Monday 25 January 2016

தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறிக்கை..!

தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன

இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.

தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் ரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.
இதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.
ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத் தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்றார்.

தேள் கடிக்கு முதலுதவி

கொடிய வகை தேள்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே தேள் கடிக்கான முதலுதவி சிகிச்சை முறைகளை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது.

தேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்டவேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.

இதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி
நேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதன் மூலம் தேள் கடித்த வலி ஓரளவு குறையும்.

கடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்கபோடலாம்.

முதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு
கொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.
தேள் விஷம் - சிறந்த வலி நிவாரணி
தேளின் விஷம் மிகக் கொடியதாக இருக்கலாம். ஆனால் அதை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார் இஸ்ரேல் ஆய்வாளர் மைக்கேல் குர்விட்ஸ்.

இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய
சாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்.
எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.

பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels ) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.

இந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ். இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்.

அடுத்தது மருதநாயகமா...? ஆர்வத்தில் கமல் ரசிகர்கள்

 கமல் அடுத்து மலையாள இயக்குனரின் படத்தில் நடிக்கிறார் என்பதும், உடன் நடிப்பது அமலா என்பதும் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

யுஎஸ்ஸில் இந்தப் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்க உள்ளது.

இதையடுத்து கமல் மீண்டும் தூங்காவனத்தை இயக்கிய ராஜேஷ் எம். இயக்கத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதனை கமல் அலுவலக வட்டாரம் மறுக்கிறது.

கமலின் கனவுப் படம் மருதநாயகத்தை தயாரிக்க லைக்கா முன் வந்திருப்பதால் மலையாள இயக்குனாpன் படம் முடிந்ததும் அவர் மருதநாயகம் படத்தை தொடங்குவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அவர் ஏற்கனவே மருதநாயகத்தை மீண்டும் தொடங்குவதற்கான வேலையை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கமலின் கனவுப் படம் குறித்த செய்தி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது

பெண்களே உங்க தொப்பை குறையணும ..? ஓடி போயு இதை பண்ணுங்க

பெண்ணை அழகின் உருவாகவே இந்த உலகம் பார்கிறது. பெண்ணுக்கு தொப்பை என்பது பெரிய பிரச்சனை

பெண்களுக்கு தன்னுடைய உடம்பை அழகாவும் ,தன்னை ஒல்லியாகவும் வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.இன்றைய முக்கிய பிரச்சனையே பெண்களுக்கு தொப்பையே .

பொதுவாக பிரசவம் ஆனா பெண்களுக்கு வயிறு பெருத்துவிடுவது சகஜம். ஆனால் அவை நாளடைவில் உரிய உடற்பற்சியின் மூலம் அளவிற்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் சில பெண்கள் இதில் அக்கறை கொள்ளுவதில்லை . பிறகு உடலில் வரும் அனைத்து உபாதைகளுக்கும் இது காரணமாக அமையலாம்.

அதிலிருந்து தப்பிக்க நாம் உண்ணும் உணவு எளிமையானதாகவும், உடலுக்கு உடற் பயிர்ச்சி தேவையான போதுமானதாகவும் இருத்தல் அவசியம். அதிலும் வீட்டிலிருக்கும் பெண்கள் சற்று எக்ஸ்ட்ரா அக்கறை செலுத்த வேண்டும்.

*குறிப்பாக நார் சத்து நிறைந்த உணவுகளை சேர்ப்பதே சிறந்தது.

*தினமும் நடைப் பயிற்சி செய்ய வேண்டும்.

*அமர்ந்தபடியே அதிக நேரம் வேலை செய்வது கூடாது.

*முக்கியமாக தொலைக்காட்ச்சியின் முன்பு அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.

*வயிறைக் குறைக்கும் யோகாசன முறையை முறையோடு பயின்று வருவது மிகவும் பலன் அளிக்கும்.

* சைவ உணவுகளை அதிகம் எடுப்பது நல்லது,பச்சை காய்கறி, பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

*எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

*வீட்டு வேளைகளில் அதிக ஈடுபாட்டுடன் செய்வது, அதாவது அவைகளை உடற் பயிற்சியின் கண்ணோட்டத்தில் செய்வது நல்ல பலனை தரும்.

*நொறுக்கு தீனியை அடியோடு நீக்கிவிடலாம்.

*முக்கியமாக பகல் நேர குட்டி தூக்கம் கூடவே கூடாது.

*எப்போதும் வெதுவெதுப்பான நீர் அருந்துவது மிகவும் நல்லது.

இவ்வாறு வயிற்று பகுதியில் சேர்ந்திருக்கும் கொழுப்பையும் சதையையும் குறைப்பதில் அக்கறை எடுத்து உடலழகை திரும்ப பெறுவதொடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் தொப்பை தொந்தி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

முன்னாடி மாமனார் ; இப்போ மருமகன்; ஹாலிவுட் எண்ட்ரி..!

கோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து வந்த தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியை சில மாதங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தோம் அல்லவா.

மர்ஜன் சத்ராபி என்ற பிரபல பிரெஞ்ச் இயக்குனர் இயக்கும் படத்தில்தான் தனுஷ் நடிக்கிறாராம். ‘The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe’ என்ற ரோமானிய நாட்டு நாவல் ஒன்றை மையமாக வைத்து இப்படம் உருவாகவிருக்கிறது.

இதில் தனுஷ் உடன் பிரபல அமெரிக்கன் நடிகை உமா தர்மன் (‎Uma Thurman) நடிக்கிறார். இவருக்கு தற்போது 45 வயது ஆகிறது. இவர் இரண்டு முறை விவாகரத்து செய்துவிட்டு தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் அலெக்ஸாண்ட்ரா ‎(Alexandra Daddario) நடிக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது…

“தனுஷின் நடிப்பை பல படங்களில் பார்த்திருக்கிறேன். அவரின் புன்னகையே நம்மை கொல்லும். அவரின் இயல்பான நடிப்பே என்னை இந்த கேரக்டருக்கு அவரை தேர்ந்தெடுக்கும் நம்பிக்கையை கொடுத்தது.

மே மாதத்தில் இதன் படப்பிடிப்பை துவங்கவிருக்கிறோம். இதன் படப்பிடிப்பை இந்தியாவின் சில பகுதிகளிலும், பிரான்ஸ், இத்தாலி நாடுகளிலும் படமாக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

தமிழில் ரஜினிக்கு அடுத்தபடியாக ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கும் ஒரே நடிகர் தனுஷ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு பத்மவிபூஷண்! எல்லாம் ஒரு கணக்குதான்

கர்மவீரர் காமராஜர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவி ஜெயலலிதா, கேப்டன் விஜயகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… இப்படி இந்த சாதனையாளர்களின் பெயருக்கு முன்னால் இருக்கிற பட்டங்கள் அனைத்தும் மக்களால் தரப்பட்டவை. இதே தலைவர்களுக்கு அதிகாரபூர்வமாக எத்தனையோ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருமுறை அந்தந்த விருதுகளை அவரவர் பெயருக்கு முன்னால் எழுதி சந்தோஷப்பட்டதில்லை மக்கள். அவ்வளவு ஏன்? இந்தியாவின் சிறந்த குடிமகன் என்ற விருதை பெற்ற விஜயகாந்தை ஒருமுறை கூட அப்படி சொல்லி அழைத்ததில்லை உலகம்.

அதே நேரத்தில், இந்த பத்ம விருதுகளை பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளக் கூடாது என்றும் கூறுகிறார்கள். (அப்புறம் எதுக்காம்?)

வருடத்திற்கொரு முறை தரப்படுகிற பத்ம விருதுகள், வீட்டு அலங்கார பொருட்களாகவே பல இடங்களில் காட்சி தருகின்றன. வேடிக்கை என்னவென்றால், இந்த பத்ம விருதுகள் பாதி பேருக்கு இறந்த பின்பு வழங்கப்படுவதுதான். அட… இருக்கும்போதே வழங்கியிருந்தால் இன்னும் நாலு வருஷம் உயிரோடு இருந்திருப்பாரே… என்று கூட இது பற்றியெல்லாம் விமர்சனங்கள் உண்டு.

விருதுகள் விஷயத்தில் இப்போது நிலைமை சரியில்லாத நேரம். மத்திய அரசு கொடுத்த விருதுகளையெல்லாம் திருப்பிக் கொடுத்து வருகிறார்கள் பல அறிஞர்கள். இந்த நேரத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலருக்கு இந்த பத்ம விபூஷண் விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிப்புகள் வந்திருக்கின்றன. விரைவில் டெல்லியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் ஜனாபதி பிரணாப் முகர்ஜி கைகளால் இந்த விருதை பெறப் போகிறார் ரஜினி.

தகுதியானவருக்கு தரப்படும் தகுதியான விருதுதான். ஆனால் தேர்தல் வரப்போகிற இந்த நேரத்தில் இப்படியொரு விருதை அறிவித்திருப்பது வேறு பல சந்தேகங்களுக்கு வழி வகுத்துள்ளது. “நம்ம தலைவருக்கு விருது கொடுத்த கட்சிக்குதான் என் வோட்டு” என்று ரஜினி ரசிகர்கள் சொல்கிற பட்சத்தில், இந்த சந்தேகம் சரியானதுதான். ஆனால் அப்படியெல்லாம் நடக்குமா? நடந்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.கவில் பசுமை தெரியுமா என்பதுதான் பலமான கேள்வி

நாகார்ஜுனா, பிரகாஷ்ராஜுடன் கடைசிநாள் படப்பிடிப்பு, கலந்துகொள்ளாமல் விடைபெற்ற கல்பனா

'சின்ன வீடு 'கல்பனா என்றால்தான் தமிழகத்தில் பலருக்கும் தெரியும். தனது தனித்தன்மையான நடிப்பால் மலையாளத்தில் மட்டுமல்லாமல்  தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இடம் பிடித்த கல்பனா, இன்று உயிருடன் இல்லை.  திடீரென்று மரணம் அவரைத் தழுவிக் கொண்டது. என்னதான் நடந்தது கல்பனாவுக்கு?

நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா நடிக்கும் தோழா சினிமா சூட்டிங்கில் கலந்து கொள்ள நேற்று அவர் ஹைதரபாத் சென்றுள்ளார். இன்றைக்கு அவர் கலந்துகொள்ளும் கடைசிநாள் படப்பிடிப்பாம். நாகார்ஜுனா மற்றும் பிரகாஷ்ராஜுடன் அவர் நடிக்கவேண்டிய காட்சியை இன்று படமாக்கத் திட்டமிட்டிருந்தார்களாம். அதற்காகத்தான் ஐதராபாத் வந்திருக்கிறார்.

அங்கு தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இன்று மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.   உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கல்பனாவை கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்தே கிடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் கல்பனா எப்படி இறந்தார் என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக கல்பனாவுக்கு இதய வால்வு பிரச்னை இருந்து வந்துள்ளது. கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில், அதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மருந்து மாத்திரைகளும் சாப்பிட்டு வந்துள்ளார். அத்துடன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டுள்ளது.

தனக்கு உடலில் இவ்வளவு வியாதிகள், வலிகள் இருந்தாலும் அதனை சூட்டிங் ஸ்பாட்களில் கல்பனா காட்டிக் கொண்டதே இல்லையாம். படத்தில் எப்படி கலகலப்பாக வருவாரோ... அது போலவே நிஜத்திலும் பழகி வந்துள்ளார். ஒரு போதும் தனக்குள்ள பிரச்னையை அடுத்தவர்களிடம் சொன்னது கிடையாதாம். தனக்கிருந்த நோய்களை சீரியசாகவும் எடுத்துக் கொண்டது கிடையாம்.

ஒரு வேளை ஹோட்டல் அறையில் துணைக்கு யாராவது இருந்திருந்தால் கூட மாரடைப்பு ஏற்பட்டவுடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்க முடியும். பொதுவாக இதயநோய் இருப்பவர்கள் தனியா உறங்க கூடாது . எனவே, 'ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்' என்று  உறவினர்கள் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் கல்பனா அதையெல்லாம் சட்டை செய்தது கிடையாதாம்.

நாடக நடிகர் வி.பி.நாயர், விஜயலட்சுமி தம்பதியரின் மூத்த மகள்தான் கல்பனா. இயற்பெயர் கல்பனா ரஞ்சனி. இவரது தங்கைதான் நடிகை ஊர்வசி,மலையாள நடிகர் அனிலை திருமணம் செய்து கொண்ட கல்பனா, கடந்த 2012-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார். இந்த தம்பதியருக்கு 16 வயதில் ஸ்ரீமாயி என்ற மகள் உண்டு. விவாகாரத்துக்கு பிறகு மகளுடன் கல்பனா வாழ்ந்து வந்தார்.

கடந்த 1983-ம் ஆண்டு  புகழ்பெற்ற மலையாள இயக்குநர் எம்.டி. வாசுதேவன் நாயர் இயக்கிய 'மஞ்சு' என்ற படத்தில்தான் கல்பனா முதலில் அறிமுகம் ஆனார். அதற்கு இரண்டு வருடம் கழித்து தமிழில் அப்பாவி மனைவியாக அவர் நடித்த  'சின்னவீடு ' சக்கை போடு போட்டது. அதுபோல் ' சதிலீலாவதி ' படத்திலும் கல்பனாவின் நடிப்பு பேசப்பட்டது.

அதற்கு பின், தமிழகத்தில் நடிகை கல்பனா பற்றிய பேச்சு இல்லை. அவரது இறப்பு செய்திதான் இப்போது எட்டியிருக்கிறது!

பாகுபலிக்கு ஆறு, தனிஒருவனுக்கு மூன்று, குவியும் விருதுகள்

2000வது வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் பாலிவுட் கலைஞர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி வழங்கப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் (IIFA ), இந்த வருடம் முதல் முறையாக தென்னிந்திய திரைப்படக் கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. IIFA உத்சவம் என பெயரிடப்பட்டுள்ள இவ்விருது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்களின் திறமைகளைப் பாராட்டி வழங்கப்படுகிறது.

சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர் உள்ளிட்ட 12 விருதுகள் வழங்கும் விழா ஜனவரி 24 முதல் 25 வரை, ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று நடைபெற்ற விழாவில் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில், 12 விருதுகளில் 6 விருதுகளை தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்ட பாகுபலி தட்டிச் சென்றது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகருக்கான விருது சத்தியராஜுக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது ரம்யாகிருஷ்ணனுக்கும் வழங்கப்பட்டது, மேலும் சிறந்த பின்னணிப் பாடகர் மற்றும் பாடகிக்கான விருதினை பாகுபலி படத்தில் பாடிய ஹரிசரண் சேஷாத்ரி மற்றும் கீதா மாதுரி பெற்றனர்.

சிறந்த நடிகருக்கான விருதினை சென்ற வருடம் மாபெரும் வெற்றி பெற்ற தனி ஒருவன் படத்திற்காக ஜெயம் ரவியும், அதே படத்திற்காக அரவிந்த் சாமி சிறந்த வில்லனுக்கான விருதையும் வென்றனர். மாயா படத்தில் தனது திறமையான நடிப்பினை வெளிபடுத்தியிருந்த நயன்தாரா சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றார். கோவை சரளா, காஞ்சனா 2 படத்திற்காக சிறந்த நகைச்சுவையாளர் விருதினை வென்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கத்தி படத்திற்காக அனிருத்துக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது மாரி படத்திற்காக தனுஷுக்கும் வழங்கப்பட்டது.

மலையாளத்தில் சென்ற வருடம் மாபெரும் வெற்றி பெற்ற பிரேமம் மற்றும் ப்ரிதிவிராஜ் நடிப்பில் வெளியான நென்னுனுண்டே  மொய்தீன் படங்கள் அதிக விருதுகளை வென்றன. சிறந்த படம், நடிகர், நடிகை, துணை நடிகை, சிறந்த பின்னணி பாடகி, போன்ற ஐந்து விருதுகளை நென்னுனுண்டே மொய்தீன் படமும் , சிறந்த இசை, பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், நகைச்சுவையாளர் விருதுகளை ப்ரேமம் தட்டி சென்றது. மலையாளத்தில் சிறந்த இயக்குநருக்கான விருதை நீனா படத்திற்காக லால் ஜோஸ் பெற்றார்.

விழாவில், மறைந்த இயக்குநர் இமயம் கே. பாலச்சந்தர்,  எம்.எஸ்.வி,  தயாரிப்பாளர் T.E வாசுதேவன் போன்றோருக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகினருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. 

உங்களையெல்லாம் தூக்கி தாரை தப்பட்டை ஓடும் தியேட்டர்லதான் வச்சு அடைக்கணும்!

தாரை தப்பட்டையின் ஒரே நிம்மதி வரலட்சுமிதான் என்றாகிவிட்டது. ரசிகர்களும் சரி, பாதியில் எழுந்தோடி வந்த தாய்குலங்களும் சரி, ‘அந்த பொண்ணு நடிப்பு டாப்புப்பா…’ என்று சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள். (படம் பார்த்த விஷால் மட்டும்தான் சற்றே அப்செட் என்கிறது நிஜ நிலவரம்) ஊர் உலகம் பாராட்டினாலும், ஒருவர் கூட, கால்ஷீட் வேணும். கதவ திறம்மா என்று வரணும் அல்லவா? ம்ஹும்… இந்த நிமிஷம் வரைக்கும் வரலட்சுமிக்கு அப்படியொரு ராங் கால் கூட வரவில்லை. இதெல்லாம் ஒரு புறம் அவரை உஷ்ணமடைய வைத்தாலும், உச்சந் தலையில் ஐஸ் கட்டி விழுந்த மாதிரி ஆக்கியது ஒரு கால்!

மேற்படி கால் பிரம் சூப்பர் ஸ்டார் ரஜினி. தனது வீட்டிலேயே சிறப்பான ஒரு ஹோம் தியேட்டர் வைத்திருக்கும் ரஜினி, பிரத்யேகமாக இந்த படத்தை திரையிட்டு பார்த்தாராம். பார்த்த கையோடு வரலட்சுமிக்கு போன் அடித்துவிட்டார். இந்த சந்தோஷ செய்தியை அவர் போன் செய்து வைத்த அடுத்தடுத்த நிமிஷங்களிலேயே ட்விட்டரில் போட்டு உலகத்துக்கு அறிவித்துவிட்டார் வரு. “Oh my god..in 7th heaven..Jus got a cal from The Super Star himself @superstarrajini..Thnk u sir for the appreciation.. Feels amazing..wohoo” இதுதான் வருவின் ட்விட்.

இன்னுமாய்யா ஒருத்தரும் புதுப்படத்துல வரலட்சுமியை கமிட் பண்ணல? அட… உங்களையெல்லாம் தூக்கி தாரை தப்பட்டை ஓடும் தியேட்டர்லதான் வச்சு அடைக்கணும்!

ஹாலிவுட் படத்தில் தனுஷ் கதாபாத்திரம் இது தான், ஹீரோயின் இவரா?

தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பது தான் தற்போதைய சமூக வலைத்தளங்களில் வைரல். இந்நிலையில் இப்படத்தில் இவர் பிரபல நடிகை உமா தர்மனுடன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.

இதில் தனுஷ் இந்தியாவை சார்ந்த மந்திரவாதியாக நடிக்கவுள்ளாராம். மேலும், பிரபல நடிகை Alexandra Daddario முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இவர் Percy Jackson & the Olympians: The Lightning Thief, San Andreas ஆகிய படங்களின் ஹீரோயினாக நடித்தவர். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த பிரச்சனை வந்தாலும் கவலையில்லை- கபாலி பிரமாண்ட வியாபாரத்தை கூறிய தயாரிப்பாளர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி படம் மே மாதம் திரைக்கு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் சார்பில் சமீபத்தில் பிரமாண்ட மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.

இதில் கலந்துக்கொண்டு பேசிய கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ‘ரஜினிக்கு முதன் முதலாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுத்தது எமது நிறுவனம் தான்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் படத்தை தயாரிக்கிறேன், என் வீட்டிற்கு வருமான வரி சோதனை வந்தாலும் கவலையில்லை.

ஒரு ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன், கபாலி படம் அமெரிக்காவில் மட்டும் ரூ 8.5 கோடி வரை வியாபாரம் செய்துள்ளது.

என் தயாரிப்பில் இதுவரை வந்த படங்களில் இது தான் அதிக வியாபாரம் ஆகியுள்ள திரைப்படம்’ என கூறியுள்ளார்.

பொங்கல் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- முதலிடம் யாருக்கு?

பொங்கல் தினத்தை முன்னிட்டு ரஜினி முருகன், கதகளி, கெத்து, தாரை தப்பட்டை ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில் ரஜினி முருகன் கதகளி ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் தற்போது இப்படங்கள் வெளிவந்து இரண்டு வாரம் ஆகிய நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. இதில் ரஜினி முருகன் ரூ 2.42 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.

இதை தொடர்ந்து தாரை தப்பட்டை ரூ 1.4 கோடி, கதகளி ரூ 1.12 கோடி, கெத்து ரூ 1.03 கோடி வசூல் செய்துள்ளது.

புரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!!!!

விருதுநகரில் கடந்த இரண்டு மாதமாக இறந்தவர்களின் வயது 33/31/34/35/37/39/ 41/43/46. இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டனர். தயவு செய்து யாரும் புரோட்டாவும் முட்டை யும் அதிக அளவில் தினமும் உட்கொள்ள வேண்டாம்…கடலை எண்ணெய் (or) பாமாயிலில் ஊற வைத்து சாப்பிட்ட எண்ணெய் புரோட்டாவால் மாரடைப்பு பாதிப்பு அதிகம். திங்கள் அன்று இறந்தவர் வயது 37(மாரடைப்பு/) தினமும் புரோட்டாவும் /சென்னை சென்றால் பீசா பர்க்கரும் சாப்பிடும் பழக்கமுடையவர் தேவையற்ற உணவு பழக்கத்தை கை விடுங்கள்.

புரோட்டா என்ற இந்த இனிய சிற்றுண்டியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு எளிமையான உணவு,  புரோட்டா. தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பல புரோட்டாக் கடைகள்.இதில்தான் எத்தனை வகைகள்? விருதுநகர் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, கொத்து புரோட்டா… சில்லி புரோட்டா இப்படியாக இளைஞர்களைக் கவரும் புரோட்டா பலவகை இதன் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்தே வருகிறது. ஆனால் இந்த புரோட்டா வினால் உடலுக்கு தீங்கு வரும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக் கிறார்கள். கேரளாவில் மைதாவில் உள்ள தீங்குகளைப் பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் மைதா பொருட்களுக்கு தடைவிதித்துள்ளன.

புரோட்டா மட்டுமல்லாமல் இன்னும் பல வகை உணவுகள் இந்தக் கொடிய மைதாவால் செய்யப் படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக் குறையால் மைதா மாவி னால் செய்யப்பட்ட உணவு புழங்கத் தொடங்கின. புரோட்டாவும் பிரபலமடைந்தது.மைதாவில் நார்ச்சத்து எதுவும் கிடையாது. அதனால் நமக்கு செரிமான சக்தி குறைந்து விடுகிறது. குறிப்பாக இரவில் புரோட்டா சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, மைதா மாவினால் தயாரிக்கப்படும் ரொட்டிப் பொருள்கள், கேக் வகைகள் போன்றவைகளை நாம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.நன்றாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும், அதை அப்படியே சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும்.

ஆனால் அதிலிருந்து மைதா தயாரிக்க கோதுமை மாவில் ‘பெண்சாயில் பெராக்ஸைடு’ என்னும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.இந்த ரசாயனம்தான் நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். இந்த நச்சு ரசாயனம் மாவில் உள்ள புரோட்டீன் சத்துடன் சேர்ந்து கணையத்தை சேதமாக்கி நீரழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது. அதுமட்டுமல்ல, அலோக்கான் என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்கவும், ஆர்ட்டிஃபிசியல் கலர், மினரல் ஆயில், டேஸ்ட் மேக்கர், சாக்கரின் சர்க்கரை அஜினேமோட்டோ போன்றவை சேர்க்கப்படுவதால் புரோட்டா இன்னும் அபாயகரமாகிறது. மைதா சாப்பிடுவது இந்தியாவில்தான் அதிகம்.

உலகளவில் சர்க்கரை நோயாளிகளும் நம் நாட்டில்தான் அதிகம். மேலும் சிறு நீரகம், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் இதனால் வருவதாக கூறுகிறார்கள்.கேரளாவில் இந்த விசயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தொண்டு நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிப்பது கிருஷ்ணகுமார் என்பவர் தலைமையில் இயங்கும் மைதா வர்ஜனா சமிதி ஆகும். பாலக்காடு மாவட்டம் முழுவதும் மைதாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களிலும் அங்கு பிரச்சாரம் தொடர்கிறது.இனிமேலாவது நம் பாரம்பரிய உணவான கேழ்வரகு, கம்பு, சோளம் உட்கொண்டு அந்நிய உணவான மைதா என்கிற ரசாயனம் கலந்த புரோட்டாவை புறம் தள்ளுவோம். நாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறையையும் காப்போம்…

ரத்தப் கொதிப்பை தடுக்க உதவும் உணவுகள்!

நம்மைச் சுற்றி எல்லா இடத்திலும் மூன்று நபருக்கு ஒருவர் ரத்தக் கொதிப்பு உடையவராகத் தான் இருக்கின்றார். இது உலகெங்கிலும் உள்ள ஆய்வு முடிவு. குறிப்பாகச் சொல்லப்போனால், 30 வயதினை அடையும் முன்பே 20-25 சதவீத மக்கள் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகின்றனர். மூட்டு வலி, முதுகு வலி போல், முதலில் எந்த அறிகுறியும் பலருக்கு ரத்தக் கொதிப்பு காட்டுவது இல்லை. அநேகருக்கு பல காலம் ரத்தக் கொதிப்பு இருந்தும், நலமோடு இருப்பது போலவே இருப்பர். மாரடைப்பு (அ) பக்கவாதம் போன்ற பாதிப்புகள் திடீரென ஏற்படும்போதே ரத்தக் கொதிப்பு பாதிப்பு தெரியவரும்.

இதன் காரணமே நன்றாக இருக்கிறேன் என்று சொல்லும் ஒருவரையும், மருத்துவர் சில அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை செய்துக் கொள்ள சொல்கின்றனர். ஒரு 35 வயது மனிதன் சரியான ரத்த அழுத்த நிலையில் வாழும்போது அவன் ஆயுள் சுமார் 75 வயது செல்ல முடியும். இளவயதிலேயே ரத்தக் கொதிப்பு எனும்போது அவன் ஆயுள் சுமார் 20 வருடங்கள் குறைந்து விடுகின்றது. ரத்தக் கொதிப்பிற்கும், சர்க்கரை நோய்க்கும் நிரந்தர தீர்வு என்பது இல்லை. நல்ல கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.

40-50 வருடங்கள் முன்பு வரை ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் என்றால், மருத்துவர்கள் அவர்களை டென்ஷன் உள்ள வேலை, கடும் உழைப்புள்ள வேலை இவைகளிலிருந்து கண்டிப்பாக ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்வார்கள்.

ஆனால், இன்று நிலைமை வேறு. மிக நல்ல மருந்துகள் ஒருவரின் வாழ்க்கை நிலைமையினை காப்பாற்றி விடுகின்றன. ஒருவருக்கு ரத்த அழுத்த பாதிப்பு அபாயம் உள்ளதினை அவர்களே தெரிந்துக் கொள்ளும் சில அறிகுறிகள்:

* எதிலும் அதிக ஆர்வமின்மை.

* அதிக எடை.

* ரத்த உறவுகளில் யாருக்கேனும் இந்த பாதிப்பு இருப்பது.

* 35+

* மாதவிடாய் நின்ற பெண்மணிகள்.

* புகை, மது பழக்கம் உடையவர்.

* கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளும் பெண்கள்.

* உடல் உழைப்பு இல்லாதோர்.

இப்படி அதிக ரத்த அழுத்தம். உணவில் கவனம் செலுத்தினால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம்.

முதலாவதாக, சுவாசம் சீராக வேண்டும். தீர்க்கமாக மூச்சு இழுத்துவிட்டுப் பழக வேண்டும். ரத்தக் கொதிப்பு என்பது ரத்தக் குழாய்களையும் இதயத்தையுமே பொறுத்தது. ஆகவே அது உடலில் ஓடும் ரத்தத்தைப் பொறுத்திருக்கிறது.

தினசரி கவனமாகப் பயிற்சி செய்யுங்கள். இது உடலை நன்றாக வைக்கும். ரத்த ஓட்டம் சரியாக நடைபெறுவதற்கு இது உதவி செய்யும். போதுமான ஓய்வு அவசியம். உடல் அதிர்ச்சியும் மனக் கிளர்ச்சியும் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கும்.

மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கலால் ரத்த ஓட்டம் மெதுவாகி, கொதிப்பு ஏற்படக் காரணமாகிறது.

இறைச்சி உணவுகளைக் குறைத்து, பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால் ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

வெள்ளைப் பூண்டு, ரத்தக் கொதிப்பைத் தணிக்கும். பூண்டைச் சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு கோப்பைப் பாலில் காய்ச்சி, இரவில் சாப்பிட்டால் நல்ல டானிக் போல் அமையும்.

ரத்தக் கொதிப்புக்கு மன அமைதியின்மையும் ஒரு முக்கியக் காரணம். கோபம், பொறாமை, பகை, கவலை போன்ற எதிர் உணர்ச்சிகள் மூளையைப் பாதிப்பதோடு, ரத்தக்கொதிப்பையும் அதிகமாக்குகின்றன. எனவே எப்போதும் மனதை அமைதியான எண்ணங்கள், மகிழ்ச்சியால் நிரப்புவது அவசியம்.

நாங்க மரச் செக்கு எண்ணெய்க்கு மாறிட்டோம்! – ஏன் தெரியுமா?

இப்போதெல்லாம் நாள்தோறும் சந்தைக்கு வரும் ஒவ்வொரு புது சமையல் எண்ணெயுமே ‘ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்’ என்று விளம்பரப்படுத்திக் கொண்டு, வருவதால் நம்மில் பலருக்கு குழப்பம் அதிகரிப்பதுதான் மிச்சம். இந்தக் குழப்பத்துக்கு விடை காண்பதற்கு முன், இந்த எண்ணெய் நல்லதா, கெட்டதா, கண்டிப்பா தேவையா? என்கிற தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

எண்ணெய் என்பது கொழுப்பு... இந்த கொழுப்பு ஏன் தேவை?உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க,  செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலத்தைக் கொடுப்ப தற்கு, உள் உறுப்புகளைப் பாதுகாப்பதற்கு… புரதத் திலும் மாவுச் சத்திலும் உள்ளதைப் போல 2 மடங்கு ஆற்றல், கொழுப்பில் இருந்து கிடைக்கிறது. ஒரு கிராம் புரதத்தில் கிடைப்பது 4 கலோரிகள் என்றால் அதே அளவு கொழுப் பிலோ 9 கலோரிகள்! கண்ணுக்குத் தெரிந்தது, கண்ணுக்குத் தெரி யாதது என கொழுப்பில் 2 வகை. எண்ணெய், நெய், வெண்ணெய் என எல்லாம் கண்ணுக்குத் தெரிந்து நாம் எடுத்துக்கொள்கிற கொழுப்பு. அரிசி, பருப்பு, முட்டை மீன், இறைச்சி, எண்ணெய் வித்துகள் போன்ற உணவுகளின் மூலம் உடலுக்குள் சேர்வது கண்ணுக்குத் தெரியாத கொழுப்பு.

இது தவிர, சாச்சுரேட்டட் மற்றும் அன்சாச்சுரேட்டட் என கொழுப்பை இன்னும் 2 வகைகளாகப் பிரிக்கலாம். விலங்குக் கொழுப்பில் சாச்சுரேட்டட் வகை மிக அதிகம். இந்த வகைகொழுப்பு உடல் நலத்துக்கு நல்லதல்ல. ஆனாலும், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ஏ மற்றும் டி-யை நம் உடலுக்கு உறிஞ்சிக் கொடுக்கும் வேலையை இந்த வகைக் கொழுப்புகளே செய்கின்றன. அன்சாச் சுரேட்டட் அல்லது பாலி அன்சாச்சுரேட்டட் வகையை நல்ல கொழுப்பு என்கிறோம். ரத்தக்குழாய் களில் கொழுப்பு படியாமல் செய்வது இதுவே. தாவரக் கொழுப்பு எல்லாமே அன்சாச்சுரேட்டட் வகையறாதான். வனஸ்பதி மட்டும் விதிவிலக்கு. அதனால், அதை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வனஸ்பதி மட்டுமல்ல… அறை வெப்ப நிலையில் கெட்டியாகக் கூடிய எந்த வகை எண்ணெய் வகைகளும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை.மொத்தத்தில் உடலில் உள்ள செல்கள் ,மூட்டுகளில் உள்ள அசைவு கொடுக்கும் செல்கள் மற்றும் சுரப்பிகள் (ஹார்மோன்கள் )இயங்க கொழுப்பு மிகவும் முக்கியம் தாவர கொழுப்புகளில் நேரடி கொலஸ்ட்ட்ரல் கிடையாது .தவிர பல விட்டமின்கள் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது பள்ளி கூடத்தில் படித்ததை நினைவு படுத்தி கொள்ளுங்கள் .

இன்னும் கொஞ்சம் விளக்காக சொல்வதென்றால் உடலை என்றும் இளமையுடனும் பளபளப் பாகவும் புத்துணர் வுடன் வைத்து கொள்ளும் தன்மை தாவர எண்ணைக்கு உண்டு .இயற்கை தாவர எண்ணெய்கள் உடலிலும் ரத்த குழாய் களிலும் கொழுப்பை சேர்க்காது .தொப்பை விழாது பாது காக்கும் .இயற்கையில் கிடைக்கும் கடலை எண்ணெய் ,தேங்கா எண்ணெய் ,வேப்ப எண்ணெய் ,விளக்கென்னை , நல்லெண்ணெய் ஆகியவற்றில் பல வைட்ட மின்கள் குறிப்பாக அண்டி ஆக்சி டண்ட்கள் வைட்டமின் ,தாது உப்புகளான இரும்புசத்து ,துத்தநாகம் ,மக்னேசியம் ,செம்பு ,கால்சியம் முதலானவை உள்ளன . இந்த தாது பொருட்கள் முலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருட் கள் நம் கை , கால் முட்டுகளுக்கு சென்று எலும்பு தேய்மானத்தை தடுக்கும் .இவை தான் எண்ணெய் யின் உண்மையான குணங்கள் .

அனால் இன்றைக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது இல்லை , ரத்தகொதிப்பு ,மாரடைப்பு ,உடல் பருமன், கேன்சர் என்று எல்லாவற்றிற்கும் எண்ணெய் யை குறை சொல்ல தொடங்கி விட்டோம். ஆனால் இதற்கெல்லாம் காரணம் ரீபைண்ட் மற்றும் டபுள் ரீபைண்ட் (Ex : GoldWinner ,Sundrop, Fortune ,SVS ,Porna, Sunland , Saffola , Palmolein )என்று நவீன முறைகள் முலம் கெடுப்பது தான் .இன்றைக்கு புற்றுநோய் ,முட்டுவலி ,போன்ற வற்றுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்துவதே காரணம் .எண்ணெய் சுத்திகரிக்கப்பட பயன்படுத்தும் வேதி பொருட்கள் உடல் நலத்துக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்துபவை .

சமையல் எண்ணெய் களை எபப்டி சுத்திகரிக்க படுகின்றன என்பதை பார்த்தால் நாம் சொன்னதில் உள்ள உண்மை தெரிய வரும் பல உள் நாட்டு கம்பெனிகள் பெரிய பெரிய இரும்பு இயந்திரங்கள் மூலம் கடலை மற்றும் எள்ளை ஆட்டி எண்ணெய் பிழிவர்கள்.அப்போது கடுமையான வெப்பம் இரும்பு உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படும் .அந்த வெப்பத்தால் இய்ற்கையாகவே எண்ணெய்களில் மறைந்திருக்கும் சில அதிசயமான மருத்துவ குணம் குறைந்து போய்விடும் .

இன்று நாம் சமையலுக்கு வாங்கும் ரீபைண்ட் ஆயில் இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தை யும், அதன் கொழகொழப்புத் தன்மையையும், கொழுப்புச் சத்தையும் நீக்குவதையே இன்றைக்கு ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் சுத்திகரிப்பு என்று சொல்கிறார்கள். இதற்குச் சோப்புத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் காஸ்டிக் சோடா என்ற சோடியம் ஹைடிராக்ஸைடு, அடர் கந்தக அமிலம், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை எண்ணெயில் சேர்க்கிறார்கள். இந்தக் காஸ்டிக் சோடா எண்ணெயில் உள்ள கொழுப்பைப் பிரித்து சோப் ஆயிலாக மாற்றி விடு கிறது. அந்த சோப் ஆயிலைத் தனியே நீக்கி விடுவார்கள். எண்ணெயின் நிறத்தைப் போக்க பிளிச்சிங் பவுடர். பின் இந்த வேதிப் பொருள்களையெல்லாம் நீக்கி விட்டு தெளிவான எந்த மருத்துவ குணமும் இல்லாத வேதிய அமிலம் (எண்ணெய்) கிடைக்கும்.

அதுமட்டுமல்ல, உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பையும் இந்தச் சுத்திகரிப்பு நீக்கிவிடும். இந்த ரீஃபைண்ட் கடலை எண்ணெய், ரீஃபைண்ட் நல்ல எண்ணெய் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். இறுதி யாக அந்தந்தக் கம்பெனிகள் தங்களுக்கு என்று நிரந்தரமாக வைத்தி ருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கிறார் கள் சமையலுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட எண் ணெயை பயன்படுத்தும் பொழுது சுடு தங்காமல் உருக்கு லைந்து (உருக்குலையும் பொழுது தான் பிசுபிசுப்பு தன்மை பாத்திரங்களில் மற்றும் உங்கள் சமையல் கட்டுகளில் ஒட்டி கொள்கிறது ) உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது. இந்த பிசு பிசுப்பு தன்மை நாம் சாப்பிடும் பண்டங்களிலும் இருப்பதால் நாம் உடல்களில் உள்ள நல்ல செல்களில் இணையந்து அந்த செல்லின் வேலைகளை தடுக்கிறது அதுவே பின் நாட்களில் பல வியாதிகளுக்கு நாம் ஆளாகிறோம் .

இதனால்தான் இப்போதெல்லாம் பதினைந்து வயதிலேயே முடி நரைத்து விடுகிறது முடியின் இயற்கை நிறம் மாறி விடுகிறது. மூட்டுக்களில் தேய்மானம் மற்றும் மற்றும் மூட்டு வலி ஏற் படுகிறது அதுமட்டுமில்லாமல் சுத்தி கரிக்கப் பட்ட எண்ணெய்யில் தங்கியுள்ள கந்தக அமிலம் ,மனித உடலில் உள்ள எலும்பை பலவீனம் அடைய செய்து விடும் .

அப்படியானால்… பாரம்பரிய எண்ணெய்தான் நல்லது!

நம் முன்னோர்கள் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும், கடலை எண்ணெயையும், நல்லெண்ணை யையும் அப்படியே (எந்தப் பிரத்யேக வடிகட்டுதலும் இன்றி வெய்யிலில் காய வைத்து) உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், கொழகொழப்பாகவும் இருக்கும் இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள், உயிர் சத்துக்கள் தான் ,உடல் ஆரோக்யத்திற்கு தேவையான ப்ரோடீன்கள் ,வைட்டமின்கள் ,தாது பொருட்கள் ,நார்சத்துக்கள்,குளோரப்பில்.கால்சியம் ,மாக்னீசியம் ,காப்பர் ,இரும்பு ,பாஸ்பரஸ் வைட்டமின் போன்றவை யுடன் அறிவியல் அறிவுக்கு எட்டாத பல தாதுக்களும் இவற்றில் இயற்கையாகவே அமைந்து இருக்கின்றன .உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பையும் கொடுக்கும் எண்ணெய்கள் இவை .

செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் அது உடலில் சேர்ந்து விட்ட தேவையற்ற கொலஸ்ட்ட்ரலை குறைக்கும் .செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் தாய் பாலுக்கு இணையான பல நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட அமிலங்கள் உள்ளது .செக்கில் ஆட்டிய விளகெண்ணை அனப்படும் ஆமனெக்கு எண்ணெ யில் ரிசிநோலியிக் அசிட் அதிகம் உள்ளது .இந்த அசிட் ஒரு சிறந்த அண்டி பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரி செய்ய கூடியது தவிர குடல் சுத்திகரிப்புக்கும் ஏற்ற தன்மை கொண்டது

இந்த எண்ணெய் அழகு பராமரிப்பில் பயன் படுத்தினால் சருமம் அழகாவதோடு ,கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும் .குதிகால் வெடிப்புகள் இருந்தால் தினமும் விளகெண்ணை தடவி வர குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி வெடிப்புகளும் விரைவில் போய்விடும் (நாம் கடைகளில் வாங்கும் பிரான்ச் ஆயில் வேறொன்றும் இல்லை )

செக்கில் அட்டிய நல்லெண்ணெய் நோய் மற்றும் முதுமையை தடுக்கும் வைட்டமின் ஈ யும் கொலஸ்ட்ட்ரலை குறைக்கும் “லெக்சீதீன்” என்ற பொருளும் உள்ளது எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணைக்கு நிகரே இல்லை எனலாம் .அதனாலையே இதற்கு ” குயின் ஆப் ஆயில் ” என்றும் அழைகிறார்கள் மூல தொந்தரவு , மாத விலக்கு தொந்தரவு மூச்சுகுழல் பிரச்சனைகள்,சரும பிரச்சனைகள் முதலிய பிரச்சனை உள்ளவர்கள் நல்லெண்ணை தொடர்ந்து பயன்படுத்த இந்த தொந்தரவுகள் நீங்கும் .செசாமின் என்ற பொருள் நல்லெண்ணையில் இருப்பதால் வாதம் ,இதய நோய் வராமல் முன் கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுபாட்டில் வைத்து கொள்கிறது .வாழ்க்கையில் வெறுப்பு கவலை மனச்சோர்வு முதலியவற்றை தடுக்கும் பைரோரெசினால் என்ற அமில பொருளும் நல்லெண்ணையில் இருக்கிறது .

அது சரி.. மரசெக்கு எண்ணெய் என்றால் என்ன ?

செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை,தேங்காய், எள்ளு,ஆமணக்கு)இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி .செக்கானது மரத்தலோ ,கல்லாலோ செய்யபட்டிருக்கும் .செக்கின் அடி மரம் புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்க படுகிறது.ஆரம்ப காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளை பயன்படுத்தி வந்தனர் தற் பொழுது மின்சாரம் அல்லது எரிபொருள் மூலம் இயக்க படுகிறது .பழைய கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில் வித்துகளை நசுக்கும்படியாக உலக்கை கொண்டு அதனுடன் நசுக்கப்பட்ட வித்துகளில் இருந்து வரும் எண்ணெய் வெளியேறும் படியாக ஒரு குழாய் போன்ற உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கும்

செக்கில் நல்லெண்ணெய் ஆட்டுவதற்கும் சுத்தம் செய்த எள் கருப்பட்டி அல்லது நட்டு சக்கரை (ஆட்டும் பொழுது ஏற்படும் வெப்பத்தை தணிக்க ) சேர்த்து ஆட்டுவது வழக்கம் சிறிது சிறுதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குக ளை சுழல வைப்பதின் முலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும் .மரசெக்கில் கருபட்டி யுடன் சேர்த்து எள்ளை ஆற்றும் பொழுது அவளவாக வெப்பம் ஏறாது .அபப்டியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சம்மாக்கள் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது .இப்படி மர செக்கில் ஆட்டி பிழிந்து எடுக்கப்படும் நல்லெண்ணைக்கு அபாரமான மனமும் குணமும் இருப்பது இயற்கை .இவ்வாறு ஆட்டப்படும் எண்ணையின் மனம், மருத்துவ குணம் சுவை இதெல்லாம் அலாதி தான் .

மரசெக்கு எண்ணெய் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும் அனால் நல்ல ருசியுடன் ஒரு வருட காலத் திற்கு கெட்டு போகாமலும் இருக்கும் ஒரு முறை மரசெக்கு எண்ணெய் சாப்பிட்டால் …அதன் ருசி கால கால காலத் திற்கும் மறக்காது .இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கும்.குழம்பு வறுவல் பொரியல் முறுக்கு அதிரசம் வடை என்று எல்லாவிதமான உணவு வகைகளையும் இந்த செக்கில் ஆட்டிய எண்ணெய்களில் சமைக்கலாம்

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!


ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

‘பீப்’ பாடலால் கிடைத்த விளம்பரம்! அறுபதுகோடி வியாபாரமானது சிம்புவின் படம்!!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாரா நடித்திருக்கும் இதுநம்மஆளு படம் அறுபதுகோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. திரைப்பட விநியோகத்துறையில் உள்ளவர்களிடம் இதுபற்றிக் கேட்டால், அதில் சிறிதும் உண்மையில்லை என்று சொல்கிறார்கள்.

அந்தப்படத்தைத் தமிழகம் முழுதும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை தேனாண்டாள்பிலிம்ஸ் வாங்கியிருக்கிறது. அதற்காக அவர்கள் சுமார் பனிரெண்டுகோடிவரை கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வெளிநாட்டு விநியோக உரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியன பற்றி இதுவரை எவ்வித உறுதியான தகவலும் இல்லை என்றே சொல்கிறார்கள். இப்போதெல்லாம் பெரியபடங்களாக இருந்தாலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை படம் வெளியான பின்புதான் விற்பனையாகிறது என்று சொல்லப்படுகிறது.

உண்மை இப்படியிருக்க திடீரென அறுபதுகோடி வியாபாரம் என்று எப்படிச் சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. 

டீசல் காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான சில வழிமுறைகள்!

அட வேற ஏதாவது நினைத்துக் கொள்ளாதீர்கள். உச்சம் என்று குறிப்பிட்டுள்ளது மைலேஜைதான். பெட்ரோல் விலை விரட்டி அடித்து அரட்டி வரும் வேளையில் டீசல் கார்கள்தான் சிறந்த தீர்வாக இருக்கின்றன. அதிக மைலேஜ்தான் இதற்கு முக்கிய காரணம். குறைவான சப்தம், நவீன தொழில்நுட்பம் கொண்டதாக டீசல் எஞ்சின்கள் மேம்பட்டிருக்கின்றன.

இருந்தாலும், பெட்ரோல் கார் போன்று டீசல் கார்கள் உடனடி பிக்கப் கொடுப்பதில்லை. பெட்ரோல் காரை போன்று ஓட்டினால் நிச்சயம் அது மைலேஜில் அதிக பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, டீசல் கார் ஓட்டும்போது டிரைவிங் பழக்கத்தை சிறிதளவு மாற்றிக் கொண்டால் சிறப்பான மைலேஜ் பெறுவதோடு, ஒவ்வொரு பயணமும் இனிதாக அமையும். டீசல் கார் ஓட்டும்போது கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகளை காணலாம்.

பிக்கப்:

டீசல் கார்கள் குறைந்த எஞ்சின் சுழல் வேகத்தில்(ஆர்பிஎம்) அதிக டார்க்கை வெளிப்படுத்தும். எனவே, காரை கிளப்பும்போது மிதமான வேகத்தில் ஆக்சிலேட்டரை கொடுக்க வேண்டும். வேகமாக கிளப்பினால் என்ன என்கிறீர்களா?, ஒவ்வொரு 100 கிலோமீட்டர் தூரத்துக்கும் 2 லிட்டர் டீசலை கூடுதலாக ஊற்ற வேண்டியிருக்கும்.

இதனை ஒப்பிடும்போது கிட்டதட்ட பெட்ரோலுக்கு இணையான தொகையை டீசலுக்கும் அழ வேண்டியிருக்கும். எனவே, காரை கிளப்பும்போது ஆக்சிலேட்டரை மிதமாக கொடுத்து வேகமெடுக்க பழகிக்கொள்ளுங்கள். சிலர் டீசல் கார் மைலேஜ் கொடுக்கவில்லை என்று புலம்புவதும் அவர்களின் டிரைவிங் பழக்கத்தால் கூட இருக்கலாம். எனவே, டீசல் காரை பூப்போல கையாள பழகிக் கொள்ளுங்கள். மைலேஜில் உச்சத்தை நிச்சயம் தரும்.

குரூஸ் கன்ட்ரோல்:

நெடுஞ்சாலைகளில் செல்லும்போது குரூஸ் கன்ட்ரோல் இருந்தால் அவசியம் பயன்படுத்துங்கள். காலால் ஆக்சிலேட்டரை கொடுத்து ஓட்டும்போது சீரான வேகத்தில் செல்ல முடியாது. எனவே, குரூஸ் கன்ட்ரோல் பயன்படுத்தி ஓட்டினால் அதிக மைலேஜ் பெறுவதோடு, காரின் எஞ்சினும் சிறப்பாக இயங்கும். நெடுஞ்சாலைகளில் 100 கிமீ வேகத்துக்கு மேல் செல்வதை தவிர்த்தாலும் அதிக மைலேஜ் பெறலாம்.

கியர் மாற்றும் கலை:

சரியான எஞ்சின் சுழல் வேகத்தில் கியரை மாற்றினால் அதிக மைலேஜ் கிடைக்கும். மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் குறைந்த வேகத்தில் செல்லும்போது அதிக கியர்களில் (4 அல்லது 5 வது கியர்) செல்வதை தவிர்க்கவும். வேகத்துக்கு தக்கவாறு கியர் என்பது கூடுதல் மைலேஜுக்கு உத்தரவாதம். சிக்னல் உள்ளிட்ட இடங்களில் கியரில் வைத்தும் காரை எஞ்சினை நிறுத்த வேண்டாம். நியூட்ரலில் வைத்து மட்டுமே நிறுத்தவும்.

ஏசி மற்றும் எலக்ட்ரிக்கல் சாதனங்களை தேவையில்லாதபோது பயன்படுத்துவதை தவிருங்கள். சீட் வார்மர், டிஃப்ராஸ்ட் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பது கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெறலாம்.

நீரிழிவு, இதய நோய்களை குணமாக்கும் மிளகாய்!

மிளகாய் நல்லதா? கெட்டதா? அதிக காரம் சாப்பிட்டால் அல்சர் வருமா? அதிக மிளகாய் சேர்த்த உணவு சூட்டை உண்டாக்குமா? இப்படி மிளகாயைப் பற்றிப் பரவலாக பலருக்கும் பல கேள்விகள் உள்ளன.
ஆனால், எந்த சமையலுக்கும் சுவைகூட்டும் முக்கியப் பொருளான மிளகாயில், நல்லதும் கெட்டதுமான அம்சங்கள் இணைந்தே இருக்கின்றன என்பதே உண்மை.

பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், குடைமிளகாய் என மிளகாயில் பல வகைகள் உள்ளன. எல்லா மிளகாய்க்கும் குணங்கள் ஒன்றே. ஒரே ஒரு வித்தியாசம், காய்ந்த மிளகாயில் மட்டும் கலோரியும், வைட்டமின் ஏ சத்தும் மற்றதைவிட சற்று அதிகம்.

கொழுப்புச் சத்தோ, உப்புச் சத்தோ இல்லை என்பதால் இதய நோயாளிகளுக்கும், சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் மிளகாய் கொடுக்கலாம். தவறில்லை.

எடைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு மற்றவர்களைப் போல எல்லா உணவுகளையும் சாப்பிட முடியாது. எந்த உணவையும் சுவைபட மாற்ற, அவர்கள் மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.
நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும்கூட மிளகாய் நல்லது. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் “பீட்டா கரோட்டின்” என்கிற வைட்டமின் ஏ சத்தானது அதிகம்.

அதனால், விழித் திரையின் நிறமியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் மிளகாய் மறைமுகமாக உதவுகிறது. வைட்டமின் சி சத்தும் அதிகம். அதனால் ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது.
மிளகாயில் “சிணீஜீணீ வீநீவீஸீ” என்கிற நிறமிதான் மிளகாயின் காரசார ருசிக்குக் காரணம். இந்த நிறமி அதிகமானால் மிளகாயில் காரம் அதிகரிக்கும். குறைந்தால் காரமும் குறையும்.

நரம்புப் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சொரியாசிஸ் என்கிற சரும நோய் உள்ளவர்களுக்கும் மிளகாய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.

ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

இரவில் காரசாரமான உணவு எடுத்துக் கொண்டால், காலையில் மிகவும் ஓய்வாக எழுந்ததாக உணர்வது இதனால்தான். தவிர மிளகாய் சேர்த்த உணவு, குடலை சுத்தப் படுத்தி, உடலை லேசாக்கி விடும்.

இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தாலும், மிளகாயை அளவோடுதான் எடுக்க வேண்டும். சிலர் அதிக மசாலா, காரம் சேர்த்த உணவுகளை மட்டுமே எப்போதும் சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிட்டால் குடல் பிரச்சனை, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சனை, மூலநோய் போன்றவை வரலாம்.

மிகவும் காரமான உணவு உண்ணும் போது, அந்தக் காரத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த மிதமான உணவுகளையும் எடுக்க வேண்டும். அதனால்தான் தயிர்சாதம் – ஊறுகாய் போன்ற உணவுகளை நம் முன்னோர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்!