சில மாதங்களுக்கு முன் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இந்துலேகா சோப் விளம்பரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் அதை பயன்படுத்திய வயநாடு பகுதியைச் சேர்ந்த சிற்பி கே சித்து என்ற நுகர்வோர் சிகப்பழகு கிடைக்கவில்லை என வழக்கு தொடுத்திருந்தார்.
மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் இந்துலேகா நிறுவனத்திற்கும் மம்மூட்டிக்கும் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் அந்த நிறுவனம் தனது தவறை ஒப்புக் கொண்டு அந்த சிற்பிக்கு ரூ. 30,000 கொடுத்தது. இதுகுறித்து அந்த 68 வயது முதியவர் கூறியதாவது…
“பணத்திற்காக நான் இதை செய்யவில்லை. ஆனால் இதில் உள்ள உண்மையை கொண்டு வரவே இப்படி வழக்கு தொடுத்தேன்.
ஒரு பொருளின் விளம்பரத்தில் நடிப்பவர்கள் அந்த பொருளின் தரத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்.
ஏனென்றால் அவர்களை நிறைய ரசிகர்கள் பின்பற்றுகின்றனர். தரமற்ற பொருட்களுக்கு நடிகர்கள் ஆதரவளிக்க கூடாது” என்றார் அந்த சிற்பி.
இந்த சிற்பி சமூகத்தை செதுக்க பிறந்தவரோ? வாழ்த்துக்கள் ஐயா..!
0 comments:
Post a Comment