Sunday 21 February 2016

ஒரு பூனையை அடிப்படையாகக் கொண்டு வரும் முதல் தமிழ் சினிமா – ‘மியாவ்’

தமிழ் சினிமாவில் அவ்வபோது வித்தியாசமான முயற்சிகளின் மூல பல புதுமுக இயக்குநர்கள் அறிமுகமாகிறார்க ள். அந்த வரிசையில் பூனை ஒன்றை முக்கிய கதாபாத்திரமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ள இயக்குநர் சின்னாஸ் பழனிச்சாமி.சினிமாவுக்கு புதியவர் என்றாலும், விளம்பரத் துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி யிருக்கும் இயக்குநர் சின்னாஸ் பழனிச்சாமி, தனது படத்திற்கு ‘மியாவ்’ என்று தலைப்பு வைத்துள்ளார்.

குளோபல் வுட்ஸ் மூவிஸ் சார்பில் வின்செண்ட் அடைக்கலராஜ் தயாரிக்கும் இப்படத்தில் ராஜா என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்க, காயத்ரி, ஷனி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். ஸ்ரீஜித் எண்டவனோ என்ற புதியவர் இசையமைக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் சின்னாஸ் கூறுகையில், “பூனையின் மியாவ் சத்தத்தில் குழந்தையின் குரல் போன்ற மென்மையில் இருந்து கொடிய அலறல் போன்ற திகில் வரை பல்வேறு சூழலுக்கு ஏற்ப பல்வேறு அர்த்தங்கள் நிறைந்த பல வகைகள் உண்டு, அவற்றின் அடிப்படையில் என் படம் பயணிக்கிறது. ஒரு பூனையை அடிப் படையாகக் கொண்டு வரும் முதல் தமிழ் சினிமா இதுதான் என்று, எங்களால் பெருமையோடு சொல்லிக் கொள்ள முடியும். இதுவரை யாரும் எடுக்காத இந்த பாணிப் படம் , புதுமையான படங்களைப் பார்க்கத் துடிக்கும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்.

அதே நேரம் இது போன்ற படங்களுக்கு பொருத்தமான தயாரிப்பாளர் கிடைப்பதும் மிக முக்கியம் . அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி, எனது தயாரிபாளருக்கு சினிமா எடுப்பதன் அழகியலும் புரிந்து இருக்கிறது . படத்தை தயாரிப்பதிலும் மதிப்புக் கூட்டுவதிலும் இன்றைய நிலையில் ஒரு தயாரிப்பாளரின் பங்கு என்ன என்பதும் அவருக்கு தெரிந்து இருக்கிறது”என்றார்.இப்படத்தின் முதல் போஸ்டரை, பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், வெளியிட்டார்.

0 comments:

Post a Comment