நடிகர் நெப்போலியனின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்கிய படம் ‘சீவலப்பேரி பாண்டி’. இப்படத்திற்கு ராஜேஷ்வர் கதை எழுத பிரதாப்போத்தன் இயக்கியிருந்தார். இப்படம் 1994ஆம் ஆண்டு வெளியானது.
இப்படத்திற்கு கதை எழுதிய ராஜேஷ்வர்தான் கார்த்திக் நடித்து மாபெரும் ஹிட்டடித்த அமரன் படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறாராம்.
ஆனால் இதன் முதல் பாகத்தில் நடித்த நெப்போலியனுக்கு பதிலாக இரண்டாம் பாகத்தில் நவரச நாயகன் கார்த்திக்கை நடிக்க வைக்க இருக்கிறாராம்.
சிலநாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் இணைய அமரன் 2 படம் உருவாக உள்ளதாக செய்திகள் வந்தன. அதன் விளம்பரங்களும் நாளிதழ்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அப்படம் போஸ்டரோடு நின்றுபோனது. எனவே ‘சீவலப்பேரி பாண்டி’யாவது படப்பிடிப்பு வரை செல்வாரா? என்று ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டனர்.
இப்படத்திற்கு கதை எழுதிய ராஜேஷ்வர்தான் கார்த்திக் நடித்து மாபெரும் ஹிட்டடித்த அமரன் படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறாராம்.
ஆனால் இதன் முதல் பாகத்தில் நடித்த நெப்போலியனுக்கு பதிலாக இரண்டாம் பாகத்தில் நவரச நாயகன் கார்த்திக்கை நடிக்க வைக்க இருக்கிறாராம்.
சிலநாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் இணைய அமரன் 2 படம் உருவாக உள்ளதாக செய்திகள் வந்தன. அதன் விளம்பரங்களும் நாளிதழ்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அப்படம் போஸ்டரோடு நின்றுபோனது. எனவே ‘சீவலப்பேரி பாண்டி’யாவது படப்பிடிப்பு வரை செல்வாரா? என்று ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டனர்.
0 comments:
Post a Comment