தமிழகத்தில் 20ம் தேதி மட்டும் சிறியதும், பெரியதுமாக 500 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. இதற்காக உத்தரவே போட்டிருக்கிறது அறநிலையத்துறை. இரண்டு மாதம் கழித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட கோயில்களில் எல்லாம் 20ம் தேதியே நடத்துவதற்கும் உத்தரவு போனது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் அமைச்சர்கள் கோயில் அதிகாரிகளை வரவழைத்து எந்த ேநரத்தில் கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்று நேரம் குறித்து கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்கள். உள்ளூர் அமைச்சர்கள் குறித்து கொடுத்த ேநரத்தில் தான் கும்பாபிஷேகம் நடத்தவேண்டும். இதுல எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதும் உத்தரவு. இதற்கான ரகசியமும் அம்பலமாகியுளளது.
கும்பாபிஷேகத்திற்கு குறிக்கப்பட்ட 20ம் தேதியன்று ஏகாதசி திதியும், அன்று மிருகசீரிஷ நட்சத்திரமும் வந்தது. இந்த நட்சத்திரம் முதல்வர் ஜெயலலிதாவின் ஜென்ம நட்சத்திரம். இந்த நாளில் கோயில் திருப்பணிகள் நடந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்னு நெருக்கமான ஜோசியர் சொல்லியிருக்காராம். தற்போது இந்த ரகசியம் தெரிந்த இந்து அமைப்புகள் கொந்தளிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
எப்பவுமே ஆளும்கட்சிக்கு விசுவாசியான இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், ‘‘ஆன்மிக தலைவர்களை ஆலோசிக்காமல் மந்திரிகள் குறித்து கொடுத்த ேநரத்தை வைத்து கும்பாபிஷேகம் நடத்துகின்றனர். திருவாரூர் கோயிலில் ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்தாததால் தான் மழை, ெ்வள்ளம் வந்து சென்னையே சீரழிஞ்சு போச்சு. ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்கே இவ்வளவு பாதிப்புன்னா, ஆளும்கட்சிக்காரங்க அவங்க இஷ்டத்துக்கு 500 கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தறது நல்லதுக்கில்லை,’’ என பொங்கி தீர்த்தார்.
கும்பாபிஷேகத்திற்கு குறிக்கப்பட்ட 20ம் தேதியன்று ஏகாதசி திதியும், அன்று மிருகசீரிஷ நட்சத்திரமும் வந்தது. இந்த நட்சத்திரம் முதல்வர் ஜெயலலிதாவின் ஜென்ம நட்சத்திரம். இந்த நாளில் கோயில் திருப்பணிகள் நடந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்னு நெருக்கமான ஜோசியர் சொல்லியிருக்காராம். தற்போது இந்த ரகசியம் தெரிந்த இந்து அமைப்புகள் கொந்தளிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
எப்பவுமே ஆளும்கட்சிக்கு விசுவாசியான இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், ‘‘ஆன்மிக தலைவர்களை ஆலோசிக்காமல் மந்திரிகள் குறித்து கொடுத்த ேநரத்தை வைத்து கும்பாபிஷேகம் நடத்துகின்றனர். திருவாரூர் கோயிலில் ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்தாததால் தான் மழை, ெ்வள்ளம் வந்து சென்னையே சீரழிஞ்சு போச்சு. ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்கே இவ்வளவு பாதிப்புன்னா, ஆளும்கட்சிக்காரங்க அவங்க இஷ்டத்துக்கு 500 கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தறது நல்லதுக்கில்லை,’’ என பொங்கி தீர்த்தார்.
0 comments:
Post a Comment