Wednesday 20 January 2016

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய் என்று தெரிந்துகொள்ளலாம்!

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..

கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?
கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?
சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?
நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?
தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?
கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

வெளுத்த நகங்கள் என்ன வியாதி?
இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி?
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குஷ்புவிற்கு முத்தம் கொடுத்த மாதவன்!

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் குஷ்புவிற்கு, நடிகர் மாதவன் முத்தம் கொடுத்துள்ள சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

குஷ்பு நடத்தி வரும் தொலைக்காட்சித் தொடருக்காக சமீபத்தில் நடிகர் மாதவன் விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த வார இறுதியில் வெளியாக இருக்கும் அந்தத் தொடர் குறித்த, விளம்பரக் காணொளி ஒன்றை, சமீபத்தில் குஷ்பு தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

அந்தப் பதிவில், “இந்த ப்ரோமோ (விளம்பரம்)வைப் பார்த்த பிறகு, அனைத்து பெண்களும் பொறாமைப்படப் போகிறார்கள்” என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அவரின் அந்த காணொளியில், நடிகர் மாதவன் புகழ்பெற்ற அலைபாயுதே உரையாடலைக் கூறி, ‘நச்’  என குஷ்புவிற்கு முத்தம் கொடுத்துவிடுகிறார். இது போதாதா, ஏற்கனவே குஷ்புவின் உடை அலங்காரத்தைப் பற்றி தாறுமாறாக விமர்சித்து வந்த கலாச்சார காவலர்கள், தற்போது மேற்கூறிய நிகழ்ச்சிக்காக குஷ்புவையும், மாதவனையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தொலைக்காட்சிகளில் முகம் சுளிக்கும் படியான நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த தணிக்கை அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

நரம்புகளை சுத்தம் செய்யும் சித்தாசனம்

நமது உடலில் உள்ள 72000 நாடி நரம்புகளை சுத்தம் செய்யும் எளிதான ஆசனம் இது.

செய்முறை :

முதலில் தரையில் அமருங்கள். பின்னர் இடது காலை மடித்து வலது கணுக்காலில் படும்படி மடித்து அமருங்கள். அடுத்தது வலது காலை மடித்து இடது தொடை மீது படும்படி செய்யுங்கள்.

இரு கைகளையும் சின் முத்திரை தாங்கி கால் முட்டிகள் மீது வைத்து மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தில் 20 நிமிடம் அமர வேண்டும். பிறகு கைகளை சமநிலைக்கு கொண்டு வந்து பின்னர் நிதானமாக  ஒவ்வொரு காலாக பிரித்து நிமிர்த்தி அமர்ந்த பின் எழ வேண்டும்.

பயன்கள் :

இந்த ஆசனத்தை செய்வதால் மனம் அமைதி அடையும். ரத்த ஒட்டம் சீராகும். பின்புறம் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் குறையும். மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

பாபா ராம்தேவ்வுடன் அட்டகாசமாக யோகாசனம் செய்த ஷில்பா ஷீட்டி - புகைப்படம் உள்ளே

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷீட்டி கடந்த ஒரு வருடமாக எந்தவெரு சர்ச்சையிலும் சிக்காமல் குடும்பம், குழந்தைகள் என்று கவனித்து வந்தார். இந்நிலையில் இன்று மும்பையில் நடந்து வரும் ஐந்து நாள் யோகாசனம் கூட்டம் பாபா ராம்தேவ் தலைமையில் நடந்து வந்தது .

இதில் இன்று கலந்து கொண்ட ஷில்பா ஷெட்டி ராம் தேவுடன் இணைந்து பல வகை யோகாசனம் செய்தார் , உடனே அங்கு கூடிருந்த ரசிகர்கள் அதை படம்பிடித்து யூடுப், வாட்ஸ் அப் , மற்றும் சமுகவளைதலங்களில் பதிவேற்றினர்.

இதை தொடர்ந்து நம் நெட்டிசன்கள் அதை மிம்ஸ்களாக உருவாக்கி கலாய்க்க தொடங்கியுள்ளனர். அதித யோகாசனம் பிரியரான ஷில்பா ஏற்கனவே யோகா குரு வுடன் தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடி பரப்பானது குறிப்பிடத்தக்கது.

“நாங்க ரெடி! அப்ப நீங்க?” – தமிழ்நாடு தேர்தல் கமிஷன் ஸ்டேட்மெண்ட்



தமிழ்நாடு சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் இறுதிப் பட்டியலை தமிழ்நாடு தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ளது. மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியலை அங்குள்ள கலெக்டர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் மொத்தம் 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும் அவர்களில் 2.88 கோடி ஆண் கள் என்றும் 2.91 கோடி பெண்கள் என்றும் 4 ஆயிரத்து 383 பேர் திருநங்கையர் என்றும் தெரிய வந்துள்ளது.புதிய வாக்காளர்கள் சேர்க்கை சிறப்பு முகாம்களின் மூலம் கடந்த ஒன்றாம் தேதிவரை 12.33 லட்சம் புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான வாக்காளர் அடை யாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. பணிகள் நிறைவடைந் ததும் பூத் அலுவலர் கள் மூலம் பிப்ரவரி பத்தாம் தேதிவாக்கில் உரியவர் களிடம் அடையாள அட்டைகள் ஒப்படைக்கப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜேஷ் லக்கானி குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் குறித்து தமிழ்நாடு தேர்தல் கமிஷன் அறிக்கையில், “01.01.2016-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 15.09.2015 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/நீக்க/திருத்த/இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 15.09.2015ஆம் தேதியிலிருந்து 24.10.2015-ஆம் தேதிவரை பெறப்பட்டன.

மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல் / திருத்தல் / இடமாற்றம் செய்தல் ஆகியவற்றிற்காக கீழ்க்கண்டவாறு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தீர்வு செய்யப்பட்டன.

பெயர் சேர்த்தல்:

பெறப்பட்ட விண்ணப்பங்கள் – 17,10,000

ஏற்கப்பட்டவை – 16,18,526 (94.76%)

இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகியவற்றின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட நீக்கல்கள் – 3,85,293

திருத்தல்கள்

பெறப்பட்ட விண்ணப்பங்கள் – 2,67,400

ஏற்கப்பட்டவை – 2,56,888

தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றம்

பெறப்பட்டவிண்ணப்பங்கள் – 1,29,712

ஏற்கப்பட்டவை – 1,13,095201

2016 சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ் நாட்டில் தற்போது 5.79 கோடி வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் – 2.88 கோடி, பெண் வாக்காளர்கள் – 2.91 கோடி மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 4383 ) பதிவு செய்யப் பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2016-இல் வாக்காளர் பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிகர வாக்காளர்களின் எண்ணிக்கை 12.33 இலட்சம் ஆகும்.

விண்ணப்பிக்கும்போது தங்கள் கைபேசி எண்ணை அளித்த சுமார் எட்டு லட்சம் வாக் காளர்களுக்கு குறுந்தகவல் (SMS) அனுப்பப்படுகின்றது.

புதிய வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன. இவை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் 10.02.2016 வாக்கில் வழங்கப்படும்.

இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் சிறப்பம்சமாக, அனைத்து முதன்முறை வாக்கா ளர்களுக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் ‘வாக்காளர் வழிகாட்டி’ என்ற தகவல் கையேடும் வழங்கப்படும். வாக்காளராகப் பதிவு செய்தல் மற்றும் வாக்குப் பதிவு நடைமுறைகள் குறித்து எளிதாகப் புரியும் வகையிலான தகவல்கள் இந்தக் கையேட்டில் உள்ளன.

மேலும், இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி, தமிழ்நாட்டிலேயே அதிக அளவு வாக் காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதி காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள 27. சோழிங்க நல்லூர் சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர் கள் 5,75,773 பேர் ஆவர். (ஆண்கள் 2,91,909, பெண்கள் 2,83,819, மூன்றாம் பாலினத்தவர் 45). 18 – 19 வயதுடைய இளைய வாக்காளர்களும் (12,797 பேர்) இத்தொகுதியில்தான் அதிகமாக உள்ளனர் (ஆண்கள் 7214 , பெண்கள் 5583). மாறாக, தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 164. கீழ்வேளூர் (தனி) சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர் கள் 1,63,189 பேர் ஆவர். (ஆண்கள் 81,038, பெண்கள் 82,151).

பணித்தொகுதி வாக்காளர் அதிகமுள்ள சட்டமன்றத் தொகுதி மதுரை மாவட்டத்திலுள்ள 196. திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியாகும் (2402 பேர்).

வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 47 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியல்களை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம்.

வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. தகுதியுள்ள எவரும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமலிருந்தால், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளத்தின் மூலமாக இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ரோபோக்கள் வேலைக்குத் தேவை! – விரைவில் இப்படியொரு அறிவிப்பை ஆங்காங்கே பார்க்கலாம்!


ரோபோக்களின் வரலாறு பழமையானது. புராண காலங்களிலே, செயற்கை மனிதர்களின் கதாபாத்திரங்களை உருவாக்கினர். அவற்றின் தற்கால வடிதான் ரோபோ. ஜப்பானியர்களே நவீன ரோபோக்களை உருவாக்கினர். முதல் ரோபோவை, 1954ம் ஆண்டு ஜார்ஜ் தேவோல் என்பவர் வடிவமைத்தார். அதை முதலில் “யுனிமேட்’ என அழைத்தனர். இது 1960ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. இது வெப்பமான உலோக துண்டுகளை கையாள பயன்படுத்தப்பட்டது.ரோபோ என்பதற்கு, மனிதன் இடும் கட்டளைகளை, நிறைவேற்றும் இயந்திர மனிதன், என பொதுவாக கூறலாம். ரோபோ எனும் சொல்லை முதன்முதலில் செக் குடியரசு எழுத்தாளர் காரெல் கேபெக் என்பவர் 1920ம் ஆண்டு பயன்படுத்தினார். அவரது ஆர்.யு.ஆர்., எனும் நாடகத்தில் ரோபோ கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தார். மனிதர்கள் போல் தோற்றம் கொண்ட இயந்திரங்கள், தொழிற்சாலையில் வேலை செய்வது போல், காட்சி அமைத்திருந்தார். ரோபோ என்பதற்கு செக் மற்றும் ஸ்லாவிக் மொழிகளில் கடும் தொழில், கடும் உழைப்பு என பொருள். இதனிடையே மனிதர்களுக்கு பதிலாக தானியங்கி ரோபோக்களை நிறுவும் முறை தொழில் நிறுவனங்களில் அதிகரித்து வருகிறது.

இப்படி, மனிதர்களுக்கு மாற்றாக எந்திரங்களையும், எந்திர மனிதர்களையும் நிறுவி வருவதால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சுமார் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் ஆபத்து உள்ளதாக உலக பொருளாதார பேரவையின் பிரபல ஆய்வு ஒன்று அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களால் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்படும் சவால்களை பட்டிய லிட்டுள்ளது இந்த ஆய்வு.ஐ.நா. அமைப்பின் ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பும் ஏற்கனவே ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தது. அதாவது, வரும் 2020-ம் ஆண்டுக்குள் ஒரு கோடியே 10 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் அபாய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.குறிப்பாக, ஒரு புதிய வேலை உருவானால் அதேநேரத்தில் ஏற்கனவே இருக்கும் 3 வேலைவாய்ப்புகள் மறையும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளது.

அதே சமயம் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சகட்டமாக இன்னும் 3 ஆண்டுகளில் சுயமாக சிந்தித்து, பேசும் ரோபோக்களை பார்க்கப் போகிறோம். இவை மனிதனிடம், உரையாடவும், விவாதங் களில் பங்கேற்கவும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா. நம்பித்தான் ஆக வேண்டும். அதற்கான ஆய்வை ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன் பல்கலை துவக்கியுள்ளது. இந்த ஆராய்ச்சி சாத்தியமானால், உலகமே வியப்படையும். இந்த புத்தசாலித்தனமான தொழில்நுட்பம், மனிதனின் வாழ்க்கை முறையையே மாற்றிவிடும். இது பற்றி அபெர்டீன் பல்கலை தலைமை ஆராய்ச்சி யாளர், டாக்டர் வாம்பெர்டோ கூறுகையில், “இதற்கான சாப்ட்வேர் இன்னும் சில ஆண்டுகளில் கிடைக்கும்,’ என நம்பிக்கையுடன் கூறுகிறார். மனிதனின் வழிகாட்டுதல் இல்லாமல், தானா கவே சிந்தித்து, இவை இயங்கக் கூடியவை. இந்த ரோபோவிடம், ஒரே நேரத்தில் ஒருவர் மட்டும் கலந்துரையாட முடியும். பேசும் ரோபோக்களைப்போல, பேசும் திறன் கொண்ட கம்ப்யூட்டர் கள் தயாரிப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழில்நுட்பங்கள் வெற்றி அடைந்தால், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் மாற்றங்கள் உருவாகும். விண்வெளி, ஆழமான கடல், அணு உலை பாதுகாப்பு போன்றவற்றில் தற்போது ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரோபோக்களை விட, புதிய ரோபா அதிக திறன் மிக்கது. குறிப்பிட்ட பணியை மனிதன் செய்யச் சொல்லும்போது, அது முடியாவிட்டால், “எனக்கு தெரியவில்லை’ என இந்த ரோபோக்கள் பதில் சொல்லும். இந்த ஆய்வு வெற்றியடையும் நாளை, உலக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து சுய சிந்தனை கொண்ட ரோபோக்களால் எதிர்காலத்தில், மனித குலத்திற்கே ஆபத்து வரும் அபாயம் இருக்கிறது என்றும் ஒரு கருத்து உள்ளது. எக்காலத்திலும் அப்படி ஒரு சூழ்நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக, புதிய ரோபோக்களில் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

1.இந்த ரோபோக்கள், மனிதனை எந்நேரத்திலும் எதிர்க்காது. தேவைப்பட்டால், மனிதர்கள் இவற்றை அழிக்கும் வண்ணம் உருவாக்கப்பட உள்ளது.

2.தானாக எந்த வேலையையும் செய்யாமல், மனிதனின் உத்தரவுகளை மட்டுமே இவை செயல்படுத்தும்.

3.ரோபோவுக்கு ரோபோக்களே பாதுகாப்பாக இல்லாமல், மனிதர்களால் மட்டுமே பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்பது கவனிக்கத்தக்கது..

அந்த நூறு பேர் லிஸ்ட்டில் முருகதாஸ் சூர்யா இல்ல!

நடிகைகள் கொத்துகிற எல்லா சீட்டிலும் ஒரு தொழிலதிபரின் படம் இருப்பதென்பது, தானாக அமைவதா? அல்லது அதுவாகவே அப்படி நடக்குதா? வெகுகாலமாக தமிழனின் உச்சி மண்டையில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த கேள்விக்கு, இதோ- அசின் தாலி கட்டிக் கொண்ட இந்த நிமிஷம் வரைக்கும் விடையே இல்லை. ஆனால் அவர்களின் நுண்ணிய பார்வையில் எப்படிதான் விழுகிறார்களோ, அந்த தொழிலதிபர்கள்? போகட்டும்… சமீபத்தில் இருப்பதிலேயே பெரிய புளியங்கொம்பை கண்டு பிடித்து, அதில் ஊஞ்சல் கட்டிய அசின்தான் பிற்காலத்திலும் வரக்கூடிய ஹீரோயின்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

பல நூறு கோடிகளுக்கு அதிபதியான மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபர் ராகுல்சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் அசின். இன்று காலை அவர்களுக்கு இந்து முறைப்படி திருமணம் நடந்தது. நேற்று கிறிஸ்துவ முறைப்படியும் ஒரு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவ்விரு திருமணங்களுக்கும் இந்தியா முழுவதுமிருந்து சுமார் 100 பேர் மட்டும்தான் கலந்து கொண்டார்களாம். மற்றவர்களுக்கு அழைப்பில்லை.

இந்த நூறு பேர்களில் அசினை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குனரோ, அவரை உச்சத்தில் கொண்டு போன இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசோ, அவருடன் டூயட் ஆடிய சூர்யாவோ இல்லை. இதிலொன்றும் ஆச்சர்யமில்லை. ரப்பர் மரம் வளரும் கேரளாவில் பிறந்தவரால், வளர்ந்து வந்த பாதையை ‘அழிச்சுட்டு’ கடப்பது பெரிய விஷயமா என்ன? இருந்தாலும், இவர்களுக்கு திருமண வரவேற்பில் கலந்து கொள்ள இன்விடேஷன் வரும் என்பது மட்டும் இப்போதைய கணிப்பு.

விஷாலுக்குப் பின்னால் இருப்பது யார்? சந்தேகம் கிளப்பும் நடிகர்

"நடிகர் சங்கத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை. சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்கத் தயார்’’ என்று தெரிவித்துள்ள முன்னாள் பொருளாளர் நடிகர் வாகை சந்திரசேகர், இவர்களுக்குப் பின்னால் இருப்பது யார்? எதற்காகத் தூண்டி விடுகிறார்கள்? என்று புரியவில்லை என சந்தேகமும் கிளப்பியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிதாகப் பொறுப்புக்கு வந்துள்ள நாசர், விஷால், கார்த்தி ஆகியோர், "முந்தைய நிர்வாகத்தினர் 3 மாதங்களாகியும் வரவு-செலவுக் கணக்கு விவரங்களை ஒப்படைக்கவில்லை" என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில்,  2014-15 ஆண்டுக்கான நடிகர்சங்க வரவு- செலவுக் கணக்குகளையும்,  நடிகர் சங்க அறக்கட்டளையின் 2013-14 மற்றும் 2014-15 ஆண்டுக்கான வரவு-செலவு கணக்குகளையும் சரியான ஆதாரங்களோடு சமர்ப்பிக்காததால் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்படும் என்று அறிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர், " நடிகர் சங்கக் கணக்குகளில் தவறுகள் நடந்து இருப்பது போல் புதிய நிர்வாகிகள் குற்றம் சாட்டுவது வருத்தம் அளிக்கிறது. நடிகர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் நடிகர் சங்கப் பொருளாளர் பொறுப்பை ஏற்றேன். பதவியில் இருந்த காலத்தில் நேர்மையாக செயல்பட்டுள்ளேன். சங்க அலுவலகத்தில் எனது அறையில் இருந்த நாற்காலி, மேஜை, டி.வி போன்றவற்றைக் கூட என் வீட்டில் இருந்துதான் எடுத்து வந்து பயன்படுத்தினேன். சரத்குமாரும் அப்படித்தான் செய்தார். நடிகர் சங்க வளர்ச்சிக்காக சரத்குமார் கடுமையாக உழைத்தது எனக்கு தெரியும்.

அதன்பிறகு சரத்குமார் கலைநிகழ்ச்சி உள்பட பல்வேறு வழிகளில் அறக்கட்டளைக்கு வருவாய் ஈட்டினார். நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் இருந்து 3 தடவை தலா ரூ.25 லட்சம் வீதம் 75 லட்சம் ரூபாயை தனது சொந்த முயற்சியால் வாங்கிக் கொடுத்தார். நடிகர் சங்கத்தின் அருகில் இருந்த குடியிருப்பில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி அதை நடிகர் சங்கத்தின் பெயரிலேயே பதிவு செய்து கொடுத்தார்.

தேர்தலுக்கு முன்பு நடிகர் சங்க இடத்தை ரூ.60 கோடிக்கு விற்று விட்டனர் என்றும், ரூ.100 கோடிக்கு விற்று விட்டனர் என்றும் பழி சுமத்தினர். அது பொய் என்பதை தேர்தல் முடிந்ததும் தாய் பத்திரம் உள்பட அனைத்து ஆவணங்களையும் திரும்ப ஒப்படைத்து நிரூபித்தார். இதையெல்லாம் செய்த அவரைப் பாராட்டுவதை விட்டு பழி சுமத்துவது நியாயம் இல்லை.

நடிகர் சங்கம் மற்றும் அறக்கட்டளை கணக்கு விவரங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டன. அதற்கு விளக்கங்கள் கேட்டார்கள். பதில் சொல்ல அவகாசம் அளிக்காமல் அவதூறு பரப்பி உள்ளனர். மின்சாரம் உள்ளிட்ட செலவுகள், ஊழியர்கள் சம்பளம் என நடிகர் சங்கத்துக்கு மாதம் ரூ.2 லட்சம் செலவாகிறது. போராட்டங்கள், விழாக்கள் போன்றவற்றுக்கும் செலவு செய்யப்பட்டு உள்ளது. இதையெல்லாம் சிந்திக்காமல் காழ்ப்புணர்ச்சியோடு குறை சொல்கிறார்கள்."என்று கூறியுள்ளார்.

'இந்த சம்பவம் ஒரு பாடம்'- 'பிச்சைக்காரன்' படக்குழு சார்பில் வருத்தம் தெரிவித்தார் விஜய் ஆண்டனி!

'பீப்' பாடல் சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்து மற்றொரு பாடலும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படத்தின் ப்ரமோ பாடல் (Promo Song) வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாழாப்போன உலகத்திலே காசு பணம் பெருசு எனத் தொடங்கும் அந்த பாடலில், 'கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்'; 'தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்' என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, இந்த வரிகள் இடஒதுக்கீடு முறையில் சீட் வாங்கி படித்த டாக்டர்களை இழிவுபடுத்துவதாக உள்ளதாக, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் உட்பட பல்வேறு டாக்டர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. மேலும், சர்ச்சைக்குரிய இந்தப் பாடல் வரிகளை நீக்கவும், விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டன. இல்லாவிட்டால், பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தனர்.

சர்ச்சைக்குரிய இந்தப் பாடல் குறித்து இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியிடம் பேசினோம். சமூக அவலங்களுக்கு எதிரான குற்றங்களை மையப்படுத்தி, சமூக விழிப்புணர்வுப் பாடலாக, இந்தப் பாடலை நாங்கள் வடிவமைத்தோம். பல்வேறு டாக்டர்கள் சங்கத்தினர் கூறும் 'கோட்டாவில் சீட்டு வாங்கிய டாக்டர்' என்ற வார்த்தை தவறாக அர்த்தம் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. 'பல்வேறு தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் சீட்'டில் பணம் கொடுத்து சீட் வாங்கி டாக்டர் ஆனவர்களைத் தான் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். அதுவும் பணம் கொடுத்து சீட் வாங்கியவர்களில், தவறான டாக்டர்களைதான் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த கருத்தைத்தான் என்னுடைய 'சலீம்' படத்திலும் நான் கூறியிருந்தேன். நல்ல டாக்டர்களை உயர்வாக சித்தரித்துத்தான், 'சலீம்' படத்திலும் நான் நடித்தேன். நான் எப்படி டாக்டர்களை இழிவுபடுத்துவேன்? குறிப்பாக இந்தப் பாடலை எழுதிய லோகன், நானே அரசு இடஒதுக்கீடு முறையில் சீட் வாங்கித்தான் கல்லூரியில் படித்தேன். அப்படியிருக்கும்போது நான் எப்படி தவறான உள்அர்த்தத்தில் பாடலை எழுதியிருக்க முடியும். இந்தப் பாடலுக்கு அந்த வரிகள் முக்கியமாக இருக்கிறது. அதனால்தான் நான் இந்த வரிகளை வைத்தேன் என என்னிடம் சொன்னார். இந்தப் பாடலை எழுதிய லோகன் மீது எந்தத் தவறும் இல்லை. அவர் சொல்ல வந்த நல்ல கருத்து தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டது. அதற்காக அவரும் என்னிடமும் வருத்தம் தெரிவித்து, சர்ச்சையான வரியினை மாற்றிவிட்டார்.


மேலும், இந்தப் பாடலிலேயே 'பாடையில போனாக்கூட லஞ்சம் கேட்கிறான்'; 'வேலைவெட்டி இல்லாம சாமியார் ஆகறான்' என்ற வரிகளும் இடம்பெற்றிருக்கு. இதுவும் இந்த வரிகளுடன் தொடர்புடைய நபர்களை மையப்படுத்தித்தான் சொல்லியிருக்கிறோமே தவிர, நேர்மையான யாரையும் மையப்படுத்தி இந்தப் பாடலை அமைக்கவில்லை. நான் ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன். தற்போதைய சூழலில், 'அரசியல்வாதிகள்' எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அந்த லிஸ்டில், காமராஜரை சேர்க்க முடியுமா? காமராஜர் உட்பட நேர்மையான அரசியல் தலைவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். நாம் குறிப்பிட்ட அரசியல்வாதிகளைத்தான் குற்றம் சாட்டுகிறோம். அதேபோலத்தான், நாங்களும் பணம் கொடுத்து சீட் வாங்கி, படித்த சில போலி டாக்டர்களைத்தான் குறிப்பிட்டிருந்தோம். அனைத்து டாக்டர்களையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

நாங்கள் நல்ல எண்ணத்தில் தான் இந்தப் பாடலையும், குறிப்பிட்ட அந்த பாடல் வரிகளையும் அமைத்தோம். ஆனால், குறிப்பிட்ட அந்த இரண்டு வரிகளும் இடஒதுக்கீட்டில் படித்த நேர்மையான டாக்டர்கள் வருத்தப்படும்படியாகவும், அவர்களின் மனம் புண்படும்படியாகவும் இருக்குமானால், அதற்கு எங்கள் 'பிச்சைக்காரன்' படக்குழுவினரின் சார்பிலும், என் சார்பிலும் வருத்தம் தெரிவிக்கிறேன்.

தற்போது 'கோட்டாவுல சீட்டு வாங்கி' என்ற வரியை மாற்றியமைத்து, 'காசுகொடுத்து சீட்டு வாங்கி டாக்டர் ஆகுறான்'; 'தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்' என்ற வரிகள் இருக்கும் வகையில் அந்தப் பாடலை சிரமப்பட்டு மீண்டும் புதிதாக  ரெக்கார்டிங் செய்திருக்கிறோம். முழுமையாக இந்தப் பாடலின் வேலைகள் முடிந்து, இன்று மாலை அல்லது நாளை வெளியாகும். அதனால் இன்று மாலை எங்கள் 'பிச்சைக்காரன்' படக்குழுவினர் சார்பில் வருத்தம் தெரிவித்து, ஒரு அறிக்கையை நான் வெளியிட இருக்கிறேன். இனி வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் இடம்பெறா வண்ணம் இருக்க, இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறோம்" என்றார்.

இந்த பாடலைப் பாடிய பாடகர் வேல்முருகனிடம் பேசினோம். ''நாங்கள் ரெக்கார்டிங்கில் பாடும்போதும் இந்த வரிகளைப் பற்றி பலமுறை ஆலோசனை செய்தோம். ஆனால், இந்த வரிகள் இருந்தால்தான் பாடலுக்கும், பணம் கொடுத்து சீட் வாங்கி படித்து டாக்டராகும் சிலருக்கும் அழுத்தம் கொடுக்கும்படியும் இருக்கும் என்ற நோக்கத்தில் தான் அந்த வரிகளை இடம்பெறச் செய்தோம். வேறு எந்த தவறான உள் அர்த்தமும் இல்லை. நானும் நூற்றுக்கணக்கான சினிமா பாடல்களை பாடியிருக்கிறேன். இதுவரை இதுபோன்ற சிக்கல்கள் எந்த பாடலுக்கும் வரவில்லை. இந்த சம்பவத்தின் மூலமாக, பாடுவதற்காக பணம் கிடைக்கிறது என்பதற்காக, எந்த வரிகளும், கருத்துகளும் இடம்பெறும் பாடல்களையும் பாடக்கூடாது. நம் பாடல் சமூகத்தில் எந்த தவறான பிரதிபலனையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை ஒவ்வொரு கலைஞனும் உணரவேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியுள்ளது. இனி புதிதாக ஒப்புக் கொண்டு பாடக்கூடிய ஒவ்வொரு பாடலின் தன்மையையும் புரிந்து கொண்டு பாடுவேன். இந்த பாடலால் நேர்மையான டாக்டர்கள் மனம் புண்பட்டிருந்தால், அதற்கு நானும் வருத்தம் தெரிவிக்கிறேன்" எனக் கூறினார்.

விஜய் ஆண்டனி தெரிவித்த கருத்தினை சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்.ரவிந்திரநாத் மற்றும் அந்த சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் டாக்டர்.ரமேஷிடம் தெரிவித்தோம். 'பிச்சைக்காரன்' திரைப்பட குழுவின் சார்பில் விஜய் ஆண்டனி தெரிவித்த கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். 'கோட்டாவுல' என்ற வார்த்தையை 'காசுகொடுத்து' என மாற்றியதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 'காசுகொடுத்து' சீட் வாங்கி டாக்டர்கள் ஆன போலி டாக்டர்களை குறிப்பிட்டிருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். விஜய் ஆண்டனியிடம் இருந்து வருத்தம் தெரிவிப்பது தொடர்பான அறிக்கை வந்தவுடன், எங்களுடைய போராட்டங்களை ரத்து செய்வது பற்றிய அறிவிப்பையும் நாங்கள் தெரிவிப்போம். இருப்பினும், எங்கள் சங்கத்தில் கலந்து ஆலோசித்து அந்த இரண்டு வரிகளுமே முழுமையாக நீக்க வேண்டுமா? என்பது குறித்து பேச உள்ளோம். இனி இதுபோன்ற தவறுகள் வராமல் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து. குறிப்பாக, மருத்துவத்துறை அரசு மற்றும் தனியாராலும் நிர்வாகம் செய்யப்படுகிறது. எனவே, மருத்துவத்துறையை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால்தான் போலியான மருத்துவர்கள் குறைவார்கள். இதைத்தான் நாங்களும் வலியுறுத்தி வருகிறோம். ஏனெனில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தகுதி மதிப்பெண் குறைந்தவர்களும் மூன்று கோடி வரை டொனேஷன் கொடுத்தும், ஆண்டுக்கு பத்து லட்சம் கட்டணம் செலுத்தியும், இறுதியாக தேர்ச்சி பெற குறிப்பிட்ட பணம் கொடுத்தும் டாக்டர்கள் ஆகிறார்கள். அதனால், டாக்டர் ஆனவுடன் அவர்களின் முதல் நோக்கம் சேவை செய்வது இல்லை; பணம் சம்பாதிப்பதுதான் எனக் கூறினர்.

பீப் பாடல், இந்த 'பிச்சைக்காரன்' திரைப்படப் பாடல் போன்றவை இனி வருங்காலத்தில், மக்களையும், சமூகத்தையும் பாதிக்கக்கூடிய, புண்படுத்தக்கூடிய பாடல்களும், கருத்துக்களும், படங்களும் வராமல் இருக்க வேண்டும் என்பதற்கான பாடங்கள். கருத்துச் சுதந்திரம் என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்றுதான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், நம் கருத்துச் சுதந்திரம், மற்றவர் மனதை புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து வரும்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது நம் 

ஆஸ்கர் ரேஸ்: லியோவுக்கு சவால் தரும் 'தி டேனிஷ் கேர்ள்'!

 'தி கிங்ஸ் ஸ்பீச்' (The King's Speech), 'லெஸ் மிஸெரபில்ஸ்' (Les Misérables) உள்ளிட்ட படங்களை இயக்கிய டாம் ஹூப்பரின் சமீபத்திய படைப்பு 'தி டேனிஷ் கேர்ள்' (The Danish Girl).

வரலாற்றில் முதல்முறையாக பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஐனர் வீக்னர் என்பவரது உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் 'தி டேனிஷ் கேர்ள்'. கெர்டா, ஐனர் இருவரும் கணவன் - மனைவி. தம்பதிகள் இருவருமே ஓவியர்கள். ஒருநாள் தனது மனதில் இருக்கும் பெண்ணின் ஓவியத்தை வரைய, தனது கணவனான ஐனருக்கே பெண் உடை அணிவித்து மாடலாக நிற்க வைக்கிறாள் கெர்டா

அந்தத் தருணத்தில் தன்னுள் இருக்கும் பெண்மையை உணரும் ஐனர், கொஞ்சம் கொஞ்சமாக தனது உண்மையான பாலியல் தன்மையை உணர்கிறான். தொடர்ந்து, ஐனரை பெண் மாடலாக வைத்து கெர்டா வரையும் ஓவியம் அவளுக்கு புகழைத் தேடித் தர, அந்த பெண் மாடல் உருவத்துக்கு லில்லி என பெயரும் வைக்கப்படுகிறது. தன்னை லில்லியாகவே நினைத்துக் கொள்ளும் ஐனரின் வாழ்க்கை, ஹான்ஸ் என்ற பால்ய நண்பணின் வருகையால் இன்னும் சிக்கலாகிறது.

இதனிடையே தனது கணவனின் மாறுதலை முதலில் வலியுடன் எதிர்கொள்ளும் கெர்டா, ஒரு கட்டத்தில் அவனுக்கு ஆதரவாக நிற்கிறாள். மனைவியின் துணையுடன், பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் முடிவை ஐனர் எடுக்கிறான். அந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து வரும் சிக்கல்கள், ஐனர் ஹான்ஸ், கெர்டா இவர்களுக்கு நடுவில் இருக்கும் உறவு என்ன ஆனது என்பது தான் 'தி டேனிஷ் கேர்ள்' படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்தில் ஐனர் வீக்னராக எட்டி ரெட்மெய்னும், கெர்டா வீக்னராக அலிசியா விகந்தரும் நடித்துள்ளனர். படத்துக்கு ஏற்கெனவே விமர்சன ரீதியாக பெரும் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், திருநங்கையாக மாறும் ரெட்மெய்னின் நடிப்புக்கும் விமர்சகர்களின் பாராட்டு குவிந்துள்ளது. அலிசியா, தனது கெர்டா பாத்திரத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதுதினை க்ரிடிக்ஸ் சாய்ஸ் விழாவில் வென்றுள்ளார். ரெட்மெய்ன், ஏற்கெனவே 'தி தியரி ஆஃப் எவ்ரிதிங்' (The Theory of Everything) படத்துக்காக சிறந்த நடிகர் என ஆஸ்கர், பாஃடா, கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளை வென்றவர்.

சரி இதற்கும், லியார்னடோ டி காப்ரியோவுக்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்கிறீர்கள் என்றால், 'தி ரெவனன்ட்' (The Revenant) படத்தில் நடித்ததற்கு, சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை லியார்னடோ பெற்றுள்ளார். ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக லியோவுக்கு கிடைக்காத ஆஸ்கர் கண்டிப்பாக இம்முறை கிடைத்துவிடும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது, ஐனர் பாத்திரத்தில் நடித்த எட்டி ரெட்மெய்னும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் பந்தயத்தில் இணைந்துள்ளார்.

ஆஸ்கர் நடுவர்கள் குழு லியோவுக்கு சாதகமாக இருக்காது. அது சார்புடையது. எனவே விருது வழங்காமல் இருக்க காரணம் தேடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு எட்டி ரெட்மெய்னின் நடிப்பு சிறந்த காரணமாக இருக்கும் என இப்போதே பல ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். அதே நேரத்தில், தனது பாலியல் அடையாளத்தில் பிரச்சினை ஏற்பட்டு அதை எதிர்கொள்ளும் பாத்திரத்தில் எட்டியின் நடிப்பும் ஆஸ்கருக்கு உரிய நடிப்புதான் என்பதில் சந்தேகமில்லை.

எனவே தற்போது சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் யாருக்கு என்பதில் லியோவும், எட்டியும் முன்னணியில் இருக்கின்றனர். ஆஸ்கர் விழா பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்குள் அருகிலிருக்கும் திரையரங்கில் தி டேனிஷ் கேர்ள் படத்தை பார்த்துவிட்டு, எட்டி ரெட்மெய்னின் நடிப்பு ஆஸ்கருக்கு உரியதா என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். 

பிச்சைக்காரனுக்கு எதிராக கிளம்பிய டாக்டர்கள்…!

விஜய் ஆண்டனி தயாரித்து நடித்து இசையமைத்துள்ள படம் ‘பிச்சைக்காரன்’.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில்… “கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்… தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான் ‘’ என்ற பாடல் வரிகளுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது…

“பிச்சைக்காரன் படத்தில் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வியை பயின்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த டாக்டர்களை இழிவு படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன.

டாக்டர்கள் தப்பு தப்பா ஊசிப்போட்டு நோயாளிகளை கொல்லுகிறார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல விஷமத்தனமானது.

உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக சென்னைக்கு படை எடுக்கின்றனர்.

தமிழகத்தில் தலைசிறந்து விளங்கும் மருத்துவர்கள் பலரும் இட ஒதுக்கீட்டின் மூலம் பயின்றவர்கள்தான்.

உண்மை இவ்வாறு இருக்க, நோயாளிகள் இறப்பதாகக் கூறுவது மேலாதிக்க உணர்வை பிரதிபலிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

எனவே, இப்பாடலுக்கு தடை விதிப்பதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாரை தப்பட்டை’ இந்த கொடுமைக்கு இவிங்க வேற…?

இனியும் ‘தாரை தப்பட்டை’ குறித்து விமர்சித்தால், பாலாவால் வார்த்தெடுக்கப்பட்ட பிதாமகன் ஸ்டைல் ஆசாமிகள் பின் மண்டையை கடித்து வைத்தாலும் ஆச்சர்யமில்லை. இருந்தாலும் “இவிங்கல்லாம் வேலை பார்த்த படமாப்பா இப்படி?” என்று பேச ஆரம்பித்திருக்கிறது சினிமாவிலேயே இருக்கும் ஒரு வளவள கோஷ்டி. என்ன சொல்கிறார்கள் அவர்கள்?

பொதுவாக பாலா தன் படத்திற்காக கதை எழுதினால், யாரையும் துணைக்கு வைத்துக் கொள்ள மாட்டார். அவரே தனியாக உட்கார்ந்து யோசித்து யோசித்து எழுதுவாராம். அதற்கப்புறம் அது பற்றி பெரிதாக விவாதிக்கவும் மாட்டார். ஒருவேளை அந்த படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணனோ, ஜெயமோகனோ வசனம் எழுதும் பட்சத்தில் அவர்களிடம் மட்டும் அந்த கதை குறித்து சில பல விஷயங்களை விவாதிப்பாராம். இந்த முறை அந்த வழக்கத்தையெல்லாம் விட்டொழித்துவிட்டு முதல் முறையாக சில புத்திசாலிகளை அழைத்து கதை விவாதம் நடத்தியிருக்கிறார்.

அந்த புத்திசாலிகள் யார்? டைரக்டர்கள் கார்த்திக் சுப்புராஜும், சூதுகவ்வும் நலன் குமாரசாமியும்தானாம். சுமார் ஒரு வாரம் இவர்கள் இருவரும் பாலாவுடன் குப்பை கொட்டியிருக்கிறார்கள். சிலபல விஷயங்களை படத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் கூறினார்களாம். அதெல்லாம் படத்தில் வந்ததா? இவர்கள் டிஸ்கஷன் எடுபட்டதா? அதற்கப்புறம் வந்ததுதான் இந்த முகரை மொழுக்கட்டையா என்ற கேள்விக்கெல்லாம் ஒரு பதிலும் இல்லை.

என்ற போதிலும், மேற்படி இயக்குனர்களை எங்கு பார்த்தாலும், களுக்கென சிரித்துவிட்டு நடையை கட்டுகிறது அந்த வளவள கோஷ்டி. இருடீய்… இரு. எங்க பால் மறுபடியும் கொதிக்கும். அப்ப வச்சுக்குர்றோம்…

இவர்கள் திரைக்கு வருவதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

1. ஜெமினி கணேசன் - உதவிப் பேராசிரியர்

2. சிவக்குமார் - ஓவியர்

3. விஜயகாந்த் - அரிசிக் கடை

4. பாக்யராஜ் - ஜவுளிக்கடை

5. ரகுவரன் - உணவு விடுதி

6. பாலசந்தர் - அக்கவுண்டண்ட்

7. விசு - டி .வி.எஸ். ஊழியர்

8. மோகன் - வங்கி ஊழியர்

9. எஸ். வி. சேகர் - மேடை நாடக ஒலி அமைப்பாளர்

10. ரஜினிகாந்த் - பஸ் கண்டக்டர்

11. நாகேஷ் - ரயில்வே குமாஸ்தா

12. அஜித் - டூ வீலர் மெக்கானிக்

13. பாரதிராஜா - மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர

மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க சில சூப்பர் டிப்ஸ்...

வீட்டில் உள்ள மார்பிள் தரையில் கறை படிந்துள்ளதா? அதை சுத்தப்படுத்தி சோர்ந்துவிட்டீர்களா? அப்படியெனில், அந்த கறையை எளிதில் போக்குவதற்கு ஒருசில பொருட்கள் உள்ளன. பொதுவாக மார்பிள் கல்லானது மிகவும் விலை உயர்ந்தது. தற்போது அத்தகைய விலை உயர்ந்த மார்பிள் கல் தான் பெரும்பாலான வீடுகளில் உள்ளது. இந்த மார்பிள் கல் வீட்டிற்கு மிகவும் அழகான தோற்றத்தைத் தரும். அதே சமயம் அதில் கறை படிந்தால், அதனைப் போக்குவது சற்று கடினம்.

ஏனெனில் மற்ற தரைகளை சுத்தம் செய்வது போல், இந்த மார்பிளால் செய்த தரையை சுத்தம் செய்தால், மார்பிள் கல்லில் பாதிப்பு ஏற்படும். ஆகவே இந்த கரையை சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அத்தகைய மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்குவதற்கு ஒருசில எளிமையான பொருட்களைக் கொடுத்துள்ளோம். அந்த பொருட்களைக் கொண்டு எப்போதும் சுத்தம் செய்தால், மார்பிள் தரைகள் பொலிவுடன் காணப்படுவதோடு, வீட்டில் நல்ல மணம் இருக்கும்.

பேக்கிங் சோடா

மார்பிள் தரையில் உள்ள கறைகளைப் போக்க சிறந்த வழியென்றால், அது பேக்கிங் சோடா தான். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து, வீட்டைத் துடைத்தால், கறைகள் முற்றிலும் நீங்கிவிடும். குறிப்பாக பேக்கிங் சோடாவை அளவுக்கு அதிகமாக போட வேண்டாம்.

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட் பற்களை மட்டும் சுத்தம் செய்யப் பயன்படுவதில்லை. மார்பிள் தரைகளில் உள்ள கறைகளைப் போக்கவும் தான் உதவுகிறது. அதற்கு செய்ய வேண்டியது எல்லாம், டூத் பிரஷ்ஷில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து, கறை உள்ள இடத்தில் தேய்த்து, பின் ஈரமான துணி கொண்டு துடைத்தால், கறைகள் எளிதில் போய்விடும்.

எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், இதனை கறை உள்ள மார்பிள் தரையில் தேய்த்தால், கறைகள் இருந்த இடமே தெரியாமல் போகும்.

வினிகர்

மார்பிள் தரையில் உள்ள கெட்சப் மற்றும் ஒயின் கறைகளைப் போக்குவதற்கு, வெள்ளை வினிகரை ஒரு துணியில் நனைத்து, கறை உள்ள இடத்தில் தேய்த்தால், கறை நீங்கி மார்பிள் தரையானது பளிச்சென்று மின்னும்.

டிஷ் வாஷ் திரவம்

 எளிய முறையில் மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க வேண்டுமெனில், பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் டிஷ் வாஷ் திரவத்தைப் பயன்படுத்துவது தான். இதற்கு அந்த திரவத்தை கறை உள்ள இடத்தில் ஊற்றி நன்கு தேய்த்து, கழுவ வேண்டும். முக்கியமாக, மார்பிள் தரைக்கு கடினமான சோப்பைப் பயன்படுத்தக்கூடாது. அது மார்பிள் தரைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

சோப்பு தண்ணீர்

 மார்பிள் தரை எப்போதும் சுத்தமாகவும், பளிச்சென்று மின்ன வேண்டுமெனில், ஸ்பாஞ்சை சோப்புத் தண்ணீரில் நனைத்து பிழிந்து, தரையைத் துடைக்க வேண்டும். அதிலும் இந்த முறையை, தரையில் ஏதேனும் கொட்டும் போது செய்தால், தரையில் கறை படிவதை தவிர்க்கலாம்.

சக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து

இன்று உலகில் அதிகமானவர்கள் இன்று இந்த வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.  அது மட்டுமல்ல இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் விஷேட நிகழ்வுகளில் கலந்து இனிப்பான பண்டங்களை சாப்பிட முடியாது மற்றும் உறவினர்களின் வீட்டுக்குச் சென்றால் அவர்களிடமிருந்து ஏதாவது ஒரு இனிப்பு பண்டத்தை சாப்பிட முடியாது. அத்துடன் இந்த நோய் பரம்பரையாகவும் வருகின்றன எனலாம். இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த சிறிய கைமருந்து முறை இங்கே உங்களுக்காக தரப்படுகின்றன. Suger

நீரழிவு சக்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து.

சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிச்சை.

முயற்சித்துப் பார்க்கலாமே…!

மருந்து:-

வெந்தையம் – 50 கி

கருஞ்சீரகம் – 25 கி

ஓமம் – 25 கி

சீரகம் – 25 கி

இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

(வறுத்த பின் மிக்‌ஷியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்).

தினமும் காலை சிறிய ஸ்பூன்-ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போடவும். கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மேலும் நல்லது. ( தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம்).

ஒரு வாரத்திற்கு பின் மருத்துவரிடம் சென்று சுகர் சோதித்து பார்த்துக் கொள்ளவும்.

{வேறு நோய்கள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் செய்யவும்.}

50 ஆண்டுகளுக்கு பிறகு… ரஜினிக்காக விலகும் தடை..!

ஒரு படம் வெற்றியடைந்தால் அதனை பல மொழிகளில் டப்பிங் செய்வார்கள். சில நேரங்களில் நேரடி மொழி படங்களை விட டப்பிங் படங்களுக்கு அதிக மவுசும் ஏற்படுகிறது.

கேரளா மற்றும் ஆந்திராவில் நேரடி தமிழ் படங்களும் அல்லது டப் செய்யப்பட்ட படங்களும் வெளியாவதால் அங்குள்ள ஒரிஜினல் படங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. எனவேதான் கர்நாடகாவில் டப்பிங் படங்களுக்கு தடை விதித்தனர். கிட்டதட்ட 50 ஆண்டுகளாக எந்த மொழி படங்களையும் அவர்கள் அங்கே அனுமதிப்பதில்லை. ஏன் ஹாலிவுட் படங்கள் கூட கன்னடத்தில் டப் செய்யப்படுவதில்லை.

ஆனால் தற்போது முதன்முறையாக ரஜினியின் கோச்சடையான் படத்திற்காக இந்த தடை விலகுகிறது. இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் படமான இது கடந்த 2014ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, இந்தி மற்றும் போஜ்புரி ஆகிய 6 மொழிகளில் வெளியானது.

தற்போது இப்படம் கன்னட மொழி பேசவிருக்கிறதாம். இதற்கான ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடைபெறுவதால் டப்பிங் முடித்தபின் வெளியிட இருக்கிறார்கள். டப்பிங் பணிகளுக்கு மட்டும் ரூ. 50 லட்சம் வரை செலவாகியுள்ளதாம்.

மிஷ்கின் இயக்க ஆசைப்படும் இரண்டு பிரபலங்கள்

மிஷ்கின் படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் ஒரு தனி வரவேற்பு கிடைக்கும். அவருடைய படத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டுள்ளனர். இந்நிலையில் மிஷ்கின் அவர்களுக்கு கமல்ஹாசன், விக்ரம் இருவரையும் இயக்க ஆசையாம்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர், கமல்ஹாசனுடன் இணைந்து பணிபுரியும் ஒரு வாய்ப்பு கிடைத்து, கடைசியில் சில பிரச்சனையால் அது கைவிடப்பட்டது.

நடிகர் விக்ரமையும் இயக்க ஆசை இருக்கிறது. நான் இருவரையும் ஒரே மாதிரி தான் பார்ப்பேன். விக்ரம் சிறிது படங்களே நடித்திருந்தாலும் பெரிய நடிகர் என்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறார். சேது, பிதாமகன் போன்ற படங்கள் இன்றும் பேசப்படுகிறது என்றார்.