Wednesday 27 January 2016

இந்தியாவில் தடை செய்யப்பட்ட படங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம்!

63வது மோசன் பிக்சர்ஸ் சவுண்ட் எடிட்டர்ஸ் கோல்டன் ரீல் விருதுகளில்,ஆஸ்கார் விருது வென்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இரண்டு படங்களுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

1953 முதல் ஒவ்வொரு வருடமும் சவுண்ட் எபக்ட்ஸ், சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் டிசைனிங் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது மோசன் பிக்சர்ஸ் சவுண்ட் எடிட்டர்ஸ்(M.P.S.E.). அந்த வகையில் 2009ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக சிறந்த சவுண்ட் மிக்சிங் ஆஸ்கார் விருதை வென்ற, சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி, இதில் இரண்டு விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதிலும் இந்தியாவில் தடை செய்யப்பட "அன்ப்ரீடம்" மற்றும் "இந்தியாஸ் டாட்டர்" எனும் இரு திரைப்படங்களுக்காக என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ரசூல் பூக்குட்டி, இப்படத்தில் தன்னுடன் பணியாற்றிய அத்தனை பேருக்கும் நன்றிகள் மற்றும் இந்த 63வது கோல்டன் ரீல் விருதுகளில் தான் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை, 2012ம் வருடம் டிசம்பர் மாதம் பாலியல் வன்முறையால் உயிரிழந்த ஜோதி சிங்கிற்கு அர்ப்பணிப்பதாகக் கூறியுள்ளார். ராஜ் அமித் குமார் இயக்கிய "அன்ப்ரீடம்" ஓரினச்சேர்க்கையாளர்களைப் பற்றிய படம்.

பிறநாட்டு படங்கள் (சவுண்ட் எபக்ட்ஸ், போலே, டயலாக் & ADR) பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. "இந்தியாஸ் டாட்டர்" 2012ல் டெல்லியில் நடந்த கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம், BBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தொடர், சிறந்த தொலைக்காட்சி குறும்படம், டாக்குமெண்டரி பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் வென்றவர்களின் பெயர்கள் பெப்ரவரி 27ம் தேதி அறிவிக்கப்படும்.

0 comments:

Post a Comment