'தெறி' படத்தில் நடித்து வரும் 'நான் கடவுள்' ராஜேந்திரனை இனி 'நான்-ஸ்டாப்' ராஜேந்திரன் என்று அழைக்கும் அளவிற்கு காமெடியில் தெறிக்க விடுவார் என்கிறார்கள். சீரியசான வில்லனாக 'நான் கடவுள்' படத்தில் அறிமுகமான ராஜேந்திரன் அப்படியே காமெடி பக்கமும் பயணிக்க ஆரம்பித்தார். இன்று அவர் திரையில் வந்தாலே ரசிகர்கள் சிரிக்கும் அளவிற்கு அவருடைய சீரியஸ் இமேஜ் போய்விட்டு சிரிப்பு இமேஜ் வந்துவிட்டது.
அட்லீ இயக்கிய 'ராஜா ராணி' படத்தில் ராஜேந்திரன் கார் ஏஜென்சி ஓனராக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் பேசிய 'சூப்பர்பா, 5000 இன்க்ரிமென்ட்' என்ற வசனம் அவருக்கு பெரிய புகழைப் பெற்றுத் தந்தது. அந்தப் படத்தைப் பார்த்து ரசித்த நடிகர் விஜய், ராஜேந்திரனின் நகைச்சுவையை வெகுவாக ரசித்தாராம். அதனால், அட்லீ இயக்கும் 'தெறி' படத்திலும் அவரையே நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்க வையுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
ராஜேந்திரன் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் வடிவேலுவுக்குப் பொருத்தமான ஒரு கதாபாத்திரம் என்கிறார்கள். இருந்தாலும ராஜேந்திரன் மீது கொண்ட நம்பிக்கையில் விஜய்யே அவரைப் படப்பிடிப்பிலும் வெகுவாகப் பாராட்டினாராம். 'தெறி' படம் வந்த பிறகு ராஜேந்திரனும் நகைச்சுவையில் தெறிக்க விடுவார் என்கிறார்கள்.
அட்லீ இயக்கிய 'ராஜா ராணி' படத்தில் ராஜேந்திரன் கார் ஏஜென்சி ஓனராக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் பேசிய 'சூப்பர்பா, 5000 இன்க்ரிமென்ட்' என்ற வசனம் அவருக்கு பெரிய புகழைப் பெற்றுத் தந்தது. அந்தப் படத்தைப் பார்த்து ரசித்த நடிகர் விஜய், ராஜேந்திரனின் நகைச்சுவையை வெகுவாக ரசித்தாராம். அதனால், அட்லீ இயக்கும் 'தெறி' படத்திலும் அவரையே நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்க வையுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
ராஜேந்திரன் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் வடிவேலுவுக்குப் பொருத்தமான ஒரு கதாபாத்திரம் என்கிறார்கள். இருந்தாலும ராஜேந்திரன் மீது கொண்ட நம்பிக்கையில் விஜய்யே அவரைப் படப்பிடிப்பிலும் வெகுவாகப் பாராட்டினாராம். 'தெறி' படம் வந்த பிறகு ராஜேந்திரனும் நகைச்சுவையில் தெறிக்க விடுவார் என்கிறார்கள்.
0 comments:
Post a Comment