Wednesday 27 January 2016

ரஜினி படத்திற்கு ஷங்கர் பிறப்பித்த கட்டளைகள்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர் ஆகிய இருவரும் தங்களின் ஹாட்ரிக் வெற்றிக்காக இணைந்துள்ளனர். ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘2.ஓ’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் பணியாற்ற உள்ள கலைஞர்களுக்கு இயக்குனர் ஷங்கர் கட்டளைகளை பிறப்பித்துள்ளார். அவை பின்வருமாறு…

     சூட்டிங் ஸ்பாட்டின் உள்ளே விருந்தினர்களோ, நண்பர்களோ என எவருக்கும் அனுமதியில்லை.
    சூட்டிங் ஸ்பாட்டுக்குள் யாரும் செல்போன், லேப்டாப், பென் டிரைவ் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வரக்கூடாது. முக்கிய நடிகர்கள் மட்டும் கேரவனுக்குள் அமர்ந்து போன் பேசலாம்.
    மற்றவர்கள் அவசரத் தேவைக்கு பொதுவான தொலைபேசியை பயன்படுத்தலாம்.
     படம் குறித்த தகவல்களை எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிரக் கூடாது. மற்ற படத்தின் பேட்டியின்போதும் இப்படம் குறித்து தகவல்களை சொல்லக் கூடாது.
    படப்பிடிப்பு தளத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி கிடையாது. படம் குறித்த தகவல்கள் மக்கள் தொடர்பாளர் மூலம் வெளியிடப்படும்.
    சூட்டிங் சமயத்திற்குள் மட்டும் கலைஞர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் செட்டில் நிற்கக் கூடாது. செட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இதற்கு விதிவிலக்கு.
    உதவி இயக்குனர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை மட்டும் செய்தால் போதும்.
    மேக் அப் அறைக்குள் அத்துறை சம்பந்தப்பட்ட கலைஞர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
    வசன பயிற்சி அளிக்கும் உதவி இயக்குனர்கள் தவிர மற்றவர்கள் நடிகர், நடிகைகளுடன் பேசக்கூடாது
    பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் படப்பிடிப்புக்கு பாதிப்பு இல்லாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
    படப்பிடிப்பு தளங்களில் மற்றவர்கள் காட்சி பற்றி விவாதம் செய்யக்கூடாது.
    படப்பிடிப்பு எங்கு? எப்போது நடக்கிறது போன்ற விவரங்கள் யுனிட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியப்படுத்தப் படவேண்டும்.

0 comments:

Post a Comment