Wednesday 27 January 2016

ரஜினி என்ன செய்து விட்டார், அவருக்கு எதற்கு விருது? பெண் வழக்கறிஞர் அதிரடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சில தினங்களுக்கு முன் இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூசன் விருது அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடெங்குமிருந்து வாழ்த்துக்களும், எதிர்ப்புகளும் ஒரு சேர வருகின்றது.

பலரும் இதற்கு பின்னால் அரசியல் இருக்கின்றது என கூறி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாத மேடையில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி கலந்துக்கொண்டார்.

அவர் ‘எதற்கு ரஜினிக்கு பத்மவிபூசன் விருது, அவரின் நடிப்பு, அவர் சினிமாவிற்கு ஆற்றிய தொண்டு இதை நான் ஒரு போதும் குறை கூறவில்லை.

அதற்காக தான் அவருக்கு பத்மபூசன் விருது அளிக்கப்பட்டது, ஆனால், அந்த விருதிற்கு பிறகு ரஜினி என்ன செய்து விட்டார், அவருக்கு எதற்கு தற்போது விருது’ என கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

0 comments:

Post a Comment