உத்தமவில்லன் படம் எதிர்பாராத தோல்வியை கொடுத்திருந்த நேரத்திலேயே லிங்குசாமியின் திருப்பதி பிலிம்ஸ்க்கு கமல் மீண்டும் ஒரு படம் பண்ணிக்கொடுக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. பின்னர் அந்த படம் தோல்வியடைந்தால் அவர்கள் இணையவில்லை என்றும் செய்திகள் வெளியானது. ஆனால், அந்த தோல்வியை ஈடுகட்டும் வகையில் லிங்குசாமிக்கு ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த கமல், சமீபத்தில் அவரிடம் அதுபற்றி கூறியதை அடுத்து கடந்த சில மாதங்களாக கதை விவாதம் நடந்து கொண்டிருந்தது.
அந்த வகையில், தற்போது லிங்குசாமி இயக்கத்தில், கமல் நடிக்கும் படத்தின் கதை விவாதம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. அதோடு, இந்த படத்தில் கமலை இதுவரை நடிக்காத வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் வைக்கும் முயற்சி நடக்கிறது. அதோடு கதையும் ஆக்சன் பாணியில் இல்லாமல் முற்றிலும் ஜனரஞ்சகமாக உருவாக்கப்பட்டிருக்கிறாம். அந்த வகையில், 1982ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் நடித்த சகலகலா வல்லவன், 1992ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கமல் நடித்த சிங்காரவேலன் ஆகிய இரண்டு படங்களின் பாணியில் இந்த படத்தின் கதை தயார் செய்யப்பட்டுள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, கமல் அப்படத்தில் நடிக்கத் தொடங்கி விடுவார் என்கிறர்கள்.
அந்த வகையில், தற்போது லிங்குசாமி இயக்கத்தில், கமல் நடிக்கும் படத்தின் கதை விவாதம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. அதோடு, இந்த படத்தில் கமலை இதுவரை நடிக்காத வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் வைக்கும் முயற்சி நடக்கிறது. அதோடு கதையும் ஆக்சன் பாணியில் இல்லாமல் முற்றிலும் ஜனரஞ்சகமாக உருவாக்கப்பட்டிருக்கிறாம். அந்த வகையில், 1982ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் நடித்த சகலகலா வல்லவன், 1992ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கமல் நடித்த சிங்காரவேலன் ஆகிய இரண்டு படங்களின் பாணியில் இந்த படத்தின் கதை தயார் செய்யப்பட்டுள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, கமல் அப்படத்தில் நடிக்கத் தொடங்கி விடுவார் என்கிறர்கள்.
0 comments:
Post a Comment