம்பர் 2015 கொண்டு வர அரசியல் சட்ட மாற்றத்தை இந்தியா எதிர்த்தது. அதாவது மாதேஷி என்னும் ஒரு இனத்துக்கு இந்த புது கான்ஸ்டிடியூஷனில் மிகுந்த பாதிப்புகள் உண்டு பண்ணியது. நேபாள் பெண்ணை மனப்பது, நேபாள் நாட்டின் குடியுரிமை மற்றூம் அவர்களுக்கான சம உரிமை மற்றூம் உள்ளூர் போலீஸின் அட்ராசிட்டியை எதிர்த்து இந்தியா கோரிக்கை வைத்த போது நேபாள் இதை மாற்ற இயலாது என உறுதியுடன் கூறியதால் இந்தியா தன் சானக்யதனத்தை காட்ட தொடங்கியது.

ஏற்கனவே 1989 ஆம் ஆண்டு நேபாள் சைனாவிடம் ஆயுதம் வாங்க எத்தனித்த போது 21 நேபாள் இந்தியா பார்டர்களில் 19 பார்ட்டர்களை இந்தியா மூடி நேபாளை ஸ்தம்பிக்க வைத்தது. இப்போதும் அது போல அனைத்து எல்லைகளையும் இந்தியா மூடியதால் இந்தியாவை பெட்ரோல் டீஸல் மற்றூம் காய்கறி முதல் மருந்துகள் வரை இந்தியாவை நோக்கி எதிர்பார்த்து அன்றாடம் வாழ்க்கையை நடத்தும் நேபாளுக்கு சோதனைகாலம் ஆரம்பம் ஆகியது. 104 ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோல் என விற்ற பெட்ரோல் 300 – முதல் 500 வரை லிட்டருக்கு விற்க ஏற்கனவே 400 கோடி அமெரிக்க டாலர்கள் நேபாளின் நில நடுக்க பேரிடருக்கு வந்த உதவியை அரசு மக்களூக்கு வழங்காமல் பெரும் போராட்டம் எங்கும் வெடிக்க நேபாள் இனிமேல் தனியார் கார், வண்டிகள் தொழிற்சாலைக்கு பெட்ரோல் இல்லை என அறிவிக்க அக்டோபர் 1 2000க்கு மேற்பட்ட தொழிற்ச்சாலைகள் முட, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மூன்றூ முதல் நாலு நாள் வரை வரிசையில் காக்கும் கொடுமை இன்றூ அந்த நாட்டில் காணமுடியும். அனைத்து வெளி நாட்டின் விமானங்களுக்கு பெட்ரோல் இல்லாமல் போக அனைத்து உள் வெளி நாட்டி சர்வீஸ்களும் 85% போக்குவரத்தை நிறுத்த மக்கள் நடராஜா மற்றூம் சைக்கிள் சவாரி மூலம் தான் பயணத்தை தொடர முடிந்தது.

நேபாள் சைனாவுடன் பெட்ரோல் ஒப்பந்தத்தை போட இந்தியா இன்னும் இறுக்கி இருந்த கொஞ்ச நஞ்ச முக்கிய எல்லைகளையும் மூடி நெருக்கடி கொடுக்க கடைசியில் நேபாள் மண்டியிட்டு இந்தியாவின் வழிக்காட்டுதலின் படி ஆட்சி நடத்துவதாக அறிவித்து கையேந்தி நிற்பது தான் ஆக லேட்டஸ்ட் செய்தி. போன மாதம் இந்தியாவின் போலீஸ் நாலு நேபாள் கடத்தல் காரர்களை அந்த நாட்டுகுள் துரத்தி சென்று சுட்டு கொன்று நேபாளை மிரள வைத்தது. ஐ நா, அமெரிக்கா, பிரிட்டன் என அத்தனை நாட்டுக்கும் நேபாள் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுங்கள் என கூறியும் எந்த ஒரு நாடும் இதை கண்டுகொள்ளவே இல்லை என்றாலும் இந்தியாவின் பீகார் தேர்தல் பிஜேபிக்கு சாதகாமாக இல்லாமல் போனது இதுவும் ஒரு விஷயமே.

கெத்து படத்தின் ஆக்ஷன் மூடிலிருந்து விலகி வரவில்லை போலிருக்கிறது! ஸோ சேட்!

மத்தளத்துக்கு மட்டும்தான் ரெண்டு பக்கம் இடி! இந்த சினிமா விமர்சகர்களுக்கு திரும்புகிற பக்கமெல்லாம் இடி! நல்லாயிருக்கு என்று எழுதினால், துட்டு எவ்ளோ வாங்குன மாப்ளே என்பார்கள். நல்லாயில்லேன்னா துட்டு வர்லீயா மாப்ளே என்பார்கள். அட மீடியமா எழுதி வைக்கலாம்னா, என்னவோ போப்பா. வாங்குன கொஞ்ச காசுக்கு கொஞ்சமா சொம்படிச்சுருக்கே என்பார்கள். க்ரிட்டிக்ஸ் கண்டிஷன் இப்படி க்ரிட்டிக்கல் சுச்சுவேஷனில் இருக்க, நிஜமாகவே எரிச்சல் பட்டிருக்கிறார் உதயநிதி.

சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வந்திருக்கும் படம் கெத்து. விமர்சகர்களின் பார்வையில் இப்படம் மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. முதலிடம் ர.மு. இரண்டாமிடம் க.க. நான்காமிடம் தா.த. இந்த உண்மையை சொல்லும் விமர்சகர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வந்து திட்டி தீர்த்திருக்கிறார் உதயநிதி. அவர் ஒருவரை குறிப்பிட்டு எழுதியிருக்கிறாரா, அல்லது கெத்துவை கிழித்த எல்லாரையும் எழுதியிருக்கிறாரா என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், எரிச்சலில் இருக்கிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

நான் விமர்சகர்களுக்காக படம் எடுக்கவில்லை. படம் பார்க்க வரும் மக்களுக்காகதான் என்று கூறியிருக்கும் அவர், படத்தில் வருகிற ‘பார்’ சண்டைக்காட்சியின் முதல் குத்து, பணம் வாங்கிக்கொண்டு விமர்சனம் எழுதும் டுபாக்கூர் விமர்சகர்களுக்கு’ என்றும் கூறியிருக்கிறார்.

இன்னும் கெத்து படத்தின் ஆக்ஷன் மூடிலிருந்து விலகி வரவில்லை போலிருக்கிறது! ஸோ சேட்!