Friday 22 January 2016

மூன்றாம் உலக போர் - திரைவிமர்சனம்

இனி ஓர் உலக போர் வருகிறது என்றால் அது கண்டிப்பாக தண்ணீருக்காக தான் என சில வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாம் உலக போரே இந்தியா-சீனா ஆகிய நாட்களால் தான் வருகிறது என ஒரு கற்பனை கலந்து எதிர்கால உண்மை கதையை காட்டியுள்ளது இந்த மூன்றாம் உலக போர்.

சுகன் கார்த்தி இயக்கத்தில், சுனில் குமார், அகிலா கிஷோர், சீனாவை சார்ந்த வில்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்

2022ல் இந்தியா-சீனா ஒரு போரில் நேருக்கு நேர் மோதுகிறது. இதனால், மூன்றாம் உலக போர் வந்து விடுமோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து இந்த போரை நிறுத்துகின்றது.

ஆனால், சீனாவிலிருந்து இந்தியாவிற்கு நாச வேலைகள் செய்ய 100 சோல்ஜர்கள் வருகின்றனர். அவர்கள் அனைவரும் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை. இதற்காக இந்திய அரசை சார்ந்த ராணுவ வீரர் சுனில் குமாரை சீனா அரசு கடத்துகிறது.

பின் அந்த சோல்ஜர்கள் எங்கு இருக்கிறார்கள் என கேட்டு, சீனா அரசு ராணுவ தலைவர் வில்சன் டார்ச்சர் செய்கிறார். இறந்தாலும் கூற மாட்டேன், என்று வைராக்கியத்துடன் இருக்கும் சுனிலிடம், ‘இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்த போகின்றோம்.

இதை வைத்தே இந்தியாவை எங்கள் அடிமையாக்குவோம் என ஒரு ஆப்ரேஷன் பற்றி கூற, இதை அவர் தடுத்தாரா, சீனாவில் 100 சோல்ஜர்கள் என்ன ஆனார்கள் என்பது தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

பாலை படத்திற்கு பிறகு சுனில் நடித்திருக்கும் படம், விஜயகாந்த் காலத்து கதை, அதில் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக பஞ்ச் டயலாக் பேசுவார், இதில் சீனாவிற்கு எதிராக இவர் பேசுகிறார் அவ்வளவு தான் வித்தியாசம்.

அந்த சீனா வில்லன், பிறகு கூடவே இருக்கும் சீனா ஆர்மி மேன்கள், ஏதோ சென்னை ஹோட்டலில் வேலை பார்க்கும் சிக்கிம் ஊர்க்காரகள் போல் உள்ளனர், அதிலும் வில்லன் தமிழ் பேசுவது, அதற்கு கூறும் காரணம் ஒரு தமிழனாக பெருமை என்றாலும், லாஜிக் அத்து மீறல்கள்.

படம் 2020க்கு மேல் நடப்பது போல் உள்ளது, அதில் அப்துல் கலாம் சொன்னது போல் இந்தியா வல்லரசு ஆகிவிட்டதாக கூறுகின்றனர். அதற்காக, ஏதோ LCD டிவில் அங்கும் இங்கும் ஏதாவது ஓடவிட்டால் 2020 வந்துவிடுமா? சுகன் சார்.

பல இடங்களில் ஏதோ வெளிநாட்டு வீடியோ கேமை அப்படியே ஓட்டிவிட்டுள்ளது அப்பட்டமாக தெரிகின்றது. அதிலும் ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் சார், இதெல்லாம் 1980லேயே முடிந்துவிட்டது, அதையெல்லாம் 2020லும் காட்டியிருப்பது உச்சக்கட்ட சோதனை.

க்ளாப்ஸ்

வேதா ஷங்கரின் இசை, அதிலும் அந்த இந்தியா பாடல் ரசிகர்களின் நரம்பு புடைக்க வைக்கின்றது, பின்னணி இசையும் படத்திற்கான பலம்.

இந்தியாவிற்கு எதிரி என்றாலே பாகிஸ்தான் என்று தான் பலரும் கூறுவார்கள், ஆனால், தற்போது மட்டுமில்லை வருங்காலத்திலும் நமக்கு பெரிய தலைவலியாக இருக்க போவது சீனா தான் என்பதை அழுத்தமாக கூறப்பட்டுள்ளது.

பல்ப்ஸ்

நல்ல கதை மிக மிக சொதப்பலான மேக்கிங் காட்சிகள், ஏதோ இரண்டாம் கட்ட குறும்படம் போல் பல காட்சிகள்.

குறைந்த பட்ஜெட் படம் என்றாலும், அதற்காக ஏதோ வீடியோ கேம் போல கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் முகம் சுழிக்க வைக்கின்றது.

ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் என்று கூறும் படத்தில் அதற்கான அழுத்தம் எந்த இடத்திலும் ரசிகர்கள் மனதில் பதியவில்லை.

மொத்தத்தில் மூன்றாம் உலக போர் படத்திற்கும் பார்வையாளர்களுக்கும் ஏற்படும் போராக அமைந்து விட்டது.

0 comments:

Post a Comment