Saturday 30 January 2016

அம்மனுக்கு லீவு... பேய்க்கு ஓவர் டைம்! - ‘அரண்மனை-2’ விமர்சனம்

ஆக்‌ஷனோ... ரொமான்ஸோ... பேய் படமோ.. எது எடுத்தாலும் எனக்கு அது காமெடி படம்தான் என்கிற சுந்தர்.சியின் செல்லுலாய்டு அரண்மனை. பயப்பட போனால் ஏமாற்றமும், சிரிக்க போனால் நிம்மதியும் கிடைக்கலாம்.

முதல் பாகம் ஹிட் என்பதால் கூடுதல் தைரியமும், குறைவான வேலையும் தேவைப்பட்டிருக்கிறது. ”ஆண்ட்ரியா நகரு நகரு... த்ரிஷா உட்காரும்மா.. ஹன்சிகா, நீ அப்படியே இரும்மா. வினய் ஸாரி... சித்தார்த் ஜி ஆவோ ஆவோ. சந்தானம் இல்லையா? அப்ப சூரி ஓகே!” - இவ்வளவுதான் மாற்றங்கள்.

அம்மன் சிலையை மறுபிரதிஷ்டை செய்ய கருவறையை விட்டு வெளியே எடுக்கிறார்கள். அந்த விடுமுறை நாளில் அம்மனுக்கு சக்தி இருக்காதாம். அதனால் பூமியில் மறைந்திருக்கும் பேய்களைக் கிளப்பி விட்டு தொழிலை விருத்தி பண்ண நினைக்கிறார்கள் பேயோட்டிகள். அப்படிக் கிளம்பியதில் எக்ஸ்ட்ரா பவர் பேயொன்று அந்த ஊர் அரண்மனையில் ஓடி ஒளிந்து கொள்கிறது. அந்த அரண்மனையில் இருக்கும் ஒவ்வொருவராய் கொலை செய்ய, அந்த பேய் யார்? ஏன் அது பழி வாங்குகிறது என்பது இடைவேளைக்கு பின்னான ஃப்ளாஷ்பேக். அந்த வீட்டின் நல்லவர்கள் காப்பாற்றப்படுகிறார்களா என்பது க்ளைமேக்ஸ் (ம்க்கும்... சஸ்பென்ஸாமாம்!).

கவர்ச்சி த்ரிஷா, வீட்டோட நர்ஸ் ஆக பூனம் பாஜ்வா, பேயாக ஹன்சிகா என.. சுந்தர்.சி ஏரியா வழக்கம் போல நச். முதல் பாடலில் சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டெல்லாம் வருகிறார் த்ரிஷா. ஆனால், பூனம் பாஜ்வாவுக்குத்தான் அள்ளுது அப்ளாஸ்.
பிரசாந்துக்கு தம்பி போல ஆகிவிட்டார் சித்தார்த். ஹிட் என்பதற்காக இந்த லிஸ்ட் படங்களை நம்புவதா பாஸ்? ப்ச்..!


 ”சந்தானம் எவ்வளவு நல்லா காமெடி பண்ணுவாரு” என யோசிக்க வைத்தாலும் சூரிக்கு பிராக்சி தந்து காப்பாற்றுகிறது சுந்தர்.சி அண்ட் கோ வின் வசனங்கள். “கோணி ஊசிக்கு கொண்டை மீசை” என ஒன்லைனர்களும், பேயுடனான டெம்போ ட்ராவலர் பயணமும் அதிரிபுதிரி சிரிப்பு மத்தாப்பூ!

ஆளாளுக்கு பேயை பார்க்கிறார்கள். பின் அடுத்த நாள் அந்தவீட்டிலே பாட்டு பாடுகிறார்கள். பேய் படத்தில் மேஜிக் பாக்கலாம். லாஜிக் பாக்கலாமா என்ற பன்ச் பேசி நம்மை நாமே சமாதானம் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

வழக்கமான கலகல சீன்களாலும், கிளாமராலும் தனது வேலையை செவ்வனே செய்திருக்கிறார் இயக்குனர். ஒரே குரல்.. ஒரே மாதிரியான வரிகள்.. கொஞ்சம் உஷாராயிடுங்க ஹிப்ஹாப் தமிழா. தமிழனுக்கு வெரைட்டிதான் முக்கியம்.

ஆக, பன்ச் லைன்: அரண்மனை-3 வருவதை யாராலும் தடுக்க முடியாது!

0 comments:

Post a Comment