Friday 29 January 2016

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…


மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:


சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.


சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.


இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.


மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:


மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.


உறக்கத்திலேயே இறந்துவிடுவர். தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

கதை சொல்லும் ஜெயலலிதாவின் கார்

 சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னாள் சென்னை வீதிகளில் ஒரேயொரு ஃபோர்ட் கார் மட்டுமே ஓடியது. அந்தக் காருக்கு சொந்தக்காரர் அன்று முன்னணி திரைநட்சத்திரமாக இருந்த இன்றைய முதல்வர் ஜெயலலிதா. அந்தக் கார் அன்றைய ஜெயலலிதாவை - காரின் பாஷையில் பேபி - குறித்து பேசினால் எப்படியிருக்கும்? இப்படியொரு ஐடியா அந்தக் காலத்திலேயே எழுந்து தனி கட்டுரையே எழுதியிருக்கிறார்கள். மினுக்கி எழுதப்பட்ட ஜிகினா கட்டுரைதான் என்றாலும் படிப்பதற்கு தமாஷாகவே இருக்கும். இனி ஓவர் டு ஃபோர்ட் கார்.

முதன் முறையாக சென்னைக்கு வந்தபோது எனக்கு ஒரே பெருமை. நான் சுமந்து செல்ல வேண்டியது ஒரு பிரபல நடிகை. நடிகையின் கார் என்ற முறையில் எவ்வளவு பெரிய விழாக்களிலும் ஆடம்பர விருந்திலும் இந்த ஃபோர்ட் டுகூனு எம்.எஸ்.எம். 9379 க்கு தனி வரவேற்புண்டு. எந்த இடத்திலும் ஒயிலாக ஓசையெழுப்பாமல் நான் போனாலும் எல்லோரும் என்னையே கவனிப்பார்கள். ஆரம்பத்தில் எனக்கு தலைக்கனமாகவே இருந்தது. என் அழகையும் அலங்காரத்தையும் கண்டுதான் அத்தனை பேரும் இப்படி விழுந்தடித்துக் கொண்டு பார்க்கிறார்கள் என்று நினைக்க நினைக்க, எனக்கு தற்பெருமை பெருகியதிலும் வியப்பில்லைதான். போதாததற்கு என் குலத்தைச் சேர்ந்த பல கார்கள் இந்த அகன்ற நகரத்தில் இருந்தாலும் என் குடும்பத்தைச் சேர்ந்த கார் நான் ஒன்றுதான் என்றும் தெரிந்து கொண்டேன். எனக்கு ஒரு டூப் இல்லை. பின்னர்தான் நான் சுமந்து செல்லும் நடிகைக்காகதான் அப்படி ஒரு பரபரப்பு என்பதையும் புரிந்து கொண்டேன்.

என்னால் அவருக்கு பெருமை என்பதைவிட அவரால் எனக்குப் பெருமை என்றுதான் சொல்ல வேண்டும். மாம்பலம் சிவஞானம் தெருவிலிருந்து கிளம்பி, உஸ்மான் ரோடு வழியாக, ஆற்காட் ரோட்டில் ஒரு நாளைக்கு நான்கு முறையாவது நான் செல்லும் போது, ஒவ்வொரு முறையும் அனைவரின் பார்வையும் என் மீது திரும்பும் பெருமையை நீங்கள் எனக்கு தந்தாலும் சாp, நான் சுமக்கும் நடிகைக்குத் தந்தாலும் சாp... எனக்குத் திருப்திதான்.





சென்னைக்கு வந்ததும் அழகு நகரத்தின் அத்தனை மூலை முடுக்குகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் எனக்கு. ஆனால் முடியவில்லை. இருப்பினும் பிரபலமான பல இடங்களை நான் சுற்றிப் பார்த்துவிட்டேன். என் வேகத்திற்கேற்ற அகன்ற சாலைகள், என் ஊரைப்போல் (நான் பிறந்தது அமெரிக்கா தெரியுமில்லே) இங்கு இல்லாதது எனக்கு ஒரு வருத்தம்.

நான் சுமக்கும் பிரபல நடிகை ஜெயலலிதாவை நான் பேபி என்று அழைக்கிறேன். எனக்கு அவர் பேபிதான். குழந்தை மனம் கொண்டவரானதால் மட்டும் அப்படி கூப்பிடவில்லை. ஒரு குழந்தையை தாய் சுமப்பது போல் நான் என் பேபியை சுமக்கிறேன். ஆடாமல் அசையாமல் கண்ணிமைப்போல் காக்கிறேன். அந்தக் கலைச்செல்வியை லட்சக்கணக்கானவர்களின் கனவுக் கன்னிகையை காக்கும் பொறுப்பையல்லவா நீங்கள் எனக்கு தந்திருக்கிறீர்கள். அப்பாடி.. எவ்வளவு பெரிய பொறுப்பு.

என் பேபிக்கு இசையென்றால் உயிர். அதற்காக ரேடியோ ஒன்று என்னிடத்தில் உண்டு. வெயில் காலங்களில் கண்ணாடியைத் திறந்து போட்டுச் செல்ல முடிவதில்லை. தூசி படியும் என்பது மட்டுமல்ல, என் பேபியின் மேக்கப்பும் கலையும். ஆனால் குளிர் காலங்களில் வெதுவெதுப்பாகவும் வெயில் காலங்களில் குளுகுளுப்பாகவும் இருக்க தனித்தனி வசதிகள் செய்து கொண்டிருக்கிறேன். நான் பகல் வேளைகளில் கண்ணை மூடிக் கொண்டேதான் செல்வேன். இரவு தேவைப்படும்போது மட்டும் கண் திறந்து கொள்வேன். என் கண்ணிலிருந்து வரும் ஒளி எவ்வளவு பிரகாசமாக இருக்கும் தெரியுமா?

 பேபியை மந்து கொண்டு நான் முதன்முறையாக மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றேன். காசிதான் என்னை ஓட்டிச் சென்றார். கண்போல் என்னை காத்து வரும் அவர் மீது கோபம் கோபமாக வந்தது. பேபி விமானத்தில் ஏறி ஜப்பான் சென்றுவிட்டார். நான் தனியாக திரும்பி வரும்போது காசிக்கு மட்டும்தான் தெரியும் என் மனக்கஷ்டம். என்னிடம் ஒரு வார்த்தைகூடச் செல்லாமல் பேபி போய்விட்டாரே... இந்தக் காசியாவது ஏன் முன்னாலேயே சொல்லவில்லை? சொல்லியிருந்தால்...?
FILE

அந்த வருத்தத்தில் நான் பேபி போய் திரும்பி வரும்வரை ஷெட்டிலேயே கிடந்தேன். நான் பேபியைத் தவிர யாரையும் சுமக்கத் தயாராக இல்லையே. கொஞ்ச நாளிலேயே என் வருத்தம் குறைந்தது. ஆனால் அந்த விமானத்தின் மீதிருந்த கோபம் மட்டும் தணியவே இல்லை. அதற்கொரு சந்தர்ப்பமும் கிடைத்தது - பழி தீர்த்துக் கொள்ள.

சுமதி என் சுந்தரி படப்பிடிப்பில் கலந்து கொள்ள பேபி தேக்கடிக்குப் போகும் போது என்னையும் அழைத்துச் சென்றார். அதுதான் என் லாங்கஸ்ட் ட்ரிப். இங்கே சென்னையில் ஜனாதிபதியின் பரிசளிப்பு விழா மறுநாள் நடக்க இருந்தது. எனக்கு அந்த விழாவில் அப்படி ஜிம் என்று போய் நிற்க வேண்டுமென்று ஆசை. பேபிக்கும் பரிசு வாங்க துடிப்பு.

மாலையில் அங்கிருந்து கிளம்பி காலையில் சென்னைக்கு வந்துவிட்டேன். ஜனாதிபதி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு இரவு கிளம்பி, தேக்கடிக்கு மறுநாள் காலையில் போய்ச் சேர்ந்தேன். விழாவில் கலந்து கொண்ட திருப்தி மட்டுமல்ல எனக்கு. அந்த விமானத்தின் மீதிருந்த கோபத்தையும் தீர்த்துவிட்ட திருப்தி. மணிக்கு நூறு மைல்களுக்கு மேலேயே போய் பேபியின் சபாஷ் பெற்றதோடு விமானத்தை நம்பியிருந்தால் நான் போய் இதற்குள் வந்திருக்க முடியாது என்ற பாராட்டும் வேறு கிடைத்தது. போதாதா எனக்கு, தலைகால் புரியவில்லை.

பெரிய ஸ்டாரின் கார் ஆயிற்றே நீ... ஒரு படத்திலேயாவது நடிச்சிருக்கியா, அட்லீஸ்ட் இன் ஏ பிளாக் அண்ட் ஒயிட் பிக்சர்? என்று என் பிரண்ட் பிளிமத் எப்போதும் கேட்பான். உங்களுக்குதான் பேபியிடம் ரொம்ப இது இருக்கே... நீங்களாவது எனக்கு சிபாரிசு செய்யக் கூடாதா? ப்ளீஸ்.

1972 ல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையிலிருந்து அன்று வெளிநாட்டு கார்களின் மீதிருந்த பிரேமையையும், ஜெயலலிதா மீதிருந்த ரசிக பற்றையும் புரிந்து கொள்ளலாம். நமது பாலாபிஷேக ரசிகர்களுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாதவர்கள்தான் அப்போதும் இருந்திருக்கிறார்கள் என்ற திருப்தியை இந்த கட்டுரை தருகிறது. 

ஆங்ரி ஏஞ்சல்... ஆவ்ஸம் மேடி..! - இறுதிச் சுற்று 'நாக்-அவுட்' விமர்சனம்

தமிழில் வெளிவந்த 'ஸ்போர்ட்ஸ் சினிமா'க்களை நாக்-அவுட் செய்திருக்கும் இறுதிச் சுற்று!
குத்துச் சண்டை வெற்றியையே தன் வெறியாகக் கொண்டு அஸோசியேசன் அரசியலால் ஒலிம்பிக் கனவு தகர்ந்து போனாலும் ஒரு வெற்றிகரமான, முரட்டுக்  கோச்சாக இருக்கிறார் மாதவன்.

நேர்மையாக இருக்க நினைக்கும் எல்லோருக்குள்ளும் பொங்கி வழிகிற ரௌத்திரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிற காரணத்தினால் மீண்டும் அஸோசியேஷ‌ன் தலைமையினால் டெல்லியிலிருந்து, ஒரு சவாலோடு சென்னைக்கு தூக்கி அடிக்கப்படுகிறார். அந்தச் சவால் "அங்கிருந்து ஒரு சாம்பியனைக் கொண்டு வா பார்கலாம்' என்பதே.

சென்னையில் ஜுனியர் கோச்சாராக இருக்கும் நாசரால் கைகாட்டப்படுகிற மும்தாஜ் சொர்க்காரை விட அவள் தங்கை ரித்தீகா சிங்கிடம்,  தன்னிடம் இருக்கும் வேகமும், வெறியும், பாக்ஸிங் ஆர்வமும் இருப்பதைக் காண்கிறார் மாதவன். அக்காவை போல் பாக்சிங் ஆர்வத்தினால் அல்லாமல் மாதவன் தரச் சம்மதித்த  பணத்துக்காக பயிற்சிக்கு செல்கிறார் ரித்திகா.

கோபமும் திமிரும் தன்னைவிட இரண்டு மடங்கு இருக்கும் ரித்திகாவை கட்டுக்குள் கொண்டு வந்து அவருக்கு பயிற்சி அளிக்கிறார் மாதவன். ஆனால், அவரை சாம்பியன் பாக்ஸர் ஆக்கும் லட்சியத்துக்கு ரித்திகாவின் முரட்டுப் பிடிவாதம், அவள் அக்காவின் பொறாமை,  அஸோசியேஷன் அரசியல் எனப் பல தடைக் கற்கள்.  இதையெல்லாம் மீறி அவர் வென்றாரா இல்லையா என்பதே இறுதிசுற்று.

கலைந்த கேசம், இரும்பு தேகம், முரட்டு கோபம்... வாவ்... இது மேடி வெர்ஷன் 2.0. எள்ளலும் முரட்டுப் பிடிவாதமும் கொண்ட கோச்சாக. திடமான, தெளிவான, திமிரான வீரனாக அட்டகாசம். ரிங்கில் சண்டை நடக்கும்போது கீழேயிருந்து வெறியுடன் ஊக்கப்படுத்துவது, நடப்பதையெல்லாம் மிக அமைதியாகப் பார்த்துக்கொண்டே மூர்க்க ரியாக்ஷன் கொடுப்பது, ரித்திகாவின் வேகத்தைக் கண்டு அவர் செய்யும் சேட்டைகளை மிகஅலட்சியமாகப் புறந்தள்ளிவிட்டு அவருடைய திறமையை வெளியே கொண்டுவருவதற்காகப் போராடுவது என 'சக்தே' ஷாருக்கையே சமயங்களில் லெஃப்டில் அடித்து எகிறுகிறார். படம் முழுக்க அவ்வளவு எகிறிவிட்டு, க்ளைமாக்சில் சட்டென பணியும்போது வெளிப்படும் ஒரு இயலாமை... க்ளாஸிக். அப்போதும் '***** நீ அவ்ளோதான்டா' என்று அடக்கப்பட்ட கோபத்துடன் எகிறுவது..... ஆவ்ஸம்... ஹேண்ட்ஸம் மேடி!

பிரியாணி, தனுஷ் படம், அம்மாவுக்கு புது சேலை என‌ இவைகளில் திருப்திய‌டைகிற பெண்ணாக அறிமுகமாகும் ரித்திகா, க்ளைமாக்சில் சர்வதேச சாம்பியனாக பிரமாண்ட பிரமிப்பூட்டுவது... மெஸ்மரிச மேஜிக்! 'நீ கொடுத்த காசுக்கு ரெண்டு மணி நேரம் முடிஞ்சிருச்சு.. அவ்ளோதான்' என மாதவனை தெறிக்க விடுவதும், மாதவனை வெறுப்பேற்ற போட்டியில் வேண்டுமென்றே ஃபவுல் செய்துவிட்டு ரிங் கார்னரில் கெத்தாக நிற்பதாகட்டும், 'முதல் தடவை காதல் சொன்ன எனக்கே அந்தர் ஆகலை. உனக்கு என்ன?' என சேலையில் செமத்தி கெத்து காட்டுவதும், கடைசிப் போட்டி முடிந்ததும் குரங்குக் குட்டியாக மாதவன் இடுப்பில் தாவிக் கொள்வதும்... செல்லம் பின்னிட்டடா..! ஒவ்வொரு அரை மணி நேரங்களிலும் தன் கேரக்டரின் வெயிட் ஏற்றிக் கொண்டே செல்லும் ரித்திகா, இறுதியில் பன்ச் வெடிக்கும்போது... அதகளம். லவ் யூ ஆங்ரி ஏஞ்சல்!

ஜூனியர் கோச் நாசர், மாதவனுக்கு எப்போதுமே ஆதரவளிக்கும் ராதாரவி (இவர் மாதவனுக்கு யார் என‌ வெளிப்படும் காட்சி... அள்ளு). 'தண்ணியடிச்சா லிவர் கெட்டுப் போயிரும்ல. அதான் தண்ணியடிக்கும்போது லிவர் சாப்பிடுறேன். அப்போ இந்த லிவர்தானே கெட்டுப் போகும்' என சலம்பும் நாசர், 'நான் சாமிக்கண்ணு இல்லை... சாமுவேல்... நீ மதி இல்லை.... மடோனா' என கிறுகிறுக்கும் காளி வெங்கட் என அனைவரும் நச் காஸ்டிங்.

இயக்குநர் சுதா கொங்க்ரா மணிரத்னம் பட்டறையிலிருந்து வந்தவர் என்பத‌ பளிச் விசுவல்களில் நிரூபிக்கிறார். 2011 செம்ப்டம்பரில் மாதவனிடம் சொல்லபட்ட இந்த கதைக்காக ஷீட்டிங், போஸ்ட் புரொடக்ஷ‌ன் போக இரண்டரை ஆண்டுகள் பெண்கள் குத்துசண்டை குறித்த விபரங்களுக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுற்றி இருக்கிறார் என்பது படத்தின் டிடெய்லிங்கில் தெரிகிறது. க்யூடோஸ் சுதா!

ஒரே சமயத்தில் இந்தி, தமிழ் பேசும் சினிமாவில் அந்நியத்தன்மை வந்துவிடக் கூடாது, சென்னை குப்பத்துப் பெண் எப்படி இவ்வளவு பளிச்சென இருப்பார்.. இவற்றை சமாளிக்க  குப்பத்தில் சேட்டுப் பெண் என கோர்த்திருப்பது... குட்!

ச‌ந்தோஷ் நாராயணனின் இசை விவேக் மற்றும் முத்தழிழின் பாடல் வரிகளை அழகாக படத்துடன் பொருத்துகிறது. கதைக்கு பொருந்தி அமைந்துள்ளது. 'வா மச்சானே...' பாடல் மெட்டு மட்டும் எங்கேயோ கேட்ட ரகம். 'பேன்ட் கழட்டிட்டு ஆள் செலக்ட் பண்ற ஆள் இல்லை நான்', 'அவ உன்ன மாதிரி இல்ல... உன்னையே தூக்கிச் சாப்டுருவா!',
'ஆயிரம் பேருக்கு என் அப்பன் வயசு. எல்லார்கிட்டயுமா லவ் யூ சொல்லிட்டு இருக்கேன்' பட்டாசு வெடிக்கின்றன அருண் மாதேஸ்வரனின் வசனங்கள்.

ஐந்தில் நான்கு பாடல்க‌ள் இடைவேளைக்கு முன்பே முடிந்து விட ஒரே ஒரு  பாடல் மட்டும் இடைவேளைக்கு பின். அதுமட்டுமின்றி இடைவேளைக்குப் பின் பட‌ம் சீரீயஸாகவே செல்வதால் முதல் பாதியிலிருந்த வேகம் இரண்டாம் பாதியில் இல்லை.  மற்றும் எளிதில் கணிக்கக்கூடிய திரைக்கதை. எப்போதும் விளையாட்டு பின்னணி சினிமாவில் எதிர்பார்க்கக் கூடிய முடிவுதான். ஆனால், அதிலும் செங்கிஸ்கான் ட்விஸ்ட் வைத்து, ரித்திகா எதிராளியை வீழ்த்துவாரா என்று எதிர்பார்க்க வைத்தது... சூப்பர்ப்!

பெண்கள் குத்துச்சண்டை உல‌கில் நடக்கும் அரசியலை, அதை முறியடிக்க பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை சுவாரஸ்யமாக திரைக்கதையின் பிணைத்து, அதை வெற்றிகரமாக படமாக்கியதற்காக இயக்குனர் சுதாவின் கைகளை உயர்த்தி "அண்ட், த  வின்னர் ஈஸ்...." என‌ அறிவிக்கலாம்!

டெயில்பீஸ்: 'அனைத்தும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்ல' எனப் போடாமல், 'உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது' என்று போட்ட இயக்குனரின் 'பெண்மை'க்கு சபாஷ்!

உலகை அச்சுறுத்தும் வைரஸ் 'சிகா' டெங்குவுக்கு அண்ணன்...!

உலகையே தன் காலடியில் கட்டி வைக்க ஆசைப்பட்ட மாவீரன் அலெக்சாண்டரை மன்னர்கள் சாய்க்கவில்லை. கொசுவால் உருவான மலேரியாதான் சாய்த்தது. 'சாதாரண கொசுடா நீ...!'  என்று மனிதர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் தொனியில் சீண்டுவது,  கொசுவின்  'பவர்' குறித்த முழுமையான மதிப்பீடு தெரியாததால்தான்.

இன்று மலேரியா பரப்பும் கொசுக்களைத் தாண்டி, சிக்குன்குனியா கொசு, டெங்கு பரப்பும் கொசு என்று பல வகைகளில்  கொசுக்களின் வருகை அதிகரித்து விட்டது. கொசுக்களை விரட்டுவதாக கூறி மாநகராட்சிகளால் மருந்துகள் தெளிக்கப்பட்ட பின்னர், முன்பை விட வீரியமாக கொசு கோபம் கொண்டு சீறுகிறது என்று வேதனையுடன் குறிப்பிடுகிற நிலைதான் நடைமுறையில்  இருக்கிறது.

உலகளவில் ஆண்டுக்கு ஐந்து கோடி பேரை சாதாரணமாக முடக்கிப் போட்டு விடுகிறது ''டெங்கு'' . இன்றுவரையில் இதற்கான  ஆங்கில மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

கொசு குடும்பத்தின் மூலம் பரவிவரும்  லேட்டஸ்ட் வரவுதான் புதிய வைரஸான  ''சிகா''. இதுவரையில் உலகளவில் சிகாவின் பாதிப்புக்கு ஆளானவர்கள் பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை என்பதே சிகா வின் வீரியம் எத்தகையது என்பதை உணர்த்திவிடும். உதாரணமாக கர்ப்பிணிப் பெண்ணொருவரை இந்த சிகா வைரஸ் பாதித்து விட்டால், பிறக்கும் குழந்தையின் தலை,  சராசரி குழந்தையின் தலையைவிட ஒரு மடங்கு பெரிதாக இருக்கும். இது சிகா வைரஸ் பரப்பும் கொசுவின் வீரியத்துக்கு சின்னதாய் ஒரு இன்ட்ரோ மட்டுமே.

டெங்கு காய்ச்சல் வந்தால் மனித உடல் என்ன மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்ளுமோ, அவை அத்தனையையும் விட  சிகா மூலமாக கொஞ்சம் கூடுதலாக கிருமிகள்,  உள்ளிருந்து வேலையைக் கொடுக்கும் வல்லமை கொண்டவை. டெங்கு கொடுக்கும் மஞ்சள் காய்ச்சல், கைகால் குடைச்சல், தலைபாரம், நாக்கு உலர்ந்து போதல், மரத்துப் போகும் நிலை. இதை  மனித உடலால் எதிர்க்கும் சக்தி இல்லை. சிகாவோ, இதையும் தாண்டிய கடுமையான வேதனையை கொடுக்கும்.

அதே சமயம் நோயின் தாக்கம் உடலில் எண்பது சதவீதம் ஊறிய பின்னரே,  அது சிகாவின் வேலைதான் என வெளியில் தெரியவரும். அந்த வகையில் ஜிகா,  ஒரு 'சைலண்ட் கில்லர்' என்று எச்சரிக்கிறது  உலக சுகாதார நிறுவனம்.

 "ஏடிஸ் மற்றும் எஜிப்தி வகையிலான கொசுக்கள் காடுகளில் மட்டுமே இருப்பவை. அவைகள் இப்போது நாடுகளில் மெல்ல பரவி வருகிறது. அமெரிக்க வர்ஜின் தீவுகள், வெனிசுலா மற்றும் கரீபியன்  தீவுகளில் இதன் பரவல் அதிகமாகக் காணப்படுகிறது " என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

சிகாவை ஒழிக்க முடியாதா, என்ற கேள்விக்குள் போவதற்கு முன் சிகாவின் நதி மூலத்தை கொஞ்சம் உள் வாங்கிக் கொண்டால் வருமுன் காத்துக் கொள்ளலாம்.

 வட அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதிகளையும், மத்திய அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளையும், தென் அமெரிக்காவின் வடக்கு-மேற்குப் பகுதிகளையும் தொட்டபடி செல்லும் மேற்கிந்திய தீவுகளின் ஒரு பகுதியில் இருப்பது கரீபியன் கடல் தீவு.  2500 மைல்கள் நீளம் கொண்ட ஒரு தீவுத்தொடர்தான் கரீபியன். காடு என்றும் சொல்ல முடியாத,  தீவு என்றும் சொல்ல முடியாத அந்த இருள் சூழ் ஏரியாதான் சிகா கொசுக்களின் தாயகம்.

தென்பசிபிக் கடற்பகுதியை மையமாகக் கொண்ட ஃப்ரெஞ்ச் பாலினேசியாவில்,  ஒரு விஞ்ஞானிக்குதான் சிகா,  தன்னுடைய கொடூர கிருமியை செலுத்தியது முதன்முதலில் தெரியவந்தது. ஆனால். அவரை விட அதிகம் பாதிக்கப்பட்டது ஒரு பெண். அதற்குக் காரணம், அவருக்கு நோய் எதிர்ப்புத்திறன் உடலில் குறைவாய் இருந்த காரணத்தாலும், அவருடைய மனைவியாய் இருந்ததாலும் மட்டுமே. ஆக, 'உறவு' கள் மூலமே அதிக அளவில்  'சிகா'கிருமி பரவும் அபாயம் இருப்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

சிகாவின் வீரியத்தை உணர்ந்துதான் உலக சுகாதார நிறுவனம் வருகிற 1.2.2016 அன்று,  சிகா கிருமியின் வீரியத்தைத் தடுக்கும் பொருட்டு உலகளாவிய ஒரு விவாத மேடையை உருவாக்கி,  இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்தியாவும் அதில் பங்கேற்கிறது.

லஞ்சம், பாலியல் துன்புறுத்தல், சிறார் மீதான வன்மம், திருட்டு, கொலை, கொள்ளை, கள்ளச்சந்தை போன்றவைகளோடு சேர்த்து ஒழிக்கப்படவேண்டிய பிரதான பட்டியலில் கொசுவுக்கும் ஒரு இடத்தை அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 

டி.ராஜேந்தர் நடிக்கவேண்டிய கதையில் ராஜகுமாரன் எப்படி? விஜய்மில்டன் விளக்கம்

விக்ரமை வைத்து பத்துஎண்றதுக்குள்ள படத்தை எடுத்த விஜய்மில்டன் அதற்கடுத்து சின்னபட்ஜெட்டில் ஒரு படத்தை எடுக்க முடிவுசெய்திருக்கிறார், அந்தப்படத்தில் டி.ராஜேந்தரை கதாநாயகனாக வைத்துப் படமெடுக்க முடிவு செய்திருந்தார். அது சம்பந்தமாகப் பல வாரங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன.

இப்போது டி.ராஜேந்தர் அந்தப்படத்தில் இல்லையென்று முடிவாகிவிட்டதாம். அவர் கேட்கும் சம்பளம் இந்தப்படத்தின் பட்ஜெட்டுக்கு அதிகம் என்பதால் அவரை வைத்துப் படமெடுக்கமுடியாது என்கிற இடத்துக்கு வந்துவிட்டார் விஜய்மில்டன்.

அதற்கடுத்து இயக்குநர் ராஜகுமாரனை நடிக்கவைக்க முடிவு செய்து அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.  ராஜேந்தருக்கான கதையில் ராஜகுமாரன் எப்படி? என்று விஜய்மில்டனிடம் கேட்டால், நம்மிடம் அடிப்படையான ஒரு கதை இருக்கிறது. நமக்கு அமையும் நடிகருக்கு ஏற்ப அதன் போக்கை மாற்றிக்கொள்ளவேண்டியதுதான் என்கிறார்.

ராஜகுமாரன்தான் நடிப்பார் என்பது நிச்சயம் கிடையாது அதிலும் மாற்றம் வராலம் என்று அவருக்கு நெருங்கிய வட்டாராங்களில் சொல்லப்படுகிறது. நடிகர் யாராக இருந்தாலும் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கிவிடும் என்பது மட்டும் உறுதி என்றும் சொல்கிறார்கள்.  

விரல் வலிக்குமளவுக்கு கை தட்டிவிட்டுதான் விமர்சனத்தையே படிக்க வேண்டும்! இறுதி சுற்று

முதலில் விரல் வலிக்குமளவுக்கு கை தட்டிவிட்டுதான் இந்த விமர்சனத்தையே எழுத ஆரம்பிக்க வேண்டும்!

தமிழ்சினிமா, பெண் இயக்குனர்களுக்கென்றே ஒரு ஸ்பெஷல் கோலம் போட்டு வைத்திருக்கிறது. அதற்குள் புள்ளி வைத்து, அதற்குள் கலர் பூசிதான் தன் கவுரவத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்கள் அவர்களும். ஆனால் முதன்முறையாக ‘ஆணுக்கிங்கே பெண் சமம்’ என்று நிரூபித்திருக்கிறார் சுதா கொங்கரா. கொதிக்கிற சட்டியை இறக்கி வைக்கிற லாவகத்தோடு அவர் இந்த ஆக்ஷன் படத்தை கையாண்டிருப்பதை சொல்லியே ஆகவேண்டும்.

கிக் பாக்சிங் கோச்சர் மாதவன்! பாலிடிக்ஸ் காரணமாக சென்னைக்கு மாற்றப்படும் அவர், இங்கிருந்து ஒரு கிக் பாக்சரை இந்திய சாம்பியனாக உருவாக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். வந்த இடத்தில் இவர் கண்ணில் படுகிற குரோட்டன்ஸ்தான் ஹீரோயின் ரித்திகாசிங். வடசென்னையில் மீன் விற்கும் ஹீரோயினுக்கு தன் அக்காவை எப்படியாவது கிக் பாக்சர் ஆக்கிவிட வேண்டும் என்பதுதான் ஆசை. துணைக்கு வருகிற இவளிடம் இருக்கிற திறமையை கண்டுபிடிக்கிற மாதவன், அவளை எப்படி சாம்பியனாக்கி இந்தியாவுக்காக தங்கம் வாங்க வைக்கிறார் என்பது க்ளைமாக்ஸ். இந்த ரெண்டு வரிக் கதைக்குள் காதல், கோபம், ஆக்ஷன், துரோகம், இயலாமை, வெறுப்பு, இந்திய விளையாட்டு ஆணையத்தின் பாலிடிக்ஸ் என்று எல்லாவற்றையும் அள்ளிப் போட்டு ஆவி பறக்க விஷயங்களை சொல்லியிருக்கிறார் சுதா. தமிழ்சினிமா இதற்கு முன் பார்த்த களம்தான். ஆனால் வேறொரு அழகுடன்!

லேட்டாக வந்தாலும் ‘ஹாட்’டாக வந்திருக்கிறார் மாதவன். வாயை திறந்தால் அலட்சியம், அதனூடே தெறிக்கும் கெட்ட வார்த்தைகள். எதற்கும் அலட்டிக் கொள்ளாத வெற்றுப்பார்வை என மிரட்டியிருக்கிறார் மனுஷன். (இனிமேலும் அவரை சாக்லெட் பாய்னு சொல்லுவீங்க?) “யோவ் கிழவா, தொப்பை வெளியே தெரியுது பாரு…” என்று ஹீரோயின் அடிக்கிற கிண்டலையெல்லாம் பொறுத்துக் கொண்டு ஒரு லுக் விடுகிறாரே…அங்கே கவிழ்வார்கள் ரசிகைகள். ஒரு இடத்தில் கூட தன் கம்பீரத்தை விட்டுக் கொடுக்காத அவரது திமிருக்கு தியேட்டரே சரணாகதியாகிறது. எதுக்கு அங்கே இங்கே அலையுறீங்க, இங்கேயே ஸ்டே பண்ணி, இன்டஸ்ட்ரியை ரூல் பண்ணுங்க மாதவன்!

ஒரு திடீர் புயலாக நுழைந்து பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ரித்திகாசிங். நிஜத்திலும் இவர் கிக் பாக்சிங் சாம்பியன்தானாம். விழுகிற ஒவ்வொரு அடியிலும் அது தெரிகிறது. தன்னை ‘ட்ரை’ பண்ணுகிறார் மாஸ்டர் என்று நினைத்து அவரை முடிந்தளவுக்கு கேவலப்படுத்துகிற ரித்திகா சிங், பேசுகிற அநேக வார்த்தைகள் உவ்வே… சட்டுபுட்டென்று கோபம் தலைக்கேறி அம்பயரின் விலா எலும்பையே அடித்து நொறுக்குகிற போது ‘எங்கடா புடிச்சாங்க இந்த கோபக் கோழியை?’ என்ற திகைப்பே வந்துவிடுகிறது. சட் சட்டென முகத்தில் காட்டுகிற எக்ஸ்பிரஷன்களிலும் அசரடித்திருக்கிறார். அதுவும் அந்த கடைசிக் காட்சி…. உடம்பு சிலிர்க்காமல் ஒரு ரசிகனும் தியேட்டரை விட்டு வெளியே வர முடியாது.

உள்ளூர் கோச் நாசர். வெகு காலத்திற்கு பிறகு அப்படியே மனதில் குடி கொள்கிறார். யோவ்… கெட்டவன்யா நீ என்று மாதவனை விமர்சிப்பதும், அதற்கப்புறம் அதே மாதவனிடம் யோவ்… நல்லவன்யா நீ என்று பம்முவதுமாக அழகு சார் அழகூ…ஊ!

அதிகம் டயலாக்குகள் இல்லை. அவருக்காக காட்சிகளும் கம்மி. கைதட்டல் வாங்குகிறார் ராதாரவி. ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்திருக்கும் காளிக்கு பெரிய ரோல். வருகிற காட்சிகளிலெல்லாம் சிரிக்க வைக்கிறார். இந்த காளியை வைத்துக் அல்லலோயாக்களை கிழித்து தொங்க விட்டிருக்கிறார் சுதா. ஆஹா… ஆஹா… ஹீரோயினுக்கு அக்காவாக நடித்திருக்கும் மும்தாஜ் சார்க்கரும் நிஜத்தில் ஒரு கிக் பாக்சர்தானாம். சிறப்பாக நடித்திருக்கிறார்.

நீட்டி முழக்கி பேச வேண்டிய இடங்களில் கூட மிக நுணுக்கமாக வெளிப்பட்டு, ஊசியாக குத்திவிட்டு போகும் வசனங்கள் இந்த படத்தின் கூடுதல் சிறப்பு. அசர வைத்திருக்கிறார் வசனம் எழுதிய அருண் மாதேஸ்வரன்.

பின்னணி இசையிலும் சரி, பாடல்களிலும் சரி. அப்படியே அள்ளிக் கொண்டு போகிறார் சந்தோஷ் நாராயணன். சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் மீனவக் குப்பம் கூட மின்னுகிறது. ஆனால் அதன் யதார்த்தம் கெடாமல். அப்புறம் அந்த டோன் தனி அழகு!

வெறும் காதலையும், பழி வாங்குதலையும் மட்டும் சொல்லிக் கூட கைதட்டல் பெற்றிருக்கலாம். ஆனால் அதற்குள் இந்திய விளையாட்டுத்துறையின் கிழிசலை லென்ஸ் வைத்து காண்பிக்க முயன்ற சுதாவின் அக்கறைக்கு ஒரு சபாஷ்.

இறுதியல்ல, இந்த படத்தில் பங்கு பெற்ற எல்லாருக்கும் இது ஒரு இனிய துவக்கம்!

சித்தார்த் -மழை வெள்ளத்தில் எடுத்த நல்லப்பெயரை இப்படியா கெடுத்துக் கொள்ள வேண்டும்

“அட … நானே என்னைய சொல்லிக்கிட்டேங்க” என்று சொல்கிற வரைக்கும் விடமாட்டார்கள் போலிருக்கிறது. இன்று சித்தார்த் போட்ட ஒரு ட்விட்டர் மெசேஜால் பற்றிக் கொண்டு எரிகிறது வலைதளம். வேறொன்றுமில்லை. “நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் இருக்கிற ஒரு தெருநாய்க்குக் கிடைக்கணுமுன்னு எழுதி இருந்தால் அதை யாராலும் மாத்த முடியாது..” இதுதான் சித்தார்த்தின் ட்விட்.

கருத்தில் பிழையில்லை. ஆனால் போட்ட நேரம்தான் பொல்லாத நேரமாகிவிட்டது அவருக்கு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மத்திய அரசு பத்மவிபூஷன் விருது அளித்து கவுரவித்துள்ளது. இந்த நேரத்தில் இவர் இப்படியொரு ட்விட் போட்டால் ரசிகர்கள் சும்மாயிருப்பார்களா? அவர் தங்கள் தலைவரை பற்றிதான் அப்படி எழுதியிருப்பதாக கருதி மென்னியை பிடித்துத் திருகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் ரஜினியை சொல்லலேப்பா… சம்பந்தமில்லாமல் ஏன் ஆஜராவுறீங்க என்று அவரது ரசிகர்கள் சிலரே பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்கிடையில் சித்தார்த் திட்டியது தனுஷைதான் என்று வேறு சில கருத்துக்களும் பரவி வருகின்றன.

‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் ஹு காட் டிராப்டு இன் தி கியா கப்போர்டு’ (The Extraordinary Journey Of the Fakir Who Got Trapped In The Ikea Cupboard) என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்த வயிற்றெரிச்சல் தாங்க முடியாமல்தான் அவர் இப்படி குறிப்பிட்டிருப்பதாக கூறுகிறார்கள் திரையுலகத்தில். எதுவாக இருந்தாலும், இப்படியொரு விமர்சனத்தை வெளியிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லைதான்.

மழை வெள்ளத்தில் எடுத்த நல்லப்பெயரை இப்படியா கெடுத்துக் கொள்ள வேண்டும் சித்து?

இறுதிச்சுற்று - திரைவிமர்சனம் - மொத்தத்தில் இந்த இறுதிச்சுற்றில்..?

தமிழ் சினிமாவில் குறிஞ்சிப்பூ போல் எப்போதாவது ஒரு முறை தான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் வரும். அதிலும் பெண்களை மையப்படுத்தி ஒரு ஸ்போர்ட்ஸ் படம் என்றால் அரிதிலும் அரிது. ஏற்கெனவே வட இந்தியாவில் சக் தே இந்தியா போன்ற படங்கள் வந்துள்ளது.

அதே பாணியில் சுதா இயக்கத்தில் நம் ஆல்டைம் பேவரட் மாதவன், ரியல் பாக்ஸர் ரித்திகா நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் தான் இறுதிச்சுற்று.

கதைக்களம்

இந்தியாவின் நம்பர் 1 கோச் மாதவன், யாரை பார்த்தாலும் எரிந்து விழுவது, சிடுசிடு முகம், பத்து வார்த்தையில் எட்டு வார்த்தை கெட்ட வார்த்தை, நீ எவனா இருந்தா எனக்கென்ன என்று இருக்கும் ஒரு கதாபாத்திரம், இவரை பிடிக்காத பாக்ஸிங் குழு தலைவர் ஜாகிர் பொய்யான காரணத்தை கூறி சென்னைக்கு மாதவனை மாற்றுகிறார்.

ஆனால், செல்லும் இடத்தில் எல்லாம் சிறந்த மாணவர்களை உருவாக்கும் மாதவனுக்கு சென்னை ஒரு சவாலாக இருக்கின்றது. அங்கு லக்ஸ், மதி(ரித்திகா) என்று அக்கா, தங்கைகளை சந்திக்கின்றார். இதில் லக்ஸ் பாக்ஸர், மதி மீன் விற்கின்றார். இதில் மதியிடம் ஒரு பாக்ஸருக்கான குவாலிட்டி இருப்பதை அறிந்த மாதவன், அவருக்கு தினமும் 500 ரூபாய் கொடுத்து பாக்ஸிங் கற்க வர சொல்கிறார்.

தன் அக்காவிற்கு பாக்ஸிங்கில் வெற்றி பெற்று போலிஸ் வேலை வேண்டும் என்பதற்காக மதி வேண்டுமென்றே தவறான ஷாட்டுக்களை அடிக்க, அவரை போட்டியில் இருந்து வெளியேற்றுகின்றனர். இதை தொடர்ந்து மாதவன் தனக்காக எத்தனை கஷ்டப்படுகிறார் என்பதை ஒரு கட்டத்தை நாசர் வழியாக அறிகிறார் ரித்திகா.

பின் மீண்டும் மாதவனுடன் லக்ஸ் மற்றும் மதி இந்திய அளவில் ஒரு போட்டியில் கலந்துகொள்ள செல்கின்றனர். மாதவன் ரித்திகாவிற்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க, இதை கண்டு லக்ஸ் கோபப்படுகிறார். வேண்டுமென்றே தன் தங்கையின் கையை பயிற்சியின் போது அடிப்பட செய்ய, போட்டியில் ரித்திகா தோற்கிறார்.

இதைக்கண்டு மாதவன் அவரை கழுத்தை பிடித்து வெளியே தள்ள, இதன் பின் ரித்திகா என்ன ஆனார், மாதவன் விருப்பப்படி பெரிய பாக்ஸர் ஆனாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

மேடி இஸ் பேக் என தமிழ்நாட்டு ரசிகர்கள் கைத்தட்டி விசிலடிக்கலாம். அதிலும் சாதாரணமான ரீஎண்ட்ரீ இல்லை, பாக்ஸருக்கான உடல்தோற்றம், தன் மனைவி வேறு ஒருவருடன் ஓடி போனதை எண்ணி எப்போதும் கோபமாக இருக்கும் முகம் என ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியுள்ளார். அதிலும் ஜாகிருடன் அவர் பேசும் காட்சியில் எல்லாம் எத்தனை சென்ஸார் என்று கணக்கே இல்லை. இனி சாக்லேட் பாய் யாராவது சொன்னீங்க....என்று நம்மையே திட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

படத்திற்கு கண்டிப்பாக எல்லோரும் மாதவனுக்காக சென்றாலும் மீண்டும் இந்த படத்தை பார்க்க கண்டிப்பாக ரித்திகாவிற்காக தான் செல்வார்கள். பஞ்சாபி பெண், ரியல் பாக்ஸரை சுதா, வடசென்னை குப்பத்து பெண்ணாக காட்டியுள்ளார். காட்சிக்கு காட்சி சிக்ஸர் அடிக்கின்றார். மாதவன் சிடு மூஞ்சி என்றால், அதை விட பெரிய கோபக்காரியாக அவருக்கே செம்ம போட்டியாக கலக்குகிறார்.

பின் மாதவனுடன் ஏற்படும் காதல் அதை அவரிடம் கூறி ‘எனக்கு டர் இல்லை, உனக்கு இன்ன அல்லு’ என்று கூறும் காட்சியெல்லாம் தியேட்டரே அதிர்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மாதவனை மிஞ்சிவிட்டார். (கண்டிப்பாக இதற்காக மாதவன் கோபித்துக்கொள்ள மாட்டார்).

படத்தில் மாதவன் உதவியாளராக வரும் நாசர், முதலில் மாதவனை திட்டி, பிறகு அவர் குணம் தெரிந்து நீ நல்லவன்யா என்று பாராட்டுவது என பல காட்சிகளில் மனதில் பதிகிறார். பாக்ஸிங் உயர் அதிகாரியாக வரும் ராதாரவியும் ஒரு சில காட்சிகள் என்றாலும் சிறப்பாக செய்துள்ளார். அதிலும் நடிகர் சங்க தேர்தலுக்கு பிறகு இப்படி ராதாரவியும், நாசரையும் ஒரே காட்சியில் பார்ப்பது செம்ம ரகளை தான்.

ஜாகிரின் கதாபாத்திரம், இந்தியாவில் 100 கோடி பேர் இருந்தும் இதுப்போன்ற ஒரு சிலரின் பாலிடிக்ஸால் தான் சிறந்த ஸ்போர்ட்ஸ் பிளேயர்க்ளை உருவாக்க முடியவில்லை என்பதை அழுத்தமாக காட்டுகின்றது. அப்படியே மீறி விளையாட பெண்களை அனுப்பினால், அவர்களின் தேவைகளை புரிந்துக்கொண்டு பாலியல் தொந்தரவுக்கு உட்படுவதையும் மிக தைரியமாக நடு மண்டையில் அடித்தது போல் கூறியிருக்கிறார் சுதா.

அதிலும் ‘இந்தியாவில் நல்ல பாக்ஸர் வரவேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும், அதற்கு முதலில் பாலிடிக்ஸ் வெளியே எடுங்க’ என்ற அருண் மதிஷ்வரன் வசனங்கள் தூள். அதேபோல் மாதவன், ஜாகிரை பார்த்து சென்ஸார் வார்த்தையுடன் அவ்ளோ தாண்ட நீ என்று சொல்லும் இடமெல்லாம் ஒவ்வொரு ரசிகனின் மனதில் இருந்து வரும் கைத்தட்டல்.

க்ளாப்ஸ்

மாதவன் -ரித்திகாவின் கதாபாத்திரம், இருவரும் போட்டிப்போட்டு நடித்துள்ளனர். முதலில் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே சுதாவிற்கு ஒரு பெரிய பூங்கொத்து கொடுத்து வரவேற்கலாம்.

படத்தின் சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ரசிக்க வைக்கின்றது. எப்போதும் போதையில் இருக்கும் ரித்திகாவின் தந்தையாக காளி வரும் காட்சியெல்லாம் சிரிப்பு சரவெடி தான். வெள்ளை தோலுக்கு ஆசைப்பட்டு சவுக்கார் பேட்டையில் என் மானத்தை விற்று விட்டேனே என்று தன் மனைவியிடம் புலம்பும் காட்சியிலும் சரி, தன் மகள் வெற்றி பெற வேண்டும் என ஸோத்திரத்தை தோத்திரம் என்று சொல்லும் காட்சியிலும் செம்ம ஸ்கோர் செய்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்றாலும், பின்னணி இசையில் ருத்ரதாண்டவம் தான். சிவகுமார் விஜயின் ஒளிப்பதிவும் சென்னை ஹிசார் பகுதிகளை அப்படியே கண்முன் கொண்டு வருகின்றது.

பல்ப்ஸ்

மிகவும் ரியாலாக பாக்ஸிங் குறித்து காண்பித்திருப்பதால், பாக்ஸிங் தெரிந்தவர்களுக்கு அதெல்லாம் புரியும், சாதாரண சினிமா ரசிகர்களுக்கு அது புரிய வாய்ப்பில்லை, அதை கொஞ்சம் விவரித்திருக்கலாம். மற்றபடி ஏதும் இல்லை.

மொத்தத்தில் இந்த இறுதிச்சுற்றில் சுதா, மாதவன், ரித்திகா மூவரும் பல சினிமா கமர்ஷியலை நாக் அவுட் செய்து வென்றுள்ளனர்.

அரண்மனை-2விற்கும் கண்டிப்பாக விசிட் அடித்து வரலாம் -திரைவிமர்சனம்

ஹாலிவுட் படங்களில் தான் ஹிட் அடித்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்த பாகமாக எடுப்பார்கள். இந்த கலாச்சாரம் சில காலமாக தமிழ் சினிமாவையும் தொற்றியுள்ளது. ஆனால், இதில் ஒரு சில படங்கள் தோல்வியையும் சந்தித்து, தொடர் பாகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஆனால், தனக்கு என்ன ஸ்பெஷலோ, ஆடியன்ஸ் எதை விரும்புகிறார்களோ அதை சரியாக புரிந்துக்கொண்டு சுந்தர்.சி தன் அரண்மனை வெற்றியை தொடர்ந்து அரண்மனை-2வை இயக்கியுள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் 500 திரையரங்குகளுக்கு மேல் வெளிவந்துள்ளது.
கதைக்களம்

பேய் படங்களுக்கு என சில டெம்ப்ளைட் கதைகள் இருக்கும், இதை ஏற்கனவே அரண்மனையில் சுந்தர்.சி தொட்டு வெற்றியும் கண்டுவிட்டார். இரண்டாம் பாகத்திலும் கிட்டத்தட்ட ஒரே கதை தான்.

ஊர் பெரியவரான ராதாரவி, தன் மகன் சித்தார்த்துக்கும் த்ரிஷாவிற்கும் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். அப்போது அவர்கள் தங்கியிருக்கும் அரண்மனையில் ஒரு அமானுஷியம் உலா வருகின்றது. ஓர் ஆவி தன் அப்பா ராதாரவியை தாக்குவதை கண்முன் பார்க்கின்றார் சித்தார்த்.

பின் கோமா ஸ்டேஜுக்கு செல்கிறார் ராதாரவி. இதன் பின் அந்த வீட்டில் சில அசம்பாவிதங்கள் நடக்க, எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் சுந்தர்.சி எண்ட்ரி ஆகிறார். இதற்கு பின் அந்த வீட்டில் நடப்பதை கண்டறிய சுந்தர்.சி வீடு முழுவதும் கேமரா பொருத்துகிறார்.

அந்த கேமராவில் ஒரு உருவம் சித்தார்த்தின் அண்ணன் சுப்புவை இழுத்து செல்வதை பார்க்கிறார்கள், உற்று பார்க்கும் போது தான் தெரிகின்றது, அந்த ஆவி ஹன்சிகா என்பது. இதை தொடர்ந்து ஹன்சிகா யார்? எதற்காக இவர்கள் குடும்பத்தை பழி வாங்குகின்றார் என்பதை கமர்ஷியல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கொடுத்துள்ளார் சுந்தர்.சி.
படத்தை பற்றிய அலசல்

சித்தார்த் பெரிதாக நடிக்க கதாபாத்திரம் இல்லை, சென்ற பாகத்தில் வினய் என்ன செய்தாரோ, அதையே தான் செய்துள்ளார். ஆனால், த்ரிஷாவிற்கு செம்ம பெர்பாமன்ஸ். க்ளாமர் பேயாக கலக்குகிறார். ப்ளாஷ்பேக்கில் வரும் ஹன்சிகாவும் தன் கதாபாத்திரத்தை நிறைவாக செய்தது மட்டுமின்றி கொஞ்சம் கண்கலங்கவும் வைக்கின்றார்.

ராதாரவி, சூரி, மனோ பாலா, கோவை சரளா என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் உள்ளது. இவர்களை அனைவரையும் ரசிகர்கள் மனதில் பதியும் படி காட்சிகள் அமைத்ததற்கே சுந்தர்.சிக்கு ஒரு பூங்கொத்து கொடுக்கலாம்.

சுந்தர்.சியும் அவர் பங்கிற்கு களத்தில் இறங்கி சந்திரமுகி ரஜினிகாந்த் பணியை செய்துவிட்டு செல்கிறார். சுந்தர்.சி படத்தின் மிகப்பெரும் பலமே காமெடி காட்சிகள் தான். ஆரம்பத்தில் சூரி எப்படி செட் ஆவார் என்று நினைத்தாலும், படம் செல்ல செல்ல, அடாவடி செய்கிறார். அதிலும் குறிப்பாக த்ரிஷா பேய் என்று தெரியாமல் மனோபாலா, சூரி செய்யும் காமெடி காட்சிகள் திரையரங்கமே குலுங்குகின்றது.

இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் கோவை சரளா. இவர் வசனம் பேச வேண்டும் என்பது கூட இல்லை, ஒரு ப்ரேமில் வந்து நின்றாலே போதும் ரசிகர்களுக்கு சிரிப்பு சரவெடி தான்.

ஹிப்ஹாப் தமிழனின் இசையில் குச்சிமுட்டாய் பாடல் எழுந்து ஆடவைக்கின்றது. அட சாமி பாட்டெல்லாம் இசையமைத்திருக்கிறார் ஆதி என்று ஆச்சரியப்படவைக்கின்றது. ஆனால், பின்னணி இசையில் கான்ஜுரிங் இசை எல்லாம் வருதே சார்????.
க்ளாப்ஸ்

சுந்தர்.சி நான் கமர்ஷியல் ரசிகர்களுக்கு மட்டும் தான் படம் இயக்குகிறேன் என்று உணர்ந்து திரைக்கதை அமைத்துள்ளார்.

காமெடி காட்சிகள், எதிர்ப்பார்த்து வருபவர்களுக்கு செம்ம விருந்து.

படத்தின் முதல் பாதியில் வரும் திகில் காட்சிகள், இது தான் நடக்க போகின்றது என தெரிந்தாலும் ஆதியின் இசையில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
பல்ப்ஸ்

பல படங்களில் பார்த்த காட்சிகள், ரசிகர்கள் யூகிக்க கூடிய அடுத்தடுத்த காட்சி அமைப்புக்கள். பேய் படம் தான், இருந்தாலும் இன்னும் அதே பழைய டெம்ப்ளேட் காட்சிகளை பயன்படுத்த வேண்டுமா?.

கமர்ஷியல் படம் தான் அதிலும் பேய் படம் தான் இதில் லாஜிக் பார்க்க கூடாது என்றாலும், கண்களுக்கு அப்பட்டமாக தெரிகின்றது பல லாஜிக் மீறல்கள், குறிப்பாக சுந்தர்.சி பேயாக மாறி சித்தார்த்தை துரத்திக்கொண்டே தான் கடைசி வரை செல்கிறார்.

மொத்தத்தில் அரண்மனை ரசித்த ரசிகர்கள் இந்த அரண்மனை-2விற்கும் கண்டிப்பாக விசிட் அடித்து வரலாம்.

இராமாயணத்தில் வரும் இராவணனின் மனைவி மண்டோதரியின் சுவாரஸ்ய கதை!

இந்திய புராணங்களில் வரும் கதாபாத்திரங்களில் ஒன்றான மண்டோதரியைப் பற்றிய பல்வேறு சம்பவங்களைக் கேள்விப்பட்டிருப்போம். மண்டோதரி அழகானவள், தெய்வீக சக்தி கொண்டவள் மற்றும் மிகவும் ஒழுக்கமுள்ளவள் என்று அனைத்து குறிப்புகளிலும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார். பாவங்களைப் போக்கும் சக்தியைக் கொண்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.

பதிவிரதத்திற்காக பெயர் பெற்ற மண்டோதரி, தன்னுடைய கணவன் மேல் மிகவும் பக்தி கொண்டவளாக சிறப்பிக்கப்படுகிறார். இவருடைய பதிவிரத்தின் காரணமாகத் தான் அசுர குணம் படைத்தவராக கருதப்பட்டும், பல்வேறு தவறான செயல்களைச் செய்தவராக கருதப்பட்டும் வரும் இராவணனின் தீஞ்செயல்களுக்கான தண்டணைகள் அல்லது பாவங்கள் சுத்தம் செய்யப்பட்டன.

மண்டோதரி அழகியாகவும், செல்வ வளம் பொருந்தியவளாகவும் வளர்க்கப்பட்டாள். மிகவும் திறமை பொருந்திய பொறியியல் கலைஞராக விளங்கிய மாயாசுரனின் இருப்பிடத்திற்கு ஒருமுறை வந்திருந்த இராவணன், அவரிடம் தனக்காக ஒரு நகரத்தை நிர்மாணிக்குமாறு கேட்டுக் கொண்டான். இந்த நேரத்தில் தான் இராவணன் மண்டோதரியைக் கண்டதும் காதல் கொண்டார். இராவணன், மண்டோதரியின் தந்தையிடம் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார், மாயாசுரரும் அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார். வேத முறைப்படி இராவணன்- மண்டோதரி திருமணம் நடைபெற்றது. இந்த வகையில் சிவபெருமானின் அருளும் இராவணனக்கு கிடைக்கப் பெற்றது. இந்த சூழ்நிலையில் தான் இராவணன் வீரமிக்க அரசனாக மட்டுமல்லாமல், சிறந்த சிவ பக்தராகவும் பரிமளிக்கத் துவங்கினார். தங்கதிலான மிகவும் அழகிய நகரத்தை தன்னுடைய மருமகனுக்காக உருவாக்கி பரிசளித்தார் மயூராசுரர்.

மண்டோதரி-இராவணன் தம்பதிகளுக்கு மேகநாதன், அதிகயா மற்றும் அக்சயகுமாரர் ஆகிய மூன்று மகன்கள் பிறந்தனர். மண்டோதரி சிறந்த மற்றும் பதி பக்தியுள்ள மனைவியாக இருந்தாள். இராவணனிடம் கர்வம் மற்றும் மூர்க்க குணம் போன்ற சில தீய குணங்கள் இருந்தன. அந்நாட்களில் இருந்த வழக்கப்படி, இராவணனுக்கு மண்டோதரியைத் தவிர, வேறு சில மனைவிகளும் இருந்தார்கள்.

தன்னுடைய மனைவி அல்லாத ஒரு பெண்ணின் மேல் இராவணன் மையல் கொண்டான் - அந்த பெண்ணின் பெயர் வேதவதி. இந்த விஷயங்களை எல்லாம் மண்டோதரி தெரிந்து கொண்டிருந்தாலும், தன்னுடைய கணவனை நல்வழிப்படுத்த அறிவுரை கூறினாள். மேலும் இராவணனுக்கு உண்மையானவளாகவும், நம்பிக்கைக்கு உரியவளாகவும் இருந்தாள். இராவணனை நல்ல வழியை நோக்கி, நீதியை நோக்கி வழிநடத்திச் செல்ல மண்டோதரி முயற்சித்தாள். நவகிரகங்களை துன்புறுத்த வேண்டாம் என்றும் மற்றும் வேதவதியின் மேல் மையல் கொள்ள வேண்டாம் என்றும் அவள் அறிவுரை வழங்கினாள். இந்த வேதவதி தான் சீதா தேவியாய் மறுபிறப்பெடுத்து, இராவணனின் அழிவுக்குக் காரணமாக இருந்தாள். இராவணன் மண்டோதரியின் அறிவுரையைக் கேட்கவில்லை.

விஷ்ணுவின் அவதாரமான இராம பிரான் அயோத்தியிலிருந்து வனவாசம் சென்றிருந்த வேளையில், அவனுடைய மனைவியான சீதா தேவியை கடத்தினான் இராவணன். மண்டோதரி சீதா தேவியை உடனடியாக இராமனிடம் திருப்பி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார் - ஆனால் இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இந்த மையல் இராவணனின் அழிவைக் கொண்டு வரும் என்று மண்டோதரி நன்கு அறிந்திருந்தாள்.

வால்மீகியின் இராமாயணத்தில் மண்டோதரி மிகவும் அழகான பெண் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். இராமபக்தரான அனுமான் சீதா தேவியைத் தேடி இலங்கைக்கு வந்த போது, இராவணனின் அந்தப்புரத்தில் பார்த்த மண்டோதரியை சீதா தேவி என தவறாக எண்ணிக் கொண்டார். ஆனால், அனுமன் சீதா தேவியை கண்டறிந்த வேளையில், இராவணன் சீதா தேவியிடம் தன்னை மணம் புரிந்து கொள்ளாவிடில், கொன்று விடுவதாக மிரட்டிக் கொண்டிருந்தான். சீதா தேவி மறுத்த போது, சீதா தேவியின் தலையை துண்டிப்பதற்காக தன்னுடைய வாளை ஓங்கினார் இராவணன். ஆனால், மண்டோதரி இராவணனின் கையைப் பிடித்து அந்த பாவச்செயலைத் தடுத்து நிறுத்தினாள்.

ஒரு பெண்ணைக் கொலை செய்வதென்பது கொடும் பாவச் செயல், அதனால் சீதா தேவியை இராவணன் கொல்லக் கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டாள் மண்டோதரி. மேலும், இராவணனை அவருடைய பிற மனைவியரிடம் சென்று திருப்திப்படுத்திக் கொள்ளுமாறும், சீதா தேவியை மணந்து கொள்ளும் எண்ணத்தை மறந்து விடுமாறும் கேட்டுக் கொண்டாள். மண்டோதரியை விட சீதா தேவி அழகில் குறைந்தவராக இருந்தாலும், இராமன் மீது சீதை கொண்டிருந்த பக்தியை மிகவும் மதித்திருந்தாள் மண்டோதரி. மேலும் சீதையை சாக்கி மற்றும் ரோகிணி ஆகிய கடவுளர்களுடன் ஒப்பிட்டாள் மண்டோதரி.

சீதையை அமைதியான முறையில் திரும்பப் பெற செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த பின்னர், இராமன் இராவணனுடைய இலங்கையின் மேல் போர் தொடுப்பதை அறிவித்தார். இராமனுடனான இறுதிப் போருக்கு முன்னரும் கூட மண்டோதரி இராவணனிடம் ஒருமுறை கேட்டுக் கொண்டாள், ஆனால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. இறுதியாக, தன்னுடைய கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாக இறுதிக் கட்டப் போரில் இராவணனுக்குத் துணை நின்றாள். மேலும், இந்திரனை வென்று இந்திரஜித் என்ற பட்டத்துடன் இருந்த, தன் மகன் மேகநாதனையும் கூட இராமருடன் சண்டையிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள்.

இராவணனுடைய அனைத்து மகன்களும், வீரர்களும் போரில் இறந்து விட்ட பின்னர், தன்னுடைய வெற்றியை உறுதி செய்யும் படியாக ஒரு அக்னி யாகத்தை நடத்த விரும்பினார். அனுமனையும், வானர இளவரசரான அங்கதனையும் கொண்ட வானர வீரர்களின் படைகளை அனுப்பி அந்த யாகத்தை இராமர் கலைக்க விரும்பினார். இராவணனின் அரண்மனையில் பெரும் சேதத்தை வானரங்கள் ஏற்படுத்தினாலும், இராவணன் தன்னுடைய யாகத்தை தொடர்ந்து செய்து வந்தார். இந்நேரத்தில் அங்கதன் மண்டோதரியின் தலைமுடியைப் பற்றிய படி இராவணன் முன் இழுத்து வந்தார். மண்டோதரி தன்னைக் காப்பாற்றும் படியும், இதே செயலைத் தான் இராவணன் இராமனின் மனைவிக்கு செய்து கொண்டிருக்கிறான் என்றும் நினைவுபடுத்தினாள். இதனால் கோபமுற்ற இராவணன் தன்னுடைய யாகத்தை நிறுத்தி விட்டு, அங்கதனுடன் சண்டையிடுவதற்காக கத்தியுடன் பாய்ந்தார். எனினும், வந்த காரியத்தை முடித்து விட்ட திருப்தியுடன், மண்டோதரியை விட்டு விட்டு அங்கதன் தப்பிச் சென்றார். மண்டோதரி மீண்டும் சீதையை இராமனிடம் சேர்ப்பிக்கும் படி கேட்டர், ஆனால் இராவணன் மறுத்து விட்டார்.

வால்மீகி இராமாயணத்தில் மண்டோதரியை சீதையின் தாயாக எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை, பின்னர் வந்த இராமாயண படைப்புகளில் மண்டோதரியை சீதையின் தாயாகவோ அல்லது சீதையின் பிறப்பிற்கு காரணமான பெண்ணாகவோ குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இராவணனால் கொல்லப்பட்ட யோனிவர்களின் இரத்தத்தை ஒரு பெரிய பானையில் சேகரித்து வைத்திருந்தார்கள். இந்நேரத்தில் கிரிட்சமாடா என்ற முனிவர் இலட்சுமி தேவி தன்னுடைய மகளாகப் பிறக்க வேண்டும் என்ற வரம் வேண்டி தவமிருக்கத் தொடங்கினார். அவர் தர்ப்பைப் புல்லின் பாலை, தன்னுடைய மந்திரங்களால் சுத்திகரித்து வைத்திருந்தார். எனவே, இலட்சுமி தேவி அதில் வாழ்ந்திடுவார் என்பது முனிவரின் எண்ணம். இந்த பாலை தன்னுடைய இரத்தம் நிறைந்த பானைக்குள் ஊற்றி விட்டார் இராவணன். இராவணனின் இந்த அடாத செயலைக் கண்டு மனம் வெறுத்த மண்டோதரி, மிகவும் கொடிய விஷமாகக் கருதப்பட்ட அந்த இரத்தத்தைக் குடித்து தற்கொலை செய்து கொள்ள விரும்பினால். அதைக் குடித்த மண்டோதரி, மரணமடைவதற்குப் பதிலாக, கிரிட்சமாட முனிவரின் தவ வலிமையால் இலட்சுமி தேவியின் அவதாரத்தைப் குழந்தையாகப் பெற்றார். இந்த குழந்தையை குருஷேத்திரத்திற்கு அருகில் அவர் புதைத்து வைத்தார். அந்த பெண் குழந்தையைக் கண்டெடுத்த ஜனகர் அவளுக்கு சீதை என்று பெயரிட்டார்.

மண்டோதரியை மணந்து கொள்ள வேண்டும் என்று மாயாசுரரிடம் இராவணன் கேட்டுக் கொண்ட போது, அவருடைய ஜாதக கணிப்பின் படி, இந்த தம்பதிகளுக்குப் பிறக்கும் முதல் குழந்தை இராவணனின் வம்சத்தை அழித்து விடும் மற்றும் அந்த குழந்தையைக் கொன்று விட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மாயாசுரரின் அறிவுரையை கருத்தில் கொள்ளாத இராவணன், மண்டோதரிக்குப் பிறந்த முதல் குழந்தையை ஜனகரின் நகருக்கு அருகில் ஒரு கூடையில் வைத்து புதைத்து விட்டார். வாசுதேவஹிந்தி, உத்தர புராணம் மற்றும் பிற சமண வகை இராமாயணங்களில் சீதையானவள் இராவணனுக்கும், மண்டோதரிக்கும் பிறந்த குழந்தையாகவே குறிப்பிடப்பட்டுள்ளார். இராவணனின் வம்சம் சீதையினால் அழிந்து விடும் என்று ஜோதிடர்கள் குறிப்பிட்டதால் தான், தன்னுடைய மகளான சீதையை இராவணன் விட்டு விட்டான் என்றும் சொல்லப்படுகிறது.

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!

கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம்.


1=ஆயில் புல்லிங்
~~~~~~~~~~~~~~~~~
ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்,

2=கிராம்பு
~~~~~~~~~~~~~
2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்,

3=உப்பு தண்ணீர்
~~~~~~~~~~~~~~~~~~~
அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்,

4=பூண்டு
~~~~~~~~~~~
3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்,

5=மஞ்சள்
~~~~~~~~~~~~~
மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்,

6=வேப்பிலை
~~~~~~~~~~~~~~
வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் ,

7=உணவுமுறைகளில் மாற்றம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.

8=சர்க்கரையைத் தவிர்க்கவும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுத்திரிக்கரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொண்டால், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதனால் பற்களில் சொத்தையும் அதிகரிக்கும். உணவுகளில் இனிப்பு வேண்டுமானால், தேனைக் கலந்து கொள்ளலாம்.

கல்பனாவின் அசாத்திய ஆற்றலில் கண் கலங்கியதுண்டு: கமல்

 கல்பனாவின் அசாத்தியமான நடிப்பைப் பார்த்து நான் கண் கலங்கியதும் உண்டு என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்த கல்பனா ஜனவரி 25-ம் தேதி ஹைதராபாத்தில் காலமானார். பாக்யராஜ் நடித்த 'சின்ன வீடு' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல், ரமேஷ் அரவிந்த் உடன் இணைந்து 'சதிலீலாவதி' படத்தில் நடித்தார். 'சதிலீலாவதி' படத்தைத் தொடர்ந்து கமலுடன் 'பம்மல் கே.சம்பந்தம்' படத்திலும் நடித்தார்.

கல்பனாவின் திடீர் மறைவு குறித்து கமல்ஹாசன், "திறமையான மூன்று சகோதரிகளில் ஒருவர் கல்பனா. ஊர்வசி, கல்பனா இருவரும் நான் தயாரித்த படங்களில் நடித்துள்ளனர். ஒரு படத்தின் இரு மொழி பதிப்புகளிலும், ஒரே பாத்திரத்தில் அவர்கள் நடித்ததைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சியே. கல்பனாவின் அசாத்தியமான நடிப்பைப் பார்த்து நான் கண் கலங்கியதும் உண்டு. அவர் இனி நடிக்கமாட்டார் என்பது எனக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால் விஞ்ஞானத்துக்கு நன்றி, நடிகையாக அவர் திரையில் ஜொலித்த காலத்தை நம்மால் திரும்பிப் பார்க்க முடியும்.

கல்பனாவின் நகைச்சுவை உணர்வும், எளிமையான அணுகுமுறையும் வெவ்வேறு வித குணங்கள். இத்தனை திறமையுடனும், அதே நேரத்தில் எளிமையாகவும் இருக்க தன்மையான மனதும், அறிவும் தேவை. கல்பனாவுக்கு இரண்டும் இருந்தன. அவரது இழப்பை எண்ணி வருந்துகிறேன். மலையாள, தமிழ் திரையுலங்களுக்கும் அந்த வருத்தம் இருக்கவே செய்யும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

மருத்துவ ரகசியம்! அரைஞாண்கயிறு - ஒரு கருப்பு கயிறு

அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர்

வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும்

ஒரு கருப்பு கயிறு.

எதற்கு இதை நான்

அணிந்து கொள்ள வேண்டும்

என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு

சொல்லுவாங்க..உண்மையிலேயே இதுக்கு தான் இந்த

கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?

நிச்சயமாக இல்லை !

அந்த அரைஞாண்

கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள்

கண்டுபிடித்த ஒரு மருத்துவ

ரகசியமே அடங்கியுள்ளது அந்த

ரகசியம்......

ஆண்கள் இடுப்பில் கட்டுகிற

அரைஞாண்கயிறு ஒரு நோய்

தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத்

தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக

குடல் இறக்க நோய் வருவதுண்டு.

அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண்கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம்

தமிழர்களிடையே இருந்தது.

பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.

இன்றைக்கு அநாகரீகம் எனக்

கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும்

குறைந்து விட்டது. உடல் பெருத்தலின்

ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்'

ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள்.

இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத்

தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள்

சொல்கின்றன.இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண்

கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

இப்போது வெள்ளி,தங்கத்தில் அறுணாக்கொடி கட்டுகிறார்சில விசயங்கள் நாகரீக

மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும்

இன்றும் கறுப்புக் கயிற்றில்

முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக்கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.நம்

முன்னோர்கள் பாரம்பரியத்தை நம்

பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்...

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் - பாஸ்ட் புட் கடைகள்

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் .. படித்து விட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள்

1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை ..
2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் .. அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கேட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை …

2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ???

3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை ..
மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின என்னையோ கலந்து செய்றோம் ..

4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை .. பாமாயில் தான் யூஸ் பண்றோம் ..

5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..

6)இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க … அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் ..

7)அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் ..

8)வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் ..

9)தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம் ..

10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும் ..
இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு ஏன் உடலும் கெட்டு விட்டது விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரெனெ என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் …

- – தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், அவ்வுடலின் அனைத்துப் பாகங்களும் நன்றாக வேலை செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட பாகத்தில் ஒரு சிறு குறை ஏற்பட்டாலும் அது உடலின் அனைத்துப் பாகங்களையும் பாதிக்கும். அப்படிப்பட்ட ஒரு பாகம்தான் சிறுநீரகம். சிறுநீரகத்தில் ஏற்படும் ஒரு சிறு குறையும் உடலில் உள்ள பல பாகங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்க ஆரம்பிக்கும். எனவே, சிறுநீரகத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்வதால் பல்வேறு விதமான நோய்களையும் தவிர்க்கலாம். முதுகெலும்புக்குக் கீழ்ப் பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக இரு அவரை விதைகளைப் போல் இருக்கும் உறுப்புதான் சிறுநீரகம். நாம் அனைவரும் இரு சிறுநீரகங்களோடு பிறந்தாலும், நாம் உயிர் வாழ ஒரு கிட்னி இருந்தாலே போதுமானதாகும். சிறுநீரகத்தில் கல்லா? வீட்டிலேயே மருந்திருக்கு! நமக்கு ஒரு உடலின் பல உறுப்புக்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு சிறுநீரகம்தான் முக்கியக் காரணமாகும். உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும், தேவையில்லாத உப்புச் சத்துக்களையும் வடிகட்டும் ஒரு முக்கியமான பணியை சிறுநீரகம் செய்கிறது. உடலில் உள்ள நீரின் அளவையும் அது கட்டுக்குள் வைத்திருக்கிறது. மேலும் இரத்த அழுத்தம், இரத்த சிவப்பணுக்கள் மற்றும் அமிலங்களின் அளவுகளையும் கட்டுப்படுத்துவதில் சிறுநீரகம் பெரும் பங்கு வகிக்கிறது. சிறுநீரக கல்லை காணாமல் போக்கும் வாழைத்தண்டு அப்படிப்பட்ட சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சில வழிகளை இப்போது நாம் பார்க்கலாம்.

உடற்பயிற்சி நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி இன்றியமையாததாகும். உடலின் பல பாகங்களின் நலத்திற்கே அது நல்லது எனும் போது, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கும் இந்த உடற்பயிற்சி தான் முக்கியம். அதைத் தவறாமல் செய்து வருவது சிறுநீரகத்திற்கும், அதன் செயல்பாடுகளுக்கும் நல்லது.

மருத்துவ சோதனைகள் நாம் நம் உடலை அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குறிப்பாக, 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் நம் சிறுநீரகங்களைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரம்பரை பரம்பரையாக சிறுநீரக வியாதிகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியம்.
உணவுக் கட்டுப்பாடு உங்கள் சிறுநீரகத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. அதாவது உங்கள் உணவுக் கட்டுப்பாடு, சிறுநீரகத்தை நன்றாகச் செயல்பட வைக்க உதவும். சுத்தமான மற்றும் ஃப்ரெஷ்ஷாக சமைக்கப்பட்ட உணவுகளையே உண்ணுங்கள். நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை நிறைய சேர்த்துக் கொள்வது சிறுநீரகத்திற்கு நல்லது.

இரத்த அழுத்தம் சிறுநீரகத்தின் செயல்பாடுகளுக்கு இரத்த அழுத்தம் முக்கியம் என்பதால், அதைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். உயர் இரத்த அழுத்தம் நம் சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.

இரத்தத்தில் சர்க்கரை அதேப்போல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்க வேண்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்களை சிறுநீரக வியாதிகள் எளிதாகத் தொற்றிக் கொள்ளும்.

நிறைய நீர் சிறுநீரகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு நிறைய நீராகாரங்களை எடுத்துக் கொள்வது அவசியம். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது சிறுநீரகத்தைத் தான் நேரடியாகப் பாதிக்கும்.


'நோ' சிகரெட் அதேபோல், புகைப்பிடிப்பவர்களையும் சிறுநீரக வியாதிகள் எளிதாகத் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்தால், சிறுநீரகம் மட்டுமல்லாமல் மற்ற பல உடல் பாகங்களும் தப்பித்துக் கொள்ளும்.

சரியான மருந்துகள் நம் உடலுக்கு எந்தவிதமான பாதிப்பு வந்தாலும், அதற்குத் தகுந்த சரியான மாத்திரை-மருந்துகளை ஒரு மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்களாக எந்த மருந்தையும் தேர்ந்தெடுக்கக் கூடாது.

நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே

WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF
· தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

· எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

· புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

· சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

· பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

· நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

· தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

· ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

· அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

· காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

· சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

· உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

· எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

· எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல, ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

· அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

· உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை

எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

· எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

· எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

· இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

· இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள் .

உங்கள் தொப்பையை குறைக்க ஒரு கப் கொள்ளு..!

25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும் அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும் இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.

இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது அதாவது, மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும் மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும் ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும் அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும் உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர் குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள் கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள் மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள் இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள் சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள் அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.

குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம் சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும் அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள் இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும் கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம் இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.

கொள்ளு சூப்
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
தக்காளி – 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

தாளிக்கநல்லெண்ணெய் – சிறிது
கடுகு – சிறிது
வரமிளகாய் – 2

செய்முறை:

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும் அரைத்தக் கலவையில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்.

வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கொள்ளு சூப் 2
தேவையான பொருட்கள் :
கொள்ளு 1 கப்
தக்காளி 1 / 2
சின்ன கத்தரிக்காய் 1
பச்சை மிளகாய் 4
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிது
புளி சிறிது
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு,கத்தரிக்காய்,தக்காளி,உப்பு,மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக வெட்டியது),பச்சைமிளகாய்,மல்லி, சீரகம், கறிவேப்பில்லை போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும்.சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிடவும்.

கொள்ளு ரசம்
கொள்ளு – 1 கப்
வரமிளகாய் – 3
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1ஃ2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1ஃ2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் – 1ஃ2 அல்லது சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
பூண்டு – 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை:

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி, சீரகம்,மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

கொள்ளு மசியல்
கொள்ளு – 200 கிராம்
சீரகம் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 5 பல்
சிறிய வெங்காயம் – 10
புளி – நெல்லிக்காய் அளவில் பாதி
கறிவேப்பிலை – 10 இலைகள்
கொத்தமல்லி இலை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும் அரைத்தக் கலவையில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும் நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கொள்ளு குழம்பு
கொள்ளு – 1 கப்
வரமிளகாய் – 3
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் – 1/2 அல்லது சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
பூண்டு – 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை:

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி,சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

பொடியாக்கி வைத்துக்கொள்ள:

துவரம் பருப்பு,கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும்.

சர்க்கரை நோயை 3 விதமாக கட்டுப்படுத்தலாம்....கூடுதல் தகவல்..!

சர்க்கரை நோயை 3 விதமாக கட்டுப்படுத்தலாம்

1) உணவுக்கட்டுப்பாடு:
* உணவில் சர்க்கரை சத்து அதிகமுள்ள உணவுகளை குறைத்திட வேண்டும்.
  உதாரணம் கேரெட்,பீட்ரூட்,உருளை கிழங்கு,வாழைப்பழம்,மாம்பழம்,இனிப்பு     பண்டங்கள்,அரிசியினால் செய்யும் உணவு வகைகளான சாதம்,இட்லி,தோசை,
இடியாப்பம் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடக்கூடாது.
* இரவில் கோதுமை, ராகி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
* கொய்யா,நாவல் பழம்,பேரிக்காய்,வெள்ளரி,நெல்லிக்காய் ஆகியவை சாப்பிடலாம்.
* ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதை தவிர்த்து 4 அல்லது 5 முறை ஒரு நாளில் குறைவான அளவில் உண்பது நல்லது.

2) மருத்துவ முறைகள்:

* ஆவாரை,கொன்றைவேர்,நாவல் கொட்டை,கடலழிஞ்சில்,கோரை கிழங்கு,கோஷ்டம்,மருதம்ப்பட்டை ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து 4 டம்ளர் நீர் சேர்த்து 1 டம்ளர் ஆக வற்றும் வரை காய்ச்சி, தினமும் இரு வேலை குடிக்க,நீரிழிவு நோய் குறையும்
*தேற்றான் விதை,கடுக்கை தோல்,ஆவாரை விதை,விளாம் பிசின் ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து முதல் நாள் இரவு மோரில் ஊற போட்டு, மறு நாள் காலை அறைத்து பசு மோரில் கலந்து சாப்பிடலாம்.
* நெல்லிக்காய் சாறு,தேன், எலுமிச்சை சாறு ஆகியவற்றை தலா 15 மி.லி எடுத்து மூன்றையும் கலந்து காலை மற்றும் சாப்பிட்டு வர இந்நோய் குறையும்.
* அருகம்புல்லை நிழலில் உலர்த்தி காலையும் மாலையும் வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.
* இலவமரப்பட்டை-10 கிராம்,கருஞ்சீரகம்-5 கிராம் எடுத்து பொடியாகி,1 ஸ்பூன் மோரில், உணவுக்கு முன் மூன்று வேளை சாப்பிடலாம்.

3) உடற்பயிற்சி:
* தினமும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நடை பயிற்சி செய்து வரவும்.
* இளம் வயதினராயின் ஓட்டப் பயிற்சி, யோகா செய்து வரலாம்.
* பகலுரக்கதை தவிர்க்க வேண்டும்.

தடுப்பு முறைகள்:
* நெல்லிக்காய் சாறு ஒரு மேஜை கரண்டி,பாகற்காய் சாறு 1 மேஜை கரண்டி கலந்து தினமும் காலையில் சாப்பிட, கணையம் தூண்டப்பட்டு, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி, சர்க்கரை வியாதியை தடுக்கலாம்.
* நெல்லிக்காய் பொடி, நாவல் பழப்பொடி,பாகற்காய் தூள் தலா ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை வெந்நீரில் சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது.
* தினமும் நடை பயிற்சி , ஓட்ட பயிற்சி செய்தல்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! பள்ளிக்கூட நிலப் பிரச்னை

தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளி அமைந்துள்ள நிலம் தொடர்பான பிரச்னையில் கல்வி அதிகாரி முன்பு நேரில் ஆஜராக நடிகர் ரஜினிகாந்த்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கிண்டியில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு சொந்தமா 'தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன்' பள்ளி இயங்கி வரகிறது. இந்த பள்ளி நிலம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில், வெங்கடேசவரலு என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அதை விசாரித்த நீதிபதி, ''இது தொடர்பாக மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரிடம் மனுதாரர் புகார் செய்யலாம். அவ்வாறு புகார் செய்யும் பட்சத்தில், மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் 8 வாரத்துக்குள் சட்டப்படி விசாரணை செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.

இதையடுத்து, வெங்கடேசவரலு, மெட்ரிக்குலேசன் பள்ளி கல்வித்துறையில் புகார் செய்தார். இதையடுத்து, தி ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வகித்து வரும், ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்க செயலாளர் லதா ரஜினிகாந்த், நிர்வாக அறங்காவலர் ரஜினிகாந்த், பள்ளி முதல்வர் ஆகியோர் ஜனவரி 25-ம் தேதி நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும்'' என கடந்த 12-ம் தேதி மெட்க்குலேசன் பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தி ஆஸ்ரம் பள்ளி முதல்வர் வந்தனா, உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்ரேஷ் முன்பு நேற்று (28-ம் தேதி) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நளினி சிதம்பரம், ''ஒரு பள்ளிக்கூடத்தின் நிலப்பிரச்னை தொடர்பான விசாரணைக்கு நேரில் வரும்படி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இணை இயக்குநர் நோட்டீஸ் அனுப்ப அதிகாரம் கிடையாது'' என வாதிட்ர்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, ''பள்ளி நிலப்பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த இணை இயக்குநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன்படி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை. அதற்காக அந்த உத்தரவையே ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர முடியாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வணே;டும். தேவைப்பட்டால், ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், வந்தனா ஆகியோர் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்கலாம்'' என வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதி சுந்தரேஷ், ''நேரில் ஆஜராக வேண்டும் என இணை இயக்குநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், வந்தனா ஆகியோர் 2 வாரத்துக்குள் இணை இயக்குநர் முன்பு ஆஜராகி, எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு விளக்கம் அளித்த பின்னர் 8 வாரத்துக்குள் சட்டப்படி தகுந்த உத்தரவை மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இணை இயக்குநர் பிறப்பிக்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.

பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்…!!!!

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் “கப்’களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, “கப்’கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.

அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், “பேப்பர் கப்’களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் “கப்’கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட “கப்’களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, “கப்’பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

“டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் “கப்’களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, “கப்’களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்…’ என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்….

எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்; ஆண்களின் மச்ச பலன்கள்

இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும் மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஜோதிடத்தில் மச்சத்தை வைத்தும் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியும் கூறுவார்கள்.

ஆண்களும் மச்சங்களும்:

வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்கள்.
வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள் இருக்கும்.
நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
வலது கண்ணுக்குள், வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர், ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.

இரு கண்களில், ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள்பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும். இருப்பினும், அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும், ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.

இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும், அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.

மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.
நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோக முள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.

மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.
மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். கல்வியறிவும் குறைவாக இருக்கும்.

மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.
இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.

தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.
கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.
கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.
இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.

மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.
வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.
வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.
தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.
வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.
இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்

முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.
முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்

மொபைல் ஃபோன் கம்பெனிகள் எக்ஸ்சேஞ் ஆஃபர் அளிப்பதன் ரகசியம் இதுதானா ?

மொபைல் ஃபோன் கம்பெனிகள் எக்ஸ்சேஞ் ஆஃபர் அளிப்பதன் ரகசியம் இதுதானா ?பழைய கைத்தொலைபேசிகளை விற்கவோ தானமாக கொடுக்கவோ வேண்டாம் ஒரு விழிப்புணர்வு பதிவு நண்பர்கள் கண்டிப்பாக படித்து உங்களுடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்

நம்மில் பலர் புதிய கைத்தொலைபேசிகள் பாவனைக்கு வரும் போது அவை தொடர்பான கவர்ச்சிகரமான விளம்பரத்தில்
மயங்கி அல்லது அவற்றில் உள்ள புதிய தகவல்
தொழில் நுட்ப வசதிகளுக்காக அவற்றை வாங்கும் போது ஏற்கனவே வைத்திருந்த பழைய தொலை பேசிகளை விற்றுவிடுகிறோம் அல்லது நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடுகிறோம்.

இவ்வாறு செய்யும் போது நாம் அவற்றிலுள்ள நமது
தரவுகளையும் விபரங்களையும் அழித்துவிட்டு கொடுப்பதாகவும் நினைத்துக்கொள்கிறோம். அனால் நாம் நினைப்பது போல அவை அவ்வளவு சுலபத்தில் அழிந்து விடுவதில்லை என்றும் தகவல் தொழில்நுட்பத் திருடர்கள் அவற்றை திரும்ப கண்டுபிடித்து நமது விபரங்ளை திருடிவிடும் ஆபத்து உள்ளதென்றும் தகவல் தொடர்பு மற்றும் இணைய குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நாம் பாவித்த எமது பழைய கைத் தொலைபேசிகளை விற்கும் போது எமது தரவுகளையும் சேர்த்தே விற்கிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.நண்பர்களுக்கு அன்பளிப்பாக அவற்றை கொடுப்பதற்கும் இது பொருந்தும்.

நாம் பாவித்த தொலைபேசிகளை நாமே உடைத்து அழித்துவிடுவதுதான் சிறந்த வழி என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இளநரையை போக்க வழிகள்...?

இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும்.


முதலில் இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு, அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.நரைமுடியை 30 முதல் 40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம்.


ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது.


அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துகள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர்.


ஆகவே இந்த மாதிரியான பிரச்னைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். நரைமுடியை கருமையாக்க உதவும் சில பொருட்களை பயன்படுத்தினால் போதும். நிச்சயம் நரை முடி பிரச்னையில் இருந்து விடுபடலாம்.


• நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.


• வாரத்துக்கு ஒரு முறை செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தாலும், நரைமுடி மறைய ஆரம்பிக்கும். சுத்தமான தேங்காய் எண்ணையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை தலைக்கு தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.


• விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அதில் ஹென்னா பொடியை தூவி கட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து வந்தால், நரைமுடி மறையும். அதிலும் இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வருவது நல்லது.


• தயிர் மற்றும் ஹென்னாவை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால், நரை முடி மறையும். வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும். அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்