Friday 22 January 2016

யாரு இறக்கிவிட்டா என்ன? நானிருக்கேன் தூக்குவதற்கு! அனிருத்துக்கு ஆதரவளிக்கும் அஜீத்

அஜீத்தின் இமை அசைகிற இடத்தை பார்த்து அதற்கேற்ப அசைகிறவர் டைரக்டர் சிவா! “சினிமாங்கறது ஏதோ பஸ்ல ஏறி அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்குகிற பயணம் அல்ல. குறைந்தது ஆறு மாதங்களாவது ஒரே திசையில் பயணம் செல்கிற வேலை. அதுக்கு டைரக்டர், புரட்யூசர், ஹீரோ மூணு பேருக்கும் வேவ் லெங்க்த் ஒண்ணாயிருக்கணும். அப்பதான் லாங் டிராவல் போக முடியும்” என்பதுதான் அஜீத்தின் பாலிஸி. தன் மனசுக்குள் இறங்கி மகுடி வாசிக்காத எவரையும் கிட்டே சேர்க்க மட்டுமல்ல, பார்க்கக் கூட மாட்டார் அவர். அந்த வகையில் சிவா, அஜீத்தின் மனசாட்சியாகி சில வருடங்கள் ஆகிறது.

அனிருத்துடன் வேதாளம் படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிற அஜீத்திற்கு, இந்த முறையும் அவரே ஓ.கே என்றாகிவிட்டதாம். விளைவு? வேதாளம் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கப் போகும் அடுத்த படத்தின் இசை அனிருத்தேதான்.

வொய் திஸ் கொலவெறியில் ஒரேயடியாக உசரம் பார்த்து, பீப் பாடலில் ஒரேயடியாக தகரம் ஆகிவிட்ட அனிருத்தை அவரது நெருங்கிய உறவினரான தனுஷே துரத்தியடித்துவிட்டார். கிட்டதட்ட மூன்று படங்களிலிருந்து நீக்கவும் செய்யப்பட்டிருக்கிறார் அனிருத். இந்த நிலையில் “குழந்தை… தெரியாம பண்ணிருச்சு. மன்னிப்போம்… மறப்போம்…” என்ற மனநிலைக்கு வந்த அஜீத், “எது வந்தாலும் பேஸ் பண்ணலாம். அனிருத்தையே வரச்சொல்லுங்க” என்று கூறிவிட்டாராம் சிவாவிடம்.

ஆலுமா, டோலுமா கொடுத்த ஆனந்த ஹிட்டுதான் இதற்கெல்லாம் காரணமாக இருக்குமோ?

0 comments:

Post a Comment