Wednesday 27 January 2016

நியாயம் இல்லாத போது விலகுவேன் - எஸ்பி பாலசுப்ரமணியம்

தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளவரும், 69 வயதைக் கடந்த பிறகும் இப்போதும் தன்னுடைய இனிமையான குரலால் இன்றைய இளம் நாயகர்களுக்காகவும் பாடி வரும் சிறந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். திரையுலகத்தில் பாட வந்து 50 ஆண்டுகளை கடந்த வாரம்தான் வெற்றிகரமாக கடந்தார். எம்எஸ் விஸ்வநாதன், கேவி மகாதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா, ஏஆர் ரகுமான், தேவா, வித்யாசாகர் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் என பலருடைய இசையில் தமிழ், தெலுங்கில் சுமார் 40,000 பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளவர்.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் திரையுலகில் பாடுவதை எப்போது நிறுத்துவேன் என்பது குறித்து உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஒரு பாடலுக்கு நியாயமாக இல்லாத போது நானாகவே பாடுவதை நிறுத்திக் கொள்வேன் என அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இப்போதும் ஒரு நாளைக்கு 11 மணி நேரத்திற்கும் மேலாக பாடிக் கொண்டிருக்கிறேன் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டுள்ளார். 80களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட பலருக்கு எஸ்பிபி பாடிய பாடல்களை இன்றும் இசை ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல வானொலிகளில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது எஸ்பிபி பாடிய பாடல்கள் கண்டிப்பாக இடம் பெறும் என்பதே உண்மை.

0 comments:

Post a Comment