Tuesday 23 February 2016

கத்தி கதை உண்மையானது- இளைய தளபதி ஸ்டைலில் கலக்கிய கிராம மக்கள்

இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றிபடங்களில் ஒன்று கத்தி. இப்படம் வசூல் மட்டுமின்றி விமர்சனங்கள் வாயிலாகவும் பெரிய வரவேற்பு பெற்றது.

இப்படத்தில் கிராம மக்களின் வலியை நகர மக்கள் அறிய வேண்டும் என, விஜய் குடிநீர் செல்லும் குழாயில் உட்கார்ந்து போராட்டம் செய்வார்.

இந்த காட்சியை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது, தற்போது இதே ஸ்டைலில் ஹரியாவனவில் உள்ள ஓர் இனத்தை சார்ந்த மக்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு நீண்ட நாட்களாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

யாரும் கண்டுக்கொள்ளாததால், ஹரியானாவிலிருந்து டெல்லி செல்லும் குடிநீர் குழாயை அடைத்தனர். இதனால், டெல்லியில் சில குடுநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது உடனே அரசாங்கம் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாம். எது எப்படியோ முருகதாஸ் படத்தில் சொன்னது நிஜத்தில் நடந்த விட்டது.

0 comments:

Post a Comment