Friday 19 February 2016

நவரச திலகம் - விமர்சனம் கொஞ்சம் காமெடி தூக்கலாக இருந்திருந்தால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கும்.

சின்னத்திரை நடிகர்கள் கூட வெள்ளித்திரையில் ஜொலிக்கலாம் என விதைப்போட்டவர்கள் சந்தானம், சிவகார்த்திகேயன். இவர்களின் வரிசையில் ஏற்கனவே வானவராயன் வல்லவராயன் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்தவர் மா.கா.பா.ஆனந்த்.

இவர் தற்போது சோலோ ஹீரோவாக களமிருக்கியிருக்கும் படம் தான் நவரச திலகம்.
கதைக்களம்

தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு இருக்கும் ஹீரோவிற்கான தகுதி வேலைக்கு போகமால் அப்பாவிடம் திட்டு வாங்கி அவர் பணத்தை வீணாக்குவது அதை தான் மா.கா.பாவும் செய்கின்றார்.

பின் ஸ்ருஷ்டியை பார்த்தவுடன் காதல் வயப்பட ஸ்ருஷ்டியின் தந்தை ஜெயபிரகாஷ் தன் மகள் வாய் பேச முடியாதவர் என சொல்கின்றார். இவர்கள் காதலை பிரிக்க. ஆனால், மா.கா.பாவிற்கு இதுவே இவர் மீது ஒரு காதலை மேலும் அதிகப்படுத்துகின்றது.

இதை தொடர்ந்து ஸ்ருஷ்டியின் குடும்பத்தில் இன்னும் நெருக்கமாக, ஸ்ருஷ்டியின் அக்காவிற்கு அரச வேலைப்புரியும் சித்தார்த் விபினை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றார் மா.கா.பா.

நிச்சயதார்த்த தேதி நெருங்கும் வேளையில், சித்தார்த் விபின் தனது அத்தை மகன் என்பது மா.கா.பா.விற்கு தெரிய வருகிறது.

விபின், சிருஷ்டியின் அக்காவை திருமணம் செய்துகொண்டால், சிருஷ்டி தனக்கு தங்கை உறவு வரும் என்பதால், இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தவேண்டும் என மா.கா.பா. முடிவெடுக்க, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
க்ளாப்ஸ்

படத்தின் மிகப்பெரும் பலமே சித்தார் விபின் வரும் காட்சிகள் தான், அவர் பேச ஆரம்பித்தாலே சிரிப்பு வரத்தொடங்குகின்றது.

இளவரசு மா.கா.பாவின் அப்பாவாக தன் கதாபாத்திரத்தை அழகாக செய்துள்ளார்.

மா.கா.பாவும் கிட்டத்தட்ட நாங்களும் ஹீரோ தான் என சொல்லு அளவிற்கு நன்றாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பல்ப்ஸ்

நடிப்பில் கவனம் செலுத்திய சித்தார்த் இசையிலும் கொஞ்சம் கவனத்தை செலுத்தியிருக்கலாம்.

முன்னணி காமெடி நடிகர் கருணாகரனை பெரிய அளவில் பயன்படுத்தபடவில்லை.

மொத்தத்தில் நவரச திலகம் கொஞ்சம் காமெடி தூக்கலாக இருந்திருந்தால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கும்.

0 comments:

Post a Comment