மக்களுடன் கூட்டணி, தெய்வத்துடன் கூட்டணி எனக்கூறிய விஜயகாந்த், தற்போது மாநாடு நடத்துவது கூட்டம் காட்டி பேரம் பேசுவதற்காக மட்டுமே என்று நடிகரும், அதிமுக தலைமைக்கழக பேச்சாளருமான ராமராஜன் பகீர் குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் அருகே கன்னிவாடியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராமராஜன், " அதிமுக அரசு மட்டுமே எந்த நேரத்திலும் மக்களை சந்திக்கக் கூடியது. பிற கட்சியினர், தேர்தல் நேரத்தில் சினிமா காமெடி போல, நாங்களும் அரசியல் கட்சிகள்தான் என பறைசாற்றிக் கொள்கின்றனர்.
மக்களுடன் கூட்டணி, தெய்வத்துடன் கூட்டணி எனக்கூறிய விஜயகாந்த் தற்போது மாநாடு நடத்துவது கூட்டம் காட்டி பேரம் பேசுவதற்காக மட்டுமே. சினிமாவில் இதுவரை மூன்றரை லட்சம் பேரை சுட்டுக்கொன்று, இளைய சமுதாயத்திடம் தீவிரவாத கலாசாரத்தை ஏற்படுத்தியவர் அவர். இந்தி பேசும் வடமாநிலத்தவரின் தமிழைக் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் விஜயகாந்தின் பேச்சில் தெளிவு இருக்காது.
மக்களிடம் கட்சியை ஞாபகப் படுத்துவற்காகவே, ஸ்டாலின் நமக்கு நாமே 'டூர்' சென்றார். சொந்த சகோதரரை அனுசரிக்க முடியாத ஸ்டாலின், எப்படி நாட்டு மக்களையும், கட்சி தொண்டர்களையும் அனுசரித்து செல்ல முடியும்? அழகிரி கூறியதைப்போன்று, அவர் ‘காமெடி பீஸ்'தான். கருணாநிதியைப் போன்று பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி போன்றவற்றில், ஜெயலலிதா நேரத்தை வீணடிப்பவர் அல்ல" என்று காரசாரமாக பொளந்து கட்டினார்.
திண்டுக்கல் அருகே கன்னிவாடியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராமராஜன், " அதிமுக அரசு மட்டுமே எந்த நேரத்திலும் மக்களை சந்திக்கக் கூடியது. பிற கட்சியினர், தேர்தல் நேரத்தில் சினிமா காமெடி போல, நாங்களும் அரசியல் கட்சிகள்தான் என பறைசாற்றிக் கொள்கின்றனர்.
மக்களுடன் கூட்டணி, தெய்வத்துடன் கூட்டணி எனக்கூறிய விஜயகாந்த் தற்போது மாநாடு நடத்துவது கூட்டம் காட்டி பேரம் பேசுவதற்காக மட்டுமே. சினிமாவில் இதுவரை மூன்றரை லட்சம் பேரை சுட்டுக்கொன்று, இளைய சமுதாயத்திடம் தீவிரவாத கலாசாரத்தை ஏற்படுத்தியவர் அவர். இந்தி பேசும் வடமாநிலத்தவரின் தமிழைக் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் விஜயகாந்தின் பேச்சில் தெளிவு இருக்காது.
மக்களிடம் கட்சியை ஞாபகப் படுத்துவற்காகவே, ஸ்டாலின் நமக்கு நாமே 'டூர்' சென்றார். சொந்த சகோதரரை அனுசரிக்க முடியாத ஸ்டாலின், எப்படி நாட்டு மக்களையும், கட்சி தொண்டர்களையும் அனுசரித்து செல்ல முடியும்? அழகிரி கூறியதைப்போன்று, அவர் ‘காமெடி பீஸ்'தான். கருணாநிதியைப் போன்று பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி போன்றவற்றில், ஜெயலலிதா நேரத்தை வீணடிப்பவர் அல்ல" என்று காரசாரமாக பொளந்து கட்டினார்.
0 comments:
Post a Comment